1. Born to Heal
ஆணந்த ஸ்புராணத் திட்டம்
திறந்த மனதுடன் வாருங்கள். புத்துணர்வு பெற்றுத் திரும்புங்கள், அப்போ து சொல்லுங்கள் 'என் கோப்பை நிரம்பி வழிகிறது' - என்று. உங்கள் கோப்பையைக் கொட்டுங்கள்.
பேராசிரியர் ஒருவர் ஒரு ஜென்குருவைச் சந்தித்தார். ஜென்குரு அவரது கோப்பையில் தேநீர் ஊற்றினார். குவளை நிரம்பி வழிந்தது. இருப்பினும் ஊற்றிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்திற்குமேல் பேராசிரியரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "கோப்ப்பை நிறைந்து விட்டது. இனிமேலும் இதில் எதையும் ஊற்ற முடியாது, என்று பதறியபடியே சொன்னார்.
"நீயும் இந்தக் கோப்பையைப் போலத்தான். உனக்கு நான் ஜென்னைக் காட்டுவது எப்படி? நீ கோப்பையைக் காலி செய்ய வேண்டாமோ?" என்று கேட்டார் குருநாதர். கதையைக் கேட்ட மக்கள் அதை இவ்வாறு அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்: "ஏற்கெனவே தெரியும் என்ற நினைப்பு இருந்தால் நீங்கள் எதையும் கற்க மாட்டீர்கள்." "நாம் உண்மையை உணர்ந்து கொள்வதில் எதிர்ப்படும் தடைகள் ஏற்கெனவே நம் மனதில் படிந்துள்ள எண்ணங்களும் விருப்பு வெறுப்புகளுமே."
நாட்டியத்தின் சக்தி
"நாட்டியத்தின் சக்தியை அறிந்தவர்கள் இறைவனோடு ஒன்றிப் போய்விடுகிறார்கள்," என்று உணர்ச்சி ததும்பச் சொல்கிறார் பாரசீகக் கவிஞர் ரூமி.
நடன இன்ப போதையில் திளைக்கும் பக்தர்கள் தம்மை மறந்து பரசக்தியுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள்.
ஞானத் தேடலும் இப்படியே.
நடனமாடும் பொழுது நான் எதையும் அவதானிப்பதில்லை.
எவரையும் நான் வெறுப்பதில்லை. ஏனென்றால் வாழ்விலிருந்து என்னை நான் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.
ஆழ்ந்த பொருள்படச் சொல்வதென்றால் நடனம் என்பது உயர்நிலை வாழ்வு.
தியானம் தரும் பரிசு மேலும் தியானம்!
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
தியானம்
உங்களுக்கு உள்ளே உள்ள ஆற்றல் என்ன என்பதை அவதானியுங்கள். அது ஒரு செல்வம். உலகின் அனைத்துச் செல்வங்களையும்விட உயர்ந்தது அது.
உங்கள் மூச்சிலே கவனத்தைப் பதியுங்கள். அப்பொழுது அது நிதானமாக இருக்கும். அமைதியாகவும் இருக்கும். நீங்கள் ஒரு புதிய உலகில் நுழைவீர்கள். முற்றிலும் புதியதான அந்த உலகத்தில் உடல் நலம் உண்டு. மகிழ்ச்சி உண்டு. அது உங்கள் வாழ்க்கையின் தன்மையை அது உயர்த்தும், செறிவூட்டும்.
தியானம் மனதைத் தெளிவுபடுத்தும். உங்கள் ஆத்மாவை வெளிப்படுத்தும். சாதாரண மன நிம்மதியைத் தருவது மட்டுமல்லாமல், அது நிரந்தர மகிழ்ச்சியையும் தரும். நிலையான பேரானந்தம் அடைய உங்கள் ஆன்மீக குரு வழிகாட்டுவார். அவர் உங்களை அலை கடலி லிருந்து பாதுகாப்பாகக் கரை சேர்ப்பார். உங்களைச் சுகமான வாழ்வுக்கு இட்டுச் செல்வார்.
அருள் நிறைந்த அமுதக் கடலே உன் அருள்வுளி அண்டத்தையே குழ்ந்திருக்கிறது
அருள் புரிவீர், அருணாசலரோ
ஒ, அருணாசலரே, மேன்மை என்பது தாங்களே. என் இதயத் தாமரை மலர்ந்து ஆனந்தத்தில் ஆழ தாங்களே என் அருட்கதிரவனாக இருந்து எனக்கு அருள் புரியுங்கள்.
அருணாசலரே, ஓ, ஒளிமலையே முனிவர்களையெல்லாம் அருட்தாமரைகளாக ஈர்த்தீர், முகிழ்வித்தீர், ஒளிர்வித்தீர் இருளையும் சோகத்தையும் விரட்டி அடித்தீர்
அருணாசலம் என்னும் தொன்மை மலையே அருளை அங்கே ஊட்டினிர் ஒளி சிதறும் மாணிக்கமாக அங்கே ஒரு தெய்வீகப் பிறவி உதித்தது.
பச்சிளம் வயது பனிரெண்டில் அவர் முனிவரென அழைக்கப்பட்டார் இந்தத் திருநாடு நெடுகத் திரிந்தார் கல்லிலும் மண்ணிலும் காதங்கள் நடந்தார்.
வெள்ளப் பெருக்கில் நா்மதை நதி மகிழ்ந்து உவந்து களிநடனமாட எதிரே விந்தியமலைப் பள்ளத்தாக்கில் தேன்கூட்டுப் பாலத்தைச் தரிசிக்க
புலிகள் உலாவும் அல்மோராக் குன்றுகளில் பொதிந்துள்ள இராமகிருஷ்ண மடமே வீடாக பூலோக சுவர்க்கம் அதுவே என்று சிவனுறை வனத்தை அவர் போற்றிப் புகழ
புலிக்கு அஞ்சிய அவரது தோழர் பீதியில் தன்னிலும் பன்மடங்கு எடையிலான கல்லை ஒரு கணத்தே தூக்க, விடிந்தபொழுதில் அறுவர் அதைத் தூக்க முயன்று தோற்க
அலுப்பில் துவளாத பாதங்கள் எங்கும் உலாவ மனமது கடந்த நிலையில் அவர் துயில மாதங்கள் ஒன்பது கடந்தன, ஒருபோதும் அவர் இரவறியார், பகலறியாார்.
புலர்காலைப் பொழுதில் ஒருநாள் கண்மலர மனம் ஒன்று, இரண்டு, மூன்று என்பதற்குள் அவரது மணிப்புரச் சக்கரம் ஒளிவீச இந்நிலை எய்தினார் அருந்தவப் பொழுதில்.
ஆனந்தம், ஆனந்தம் என ஒலிக்கக் கேட்டார் அறிவொளியை அழைத்து வந்தன இச்சொற்கள் தொடர் அருந்தவ முனைவு தன் முகட்டைத்தொட இறைஞ்சுகிறோம் இன்று நாம் அவர் அருள்வேண்டி
மணம், ஆன்மா வாழ்வு அணைத்தையுமே தன் முறுவலால் கூகப்படுத்தும் உள்ளங்கவர் முனிவர் அவர்: அனைவருக்கும் சக்தி தர அழைக்கின்றார் அவர் நம் விடியலின் குரலாக.
நம்பிக்கை - நோய்களை அகற்றவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதுவே ஒரே வழி. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
நன்றியுடன் இருங்கள்
இனந்தோறும் நன்றியுடன் இருங்கள் ஒவ்வொரு நாளும் புதிய நாள் அது புதிய தொடக்கம்.
கதிரவன் உங்களை முத்தமிட்டு எழுப்பும் பொழுது நீங்கள் படுத்திருந்தாலும்கூட அன்றைய தினம் நன்றி செலுத்துங்கள் உயிருடன் இருப்பதற்காக ஏனெனில் நேற்றிருந்து இன்றில்லாதவர் பலர்
என்ன செய்ய வேண்டுமென்று எண்ணும் போது வேலைகள் முன்னே முண்டியடித்தும் வரும்போது உங்களுக்கு வேலைகள் இருப்பதற்காக நன்றி செலுத்துங்கள் ஏனெனில் பலருக்கு எந்த வேலையும் இருப்பதில்லை.
காலைப் பொழுதின் தேவைகள் பலப்பலவாயினும் எண்ணற்ற வேலைகள் எதிர்ப்பட்டாலும் உங்களுக்குக் குடும்பம் இருப்பதற்கு நன்றி செலுத்துங்கள் பலர் தனியர்களாகத் தெருவில் அலைகிறார்கள்.
அதிகப்படியான வேலைகள் சோர்வு தந்தாலும் ஒய்வெடுக்க நேரமில்லாவிட்டாலும் இலட்சியத்தை எட்ட முடிவதற்காக நன்றி செலுத்துங்கள் எத்தனையோ போர்க்கு அந்தக் கொடுப்பினை இல்லை.
சோர்ந்து ஒய்ந்து தூங்கச் செல்லும் முன் விளக்குதலை அணைக்கத்தூ சக்தி இல்லாத போதிலும் நீங்கள் நிம்மதியாக இருப்பதற்காக நன்றி செலுத்துங்கள் பலர் உறக்கமில்லாமலேயே இரவுகளைக் கழிக்கிறார்கள்.
சக்கரங்களால் குணப்படுத்துதல்
கண்ணுக்குப் புலப்படாத சக்தி நுண்ணுயிர்க் கூறுகளால் நம் உடல் சூழப் பட்டிருக்கிறது.
உடலின் குட்சும சக்திக் கூறுகளில் நோய்களுக்கானவற்றைக் கண்டுபிடித்து விட்டால் ஸ் தூல உடலில் அவை தங்குவதற்கு முன்பாகவே குணப்படுத்தி விடலாம்.
சக்கரங்கள் என்பவை குட்சும உடலில் உள்ள உயர்சக்தி மையங்கள். அப்படி ஏழு முக்கிய சக்கரங்கள் நம் உடலில் உள்ளன. அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு உடலின் முக்கிய பாகங்களுக்குச் சக்தியைத் தருகின்றன. நாடி, நரம்புகள், நாளங்கள், சுரப்பிகள், மூளை, இதயம், வயிறு, முதுகுத்தண்டு, கண்கள் போன்றவை எல்லாமே இந்த ஏழு சக்கரங்களால் இயக்கப் படுகின்றன.
