Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

189. ான சக்யா

# ான சக்யா

''நிகழ்காலத்திலேயே இரு!'' – சாத்தியமில்லாத பொய். "Be in present!" is an impossible lie

உங்களுக்கு, சத்தியத்தை சத்தியமாகச் சொல்லவேண்டும் என்ற பொறுப்பு என்னிடம் வந்துள்ளதால், இந்த உண்மையைப் பகிர்ந்து கொள்கிறோம்.

"கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் மூன்றிற்குள்ளேயும் ஒரே நேரத்திலேயே, உணர்வோடு இரு,'' என்று சிவ சூத்திரம் சொல்கிறது.

இதுவரைக்கும் நீங்கள் கேட்ட பாடம் எல்லாம் என்னவாக இருக்கும் ? கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் விட்டு, ''நிகழ்காலத்திலேயே இரு,''என்றுதான் கேட்டிருப்பீர்கள்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் நிகழ்காலத்தில் உங்களால் வாழமுடியாது.

உங்களால் இல்லை.

என்னாலேயும் வாழ முடியாது.

யாராலேயும் வாழ முடியாது.

அது நடைமுறைக்குச் சாத்தியமாகாத நுட்பம்.

வாழ்ந்தால் ...

ஒன்று, கடந்த காலம்,

எதிர்காலம்,

நிகழ்காலம்.

ஆகிய மூன்றிலேயும் ஒரே நேரத்தில் வாழலாம். இல்லை மூன்றிலேயும் இல்லாமல் இருக்கலாம்.

''ஞானி நிகழ்காலத்தில் இருக்கிறார்,'' என்று சொல்வது பொய், தவறு.

அவர் நிகழ்காலத்தில் இல்லை.

அவர் மூன்று காலத்திலும் இல்லை.

இருந்தாலும், யாாாக ஒன்று

எதிர்காலமும், இறந்தகாலமும் இணைகிற இடைவெளியைத்தான் நிகழ்காலம் என்று சொல்கிறோம்.

அவர்கள் மூன்று காலத்திலும் இருக்க வேண்டும், அல்லது மூன்று காலத்திலும் இல்லாது போக வேண்டும்.

எதிர்காலமும், இறந்த காலமும் இணைகிற இடைவெளியைத்தான் நிகழ்காலம் என்று சொல்கிறோம். ''நிகழ்காலத்தில் மட்டும் இரு," என்று சொன்னால் அது நடக்காது.

சக்கியையும், புத்தியையும் சேர்த்து தருவதுதான் ക്കുക്കെ.

மிக ஆழமான விஷயம். இது இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் எடுத்து விடுவீாகளானால், நிகழ்காலம் என்று ஒன்று தனியாக இருக்கிறதா? இல்லையே. அப்படியென்றால் இருக்கிற ஒரே சாத்தியம் இறந்த காலம், எதிர் காலம், நிகழ்காலம் முக்காலத்திலும் உணர்வை ஒன்றாக்குவது. அப்படி என்றால், ஒரே நேரத்தில் வருகிற எல்லா எண்ணங்களையும் ஏற்றுக்கொண்டு, மனம், எந்தக் காலத்தில் புரண்டாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் முக்காலத்தையும் நோக்குமாறு இருத்தல். இதுதான் அந்த ஞான சத்யம்.

ஒரு உண்மையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சத்தியம் இதுதான். தனி மனித முயற்சி ஒன்றினால் மட்டும் மூன்று காலத்தையும் கடந்துவிட முடியாது. உங்களுக்கு உயர்ந்த சக்தியின் துணை வேண்டும். வழிகாட்டுதல் வேண்டும். அதற்கான சக்தியையும், புத்தியையும் சேர்த்துத் தருவதுதான் தீகைஷ்.

மிக அருமையான சத்தியம், ஆழ்ந்து கேளுங்கள்.

மூன்று காலங்களிலும் உங்கள் உணர்வை ஒன்றாக்கினாலும், இந்த மூன்று காலத்திலும் விடுபட்டுவிடுவீர்கள் அல்லது மூன்று காலத்திலிருந்தும் உங்களை முழுமையாக விடுபடுத்தினாலும், அந்த மூன்று காலத்திலும் உணர்வு ஒன்றாகி விடும்.

