ஆதிசைவம் ஒர் அறிமுகம்
ஆதிசைவம் ஒர் அறிமுகம்
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM சுவாமிகள் ஆதிசைவத்தைப் பற்றி அழகு தமிழில் அளித்த சொற்பொழிவுகளின் சாரமே இந்நூல். இதில் ஆதிசைவத்தைப்பற்றிய அறிமுகமும், எம்பெருமான் சதாசி வன் நேரடியாக அளித்த வேதாந்த, சித்தாந்த, ஆகமாந்த சத்தியங்களின் சாரமும், சைவத்தின் மாண்பும், சைவம் வாழ்ந்த அடியார்களின் மாண்பும் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது.
ஆதிசைவத் தமிழில் எனும்போது, நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது வழக்கிலிருக்கும் தமிழ் வேறு, ஆதிசைவத் தமிழ் வேறு.
இந்நூலில் பெருமானே வளர்த்த, வாழ்ந்து காட்டிய வாழ்க்கைமுறையையே ஆதிசைவம் என்ற தலைப்பில் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அருளியிருக்கிறார். மேலும் பக்தா்களுக்காக பரமன் நடத்திய திருவிளையாடல்களையும், பரமனை அடைய ஒரு அற்புத வழியாக சைவத்தை வாழ்ந்த பக்தர்களின் சரிதத்தையும் அழகு தமிழில், அற்புத நடையில் அருளியிருக்கிறார் நம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
குளவி புழுவைக் கொண்டு சென்று, கூடு செய்து, வாயிலில் அமாந்து ஓங்கார பிரணவத்தைச் சொல்லிச் சொல்லிச் சொல்லியே, புழுவைக் குளவியாக்கும். அதைத்தான் குரு செய்கிறார். ஜீவனைக் கொண்டுபோய் பூலோகக் கைலாயமாம் பிடதி கேஷத்ரக் கூட்டில் வைத்து, 'சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம்' என்று சிந்தையே கரைந்துபோகும் அளவிற்குச் சொல்லி, ஜீவனுக்குள் 'அகம்' அற்றுப்போகும் வரை கொட்டிக் கொட்டி, ஜீவன் 'அகம்' அற்றுப்போய் சிவோஹம் ஆகின்றவரை இதைச் செய்து ஜீவனை சிவோஹமாக்குகிறார். ஆதிசைவத் தமிழிலே இதனைப் பிரம்மக்கீட நியாயம் என்று சொல்வோம்.
குளவி, தன்னுடைய ரீங்காரத்தால் ஒரு புழுவை குளவியாக்குவதுபோல, குருவினுடைய வார்த்தைகள், கேட்பவரை 'நான்' என்ற நிலையிலிருந்து 'இருப்புத்தன்மை' நிலைக்கு உயர்த்தும். குருவினுடைய வார்த்தைகள் எந்த உணர்வில் இருந்து வெளிப்படுகிறதோ அதே உணர்வை, கேட்பவர்களுக்கும் கொடுக்கும் சக்தி வாய்ந்தது. குருவின் சாநித்தியத்தில் ஒருவர் இருந்து ச த்தியங்களைக் கேட்கும்போது, ஒருவர் எளிதாக ஞானநிலையை அடைய முடியும்.