இந்தச் சக்கரங்கள் சரியாக இயங்காமல் போனால் உடலில் நோய்கள் பிறக்கின்றன. இந்தச் சக்கரங்களைத் தூய்மைப் படுத்தி, சீர்செய்து மறுபடி இயக்கினால் உடலின் எந்தப் பகுதி நோய்வாய்ப்பட்டதோ, அதை நாம் குணப்படுத்தி விடலாம்.
| ஏழு முக்கிய சக்கரங்கள் | |
|---|---|
| 1. ஸகஸ்ர சக்கரம் (கிரீடச் சக்கரம்) | |
| இருக்குமிடம் நிறம் இலக்குகள் அத்த இயல்புகள் | சிரஸ் (தலையின் உச்சி) ஊதா கல்வி, அறிவு, ஞானம், உயிர்ப்பு கூடுதல் அறிவுடைடைமை, ஆன்மீக நாட்டம், குழப்பம் |
| குறைபாட்டு இயல்புகள் | கற்றலில் இடர்ப்பாடு, ஆன்ம நாட்டத்தில் ஐயப் பாடு, நம்பிக்கைக் குறைவு, உலோகாயத மனப்பான்மை மற்றும் வெறுப்புணர்வு |
| இயக்கும் உடல் பாகங்கள் | தலை உச்சியில் இருப்பதனால் இது மூளையை இயக்குகிறது; அத்துடன் முழு நரம்பு மண்டலத்தையும் நிர்வகிக்கிறது. |
| உணர்வுகள் | இரக்கம், ஹற்றுமை, இணக்கம், பிறருடன் ஒன் றுபடுதல் ஆகியன. |
| சூரப்பி | பீனியல் சுரப்பி. |
| 2. ஆக்ஞ சக்கரம் (மூன்றாம் கண், இமைச் சக்கரம்) | ||||
|---|---|---|---|---|
| இருப்படிப்பு | முன்றெற்றியின் நடுப்பகுதி | |||
| நிறம் | இண்டிகோ - அடர் நீலம் | |||
| இலக்குகள் | துல்லியமான கணிப்பு, கற்பனை, தெளிவான பார்வை | |||
| அத்த இயல்புகள் | தலைவலி, பிரமைகள், மாயத் தோற்றங்கள், மிரட்சி, கவனமின்மை. | |||
| குறையாட்டு இயல்புகள் | நினைவாற்றல் குறைபாடு, பார்வைக் குறையாடு, எதையும் மறுத்தல். | |||
| இயக்கும் உடற் பகுதிகள் | ெந்றியும் கழுத்துப் பகுதியும் | |||
| உணர்வுகள் | அணைத்துப் புலன்கள் வழியாகவும் எதையும் அறிந்து கொள்வது. | |||
| சூரப்பி | பிட்யூட்டரி சுரப்பி |
| 3. விசுத சக்கரம் | |
|---|---|
| (தொண்டைச் சக்கரம்) | |
| இருப்பிடம் | தொண்டையின் அடிப்பகுதி |
| நிறம் | விண் நிலம் |
| இலக்குகள் | தெளிவான தகவல் தொடர்பு, படைப்புத் திறன், இசை நயம், |
| அத்த இயல்புகள் - | அதிகப் பேச்சு, பிறர் பேசுவதைக் கேட்கும் பொ றுமையின்மை. |
| குறைபாட்டு இயல்புகள் | பேசுவதற்கு அச்சம், நிலையற்ற தன்மை. |
| இயக்கும் உடற் பகுதிகள் | தொண்டை, கழுத்து, கைகள், இடுப்புத் தசைகள். |
| உணர்வு | காது கேட்கும் தன்மை. |
| சூரப்பி | தைராய்டு சுரப்பி |
| 4. அநவறாத சக்கரம் | |
|---|---|
| (இதயச் சக்கரம், அன்பு மையம்) | |
| இருப்படுட ம் | மார்பின் மையப் பகுதி |
| Amin | மரகதப் பச்சை |
| இலக்குதன் | நிதானம், பரிவு, திருப்தி, நல்லுறவு. |
| அத்த இயல்புகள் | பொறாமை மற்றும் பிறரைச் சார்ந்திருத்தல் |
| குறைபாட்டு இயல்புகள் | வெட்கப்படுதல், தனிமை பிரிவின்மை, கடுமை, பிறரை விமரிசனம் செய்தல். |
| இயக்கும் உடற் பகுதிகள் | இதயம், இரத்த நாளங்கள், நுரையீரல், மார்புப் பகுதி முழுவதும். |
| உணர்வு | தொடுதல் உணர்வு |
| சுரப்பி | தைமஸ் சுரப்பி - நோய்களிலிருந்து காக்கும் தன்மையை நிர்வகிப்பது. |
| 5. மணிப்புரா சக்கரம் | ||
|---|---|---|
| (சக்தி மையம் குரியவிசைச் சக்கரம்) | ||
| இருப்பிடம் | குரிய நாளங்கள் | |
| நிறம் | மஞ்சள் | |
| இலக்குதன் | உடல் திறன், மனோதிடம், இலட்சிய மனப்பான்மை, சுயமரியாதை மற்றும் தானாக முன்வந்து செயல்படுதல். | |
| அத்த இயல்புகள் | பிறரைக் கட்டுப்படுத்துவது, மூர்க்கமாக நடந்து கொள்வது தொய்வில்லாமல் செயல்படுவது. | |
| குறைபாட்டு இயல்புகள் | மனோதிடமின்மை, சுயமரியாதையின்பை, சோம்பல், அச்சம். | |
| இயக்கும் உடற் பகுதிகள் | தசைகள், தோல், கண்கள், முகம், சூரிய நாளங்கள், ெருங்குட்டல், வயிறு, கல்லீரல், சுரப்பிகள், பிற உறுப்புகள். | |
| உணர்வு | பார்வை | |
| சூரப்பி | கணையம். |
| 6. ஸ்வதிஷ்தான சக்கரம் | |
|---|---|
| (உணர்வு மண்டலம் வயிற்றுப் பகுதி) | |
| இருப்பிடம் | நடுவயிறு |
| நிறம் | ஆரஞ்சு |
| இலக்குதன் | சுகம் தேடல், தொடுதல் உணர்வு, ஆரோக்கியமான தூம்பத்யம். |
| அத்த இயல்புகள் - | அதிகம் உணர்ச்சிவசப்படுதல், காமம், அதிகப் பற்று. |
| குணைபாட்டு இயல்புகள் | உணர்வின்மை, மலட்டுத் தன்மை, பிறர் உணர்வுகளைக் கண்டுதிகாள்ளாமை. |
| இயக்கும் உடற் பகுதிகள் | பிறப்புறுப்புகள், இடுப்புத் தைச் மண்டலம் |
| சுவையறிதல் | |
| சுரப்பி | காமநீர் |
| 7. மூலாதாரச் சக்கரம் | |
|---|---|
| (அடிப்படைச் சக்கரம், பாதுகாப்பு மையம்) | |
| இருப்பிடம் | பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் |
| இடைப்பட்ட பகுதி. | |
| நிறம் | சிவப்பு |
| இலக்குதள் | ஸ்திரத் தன்மை, உடல் நலம், செல்வச் செழிப்பு. |
| அத்த இயல்புகள் - | சோம்பல், உடல் பருமன், பதுக்கி வைத்தல், உலோகாயதத் தன்மை மற்றும் பொறாமை. |
| இயக்கும் உடற் பகுதிகள் | நிணநீர் அமைப்பு, எலும்புக் கூடு, அண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி ஆண்களுக்கு - பெண் |
| களுக்குப் பிறப்புறுப்பு மண்டலம், சிறுநீர் மண்டலம், மூக்கு மற்றும் கீழ் உறுப்புகள். | |
| உணர்வு | நுகர்தல் |
| சூரப்பி | சிறுநீரகச் சுரப்பிகள். |
தியானமா, மருந்தா?
வலுவான அமைதியான மனிதன் பிறர து அன்புக்கும் மதிப்பிற்கும் எப்பொழுதும் பாத்திரமாகிறான்.
அவன் பாழ்வெளியில் நிழல்தரும் ஒரு மரம்; புயற்காற்றில் பிடிமானத்திற் கொரு பாறை.
சக்தியும் நாமும்
சக்தியை நம் உடல் ஒரு உறுப்பிலிருந்து இன்னொரு உறுப்பிற்கு எப்படிக் கொண்டு ிசல்கிறது?
நம் புற உடலில் தோலுக்கு அடியில் 3,40,000 நாடிகள் அல்லது பாதைகள் இருக்கின்றன. அவையெல்லாம் சக்தி சஞ்சாரம் செய்யும் பாதைகள். நரம்புகள், ரத்த நாளங்கள் இவை யாவும் சக்தியின் வழித்தடங்களே. குட்சும உடலில் 74,000 நாடிகள் உள்ளன. ஆதார நாடிகள் பதினான்கு. அந்த நாடிகள் ஏழு சக்கரங்களையும் இணைக்கிண்றன.
உடலில் சக்தி எப்படி இயங்குகிறது?
சக்தி சீராக இயங்க வேண்டும். ஓட்டம் நிதானமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உள்ளொளி பிறக்கிறது. அது மேம்படுகிறது. ஆன்மச்க்தி ஓங்குகிறது.
சக்தியின் பிரவாகம் குறைந்து போனால். . . ?
சக்தி ஓட்டம் குறைந்தால் உள்ளொளி மங்கும். மாறு சக்தி பிறக்கும், பாக்டீரியா கிருமிகளால் உடல் நோய்வாய்ப்படும். சக்தியின் ஒட்டம் சீராக, சமமாக இல்லை யென்றால் என்ன விளைவுகள் ஏற்படும்?
சக்தியின் ஓட்டம் சீராக இல்லையென்றால் பிரவாகம் குறைந்து உடலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. புற்றுநோய் வருகிறது அல்லது கட்டிகள் உருவாகின்றன.