''விட்டாலும் பிடிக்கும், பிடித்தாலும் விடும்.''

விடுபட நினைத்தாலும் பிடிபடும், பிடிபட நினைத்தாலும் விடுபடும்.

அந்தச் சத்தியத்தை வாழ உதவும் எளிமையான தியானம் இது. கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் மூன்றிலும் ஒரே நிலையில், உங்கள் உணர்வை ஒன்றாக்கி தியானியுங்கள். எதையும் ஒதுக்க வேண்டாம். எதையும் உருவாக்க வேண்டாம். எதையும் அழிக்க வேண்டாம். இருப்பதை அப்படியே முழுமையாகத் தியானியுங்கள். தொடர்ந்து முயற்சி செய்துபாருங்கள்.

தியானம் என்பது எண்ணங்களைக் கரைப்பது. ஒரே ஒரு விஷயம்தான், எந்த எண்ணம் வந்தாலும், அது நிகழ்காலமா, எதிர்காலமா என்று கண்டுபிடித்துவிட்டு, அதில் அது எதுவாக இருந்தாலும், அந்த எண்ணத்தோடு அப்படியே இருப்பது. அதை அழிக்கக்கூட வேண்டாம்.

எந்த எண்ணமாக இருந்தாலும், அந்த எண்ணத்தின்மீது உங்கள் உணர்வை ஒன்றாக்குங்கள். ஒருவேளை, ஒரே நேரத்தில் இரண்டு மூன்று எண்ணங்கள் ஓடினாலும், உங்கள் உணர்வை அதன்மீது அப்படியே ஒன்றாக்குங்கள்.

மக்காலத்திலும் உங்கள் உணர்வை முமுமையாக ஒன்றாக்குங்கள், தானாகவே, உணர்வைத் தாண்டிய ஞானத்திற்குள், உங்கள் மனம் கரைந்துவிடும். மிக எளிமையான இந்தச் சக்கியத்தை, செய்தால் மட்டும்தான் தெரியும், அது நம்மை எவ்வளவு ஆமத்திற்கு அழைத்துச் செல்கிறது என்று.

இந்த ஒரே ஒரு சத்தியும், நம்மை, நம்முடைய உணர்வை, மனத்தை, இதையெல்லாம் தாண்டிய ஒரு எல்லைக்குள்ளே எடுத்துச் செல்ல முடியும். சஞ்சலம் கடந்து, சங்கடம் கடந்து சத்தியத்திற்குள் நம்மை நிறுத்தும் சக்தி, இந்த ஒரு சத்தியத்திற்குத்தான் உண்டு.

மிக எளிமையான தியானமாக இருந்தாலும், நம்மை ஆழமாகக்கொண்டு செல்கிற கக்தி உடையகு.

நிறைய விஞ்ஞானப்பூர்வமான விளக்கங்களை சில சத்தியங்களுக்குக் கொடுக்கலாம். ஆனால், இந்தச் சத்தியத்தைப் பொறுத்தவரை விஞ்ஞானம், இந்தச் சூத்திரத்தை விளக்குகிற அளவிற்கு வளரவில்லை. விஞ்ஞானம் வெறும் நானூறு வருடக் குழந்தை.

நாம் பத்தாயிரம் வருடம் மெய்ஞான அறிவியலில் மூழ்கி உச்சியைப் பார்த்து முடித்தவர்கள்.

நம் விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்வதுகூட, விஞ்ஞானத்தையே ப பற்றிக் கொண்டிருப்பவர்களும், பற்றிக் கொள்ளப்போகிறவர்களும் புரிந்துகொள்ளவேண்டும், தவறவிடக்கூடாது என்பதற்காகத்தான் விஞ்ஞானிகளை மேற்கோளாகக் காண்பிக்கிறோம். காரணம் என்னவென்றால், சிலா் ஆங்கிலப் பெயரைச் சொன்னால்கான் ஏற்றுக் கொள்வார்கள்.

