66. 'ஆரோக்கிய சாகரா' உடலைக் குணப்படுத்தும் தியானம்
# 'ஆரோக்கிய சாகரா' உடலைக் குணப்படுத்தும் தியானம்
Arogya sagara - Meditation that heals the body
| உடலுக்குள் தானியங்கி புத்திசாலித்தனம் இருக்கிறது. அதை | ||||
|---|---|---|---|---|
| உடலுக்குள் | நீங்கள் கேட்டுக் கொண்டாலே போதும். அது உங்களுக்குத் | |||
| தானியங்கி புத்திசாலித்தனம் | தேவையான உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்துவிடும். | |||
| இருக்கிறது. | ஐம்புலன்களை | இஷ்டத்திற்குத் | தூண்டுவதே | |
| ஆரோக்கியத்தைக் | குறைக்கிறது . | மனத்தின் | போகமே, |
உடலுக்கு ரோகத்தைத் தருகிறது. இதிலிருந்து விடுபட நீங்கள் யோகி ஆவதுதான் ஒரே வழி.
நீங்கள் யோகியாவதற்கான ஒரு இனிய தியானம்...
சோம்பேறித்தனமோ, ஆரோக்கியக் குறைபாடோ ஏற்படும்போது இந்தத் தியானம் மாபெரும் மருந்தாக இருக்கும்.
உடலை உங்களுடைய கட்டிலின்மீது உட்கார வையுங்கள். பூஜைக்காகத் தெய்வச் சிலையை எப்படி உங்களின் முன் உட்கார வைப்பீர்களோ, அப்படி உட்கார வையுங்கள். உங்கள் உடலை நீங்களே பார்ப்பதாகப் பாவனை ( Visualize) செய்யுங்கள். உங்களின் வார்த்தைகளை உடல் முழுமையாக கேட்கும்.
உடலிடம், ''உடலே எனக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கிறாய். உளமார்ந்த நன்றிகள்.

ஜீவன் முக்த வாழ்வு
உடலே, உன்னை நீயே குணப்படுத்திக் கொள். உன் மூலமாக நான் இன்று செய்ய இருக்கும் காரியங்களை எல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடிக்க உதவி செய்..., '' என்று தினமும் காலையில் உடலை ஐந்து நிமிடமாவது ஆராதித்து விட்டு, உடலோடு பேசிவிட்டு, அந்த நாளுக்குள் நுழையுங்கள்.
உடல் இன்னும் அதிகமாக உங்களுக்கு உதவி செய்யும். ஐம்புலன்களும் அற்புதமாய் இயங்கும். தினசரி வாழ்வில் படுத்துக் கொள்ளுமளவுக்கு உடலில் சோர்வோ அல்லது வேறு தொந்திரவுகளோ அல்லது வலிகளோ ஏற்படும்போது இந்தத் தியானத்தைச் செய்யலாம்.
சிறு உற்சாகக் குறைவு ஏற்படும் போதுகூட, இந்தத் தியானத்தைச் செய்யலாம்.
இந்தத் தியானத்தைச் செய்தவுடனேயே, உங்களின் கோரிக்கையைக் கேட்டு, உடல் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விடும்.
சில நேரங்களில் உடனடி வேர்வையாகவோ, தும்மலாகவோ, கொட்டாவியாகவோ
தனக்குள் உருவாகியிருக்கும் ஆரோக்கியக் குறைபாட்டைத் வெளியேற்றி, உங்களைத் தயார்படுத்தும். உங்களை உற்சாகமாக்கிவிடும். புதுத் தெம்பு உங்களுக்குள் பாய ஆரம்பிக்கும். புதுத் தெம்பு உங்களுக்குள் பாய ஆரம்பித்தாலே, மனம் ஒய ஆரம்பிக்கும். ஐம்புலன்கள் அற்புதமாய் இயங்க ஆரம்பித்தால், உடல் எப்போதும் உத்சாகமாகவே இருக்கும்.
உடலுக்குள் தானியங்கி பத்திசாலித்தனம் இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுக் கொண்டாலே போதும். அது உங்களுக்குத் தேவையான உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்துவிடும்.