சக்தியின் ஓட்டம் பாதிக்கப்பட என்ன காரணங்கள்? உணர்ச்சி வசப்படுதல், உடல் அழற்சி, ஆரோக்கியமில்லாத பழக்க வழக்கங்கள், ஒத்துவராத உணவு.
இந்த நோய்களை குணப்படுத்துவது எப்படி?
சக்கரங்களுக்கு சக்தி கொடுத்து அவற்றை நிதானத்தில் நிலைநிறுத்த வேண்டும்.
அதிசயம் என்பது என்ன?
ஒரு நாள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிடாடி அசிரமத்திற்குப் போக வேண்டும் என்றார்கள். அன்று மழை பெய்தது. வானத்தில் மேகமூட்டம் இருந்தது. எது அந்தப் பயணத்தைத் தூண்டியது என்பது தெரியாது. எதை எதிர்கொள்ளப் போகிறோம் என்றும் தெரியாது.
வாகனத்திலிருந்து நாங்கள் இறங்கி நடந்து கொண்டிருந்தபொழுது மேய்ச்சலுக்குச் சென்ற ஒரு பசு எழு முடியாத சகதிப் பகுதியில் மாட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஒரு காலத்தில் அந்தப் பகுதி ஒரு ஏரியாக இருந்திருக்கலாம். எழ முயன்ற பொழுதெல்லாம் பசு மேலும் ஆழமாக உள்ளே போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அதனால் நகரவே முடியவில்லை.
சுமார் நாற்பது கிராமவாசிகள் திரண்டனர். சினையுற்றிருந்த அந்த மாட்டைக் கயிற்றைக் கட்டி இழுத்துக் காப்பாற்ற அவர்கள் படாதபாடு பட்டார்கள். சோர்ந்து விட்ட பசு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. பசு இருந்த இடத்திலிருந்து இருபது அடி தூரம் தள்ளி நின்றிருந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கிராமவாசிகளைப் பார்த்து, பசுவை சிரமப்படுத்த வேண்டாம் என்றார். நேருக்கு நேர் பசுவின் கண்களைப் பார்த்தார். கைகளைத் தட்டினார், 'வா' என்று பசுவிடம் சைகை காட்டினார். அது எழும் பொழுது இரண்டுபேர் மட்டும் தாங்கிப் பிடித்துக் கொள்ளுங்கள், போதும் என்றார். பிறகு திரும்பிப் பார்க்காமல் ஆசிரமம் நோக்கிப் புறப்பட்டார். என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்கும் ஆவலுடன் நாங்கள் அங்கேயே தங்கிவிட்டோம்.
பசு மெள்ள எழுந்தது. இரு கிராமவாசிகள் தாங்கிப் பிடித்தார்கள். ஒன்றுமே நடக்காதது போல் பசு நடந்து போய் விட்டது. மயிர்க்கால்கள் தோறும் வியப்பு சிலிர்த்திட நாங்கள் ஓடிப்போய் ஸ்வாமிகளிடம் கேட்டோம் - இது எப்படி சாத்தியமாயிற்று? மிகவும் தெளிவாக ஸ்வாமிகள் சொன்னார்கள்: "நான் அதிசயம் எதையும் நிகழ்த்திவிடவில்லை. பசுவின் புத்திசாலித்தனம் மழுங்கிப் போயிருந்தது. அத்தனைபேர் கூடி இழுத்த காரணத்தினால் தானாக எதுவும் செய்ய முடியாது என்று பசு நினைத்திருந்த வேளையில் நான் அதன் சக்தியைத் தட்டி எழுப்பினேன். அதற்கு தன்னம்பிக்கை ஊட்டினேன். தன் முயற்சியினாலேயே அது சகதியிலிருந்து வெளியேறியது. அவ்வளவுதான்".
அதைத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மனிதர்களிடம் செய்கிறார் தொல்லைகளிலிருந்து விடுபட வழிகாட்டுகிறார்.
குணப்படுத்தும் வழிமுறை
வாழ்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று எதுவுமே அதிசயமில்லை என்று நினைப்பது. மற்றது, எல்லாமே அதிசயம் என்று நினைப்பது.
- THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM குணப்படுத்தும் வல்லமை கொண்டவர். தீர்வு தேடி அவரிடம் வருபவர்கள், தலைவலி, மன உளைச்சல் மற்றும் வேறு தீவிரமான குறைபாடுகள் உடையவர்கள் தேடி வருகிறார்கள். மூட்டுவலி, மன உளைச்சல், ஒற்றைத் தலைவலி, எலும்புருக்கி நோய், அஸ்த்துமா, ஒவ்வாமை, சரும நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், நெஞ்சுவலி, பருத்த உடல் தரும் உபாதைகள் என்றபடி ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு சிக்கல். இத்துடன் இவர்களுக்குக் கவலை, மன அழுத்தம், உளவியல் பிரச்சினைகள் என்ற சிக்கல்களும் உண்டு. மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட "கோமா" நிலை மயக்க நோயாளிகளையும் ஸ்வாமிகள் குணப்படுத்தி இருக்கிறார். இது எப்படி என்பது புரியவில்லை. பிடாடி ஆசிரமத்தில் ஒரு ஆல மரத்தின் அடியில் அமர்ந்தபடியே ஸ்வாமிகள் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
ஒளியைத் தேடி
சொற்களிலிருந்து சொல்லின்மை என்ற நிலைக்குக் கரைந்து போக காலம் என்ற கட்டிலிருந்து காலமின்மை என்ற வெளிக்கு வர பிரகிருதியிலிருந்து சக்தி பெற . . . - ஓ, அதுதான் தெய்வானுபவம் என்பது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.
அவ்வப்போது பாரதத்தாய் பல முனிவர்களைப் பெற்றெடுக்கிறாள். அப்படிப் பட்டவர்களில் ஒருவரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அக ஒளியைக் கண்டுகொண்ட ஒரு ஆன்மீக மகான்.
அவர் திருவண்ணாமலையில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் சச்சரவு ஏற்பட்ட காலத்தில் சிவபெருமான் தன் விஸ்வரூபத்தைக் காட்டியது அந்தத் திருத்தலத்தில்தான்.
இந்த நூற்றாண்டில் வாழும் ஒரு ஆன்மஞான முனிவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. சமுதாயத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் அடக்கப்பட்ட பெண்மணிகளுக்குக் குரல்கொடுக்கும் மகான். சிக்கலில்லாத முறையில் தியானம் கற்றுத்தரும் குருநாதர் அவர். மனமும் உடலும் ஒருங்கிணைந்து இசையப்பட ஏழுசக்கரங்களையும் சீராக இயக்கும் வல்லமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று போதிப்பவர். அதற்கு உதவுபவர்.
இங்கே காலவரிசைப்படி நிகழ்ச்சிகள் துறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் பல பிறவிகள் கண்டவரை, பலவித திறமைகள் விசாண்ட ஒரு மகானைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வது எப்படி? பலசமயங்களில் ஊனக் கண் காணாதது ஒன்று; ஞானக்கண் உணர்த்துவது வேறு.
இந்தத் திருவுடலில் புகுந்து கொள்வதற்கு முன்பும், புகுந்த பொழுதும் அவருக்கு யாவுமே நினைவில் நின்றிருந்தன.
"இந்த பூமி இருளால் குழப்பட்டிருந்தது. நாற்று மண்டலமும் அமைதியாக இருந்தது. ஒளிமிகு நட்சத்திரத்தைப் பார்த்தேன். உடன் ஒளியும் வெளிப்பட்டது. அப்போது நான் இந்த பூமியில் புகுந்தபடி பிறப்பெடுத்தேன்."
அடுத்து அவர் அவர் கண்டகாட்சி திருவண்ணாமலைக் குன்றில் ஸ்தூல உடலில் புகுந்து கொண்ட பிறகும் அவர் தன் ஞானக் கண்ணால் கண்ட காட்சி அது.
தன் பிறப்பையோ வயதையோ அவர் பொருட்படுத்தவில்லை. காலத்தில் கூட்டுப்படாத ஆன்மா. காலத்துக்குள் காலம் இல்லாதவன் என்று தன்னைப்பற்றி அவர் சொல்லிக் கொள்கிறார்.
அவர் 1978-ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, நள்ளிரவு கடந்த சில நொடிகளில் அஷ்டமி திதியில் அருணாசலம் லோக நாயகி தம்பதியருக்கு மூன்று மகன்களில் இரண்டாமவராகப் பிறந்தார். அவருக்கு இடப்பட்ட பெயர் ராஜசேகரன்.
குடும்ப வழக்கப்படி, அவர் பிறந்த பத்தாம் நாள் ஜாதகம் கணிக்கப்படுவதற்காக குடும்ப ஜோசியர் அழைக்கப்பட்டார். அவரது ஜன்ம திதியில் நக்ஷத்திரங்களின் போக்கினைக் கருத்தூன்றி கவனித்த ஜோசியர் கன்யா ராசி, கன்யாலக்னத்தில் பிறந்த இவர் ஒரு நாள் உலக வாழ்க்கையைத் துறந்து ஒரு ராஜ ரிஷியாகி விடுவார் என்று சொன்னார்.
தன் பிள்ளை சந்நியாசியாகிவிடுவான் என்று சொல்லப்பட்ட போதிலேயே மனமுடைந்து போனார்கள் பெற்றோர்.
"இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?" என்று அவர்கள் ஜோசியரைக் கேட்டார்கள். எதுவுமே மாற்றப்படுவதற்கில்லை. தன் ஜாதகம் பற்றி அவருக்குத் தெரியவராவிட்டால் அவர் சந்நியாசியாவது சற்றே தாமதப்படும்; அவ்வளவுதான் என்றார்.
அவர் ஒரு மகத்தான ஜோசியர். "இதுவே நான் கணிக்கும் கடைசி ஜாதகம். இன்னும் 21 நாட்களில் நான் இறப்பேன்" என்றார். அப்படியே இறந்து போனார்.