அதற்காகத்தான் அவா்களையும் சேர்த்துச் சொல்கிறோம். ஒரு உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ஆராய்ச்சி செய்து, வசிஷ்டரும், வியாசரும் சென்றிருக்கிற ஆழத்திற்கு எந்த விஞ்ஞானியாலும் போக முடியாது. இதுவரை போகவும் இல்லை.

அறிவியல் என்பதே இரண்டு பக்கமும் விளையாடுகிற கள்ள நோக்குடைய வியாபாரிகளின் விளையாட்டு மாதிரி. அதற்குத் தாக்க ரீதியாக (logically) சக்தி உண்டு. அவ்வளவுதான். அதற்கு மேல் சக்தி கிடையாது. பாவம் அது என்ன செய்யும் ? அதற்கு மேலே ஒன்றும் செய்ய முடியாது.

விஞ்ஞானத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகளைப் பார்த்தோம் என்றால், அந்த ஆராய்ச்சிக்கு யார் முதலீடு செய்கிறீர்களோ, அவர்களுக்குத் தேவையானது மட்டும்தான் வெளியில் வரும். எல்லாக் நாம் பத்தாயிரம் கண்டுபிடிப்புகளும் வெளியில் வருவது இல்லை. எல்லா வருடம் மெய்ளுான அறிவியலில் ஆராய்ச்சிகளும் வெளியில் வருவது இல்லை.

பல ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றிருந்தாலும், அவை எல்லாமே எல்லாருக்குமே

முழ்கிஉச்சி யைப் பார்த்து முடித்தவர்கள்.

இரத்தத்தை எடுத்து, சாக்கரை அளவைக் கண்டுபிடிக்காமல், நேரடியாக உங்களின் கையை மேலே வைத்தாலே கண்டுபிடித்துவிடும் கருவிகளைக் கண்டுபிடித்து எத்தனை வருடம் ஆகிவிட்டது? ஆனால், அது இன்னும் எல்லா மருத்துவமனைகளுக்குக்கும் வரவில்லை. எல்லாப் பொதுமக்களுக்கும், பாமரருக்கும் சென்று சேரவில்லை.

பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடுவதற்கான திரவம் கண்டுபிடித்து எத்தனை வருஷம் ஆகிவிட்டது? ஆனால். இன்னும் பொது மக்களுக்கு வரவில்லை.

பல கண்டுபிடிப்புகளில், தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளே வெளியில் வருகின்றன. தனிப்பட்ட விருப்பம் (Vested interest) உள்ள துறையில் மட்டும்தான் விஞ்ஞான ஆராய்ச்சி நடக்கிறது.

விருப்பப்பட்ட துறையில், விருப்பப்பட்ட பொருள்கள் மீது ஆராய்ச்சி செய்ய அனைத்து உதவிகளும் செய்து தரப்படுகின்றன. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் விஞ்ஞானத்தால் தீர்வு தர இயலவில்லை. அறிவியலின் தாக்கத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் விடை தெரியாமல் நின்றுவிடுகிறது.

விஞ்ஞானம் என்பது, பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மூட நம்பிக்கை அவ்வளவுதான். வேறு ஒன்றும் கிடையாது. பல அலோபதி டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். "உண்மையிலேயே இந்த மருந்து, இந்த வியாதியை எப்படி குணப்படுத்துகிறது என்று எங்களுக்கும் தெரியாது. இதுவரைக்கும் எல்லோரும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் கொடுக்கிறோம். ''

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நிரூபிக்க முடியாத ஒரு விஞ்ஞானம். இது அவ்வளவுதான்,'' என்று சொல்கிறார்கள்.

அதுபோல், 'நிகழ்காலத்தில் இருப்பது சாத்தியமில்லாதது' எனும் இந்தச் சூத்திரமும், வரையரைக்குட்பட்ட விஞ்ஞான கருவிகளால் நிரூபிக்கப்பட இயலாத மெய்ஞான அறிவியல்.

