113. விட்டு விடுங்கள் ... பரமஹம்ஸர்களாவீர்கள்!
# விட்டு விடுங்கள் ... பரமஹம்ஸர்களாவீர்கள்!
Leave it... You will become Paramahamsas!
டுரு சின்ன உதாரணம், சின்ன கதை:
வட இந்தியாவில் வேட்டைக்காரர்கள் பறவைகளைப் பிடிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். மதுரா, ஆக்ரா இந்தப் பக்கம் எல்லாம் காட்டில் ஒரு சின்ன குச்சியைக் கட்டித் தொங்க விட்டு விடுவார்கள். குச்சியைக் கட்டி இரண்டு மரக்கிளைகளுக்கு நடுவில் தொங்க விட்டு விடுவார்கள்.
'இதில் பிடிக்க நினைக்கலாம். குச்சி தொங்கிக்கொண்டு இருக்கும்பொழுது, ப்புறவை ஒரு உட்கார்ந்தால் பறவையைவிட லேசான குச்சி தலைகீழாகக் கிரும்பிவிடும். இப்போது பறவை தலைகீழாகத் தொங்கிக்கொண்டு இருக்கும்.

நன்றாக ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கயிற்றை இப்படிக் கட்டி விட்டுவிடுவார்கள். பறவை வந்து ஒரு பக்கமாக வந்து அமரும்.
உட்கார்ந்த உடனேயே, குச்சி தலைகீமாகத் திரும்பிவிடும்.
பறவையினுடைய கனத்தினால் தலை கீழாகத் தொங்கித் திரும்பிவிடும். பறவையும் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு இருக்கும். இப்படியே அந்தப் பறவை ஒரு மணிநேரமோ, இரண்டு மணி நேரமோ தொங்கிக் கொண்டே இருக்கும்.
அந்தப் பைத்தியக்காரப் பறவைக்குத் தெரியாது, குச்சியைவிட்டால் பறந்து போய்விடலாம் என்று.
எப்படி அந்த மூடப்பறவை, அந்தக் கோலை விட்டால் பறந்துவிடலாம் என்று தெரியாமல் பிடித்துக்கொண்டே, தொங்கிக் கொண்டிருக்கிறதோ, அதே மாதிரிதான் நாமும், நம்முடைய மனத்தை விட்டால், பரமஹம்ஸர்களாக மாறிவிடலாம் என்று தெரியாமல் மனத்தை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டே இருக்கிறோம்.
மூடப்பறவை கோலைப்பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது போல, நாமும், நம் மனத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டே இருக்கிறோம். அந்தப் பறவை, கோலை, பாதுகாப்பு என்று நினைத்து தொங்குகிறது. ஆனால், வேடன் வந்து இந்தப்பறவை எதைப் பாதுகாப்பு என்ற நினைத்ததோ, அதையே பிடித்து இழுத்து விடுகிறான்.

எடுத்து கூண்டுக்குள் போட்டுவிடுகிறான்.
அதே மாதிரிதான் நாமும், நம் மனத்தைப் பிடித்துத் ெகாங்கி க் கொண்டு இருந்தோமென்றால், ஒருநாள் எமன் வருவான். வந்து அந்த மனத்திலிருந்தும் மரணம் மூலமாகப் பிடித்து
இழுத்து, அதையும் எடுத்துவிடுவான். நம்மை எடுத்து துக்கம் என்கின்ற கூட்டிற்குள்ளே அடைத்து விடுவான்.
அதனால், வேடன் வருவதற்கு முன் அந்தப்பறவை பறக்க வேண்டும். எமன் வருவதற்கு முன், நீங்கள் மனத்தை விடவேண்டும்.
ஏற்கனவே ஒரு பறவை, அந்த மாதிரி பிடித்ததிலிருந்து, கீழே விட்டுவிட்டு, கீழே விட்டதனால், தரையில் விழுந்து அடிபடாமல் பறந்த ஒரு பறவை, இந்த மாதிரி பரமஹம்ஸமாக வந்திருக்கிறது.
மாம் சொல்லகிறது. ''விதை வெடித்தால்கான், நான் வெளியில் வா முடியும்.''
விதை சொல்லுகிறது, ''நீ வெளியில் வந்தபிறகு நான் வெடிக்கிறேன், ஏனென்றால், வெடித்தபிறகு நீ வெளியில் வரவில்லை யென்றால், நான் இறந்து போய் விட்டால் என்னாவது ? ! ' '
இரண்டிற்கும் நடுவில், இந்த மாதிரி தொங்கிக் கொண்டு இருக்கிற பறவையிடம் வந்து, " அப்பா, உன்னைப்போல்தான் நானும் நினைத்தேன். கையை விட்டால் கீழே விமுந்து அடிபட்டு விடுவோம் என்று நினைத்துக்கொண்டு விடாமலேயே இருந்தேன். ஆனால், எப்படியோ கையை விட்டுவிட்டேன். விட்டபிறகுதான் எனக்குத் தெரிந்தது, என்னால் பறக்க முடியும் என்று, நீயும் விட்டுவிடப்பா,'' என்று சொல்வதுதான் 'தீகைஷ'.
ஏற்கனவே தொங்கிக்கொண்டிருந்த ஒரு பறவை, "அப்பா, நான் விட்டதனால் எனக்கு
அடிபடவில்லை, பறந்து விட்டேன். நீயும் உன் மனத்தை விட்டுவிடு. உன் மனத்தை விடுவதனால், எந்த அடியும் படாது, எந்த வலியும் வராது, ஆனந்தமாகப் பரமஹம்ஸமாகத்தான் மாறுவாய், '' என்று நம்பிக்கையைக் கொடுக்கிறது, ஏற்கெனவே பறந்த ஒரு பறவை, வலையில் சிக்கிப் பறந்த பறவை வலையில் மாட்டிக் கொண்டிருக்கின்ற இன்னொரு போய். அறிவுரை கொடுப்பதுதான், இப்போது நாம்