தன்போக்கில் இவர் செயல்படுவதை, ஞானம் தேடி அலைந்ததைப் பெற்றோர் தடுக்கவில்லை. நள்ளிரவு தாண்டி வீட்டுக்குத் திரும்பியபோதும் கோபப்பட்டு, சலிப்புற்று எந்த வார்த்தையும் சொன்னதில்லை.
அவர்களது சகிப்புத் தன்மையையும் புரிதல் உணர்வையும் ஆழ்ந்த நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார் அவர்.
அவரது பாட்டி தனகோடி அம்மாள் கோயில் வாசல் அருகே இருந்த கடையிலிருந்து ஒரு கடவுள் விக்ரகத்தை வாங்கி வருகிறார். சிறுவனாக இருந்த பொழுது அவர் களிமண்ணால் கடவுள் திருவுருவங்களை மகிழ்வுடன் செய்து வந்தார்.
கோயிலில் பார்த்தபடி தான் செய்த விச்ரகங்களை அலங்கரித்தார். பாட்டி தன் நகைப் பெட்டியைத் திறந்த பொழுதெல்லாம் எந்த நகையும் அவரைக் கவரவில்லை. அவரை ஈர்த்தது ருத்ராக்ஷமே. பாலபருவத்தில் பொன்னும் மணியும் அவரை அசைத்துவிடவில்லை என்பது ஒரு விசித்திரமே.
கடவுளிடம் உங்கள் பிரச்சினைகள் பெரிதென்று சொல்லாதீர்கள். உங்கள் பிரச்சினைகளிடம் சொல்லுங்கள் கடவுள் பெரியவர் என்று.
உரிய வயதில் ராஜசேகரன் பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்பட்டார். ஒரு சாதாரண மாணவனாகக் கல்வி கற்று வந்தார். ஒரு நாள் தாமதமாக வந்த காரணத்தினால் ஆசிரியரின் அனுமதி வேண்டி வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டியதாயிற்று. அந்த வகுப்பில் அவரது கணித ஆசிரியர் கோவிந்தராஜ் மேஜையில் குனிந்தபடி ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். திடீரென்று ஏதோ மாயக் காட்சியைக் கண்டது போல் உணர்ந்து ராஜசேகரன் பக்கம் ஆசிரியர் திரும்பிப் பார்த்து வணக்கம் தெரிவித்தார். வகுப்புகள் முடிந்த பிறகு அவர் ராஜசேகரனைத் தன் வீட்டிற்குச் சாப்பிட அழைத்தார். அது சாதாரண நிகழ்ச்சிதான். சபரிமலை செல்ல மாலைபோட்டுக் கொண்டிருப்பவர்களை உணவருந்த தங்கள் வீட்டுக்கு அழைப்பது ஒரு சம்ப்ரதாயம்.
மாணவன் ராஜசேகரன் தன் வீட்டில் நுழைந்ததும் ஆசிரியர் அவர் காலில் விழுந்து "நீங்கள் எங்கள் குருநாதர்," என்றார். ராஜசேகரனிடம் சுவாமி ஐயப்பனைக் கண்டார் ஆசிரியர் கோவிந்தராஜ். "என்றும் நான் தங்கள் சிஷ்யன்" என்றும் சொல்லிவிட்டார். அன்றிலிருந்து ஆசிரியர் ராஜசேகரன் வகுப்புக்கு வெளியே ரிஷியாக வந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தார். இதனால் வகுப்பறைக்கு வெளியே ஞானம் தேட ராஜசேகரனுக்கு நிறைய அவகாசம் கிடைத்தது. பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாவிட்டாலும் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார் அவர்.
தன்னை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கே கண்ணப்பர், மார்க்கண்டேயன், பிரகலாதன் போன்ற மகான்களின் கதைகளைச் சொல்லிய தாய் வழிப்பாட்டனாரையும் அவர் நினைவுகூர்கிறார். அதுமட்டுமல்ல அன்னை அபிதகுஜாம்பாள் சந்நிதியை அடுத்த அஷ்டலக்ஷ்மி மண்டபத்தில் இருந்த கல் தூண் சிற்பங்கள், ஓவியங்கள் இலைபற்றியெல்லாம் பாட்டனார் விளக்கம் தெரிந்துவைத்திருக்கிறார்.
அவரது பாலபருவத்தில் இவையெல்லாம் சிறந்த சரியான இறையியல் போதனைகள் ஆயின. அதனால் பெரிதும் கவரப்பட்ட அவர் வீட்டுக்குச் சென்றதும் பள்ளிக் கூட நோட்டுப் புத்தகத்தில் "என்று நான் ஒரு மார்க்கண்டனாவேன்? என்று நான் ஒரு கண்ணப்பன் ஆவேன்?" என்று எழுதி வைத்தார். வெகு வித்தியாசமாக ராஜசேகரனுக்கு பால பருவத்திலேயே சந்நியாசிகளின் பழக்கம் கிடைத்தது. அவர்களுடன் ஒரு இணக்க பாவம் உருவானது. வீட்டில் அரிசி, புளி, மிளகாய், உப்பு ஏதாவது காணாமல் போனால் சந்நியாசிகளுக்காக அவற்றை எடுத்துச் சென்றது ராஜசேகரன் என்பது குடும்பத்தாருக்குப் புரிந்தது. சந்நியாசிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக அவற்றைக் கொடுப்பது ராஜசேகரனின் வழக்கம். சில நாட்கள் அவரே காணாமல் போனபொழுதும் சந்நியாசிகளுடன் சென்றிருப்பார் என்பதை வீட்டில் புரிந்து கொண்டார்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை வந்தடையும் அருளுக்கு நன்றி செலுத்துங்கள்.
நம்பிக்கை என்றால் என்ன?
-
அச்சம் வழித்தல்.
-
கோபம், துன்பம் அறுத்தல்
-
கற்றுக் கொள்ளல், கடவுளைத் தொழுதல்
-
கடவுளை நம்புதல்
-
பிணி தீர்த்தல்
வீட்டில் புறக்கடைக் கொட்டகையில் அவர் பொழுதைக் கழித்தார். நேரம் போவது தெரியாமல் இறைவனுக்கு பூஜைகள் செய்து வந்தார். மணியடித்து, கற்பூரமேற்றி பூஜை செய்தபொழுது குடும்பத்தார் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பணித்தார். எல்லோரும் அவர் போக்கின்படியே நடந்து கொண்டார்கள். அவரது பால பருவம் கூட்டுக் குடும்பத்தில் கழிந்ததனால் அங்கே அமைதியும் சண்டை சச்சரவுகளும் உண்டு.
பத்து வயது முதல் பதினாறு வயது வரையிலான துடிப்பான பருவத்தில் அவர் சொல்லையற்ற சக்தியுடனும் மன உறுதியுடனும் இருந்தார். அப்பொழுது மரப்பாதுகைகளை அணிந்து நடப்பதற்குப் பிரியப்பட்டார். நடந்தார், கடுங்கோபக்காரராக இருந்தார். அண்ணன் தம்பிகள் மீது கண்களில் பட்ட பொருட்களை வீசியெறிந்தார். அவர்களும் பதிலுக்கு எறிய வரும்போது பருவத்தின் மேற்புறம் காயம் ஏற்பட்டது. அதன் வடுவை இன்றும் காணலாம். இதனால் குடும்பத்தின் அமைதி கெட்டுப்போனது. "ராமகிருஷ்ணர் ஒரு சிறு பையன்; பிசாசு, அத்துடன் வரு பைத்தியமும்கூட இந்த மூவரும் சேர்ந்த ஒரு பிறவி. இந்த மூவரின் மனப்பாங்கை, விஷயல்பாட்டை ஊகிக்க முடியுமோ?" என்று சொல்லும் ஸ்வாமிகள் இந்த மூன்றும் சேர்ந்து நல்லபடியாக மாறியதையும் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்களில் ஒருவரான அண்ணாமலை ஸ்வாமிகள் ஒருமுறை சில வெளிநாட்டவர்களுக்கு ஏதோ உபதேசம் செய்து கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த ராஜசேகரன் அதைக் கேட்க நேர்ந்தது. அண்ணாமலை ஸ்வாமிகள் சொன்னார்: 'நான் சரீரமல்ல. ஆத்மா."
ராஜசேகரன் அதுபற்றியே அதிகம் சிந்தித்தார். உடனே அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. "நான் சரீரமல்ல, ஆத்மா" என்றால் என்னை நான் வெட்டிக் கொண்டால் வலிக்காது அல்லவா?" என்று சிந்தித்த ராஜசேகரன் கத்தியால் தொடையை வெட்டிக் கொள்ள காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலியை உணர்ந்தார். வலியைப் பொறுத்துக் கொண்டது போக, தாயார் திட்டியதையும் சேர்த்துத் தாங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் ஏமாற்றமடைந்து மனம் நொந்துபோய் அத்திரத்துடன் அண்ணாமலை ஸ்வாமிகளைச் சந்தித்து அவரிடம் தன் காயத்தைக் காண்பித்தார். அவர் சொன்னது உண்மையல்ல என்று வாதிட்டார். யோகி விளக்கமளித்தார். ஆனால் அது போதுமானதாக இல்லை. எனினும் ராஜசேகரனுக்கு ஒன்று புரிந்தது. அதாவது தன்னால் புரிந்து கொள்வதற்கும் மேலாக ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். தானே தன்னுள்ளேயே தேடிக் கண்டுகொள்ள வேண்டும் என்பதும் தெளிவாகியது. அதுதான் அவரது ஆன்ம நாட்டத்தின் முதல்படி எனலாம். அதன் பின்னர் அவர் முழுமையாகவே ஆன்மீகத்தில் திளைக்க ஆரம்பித்துவிட்டார்.
அப்பொழுதிலிருந்து அவர் வெகுநேரம் கோவில்களிலும் கோவில்களுக்கு வெளியேயும் சென்று வந்தார். அப்பொழுது பர்மாவைச் சேர்ந்த ரகுபதி யோகி என்பவர் அவருக்கு அறிமுகமானார். ரகுபதி யோகி ராஜசேகரனை அழைத்து, தினமும் கோயிலுக்கு வந்து தன்னிடம் "போகர்" கற்றுக் கொள்ளச் சொன்னார். கற்றுக் கொடுத்தார். ராஜசேகரன் பின்னாளில் ஒரு பெரிய துறவியாவார் என்று ஆருடம் சொன்னார்.