அதனால்தான் சொல்கிறோம், உணர்வைப் பற்றி (consciousness) நம் ஞானிகள் மூழ்கி முத்தெடுத்தது போன்று, வேறு யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. விஞ்ஞானத்தில், மேம்போக்காகச் செய்யப்படும் அரைகுறை ஆராய்ச்சிகளைப்பார்த்தே அவர்களுடைய உணர்வின் ஆழத்தைத் தெரிந்து கொள்ளலாம், அவர்களால் ஓர் அளவிற்கு மேல் உணர்வின் ஆழத்தை உள்வாங்க முடியாது. சத்தியங்களை உள்வாங்க முடியாது. ஏனென்றால் அவர்கள் அரை குறையான தர்க்கத்திலேயே வாழ்ந்தவர்கள். அவர்களுடைய அறிவால் எல்லாவற்றையும் நிரூபிக்க முடியாது.

இந்தச் சத்தியமோ சாதாரண பகுத்தறிவை வைத்து, சாதரண தாக்க அறிவை வைத்து விளையாடுகிற அறிவியலாலே நிரூபிக்கப்பட முடியாத சத்தியம். ஆனால், செய்து பார்த்தால், உடனடியாக அனுபவிக்க முடியும்.

இராமகிருஷ்ணர்

ஞானத்தைத் தாண்டிய ரசம்

வந்து, 'ஐயா, அந்தக் கிராமமே பற்றி எரிகிறது,' என்று சொன்னார்களாம். அதற்குப் நம்பிக்கையில்லாமல், ''எரியவில்லை. அது செய்தித்தாளில் வரவில்லை. அது பொய்யாக இருக்கும்,' என்று சொன்னாராம். அதற்கு முதலாமவர் , ''இல்லை, ஐயா! நான் பார்க்குவிட்டுத்தான் வருகிறேன்,'' என்று சொன்னாராம். அதற்கு, இரண்டாமவர் சொன்னாராம், ''இல்லைய்யா, செய்தித்தாளில் வந்தால்தான் உண்மை.''

உணர்வைப் பற்றி நம் ஞானிகள் மூழ்கி முத்தெடுத்த மாதிரி யாரும் செய்யவில்லை.

அதுபோன்ற பைத்தியக்கார மட மனங்கள், ஆங்கில விஞ்ஞானி சொன்னால்கான் உண்மை என்று நினைக்குமே! என்பதற்காகத்தான் இன்று நாமும் விஞ்ஞானப்பூர்வமான ஆாய்ச்சி எல்லாம் செய்கிறோம்.

Section 2

நீங்கள் கேட்கலாம், ''அதற்குப் போய் ஏன் நீங்கள் இவ்வளவு விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சி செய்கிறீர்கள் ?' என்று

ஆனால், வார்த்தைகளைச் சொன்னால்தான் மனிதர்கள், ஏதோ உண்மையில் திருப்தி அடைந்தார் போன்று நிணைக்கிறார்கள்!

பெரிய விஷயத்தைச் சாதித்த திருப்தி பெறுகிறார்கள். உண்மையில், அவர்கள் விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து, காண்பித்தார்கள் என்றாலும்கூட அது நாம் செய்திருக்கும் வேலைகளில், இரண்டு சதவிகிதம்கூட கிடையாது. எல்லாவற்றையும் அவர்களுடைய அளவீடுகளை வைக்கே அளவிட முடியும் என்று நினைப்பதே தவறு.

என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன், ''இயந்திரங்களை வைத்தே எல்லாவற்றையும் அளவிட முடியாது."

நம் தீர்க்கத்தைத் தாண்டிய சத்தியங்களைத் தாண்டிய விஞ்ஞானத்தால் புரிந்து கொள்ள (மடியாது.

மூன்று காலத்திலும் விழிப்புணாவை வைப்பதைப் பற்றி எப்படி விஞ்ஞானத்தால் புரிய வைக்க முடியும் ? விஞ்ஞானத்தால் புரிந்து கொள்ள முடியாது .

முன்று காலத்திலும் உங்களின் விழிப்பணர்வை வைத்தீர்கள் என்றால், எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை வந்து விடும். உங்களின் மனத்தையும், உணாவையும் ஏற்றுக்கொள்வீர்கள். பிரம்மாண்டமான ஏற்றுக் கொள்ளும் தன்மை வந்துவிடும். உங்களோடு நீங்கள் போட்டுக் கொள்கிற சண்டை நின்று போகும்.

