குரு சிஷ்யன்
குரு சிஷ்யன்
'ஆசை தவறா' 'இல்லை தவறில்லை' 'அன்று ஆசைப்படுவது தவறென்றீர்களே! ' 'அன்று மட்டுமில்லை இன்றும் சொல்கிறேன் ஆசைப்படுவது தவறு' 'அப்போ! கொஞ்சநேரம்முன் ஆசை தவறில்லை என்றீர்களே'
'இப்போதும் சொல்கிறேன் ஆசை தவறில்லை'
'ஐயய்யோ!
என்ன சாமி குழப்பமாயிருக்கிறதே ஒன்றுமே புரியலையே ! '
மீண்டும் சொல்கிறேன் கேள்! ஆசை தவறில்லை ஆசைப்படுவது தவறு'
『『『』『『』『『』『『』『『』『『』『『』『』『『』『』『』『』『』『』『』『』『』『『』『『』『』『』『』『『』『『』『『』『』『『』『』『『』『『』『『』『』『『』『『』『』『『』『『』『『』『』『』『』『『』『』『『』『『』『『』『』『『』『』『』『』『』『』『』『』『』『』『』『』『』『』『』『『』『』『』『『』『』 ..... ....
'இப்பிரபஞ்சத்தில் நீ வாழ உரிமையிருக்கிறது அதேபோல் ஆசைக்கும் வாழ உரிமையிருக்கிறது 'தெய்வத்தாய்' தடுப்பதில்லை !
'என்ன சொல்கிறீர்கள் ? ஆசையை ஒரு தனிப் பொருளாய்ச் சித்தரிக்கிறீர்கள்'
'அம் ! நெருப்பு போல் காற்று போல் சக்தியோல்
ஆசையும் தனியே ! இருந்தும் இல்லாதிருக்கும் அது வாழ்கிறது'
。。。。 .... " ....
'மந்தத் தன்மையிலிருப்பவன் வலியச் சென்று ஆசைகளை ஏற்றிக் கொள்கிறான்.
மனப் போதைக்காக -ஏறியதும் அவை ஆட்டிப்படைக்கின்றன அவனையே! ' விழிப்புணர்வு குறையப் பெற்றிருப்பவனுக்குள் வீரியமான ஆசைகள் புகுந்து விடுகிறது. சில நேரம் புகுத்தப்படுகிறது.
இது புரியா மனிதன் இந்த ஆசைகளைத் தன் ஆசைகளாய்த் தத்தெடுத்து பால் வைத்து முட்டை வைத்து வளர்க்கிறான் ! வளர்கிறது ! ஆசைப்படுகிறான்.
ஆசைகளுக்காய் வாழ ஆரம்பித்து தனக்காய் வாழப் பிறந்ததை மறந்து விட்டான்.
.............................................................................................................................................................................. ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
'அதனால்தான் ஆசைப்படுவது தவறு ஆசை தவறில்லை.
உனக்காய் வாழ உனக்கென ஒரு சில ஆசைகள் எடுத்து வந்தாய் – நீ உடல் எடுக்கும்போது.
அந்த ஆசைகள் அனுபவிக்கப்பட வேண்டும். அனுபவித்ததும் ஆசைப் பாம்புகளால் பின்னப்பட்ட வலையிலிருந்து விடுதலையடைவாய்
சுதந்திரமடைவாய்
ஆனந்தமடைவாய்'
'அப்படியா சொல்கிறீர்கள்! எனக்காய் வாழ நான் எடுத்து வந்த ஆசைகளை ஆசைப் பாம்புகளிலிருந்து இனங்காணுவது எப்படி ?' 'எளிது
மிக எளிது !
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?
எடுத்து வந்த ஆசைகளில்.. எது உன்னை ஒருமுறையாவது முழுதிருப்தியுறச் செய்தது ?
எது உன்னை மீண்டும் மீண்டும் 'என்னை அனுபவி' 'என்னை அனுபவி' எனத் தூண்டவில்லை ?
அதுவே ! அதுவே ! உன் ஆசைகள்'
★★★
ஒரு தாவோ கீதம்… ஆசைகள் விடாது கொக்கிப் பிடிக்கும் உடும்புகள் நீ உதறாத வரை நீ உலுங்காத வரை. கவனி ! கவனி ! கவனி ! உடும்பும் உலுக்கப்படும் நீயும் சுதந்திரம் பெறுவாய்.
நீ தீ மான்
| C | மனிதா! மனிதா! |
|---|---|
| முரட்டுக்காளையாகத் துடிக்காதே! தீ போல எரிந்து விழாதே ! | |
| ஏன் ? | |
| ஏனென்றால் நீ தீயல்ல நீ துள்ளியோடும் கஸ்தூரி மான்! | |
| C | இறுக்கமானவனாகாதே, இளகியவனாயிரு. |
| தலைக்குக் கனம் சேர்க்காதே உள்ளத்துக் குணம் சேர். |
ஜென் சீடன்: சின்னத் துரோகம் செய்ய, பெரிய புண்ணியம் கிடைக்கும் அது என்ன ? இன்னொரு ஜென் சீடன்: விழித்துக் கொல் ! இன்னொரு ஜென் சீடன் : எதை ? ஜென் சீடன் : அகங்காரத்தை.
C
மனதை வைத்து வித்தை காட்டுபவர்கள் மனிதர்கள். அந்த மனதுக்கே வித்தை காட்டியவர்கள் ஞானிகள்
-જિ
வித்தியாசம் சொல்க ஞானி, மனிதன் கேள்! வித்தியாசம் இரண்டை... 'செத்துப் பிழைத்தவர்' ஞானி. 'பிழைத்தும் சாகிறவர்' மனிதர்