"சங்கு எப்படி வந்தது?" என்று ராஜசேகரன் கேட்க, யோகி கையைத் தட்டினார் - வெறுங்கையிலிருந்து ஒரு சங்கு வந்தது. அதை ராஜசேகரனுக்கு ஆசிர்வதித்துக் கொடுத்து விட்டுச் சொன்னார்: "இதோ பார், இதை நான் உனக்காகவே உருவாக்கினேன்," என்றார். ராஜசேகரன் அந்தச் சங்கில் பதியப் பட்டிருந்த தேதியைப் பார்த்து விட்டுச் சொன்னார்: "இது எனக்காக உருவாக்கப்பட்டது என்றீர்கள். ஆனால் இதில் நேற்றைய தேதி அல்லவா இருக்கிறது?" என்று கேட்டார். "நீ சொல்வது சரிதான். ஆனால் இதை நான் வீட்டிலிருந்தல்லவா இங்கே கொண்டு செய்தேன்," என்றார். அது ராஜசேகரனுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாயிற்று. பஞ்ச பூதங்களுக்கு அப்பாலும் உலகில் சில விஷயங்கள் உள்ளன என்பதை ரகுபதி யோகி ராஜசேகரனுக்கு எடுத்துச் சொன்னார்.
ஒருமுறை ரகுபதி யோகி ஒரு புகைப்படக் கலைஞரை அழைத்து இளம் ராஜசேகரன் ஒரு மான் தோலின் மீது அமர்ந்திருப்பது போலப் புகைப்படம் எடுத்துத் தரச் சொன்னார். புகைப்படமெடுத்து ஆசான் யோகா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ராஜசேகரன் கேட்டார்: "ஏன் அப்படிச் செய்தீர்கள்?"
"நாம் பறக்கலாமே என்றுதான்" என்று சொன்னார். அதிர்ந்துபோனார் ராஜசேகரன். எனினும் மான் தோலின் மீது அமர்ந்திருந்த யோகி அந்த ஆசனத்துடன் அரையடி மேலே எழும்பி இருந்தார் சில கணங்கள். ராஜ சேகரனுக்கு நம்பிக்கை வருவதற்காக யோகி அதைச் செய்தார். யோகி வலுவான, காத்திரமான மனிதர். மார்பைச் சுற்றி இரும்புக் கம்பியைக் கட்டினால் அவர் மூச்சை இழுத்து வெளியிடுவதன் மூலமே கம்பியை அறுத்தெறிந்து விடுவார். சில சமயங்களில் ஒரு குழாயையோ, அல்லது பச்சைப் பாம்பையோ மூக்கில் நுழைத்து வாய்வழியாக வெளியே எடுப்பார். சுற்றியிருந்து பார்ப்பவர்கள் அவற்றைப் பைத்தியக்காரத்தனம் என்றாலும், அவை மந்திரமல்ல, தந்திரமல்ல அவரது சாமர்த்தியமான செயல்பாடே. இது ராஜசேகரனுக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் மேலும் அவரிடம் பாடம் கேட்டுக் கொண்டார்.
சாதாரணமாக அப்போது பத்து வயது மாணவர்கள் திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்லும் பொழுது சின்ன நந்திக்கு எதிரே உள்ள சந்நிதியில் அமர்ந்திருக்கும் யோகி ராம் சூரத் குமார் அவர்களை வணங்கி, "சாமி, நான் இந்தப் பரீட்சையிலே தேறி விடுவேனா?" என்று கேட்பது வழக்கம். கையில் தேர்வு எழுதும் அட்டைகளுடன் அப்போது அங்கே மாணவர்களைப் பார்க்கலாம். யோகி ராம் சூரத்குமார் சில சமயம் ஏதாவது சொல்வார். அது காதில் விழாது, விழுந்தாலும் புரியாது. சில சமயங்களில் ராம், ராம் என்பார். வேறு சில வேளைகளில் "போய், வா" என்பார். ஒருமுறை ராஜசேகரன் வணங்கியபொழுது யோகி சொன்னார்: "நீ வாழ்க்கைப் பரீட்சையில் தேறிவிடுவாய்."
அந்தக் காலகட்டத்தில் ராஜசேகரனுக்கு அந்த வாசகத்தின்பொருள் பிடிபட வில்லை. ராஜசேகரன் விளக்கம் கேட்டார். யோகி சொன்னார்: போ, போ, இப்போதைக்கு இது புரியாது; போகப் போக இந்த வார்த்தைகளை மறக்க மாட்டாய்," என்றார். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இன்றளவும் அந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கிறார்.
யோக சாதனை செய்வதில் கோடை விடுமுறையை ராஜசேகரன் கழித்தார். சில சமயங்களில் அவர் சுடுகாட்டிலும் தியானம் செய்தார். அதைப் பார்த்த சிலர் இரவில் சுடுகாட்டுப் பக்கம் அவர் தென்பட்டதாகப் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் வீடு திரும்பியபோது பெற்றோர் கேள்விகள் எதுவும் கேட்டதில்லை. "நான் தியானம் செய்து கொண்டிருந்தேன், என்று அவராகச் சொல்வார்.
அவர்கள் கேட்டுக் கொள்வார்கள். ஏன் தியானம்? எங்கே தியானம்?" என்று ஒருநாளும் கேட்டதில்லை. அது அவர்கள் இயல்பு. "சரி இவருக்கு நாம் வெறும் காப்பாளர்கள் மட்டும்தான்," என்று நினைத்திருக்கலாம். ஒரு வேளை அன்று அவர்கள் ராஜசேகரனைத் தடுத்திருந்தால் இன்று ஆயிரக் கணக்கானவர்கள் ஒரு நல்ல வழிகாட்டியை இழந்திருக்கக்கூடும்.
ஒருமுறை, 1994-அம் வருடத்தில் அவர் குளித்துக் கொண்டிருந்த பொழுது யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அடுத்துக் கேட்ட குரல் "உனக்குத் தெரியுமா, இன்று உன் பதினோறாவது பிறந்த நாள்." அதைக் கேட்ட மாத்திரத்தில் அவர் திகிலில் உறைந்து போனார். ஆம் தன் பதினாறாவது வயதில் மார்க்கண்டேயன் போலாக வேண்டும் என்று உறுதிபூண்டிருந்தாரே, அது என்னவாயிற்று?" குளியலறைக்குள் அவரது கண்ணீர் ஆறாகப் பெருகியது. மன உளைச்சல் தொடங்கியது. மார்க்கண்டேயன் கதை மனதை விட்டு அகலவில்லை.
ஞான ஒளித்தேடல் மீண்டும் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் அவரது தந்தை வழிப்பாட்டியின் தோழி குப்பம்மா அவருக்கு ஆதர்சமாக விளங்கினார் என்று சொல்ல வேண்டும். ஒருமுறை அவர் ராஜேஸ்வரி தேவியாகவே காட்சி தந்தார். அவரை ஒரு சமயப்
பற்றாளர் என்று சொல்லமுடியாது. எனினும் ஆவி மீ கவாதி எனலாம். கோயில்களுக்கும் சடங்குகளுக்கும் அப்பால் இருக்கிறது ஞானப்பாதை ர்து என்பதைக் குப்பம்மா உணர்த்தினார். கோயிலுக்குச் செல்வது மூடத்தனம் என்று முதன் முதலாக ஒருவர் சொல்லிக் கேட்டது அப்பொழுதுதான். ஆண்டவன் நெஞ்சக் கோயில்களில் உறைகிறார் என்றார் அவர். நாம் நடமாடும் கோயில்களிலே அண்டவனைத் தேடவேண்டும் என்று அறிவுறுத்தினார் அவர். முதலில் இவை புதிர்கள் போலத் தோன்றினாலும் அந்த அம்மையார் விளக்கம் அளிக்க அளிக்க ராஜசேகரன் அவற்றைப் புரிந்துகொள்ளலானார்.
பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் வேதாந்தத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியும் என்று விவேகாநந்தர் சொன்னதை, ஞான மார்க்கத்தை, இந்தத் தருணத்தில் சொன்னார் அவர்.
ஸ்வாமிகள் சொல்கிறார்கள், சிரவணம், மனனம், நிதித்தியாசனம், நித்யானந்தம். உண்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் நாம் கேள்விகள் கேட்க வேண்டும். பிறகு பதில்களை கவனத்துடன் கேட்டுக்கொள்ள வேண்டும். பின்பு அதிலேயே ஆழ்ந்துவிட வேண்டும். அதைப் புரிந்து கொண்டோமானால் நம் செயல்பாட்டில் அது வெளிப்படும்.
இதை ஸ்வாமி விவேகாநந்தர் மேலும் எளிமையாகச் சொல்கிறார். பதினான்கு வயதுக்குட்பட்டவர்கள் ஒரு சத்குருவிடமிருந்து போதனைகள் பெறவேண்டும். அவர்கள் தியானம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரடியாக அவர்களை நித்யானந்த நிலைக்கே சென்று விடலாம். ஏனென்றால் பதினான்கு வயது வரையிலும் குழந்தைகளுக்கு ஒரு அருள் இருக்கிறது. அவர்கள் வேறு உலகத்து மலர்கள்; இன்னும் இங்கே கொய்யப்படவில்லை. அவர்கள் காயாக, கனியாக இன்னமும் காலம் இருக்கிறது. ஆனால் பதினான்கு வயதுக்குப் பிறகு சிறுவன் வாலிபனாகிவிடுகிறான். முதிர்ச்சி படியத் தொடங்குகிறது. அதுதான் அப்பொழுது ராஜசேகரனுக்கு ஏற்பட ஆரம்பித்தது. குப்பம்மா ஞான உபதேசங்களைச் சொல்லச் சொல்ல ராஜசேகரன் அவற்றில் ஆழ்ந்து போனார். ஆழ, ஆழ மேலும் மேலும் தேட வேண்டும் என்ற வேட்கை உண்டாயிற்று.