அது நின்றாலே, நீங்கள் மிகப்பெரிய விடுதலை பெறுவீர்கள். உங்கள் சக்தி, வேறு ஒரு திசையை நோக்கி பொங்கிக்கொண்டு இருக்காமல், சண்டையிடாமல், தனக்குள்ளேயே, உதித்த இடத்திலேயே ஒடுங்கிவிடும்.

இந்தச் சத்தியத்தை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். எந்த எண்ணம் வந்தாலும், அது

எந்தக் காலத்தோடு தொடர்புடையது என்று கண்டுபிடியுங்கள், அது எந்தக் காலத்தோடு தொடர்புடையதாக இருந்தாலும், அதில் விழிப்புணர்வோடு இருங்கள். கடந்த காலமாக இருந்தாலும், அதனோடு விழிப்புணர்வாக இருங்கள். எதிர்காலமாக இருந்தாலும், அதனோடும் விழிப்புணர்வாக இருங்கள். அவ்வளவுதான்.

எத்தனை எண்ணங்கள் வந்தாலும் அதனோடு இருங்கள். எதையும் அடக்காதீர்கள். அழிக்காதீா்கள். மறுக்காதீாகள். நிகழ்காலத்திற்கு வரமுயற்சி செய்யாதீா்கள். இதைச் செய்யச் செய்ய ஆனந்தம் ஊற்றெடுக்கும். நீங்கள் உதிக்கக் காரணமாயிருந்த பூரணத்துவத்திற்குள் ஒடுங்குவீர்கள்.

இந்தச் சொற்பொழிவைக் கேட்டு முடித்ததும் ஒரு அன்பர் இப்படிக் கேட்டார், "பிரமிப்பாக இருக்கிறது இதுவரை நாங்கள் கேட்டிராத சத்தியம் இது.

இதுவரை நிகழ்காலத்தில் இருங்கள் என்றுதான் கேட்டிருக்கிறோம். இப்பொழுது நிகழ்காலத்தில் இருப்பது சாத்தியமில்லாதது என்ற கேட்கிறோம்.ஏன் இந்த இரண்டுவிதமான பதில்கள் ?''

காரணம், இரண்டுவிதமான நிலைகளில் இருப்பவர்களுக்கும் சொல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது.

எப்போதுமே இரண்டு பதில்கள் உண்டு. ஒன்று சமூக ரீதியான பதில். இன்னொன்று ஆழ்ந்த தேடுதல் உடையவா்களுக்கான பதில்; பக்தா்களுக்கான பதில்.

ஞானத்தைத் தாண்டிய ரசம்

நிகழ்காலத்திலேயே வாழுங்கள் என்பது, இறந்த காலத்தின் பிடியிலிருந்தும், எதிர்காலத்தின் உசுப்பல்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றி, மன ஆரோக்கியத்தைத் தருவதற்கான பதில். முதல் நிலையிலிருப்பவர்களுக்கான பதில் மற்றும் தீர்வு.

நங்கள் ஞானத்தைத் தாண்டிய ரசத்தைத் தேடும் தீவிரமான பக்கராக இருந்தால். உங்களுக்கான பதில்கான் நிகழ்காலத்தில் வாழ்வதென்பது சாத்தியமேயில்லாத பொய்.

இந்த இரண்டையும் சொல்ல வேண்டிய பொறுப்பு என்னிடம் இருப்பதினால், இரண்டையும் சொல்கிறேன். எந்த நிலையில் இருக்கிறீர்களோ, அந்த நிலைக்கு தேவையான சத்தியத்தை எடுத்துக்கொண்டு மேம்படுங்கள்.

ஞானிகளின் ரகசியம்

்கானிகள் அதிசயங்களை நீகழ்த்துவரர்களா? நான் செல்வந்தனாக வேண்டும். ஞானிகள் அதிசயங்களை நிகழ்த்துவது இல்லை. ஞானிகளின் சாந்நித்யத்தில் அதிசயங்கள் தானாகவே நிகழ்கின்றன.