செய்கின்ற நித்ய தியான தீகைஷ். இது குருவிற்கும், சீடனுக்கும் இருக்கின்ற உறவு.
ஏற்கனவே, மனம் என்ற ஒன்றைப் பற்றிக்கொண்டு வாழ்ந்ததனாலும், இப்போது அதை விட்டு விட்டு ஆனந்தமாக வாழ்வதனாலும், உங்களுக்கும் உரைக்கிறேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். மனத்தை விடுவதனால், ஆனந்தத்தில்தான் வாழ்வீர்கள், துக்கம் வராது.
ஒரு விதை வெடிப்பதற்கு முன்பு, "நாம் வெடித்தால் மரமாக மாறுவோமோ?
மாறமாட்டோமோ?'' என்ற பயம் அதற்கு வரும்.
விதை மாத்திடம், ''மாமே, நீ வெளியில் வா, அகன்பிறகு நான் வெடிக்கிறேன்.'' என்று சொல்லும். ஆனால் மரமோ விதையிடம், ''நீ வெடித்தால்தான் நான் வெளியே வரமுடியும், '' என்று சொல்லும்.
ஏற்கனவே விதையாக இருந்து விருட்சமாக மாறிய மரம் அங்கே வந்து, ''அப்பா,

விதையே! கவலைப்படாதே! வெடிக்கும் முன் நானும் உன்னைப் மாதிரிதான் இருந்தேன். ஆனால், வெடித்த உடனே, மரமாகத்தான் மாறி இருக்கிறேன். அழிந்து போகவில்லை.
நீயும் வெடி, மரமாகத்தான் மாறுவாய்,'' என்று அந்த விதைக்குத் தன்னம் பிக்கையைக் கொடுப்பதுதான் 'தீகைஷ்'.
அதனால் குச்சியைப் பற்றிக் கொண்டு, மனத்தைப் பற்றிக் கொண்டு, தொங்கிக் கொண்டிருக்கின்ற நீங்கள் எல்லோரும், கவலைப்படாமல், மனத்தை விடுங்கள், விடுபடுத்திக் கொள்ளுங்கள்.
"BE UNCLUTCHED"
விடுபடுத்திக் கொள்வதனால், நீங்கள் ஒரு நாளும் கீழே விழமாட்டீர்கள். மண்டை உடையாது. துக்கம் வராது, பறப்பீர்கள்.
'பரமஹம்ஸ்'ர்களாக மாறுவீர்கள்.
இதை ஆழ்ந்து புரிந்துகொண்டு, இந்தச் சத்தியத்தை உள்வாங்கி, மனம் என்கின்ற குச்சி யைப் பிடித்துக் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு, ''பரமஹம்ஸர்களாக மாறுவீர்களாக,'' என்று ஆசீர்வதித்து முடிக்கிறோம்.


எல்லா இரகசிய முடிச்சுகளையும் அவிழ்ப்பதே ஜீவன் முக்தி
ஆசையன் இருச்யம்