இந்தக் கால கட்டத்தில்தான் அவர் கடவுள், மனிதர்கள், உண்மைகள் என்பது பற்றியெல்லாம் சிந்திக்கலானார். முன்னைய முனிவர்கள் சொன்ன தெல்லாம் சரியே; அவர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடிக்கவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. பாரதத்தின் ஆதாரமே ஆன்மீகம் தான் என்பதையும் உணர்ந்து கொண்டார்.
அந்தக் கால கட்டத்தில் அவர் மலையில் அமர்ந்துதான் தியானம் செய்து கொண்டிருந்தார். பறவைகள், பருவகாலங்கள், மிருகங்கள் சகிதமாவற்றுடன் இயைந்த தியான வாழ்க்கை வாழ்ந்தார். ஒருமுறை ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தபோது "நான் யார்?" என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். அது தன் சுய விசாரணை கூ நிலை. அப்பொழுது அவர் ஞான விழித்தலின் வசப்பட்டார். 'நான்' என்பதன் விசாரணை அப்பொழுது அவருக்குப் புலப்பட்டது. பல மைல் கணக்கில் நடந்து சென்ற பிறகு குளிர்ந்த ஏரியில் குளிப்பது போன்ற அனுபவமாக அது அமைந்தது.
குளிர்ந்த நீரின் தன்மைக்குத் தயாராகாத கால்களால் முதலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. அது உடம்பையும் தூக்குகிறது. ஆனால் நேரம் செல்லச் செல்ல சிலிர்ப்பு, தன்னெஞ்சீ ரின் வண்ணம், அமைதி, காற்றின் சலசலப்பு இவற்றையெல்லாம் உணரும்பொழுது வேறு ஒரு கிரகத்தில் மிதப்பது போல உணரலாம்.
இந்த முதல் அனுபவம் அவருக்கு ஒரு கார்த்திகை மாதப் பௌர்ணமியன்று சித்தித்தது. அன்று விசாக நக்ஷத்திரம். அந்த அனுபவம் பற்றி அவர் சொல்கிறார்: "என்னைச் சுற்றி என்னையே சுற்றிப் பார்த்தேன். கிரகங்களில், மலைகளில். மரத்தில், மிருகங்களில். என் உடல் நெடுக என்னை நான் பார்த்துக் கொண்டேன். எங்கும் என் பிம்பங்கள் தென்பட்டன. என்னைச் சுற்றி,
எனக்குப் பின்னாலும் என் பிம்பங்களை நான் பார்த்தேன். மேலே, கீழே, இடது புறம், வலது புறம் எங்கும், எங்கும் என் பிம்பங்கள்."
அந்த க்ஷணத்தில் அதற்கும் ஆழமாக நான் என்பதை அறிந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். இந்த உணர்வு கலைந்ததும் அவர் அசைவின்றி அமர்ந்து கொண்டார். மூன்று நாட்கள் அனந்தம் ஒரு ஜூரம் போல அவரிடம் விரவிப் பரவியது. பின்னர் இந்த உவகையும் கலைந்தது. சிறிது சிறிதாக அச்சம் நுழைந்தது.
அவர் அதுவரை அனுபவித்திராத அச்சம் அது. அந்த அனுபவத்தை அவர் எதிர்பார்க்க வில்லை. மலையிலிருந்து வேகமாக இறங்கி குப்பம்மாவைத் தேடிப் போனார். தன்னை ஆட்கொண்ட உணர்வு பற்றிச் சொன்னார். மீண்டும் அந்தப் பாறைக்குப் போகப் போவதில்லை; சென்றால் அதே உணர்வு தன்னை ஆட்கொள்ளக்கூடும் என்றார். குப்பம்மா அவர் கைகளைப் பிடித்தபடி அச்சங்களை அகற்றினார். அவரை எந்த துர்சக்தியும் பீடிக்கவில்லை, அவரை அப்போது ஆட்கொண்டது கடவுளே என்பதை விளக்கினார்.
அவர் மீது அன்பும் இரக்கமும் கொண்ட குப்பம்மா, மீண்டும் அவர் எதற்கும் பயந்துவிடலாகாது என்ற எண்ணத்தில் மூன்று
நாட்கள் தானே சமைத்து உணவளித்தார். ஆனால் அந்த அனுபவத்தை அவர் மறக்கவில்லை. அந்து பாறையை நினைத்தால் பயப்படலானார். ஒரு நாள் அவரைப் பாறையில் அமர்த்தி ஜே ஜே எடுத்தார் குப்பம்மா. அவருக்காக அங்கே ஒரு ஆசிரமம் அமைத்துக் கொடுத்தார். ஆசிரமத்தையும் படத்தையும் அவரிடம் ஒப்படைத்த குப்பம்மா, "ஒரு நாள் இதைப் புரிந்து கொள்வாய்; இதன் மதிப்பை உணர்ந்து கொள்வாய்," என்றார். இன்று தியான பீடத்தின் அந்த திரையாக இயங்குகிறது அந்த ஆசிரமம்.
அந்த சிலிர்ப்பான அனுபவம் பற்றிய அவர் நினைவு இன்னமும் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. வழக்கம்போல் அலைந்து திரிந்து மாலையில் ஓய்வு எடுக்கும் காலத்தில் ராஜசேகரன் அந்த பாறையின் மீது அமர்ந்து கொண்டார். காலம் காலமாக இருந்துவரும் அந்தப் பாறையில் ஒருவர் அமர்வதற்கு ஆசனம் வடித்ததுபோல் ஒரு பிளவு இருந்தது அதன் மீது அமர்ந்து அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். இயற்கை அழகை ரசித்தபடி தூய்மையான காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வெளிச்சம் கொஞ்சம் மங்கியிருந்தது. ஒரு முதியவர் அவரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். தனியாக இங்கே இந்த மனிதர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? ராஜசேகரன் யோசித்துப் பார்த்தார். அடுத்த சில நிமிடங்களில் அந்த
மனிதர் பத்தடி தொலைவிற்குள் வந்து விட்டார். அப்போது ராஜசேகரன் பாறையிலிருந்து கீழே குதித்து அவர் எதிரே நின்றார். "இங்கே என்ன செய்கிறீர்கள்? என்று கேட்க நினைத்தார். ஆனால் குதித்த பின்பு கால்கள் தரையில் பட்டதும்தான் எதிரே நின்ற உருவத்தை தீர்க்கமாகப் பார்த்தார். அவருக்கு மூச்சே நின்றுபோனது போல் ஆயிற்று.
ஆம், எதிரே நின்றது ஒரு கரடி இரண்டு கால்களில் நின்று கொண்டிருந்தது. வியர்வையில் உடல் நனைந்தது. கொஞ்சம் பின்னே நகர்ந்தார். ஒரடி தொலைவில் அந்தப் பாறை முட்டுவது போல் இருந்தது. கரடி குனிந்து நான்கு கால்களால் நகர்ந்தது. ராஜசேகரன் யோசித்தார் - "சரி இன்று நான் இந்தக் கரடிக்கு உணவாகப் போகிறேன்" என்று. கரடி நேராக அவரது கண்களையே பார்த்தது. இடதுபக்கம் திரும்பியது. பிறகு வலதுபக்கம் திரும்பியது. அதன் பின்னர் மெதுவாகத் திரும்பி நடந்தது. இந்த இளைஞர் ஒரு இலட்சியத்திற்காக வாழ்கிறார் என்பது அந்தப் கரடிக்குப் புரிந்ததோ என்னவோ? அல்லது அந்தக் கரடிக்குப் பசிக்கவில்லையோ, என்னவோ, தெரியாது.
திருவண்ணாமலையை வழக்கமாக அவர் நடந்தே சுற்றிவருவதுண்டு. ஒருநாள் ஒரு புத்தகத்தில் இருந்த கவிதைகளில் லயித்தபடியே
நடந்து கொண்டிருந்தார். ஏதோ சரியில்லை என்பது அவரது உள்ளுணர்வு உணர்த்தியது. அந்த ஐந்து கொடிய புலிகள் ஒன்றாக வந்து பிளிற ஆரம்பித்தன. கண்களை அகலத் திறந்தபடி. நடுங்கிப் போனார் ராஜசேகரன். பொதுவாக அப்புலிகள் கொலைகார மிருகங்கள். அவர் ஸ்தம்பித்து போனார். பேச்சு வரவில்லை. சத்தம் போட்டுக் கத்தினாலும் அதைக் கேட்டு உதவிக்கு எவரும் வருவார்கள் என்று சொல்ல முடியாத சூழ்நிலை. வேறு எதுவும் தோன்றாததனால் அசையாமல் கால் அழுந்த நின்றார்.
அவர் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டது "அருணாச்சலா" என்ற வார்த்தை. எங்கிருந்தோ ஒரு உரத்த குரல் கேட்டது. ஒரு முதியவர் கையில் விளக்கைக் எடுத்துக் கொண்டு அந்த மிருகங்களை எரிச் டினார். அவை பயந்து ஓடின. வாழ்ந்து வழிகாட்ட வேண்டும் என்பதற்காக இந்த இளைஞர்கள் அப்போது காப்பாற்றப்பட்டாரோ என்னவோ?