்குானிகள் தவறே செய்ய மாட்டார்களா? அவர்களின் எதைக்குறிக்கிறது?

சரி, தவறு ் நான் கோன்றினாலும், அதனால் சிறிதளவாவது தீமை உண்டாகும்.

எண்ணங்களற்றவர்கள் ஞானிகள், நேரிட்டாலும் அதனால் நன்மையே நிகழும்.

ஒரு ஜென் ஞானி இவ்வாறு சொல்லியிருக்கிறார், ''ஒரு ஞானி கொலை செய்தாலும் அச்செயல் அந்த ஞானியின் ஆழ்ந்த கருணையின் வெளிப்பாடே!''எண்ணமற்ற நிலையில் இருந்து செய்யும் செயல்கள் அனைத்தும் நிச்சயமாக நன்மையைத்தான் தரும்.

நாரதரே ஞானத்தைத் தாண்டிய ரசத்தை தேழயவர்தான் Even Nartha was longing forThat!

நாரதரே ஞானத்தைத் தாண்டிய ரசத்தைத் தேடி ஓடியவர்தான். அதற்காகப் பல முயற்சி களைச் செய்திருக்கிறார்.

நாரதரை மட்டும் அல்ல, பலரையும் ஈர்த்த ஒன்று, இந்த ஞானத்தைத் தாண்டிய ரசம்.

நாரதர் ஒரு ஞான அனுபூதிமான்.

நிகழ்காலத்திலேயே வாழ முயற்சி செய்தவர் நாரதா். அதில் சில துளிகள் வெற்றியும் கண்டவர்.

ஞானத்தைத் தாண்டிய ரசம்

ஏழு சரீரங்களில் உள்ள எல்லா சம்ஸ்காரங்களையும் சுத்திகரிக்க முயற்சி செய்தவர். அதிலும்கூட வெற்றியைக் கண்டவர். நிகழ்காலத்திலேயே வாழ முயற்சித்து வாழ்ந்தாா், ஏழு உடல்களை ஆரோக்கியமாக்கியும் பார்த்தார். அப்படிப் பார்த்த பின்புகூட, அவரிடம் ஏதோ ஒரு ரசம் இல்லாதிருப்பதை மிக ஆழமாய் உணர்ந்தார். அது அவரை மிகவம் வருக்கியது.

இந்த நிலையைத்தான் futility of intellect, அதாவது பட்டறிவின் இயலாத் தன்மை என்று அழைப்பார்கள்.

அதனால்தான் முன்னோர்கள் வெறும் ஞானம் மட்டுமே போதாது, ஞானத்தைத் தாண்டிய ரசமும் தேவை என்று சொல்கிறார்கள். இதை உணர்ந்து, காடு மேடெல்லாம் அதைத் தேடி அலைந்து, அந்த ரசத்தை அனுபவித்த பின்னரே, நாரதர் பூர்ண திருப்தியை அடைந்தார்.

அனுபவிக்கும் விதமே அடையப்படும் அந்தத் திருப்தியை நிர்ணயிக்கிறது. மயான அமைதி வேறு. பூங்காவன கொண்டாட்டம் வேறு.

வெறுமனே ஞானமடைவதால் அமைதியை அடையலாம். ஞானத்தை அடையலாம். மற்றவர்களுக்குப் போதிக்கலாம். ஆனால் கொண்டாட்டமான வெளிப்பாடு இருக்காது. கொண்டாடுவது இன்னும் அருமையான வெளிப்பாடு. புத்தா் அடைந்த ஞானமும், கிருஷ்ணர் அடைந்த ஞானமும் ஒன்றுதான். அவா்களின் வெளிப்பாட்டை ஒன்று என்று சொல்ல மூடியாது.

நாரதரைப் போன்று பலர் இருக்கிறார்கள். ''பல வருடமாக நான் தவம் செய்கிறேன். எனக்கு எல்லாச் சாஸ்திரங்களைப் பற்றியும் நிறையவே தெரிகிறது. இருந்தும் எதையோ இழக்கிறேனே?' என்று சொல்பவர்கள் இவர்கள். இவர்கள் அடைய வேண்டியது ஞானத்தைத் தாண்டிய ரசம்.

நிகழ்காலத்தில் இருப்பது சாத்தியமல்ல!

இந்தச் சொற்பொழிவைக் கேட்டு முடித்ததும் ஒரு அன்பர் இப்படிக் கேட்டார், ''பிரமிப்பாக இருக்கிறது இதுவரை நாங்கள் கேட்டிராத சத்தியம் இது.

இதுவரை 'நிகழ்காலத்தில் இருங்கள்' என்றுதான் கோட்டிருக்கிறோம். இப்பொழுது 'நிகழ்காலத்தில் இருப்பது சாத்தியமில்லாதது' என்று கேட்கிறோம்.

ஒரு கேள்விக்கு எப்போதுமே இரண்டு விதமான பதில்கள் உண்டு. ஒன்று சமூக ரீதியான பதில். இன்னொன்று ஆழ்ந்த தேடுதல் உடையவர்களுக்கான பதில், பக்தர்களுக்கான பதில்.

இந்த இரண்டு விதமான நிலைகளில் இருப்பவர்களுக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது.

'நிகழ்காலத்திலேயே வாழுங்கள்,' என்பது, இறந்த காலத்தின் பிடியிலிருந்தும் எதிர்காலத்தின் உசுப்பல்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றி, மன ஆகே ராக்கியத்தைத் தருவதற்கான பதில். முதல் நிலையிலிருப்பவர்களுக்கான பதில் மற்றும் கீர்வு.

அதே நீங்கள் ஞானத்தை தாண்டிய ரசத்தைத் தேடும் தீவிரமான பக்தராக இருந்தால், உங்களுக்கான பதில்தான் 'நிகழ்காலத்தில் வாழ்வதென்பது சாத்தியமேயில்லாத பொய்.''

இந்த இரண்டையும் சொல்ல வேண்டிய பொறுப்பு என்னிடம் இருப்பதினால், இரண்டையும் சொல்கிறேன். உங்கள் நிலைக்குத் தேவையான சத்தியத்தை எடுத்துக்கொண்டு மேம்படுங்கள்.

ஒரு ஞானியை விடவும் கொடுத்து வைத்தவர்கள்

Lucky peopleThanThe Enlightened Master himself!

ரூரம், நம்முடைய வாழ்க்கையில் மனத்திற்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை. அதாவது ஆனந்தமயமான மனத்தை வடிவமைப்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

நம் வாழ்க்கையில், எல்லாவிதமான துக்கத்திற்கும், ஆனந்தத்திற்கும் மனம் ஒரு மிகப்பெரிய காரணம் என்று நாம் நினைத்தே பார்ப்பதில்லை.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதெப்படி மனத்தை ஆனந்தமயமான மனமாக வடிவமைக்க முடியும் என்று !

முடியும் !

நிச்சயம் முடியும் !

அப்படி வடிவமைப்பதைத்தான் ஞானத்தைத் தாண்டிய ரசம் என்கிறோம்.

நிஜத்தைச் சொல்ல வேண்டுமானால், ஆனந்தமயமான மனத்தை வைத்து வாழ்பவர், ஒரு ஞானியைவிட ஆனந்தமயமான வாழ்வை வாழ்வார்.

ஞானி, குரு என்பவர்கள் கரும்பாக மாறியவர்கள்.

ஆனால் ஞானத்தைத் தாண்டிய ரசத்தில் வாழ்பவர்கள், அந்தக் கரும்பின் இனிப்பை ருசிக்கும் எறும்புகள். எனவேதான், இப்படிச் சொல்வோம். ''கரும்பைவிட எறும்புகளே கொடுத்து வைத்தவை. ஆனந்தமயமான மனத்தை ஒருவா வடிவமைப்பதாலேயே, அவர் தம்மை ஒரு கோயிகையாகக்கூட எளிதில் மாற்றிவிட முடியும்.''

ஒரு உதாரணத்திற்கு ...