தியானம் செய்ய அடிக்கடி ராஜசேகரன் மாலைப்பகுதிக்குப் போவார். அங்கே உள்ள அமைதி, இயற்கைச் சூழல், நீலவானம், எல்லாமே அவருக்குப் பிடிக்கும். உடலைத் தாண்டி மனம் லயிக்க உதவும் இடம் அது. தொடர்ந்து சில நாட்கள் மலைப்பகுதிக்குச் சென்று தியானம் செய்து வந்தாலும் வேண்டியபடி அவர் ஞானம் பெற முடியவில்லை. கோபத்தில் இனி மிகவும் கடுமையான தவத்தை மேற்கொள்வது என்று முடிவு செய்தார். தன்னைச் சுற்றித் தீ வளர்த்துக் கொண்டு தலைக்கு மேலும் ஒரு தீச்சட்டியை வைத்துக் கொண்டார். சுற்றியுள்ள தீ அணைந்து விடாமல் இருக்க, தீ வளர்க்க, சில சிறுவர்களை அங்கே அமர்த்திக் கொண்டார். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இவ்வா று செய்தார். இப்படிச் செய்தாக வேண்டுமா என்று சிலர் கேட்டார்கள். வெளித் தீ சுடுகிறது என்றாலும் ஞானத்தால் நாட்டம் கொண்ட அகத் தீ என்னை மேலும் அதிகமாகச் சுடுகிறது என்று பதில் சொன்னார். ஆனால் இந்த முறை தன்னால் மனத்தைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதை உணர்ந்து கொண்டார். அது ஒரு ஆன்ம நாட்ட வளர்ச்சி என்பது புரிந்தது. தன் உடலை அவர் ஒரு வாளாக பாவித்துக் கொண்டார். ஆன்மப் புரிதலுக்கு உகந்த உத்தி அது. திருஷ்டி என்பது தீர்க்கப்பார்வை. சிருஷ்டி என்பது கடவுளின் படைப்பு இவையெல்லாம் என்ன என்பதும் புரிந்தது. "என் படைப்புகள் நெடுக என் கனவுகள், கனவும் நனவு, இச்சா சக்திக்கும், கிரியாசக்திக்கும் இடைவெளி இல்லை, இடையில் எதுவும் இல்லை என்பதும் புரிந்தது." என்றார் அவர்.
தமிழ் நாட்டில் குடியாத்தம் நகரில் ஒரு தொழிற்பள்ளியில் - பாலிடெக்னிக்கில் படித்த ராஜசேகரன் அதிக மதிப்பெண்கள் பெற்றுத்
தேறினார். அப்போது அவர் மாணவர் விடுதியில் தங்கினார். மற்ற மாணவர்களுடன் அவரால் இயல்பாகப் பழக முடியவில்லை. உணர்வுகள் மழுங்கடிக்கப் பட்டிருந்தது. பார்த்தால் ஒரு சமூகவிரோதி போல் தெரிந்தார். அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து போவார். அதைப் பலர் விமரிசனம் செய்த துள்ளடு. சிலர் கேலி செய்திருக்கிறார்கள், "ஏன் எங்களுடன் வெளியே வரமாட்டேன் என்கிறாய்? அப்படியெல்லாம் தியானம் செய்து என்ன பலன் கண்டாய்?" என்று சக மாணவர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள். கோபத்தில் அவர் ஒரு நாள் சொன்னார்: "இதனால் ஏதோ வரும். ஒருநாள் என்னிடம் ஆசிர்வாதம் வாங்க நீங்கள் வரிசையில் நிற்கப்போகிறீர்கள்." அது ஏதோ உத்வேகத்தில் சொன்ன வார்த்தையே ஒழிய, தான் இப்படி வரப்போகிறோம் என்று அவர் அப்போது எதிர்பார்த்ததில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் உண்மையாயின. அதே மாணவர்கள் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினார்.
தான் பதினேழாம் வயதில் ஞான வேட்கையாய் வீட்டைத் துறந்து செல்வதாக அவர் அறிவித்த போது ஆறுதல் சொல்லப்பட முடியாத அன்புடன் அவரது தாயார் அழுதார். வருந்தினார்களே ஒழிய அவரது பெற்றோர் அவரைத் தடுக்கவில்லை. ராமகிருஷ்ண மடத்து விதிப்படி இந்த இளைஞர் இனி வீடு திரும்ப மாட்டார் என்பதை அவரும் அவரது பெற்றோரும் உத்தரவாதமாக எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தார்கள். ராமகிருஷ்ண மடத்தில் ராஜசேகரன் சாஸ்திரங்களைப் படித்தார். படிப்பில் பெருத்த ஈடுபாடு கொண்டார். ஒருமுறை இடைவிடாமல் பத்துமணி நேரம் படித்து 600 பக்கப் புத்தகத்தை முடித்தார். ராமகிருஷ்ண ஜயந்தி முடிந்த மூன்று நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரும் ஸ்ரீமதி சாரதா தேவியும் அவர் சிரசில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தது போல் உணர்ந்தார்.
எப்போதும் அவர் மடத்தின் விதிகளைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. அவரது சுதந்திர உணர்வு ஏற்கெனவே சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. முக்தியடைந்த ஜீவன்களுடன் சஞ்சரிக்க எந்த தண்டனையையும் ஏற்கலாம் என்று தோன்றியது. திஷ் நட் ஹன் என்ற ஒரு புத்த பிட்சு ஜென் வழியில் நடந்து வருவதாகவும், அவர் அருகில் இருக்கிறார் என்பது தெரியவந்தவுடன் யாருக்கும் தெரியாமல் அவரைப் பார்க்க வெளியே சென்றார். அந்த புத்தபிட்சு அடையாறில் பிரம்ம ஞான சபையின் விருந்தினராக வந்திருந்தார். ஸ்வாமிகள் அந்த புத்த பிட்சுவின் பாதங்களில் பணிந்ததும் அவர் எழுந்து நின்று, இவரைத் தூக்கி நிறுத்தி அணைத்துக் கொண்டார். பிற சந்நியாசிகளுடன் அவரையும் அமர்த்த விரும்பிய புத்த பிட்சு,
அவரை அந்த வரிசையில் எந்த இடத்தில் அமர்க் துவது என்பதைத் தெரிந்து கொள்ள எத்தனை வருடங்கள் சந்நியாசியாக இருந்திருக்கிறார் என்று கேட்டார். அதன்படி அமர்த்தினார்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரைத் தவிர ராஜசேகரனைப் பார்த்தவர்கள் ஸ்வாமி சிவானந்தரும் ரமண மகரிஷியும்.
பாரதம் நெடுக ஸ்வாமிகள் பயணம் செய்திருக்கிறார். கங்கோத்ரியில் உற்பத்தியாகும் கங்கை நதியிலிருந்து ராமேஸ்வரம் வரை இவர் பயணம் செய்திருக்கிறார். எத்தனையோ இடங்களைப் பார்த்திருக்கிறார். கௌமுகி, (கங்கை உற்பத்தியாகும் இடம் - பசுவின் முகம் போன்று இருக்கும்) நோய்களை குணப்படுத்தும் நீர்வீழ்ச்சிகள், ரிஷிகேஷ், சமர்சட தபோவன் கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ள யமுனோத்ரி, யமுனை நதி உற்பத்தியாகும் இடம், பார்வதி தேவி உறையும் இடமாக நம்பப்படும் மானஸ்ரோவர் (இந்த ஏரியில் குளித்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்) தவபூமியாகக் கருதப்படும் பத்ரிநாத், பாரத - சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், (இங்கே சிவன் உறை பனிலிங்கமாகக் காட்சி தருகிறார்) காசி (கங்கையுடன் வருணா, அசி ஆகிய நதிகள் சங்கமமாகும் இடம்)
இதுதான் அண்டத்தின் மையப் பகுதி என்று நம்பப்படுகிறது. காசி என்பது வரலாற்றை விட முத்தது, மரபை விட மூத்தது என்கிறார் மார்க் ட்வெய்ன் என்ற எழுத்தாளர்) பூரி (ஜகந்தாதர் உறையும் இடம்) அலாஹாபாத் (கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமமாகும் புனிதத்தலம்) ஹரித்வார் (இமய மலையிலிருந்து வரும் கங்கை சமதளத்தைத் தொடும் இடம்) சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த அல்மோரா ஆகிய இடங்களுக்கெல்லாம் ஸ்வாமிகள் சென்று வந்திருக்கிறார்.
சிவபெருமான் கேதார்நாத்தில் ஸ்வாமி களுக்குக் காட்சி தந்திருக்கிறார். தபோவனத்தி லிருந்து திரும்பும் பொழுது ஸ்வாமிகள் ஒரு ராணுவ லாரியில் பயணப் பட்டிருக்கிறார். லாரியில் வசதியான இருக்கைகள் இல்லை. மரப்பலகைகளே ஆசனங்கள். திடீரென ஒரு பள்ளத்தில் லாரி ஏறி இறங்கியதில் ஸ்வாமிகளின் முதுகெலும்பில் ஒரு விரிசல் விழுந்தது. அந்த முகாமிலிருந்து ஒரு மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிடுவதாகச் சொன்னார். ஸ்வாமிகள் அதை ஏற்கவில்லை. உள்ளங்கையால் தடவிவிட்ட படியே அவர் தன்னைத் தானே குணப்படுத்திக் கொண்டார். ஹரித்வார் சென்றதும் ராம கிருஷ்ணமட மருத்துவ மனையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. மருத்துவர் எக்ஸ்ரேயைப் பார்த்துத் திகைத்துப் போனார்.
பாகம் 2: பிறவியிலேயே குணப்படுத்தும் சக்தி
ஒரு நாள் மாலைப் பொழுதில் அங்கு வேறு அறையில் தங்கியிருந்த ஒருவர் "புலி புலி" என்று கூவி எச்சரிக்கை கொடுத்தபடியே வந்து கொண்டிருந்தார். அங்கே ஒரு புலி வந்து இருப்பதாக எல்லோரும் அவரவர் அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டனர். அங்கே புலிகள் உலாவுவது சகஜம். பொழுது ஆறாவது வரை எவரும் புலிக்கு பயந்து வெளியே வர மாட்டார்கள். காலையில் ஒரே ஒரு நபரைக் காண வில்லை என்பது தெரியவந்தது. அவரது அறைக் கதவு பூட்ட ப்பட்டிருந்தது. கதவைத் தட்டிய போது உள்ளே இருந்து குரல் கேட்டது. நல்ல வேளை அந்த மனிதர் புலிக்கு இரையாகவில்லை.
அவரால் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரமுடியவில்லை. கதவுக்குத் தாழ்ப்பாள் இல்லை என்பதனால் அவர் கதவை சாத்த ஒரு வலுவான பொருளை அங்கே தூக்கி சாய்த்து விட்டார். புலிக்கு பயந்து அவர் தூக்கிய கற்களை புலி போனதற்குப் பிறகு நகர்த்த முடியவில்லை அது பெரிய கல் உரல். பின்னர் ஆறுபேர் சேர்ந்து அதை நகர்த்தினார்கள். நாம் நினைப்பதைவிட நமக்கு பலம் அதிகம் என்பதை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இந்த நிகழ்ச்சி பற்றிக் கூறுவதுண்டு.