நீங்கள் மருத்துவராக இருக்கிறீர்கள். உங்களுடைய தம்பி பொறியியல் வல்லுனராக இருக்கிறார். உங்களுடைய அண்ணன் வழக்கறிஞராக இருக்கிறார் என்றால் காரணம் என்ன ?

மூன்று பேருக்கும் இருக்கிற வேறு வேறுவிதமான மனம் அவ்வளவுதான். உங்களுடைய மனம் மருத்துவ தொழிலைச் செய்வதற்காகப்

பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் அண்ணனுக்கு வழக்கறிஞர் தொழில் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. உங்கள் தம்பியின் மனம் இன்ஜினியா் தொழில் செய்வதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனந்தமாக வாழ்வது அதற்கான மனத்தை படைப்பது என்பதும் சாத்தியமாகக்கூடிய ஒரு வாழ்க்கை முறைதான்.

மனம்

Section 3

அப்படித்தான் வாழ்க்கை நடக்கிறது. நீங்கள் நினைக்கிறீர்கள் ஒரு வழக்கறிஞருக்கும், பொறியாளருக்கும், மருத்துவருக்கும் இருக்கும் வித்தியாசம், தொழிலில் உள்ள வித்தியாசம் என்று. 'தொழில்' அல்ல, 'மனமே'வித்தியாசம்.

முக்கியமான ஒரு விஷயம், மனம் வித்தியாசப்படுவதால்தான், அவர்களுடைய செயல்முறைகள் வித்தியாசப்படுகின்றன. அதுபோலவே உங்கள் வாழ்க்கையில் மனம் வித்தியாசப்படும் பொழுது, செயல்முறைகள் வித்தியாசப்படும்.

அதைப்போன்றே, நீங்கள் வாழ்க்கையில் துக்கமுடையவா்களாக வாழ்கிறீர்களா, மந்தமானவராக வாழ்கிறீாகளா, இல்லை உற்சாகம் உடையவராக வாழ்கிறீர்களா என்பதும் வேறுபடும். இது மூன்றும் வேறு வேறுநிலைகள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், எந்த நிலைக்கு வேண்டுமானாலும் போகலாம்.

இந்த மூன்று நிலைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், 'உங்களுடைய மனம்தான்'.

இன்ஜினியருக்கும், லாயருக்கும் இருக்கிற வித்தியாசம் என்னவோ, அதேதான் ஆனந்தமாக இருப்பவருக்கும், துக்கமாக இருப்பவருக்குமான வித்தியாசம்.

துக்கமாக இருக்கிறவர்கள் , ''ஆனந்தமாக வாழ்பவர்கள், அதிர்ஷ்டம் செய்தவர்கள்'' என்று நினைத்துக்கொள்கிறார்கள்

கிடையாது !

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆனந்தமாக இருப்பது என்பது, 'ஒரு தெளிவான பயிற்றுவிக்கும் முறை'.

இப்பொழுது பொறியாளராக இருக்கிறவாகள், எல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நினைப்பதில்லையே. அது மிகத்தெளிவான பயிற்றுவிக்கும் முறை. யாருக்கு வேண்டுமானாலும் சாத்தியக் கூறாகக்கூடிய ஒரு பயிற்றுவிக்கும் முறை!

அதேபோன்று ஆனந்தமாக வாழ்வது, அதற்கான மனத்தைப் படைப்பது என்பதும் சாத்தியமாகக் கூடிய இரு வாழ்க்கை முறைதான். ஞானத்தையும் தாண்டிய ரசம் என்பதும், பூலோகத்தில் சாத்தியமாக்கப் படக்கூடிய ஒன்றுதான்.

இன்னும் சொல்ல வேண்டுமானால் பூமியில் மட்டும்தான் அது எளிதில் சாத்தியம்.

நீங்கள் வாழ்க்கையில் துக்க(முடையவர்களாக வாழ்கிறா்களா ? மந்தமானவராக வாழ்கிறீர்களா ? இல்லை உற்சாகம் உடையவராக வாழ்கிறீர்களா ? இந்த மூன்று நிலைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், "உங்களுடைய மனம்தான்."