வடக்கு ரயில்வே சாதுக்களிடம் டிக்கெட் கேட்பதில்லை, அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கலாம். ஸ்வாமிகளும் ஏதாவது ஒரு ரயிலில் ஏறுவார். மனதுக்குப் பிடித்தமான இடத்தில் இறங்கிக் கொள்வார். ஏதாவது ஒரு திசையில் பயணப்படுவார். நடந்தது களைத்துப் போனால் அடுத்த ரயிலில் ஏறி வேறு இடத்திற்குப் போவார். அது என்ன இடம் என்று கேட்டுக் கொண்டதுகூட இல்லை. ஜன்னலுக்கு வெளியே பார்ப்பார். இடம் பிடித்திருந்தால் இறங்கி விடுவார். அப்படிப் பயணப்பட்ட சமயத்தில் ஒரு முறை நர்மதை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார். நர்மதை நதி குதூகலத்துடன் பாய்ந்து வருவதைப் பார்த்து மகிழ்ந்தார். சற்றும் கற்பனை செய்து பார்க்க முடியாத காட்சியை அவர் விந்தியமலைப் பள்ளத்தாக்கில் பார்த்தார். இரண்டு மலைகளுக்கிடையே இருந்த இருநூறு அடி நீளத்திற்கு ஒரு தேன்கூடு நீண்டு இருந்தது -ஒரு பாலம் போல. ஒவ்வொரு தேனீயும் உள்ளங்கை அகலத்திற்கு உருவத்தில் பெரியது.
அதேபோலவே காசி மயானத்தில் எங்கும் கண்டிராததொரு காட்சியைக் கண்டார். சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. யோசித்துப் பார்த்தார். 'சாவது எப்படி இருக்கும்?' வலது புறமிருந்து ஒரு மாடத்தில் ஏறி அமர்ந்தார். சாவை அனுபவித்த பிறகுதான் இறங்குவது என்று முடிவு செய்தார். பத்மாசனம் போட்டு அமர்ந்தார்.
அவருக்குப் பசி, தூக்கம், எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் நாட்கள் அப்படியே நகர்ந்தன. அவர து தியானம் சாவைப் பற்றியது. பல நாட்களுக்குப் பிறகு தன் சாவைத் தரிசித்து அனுபவித்தது போல் உணர்ந்தார். தன் இறப்பதாகவும், தன்னுடன் தொடர்பு அறுந்து போவதாகவும் உணர்ந்தார். தன்னை பாரமற்றவராக உணர்ந்து கொண்டார்.
அதன் பிறகு சாவு பற்றிய அச்சமும் இல்லை. இயல்பான நிலைக்குத் திரும்ப இரண்டரை வருடம் ஆகியது. ஒரு உயர் தளத்தில் அவர் இருப்பது போல் உணர்ந்தார். அப்பொழுது காசி விஸ்வநாதருக்குத் தானே அபிஷேகம் செய்தது போன்ற ஒரு உணர்வு தோன்றியது.
அரிச்சந்திரனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் இந்த சந்நியாசி என்ற பேச்சு பரவ பலர் அங்கே வந்தனர். சிலர் உணவுப் பண்டங்களும் கொண்டு வந்தனர். அது ஞான ஒளி.
சுயத்துடன் இரண்டறக் கலப்பதற்காக அவர் தவத்தின் போது வெவ்வேறு உத்திகளைக் கையாண்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. பரம ஞானம் கடந்த ஆத்மாக்கள் தமக்கு எதிராகச் சதி செய்வதாக நினைத்தார். அது ஒரு பிரமை.
அப்போது ராஜசேகரன் மரித்தார்.
பரமான ஒளி பெற்ற பிறகு ஸ்தூல உடலியல் தம்மை விட்டு அகன்றதாக அவர் உணர்ந்தார். இந்த உணர்வு கடந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கே இவருக்குப் பல பிரார்த்தனைகள் ஆயின. அவர் மரத்தடிகளிலும் அமைதியாகவும் தியானம் செய்து ஆன்மசுத்தி செய்தார்.
ஒரு பகலும் அவர் அச்சரப்பாக்கத்தில் கள்ளர் கூட்டத்திற்கு நடுவே என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே பல நாட்களைக் கழித்தார். தீவிர தியானத்தில் ஆழ்ந்திருந்தவருக்குத் தன்னைச் சுற்றி சப்தம் கேட்பது கூடத் தெரியவில்லை. இந்த சந்நியாசி யாரிடமும் பேசுவதில்லை என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அவர், உண்மையைத் தேடுபவர் என்பதையும் அறிய மக்கள் தயங்கினார்கள்.
பல வருடங்களாகப் பேய் பிடித்திருந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு இருபது வயதுப் பெண்ணை சிலர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-இடம் அழைத்து வந்தார்கள். அதுவரையில் அந்தப் பெண்ணின் பெற்றோர் என்னென்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டார்கள்.
தன்னுடைய சக்தியை அறியாத இவரோ - இதற்கு நாம் என்ன செய்வது என்று நினைத்தார். அவர்
மனக்கண்ணில் ஸ்ரீ ராமானுஜர் தோன்றினார். அவர் சொன்னார்: "ஒரு பிரம்மஞானிதான் இதைச் செய்ய முடியும். அந்தப் பேய் இவரிடம் ஜீவன் முக்தி தீட்சை கேட்டது. தனக்கான இறுதிச் சடங்குகளை இவர் செய்தால் போய்விடுவதாகச் சொன்னது. ஸ்வாமிகள் சென்னைக்குச் சென்று கடற்கரையில் சடங்குகளைச் செய்தார்.
அந்தப் பெண்ணைப் பிடித்திருந்த பேய் அத்துடன் அகன்றது. ஞான ஒளி பெற்ற பத்து மாதங்களுக்குப் பிறகு அவர் நிகழ்த்திய அற்புதம் அது.
அவர் பழனி அருகே, பெருங்கரணி என்ற இடத்தில் சில காலம் ஒரு குகையில் வாழ்ந்தார். எல்லா நாட்களிலுமே அவர் உற்சாகத்துடன் இருந்தார். உணவு உண்ணாத பொழுதிலும், மௌன விரதம் காத்தார். சரியான உடைகளை உடுத்திக் கொள்ளவில்லை.
ஆனால் அவரிடம் ஒரு ஒளி ஜ்வலித்துக் கொண்டே இருந்தது. கண்களிலும் தனி ஒளி தெரிந்தது. தினமும் உள்ளூர்க்காரரான பத்மனாப ரெட்டியார் அவருக்குக் கஞ்சி கொண்டுவந்து தருவார். அதுவே அவரது ஆகாரம்.
பின்னர் ஸ்வாமிகள் சேலத்தில் வசிக்கத் தொடங்கினார். அங்கிருந்து ஈரோடு மற்றும் சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்றார். பலருக்கு ஞான உபதேசம் செய்தார். பலரை குணப்படுத்தினார்.
இப்பொழுது அவர் பிடாமயில் உள்ள தியான பீடத்திற்கும் பெங்களூர் நகருக்கும் அடிக்கடி சென்று வருகிறார். பெங்களூரிலிருந்து பிடாடி கிட்டதட்ட இருபத்தி ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
கொடிய நோய்களிலிருந்து நிவாரணம் பெற பலர் அவரைத் தேடி வந்த வண்ணம் இருக்கிறார்கள். தியானத்தைக் கற்பித்தல் மற்றும் உலக அமைதியை உருவாக்குதல் ஆகியவற்றிலேயே அவரது காலமெல்லாம் லயித்திருக்கிறது.
அவர் ஆன்மீகப் பாதையைப் பலருக்குக் காட்ட முயற்சி செய்து வருகிறார். தியானம் எப்படி ஒருவரின் வாழ்க்கைப் போக்கினை மாற்றுகிறது என்பதை உலகறியச் செய்ய விழைகிறார்.
தியானத்தின் மூலமாக உடல், மன நோய்களிலிருந்து விடுபடலாம் என்று அவர் போதிக்கிறார். சாதாரணமாகத் தோன்றும் அவர் ஆச்சரியமான மாமனிதர்.
மனதையும் மறுப்பதிலிருந்து உயரமுடியும் என்றும் அதை நீ நம்பவேண்டும். இந்த மறுப்பை உணரும்பொழுது நீங்கள் விடுதலை பெறுவீர்கள்.
உள்ளத்தை நம்பி
அதிசயமொன்று நிகழப்போகிறது என்று உளமார நம்புங்கள். வாழ்க்கையை நேசியுங்கள் உங்கள் சக்தியை நம்புங்கள் உங்கள் உள்ளார்ந்த நற்குணங்களை நம்புங்கள் உயிர்ப்புடன் புத்துணர்ச்சியுடன் எழுங்கள் உலகின் அபாரமான, அற்புதமான அழகைக் கண்டு கொள்ளுங்கள் உங்கள் தனித் தன்மையை நீங்களே கண்டு கொள்ளுங்கள். உங்களை நீங்கள் வியப்பிலாழ்த்துங்கள் முழுமையான நிறைவு உங்களிடம் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தயங்காதீர்கள் மனிதகுலமே அப்படித்தான் உங்களை நேசிப்பவர்கள் உங்களுக்கு உதவட்டும் நம்ப வேண்டிய அளவுக்கு நம்புங்கள்
இன்றைய பொழுது என்பது நம்முடன் இருப்பது உண்மை என்று உணருங்கள்
உங்கள் வானவில்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் முடிந்தனவற்றையெல்லாம் செய்து பாருங்கள் அவை அற்புதங்களாயினும் சரி.
அற்புதங்களை எப்போதும் நம்புங்கள் தெய்வீகத்தை அறிந்து கொள்ள விரும்பினால் முகத்தில் காற்றை உணருங்கள் வெப்பக் கதிர்களைக் கையில் உணருங்கள்