Books / Bhagavad Gita Explained Chapter 15

1. Bhagavad Gita Explained Chapter 15

மத் பகவுத்திதை

[ ஜீவன்முக்த விஞ்ஞானம்]

விளக்கவுரை

புருஷோத்தம யோகம் அத்தியாயம் - 15

உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியானபீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் அனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட ஆங்கில பகவத்தீதை தியான சத்சங்க தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு.

உலகம் முழுவதிலும் உள்ள நித்யானந்த தியான பீடத்தின் ஸ்ந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

அன்பான வாசகர்களே.

மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கும் ஆனந்தமான செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக்கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்காகவும்தான்.

உங்களிடம் எவ்வளவு வேகமாகக்கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM வழங்கிய சக்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.

எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைக் கூர்ந்து எங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரிசெய்து வெளியிட உதவியாக இருக்கும்.

இப்படிக்கு, மக்களுக்கான ஆனந்த சேவையில் நித்யானந்தா ஹிந்து பல்கலைகழகம்.

இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை உங்கள் உடல் நலக்கிற்கு ஏற்றதுதானா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே பயிற்சி செய்யுங்கள். இந்த நுட்பங்கள், உங்கள் மருத்துவ கவனிப்பிற்கோ, மருத்துவ பரிசோதனைகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ மாற்று அல்ல. இதில் விளக்கப்பட்டிருக்கும் நுட்பங்களை பயிற்சி செய்யும் ஒருவர், அவரது குடும்ப டாக்டராலோ அல்லது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பயிற்சி அளிக்கப்பட்டு, தீட்சை பெற்ற ஆசிரியராலோ பரிந்துரைக்கப்பட்ட பிறகு மட்டுமே அவற்றை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பரிந்துரை பெறாது, நீங்களாகவே துணிந்து செய்யும் பயிற்சிகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் நித்யானந்த பீடம் பொறுப்பாகாது.

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் செய்வதன் மூலமாகவோ, படம் பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திரேந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியிட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாகப் பெறும் நன்கொடை நிதி முழுவதும் நித்யானந்த தியான பீடத்தின் கருணை நோக்கச் செவையாகச் சென்றடைகிறது.

ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை
பகவத்தீதை ஒரு பின்னணி
முன்னுரை
பூர்ணத்வம்
வளப்படுத்துதலை, உங்கள் வாழ்க்கைமுறையாக்கிடும் தீர்வு
வினாக்களின் வாசலில்
I. வளப்படுத்துதலை, உங்கள் வாழ்க்கை முறையாக்குங்கள்
தேரேல் இல்லாத சந்தேதம் - கேள்வி
தேநிதல் உள்ள கேள்வி - சந்தேகம்
ஸ்த்யத்தின் புரிதலே, அற்புதத்தின் ஆரம்பம்
கண்கள், ஆன்மாவின் வாசல்
குறிப்பு - அனுபவமாகாத லைத்யம்!
உண்மை வேறு, ஸ்த்யம் வேறு
குருவின் வார்த்தை உபதேசமா? நூட்பமா ?
நம்பிக்கையின் வேர், சந்தேகம்
உண்ணம தேநீவுக்கும் போலி தேநீலுக்கும் உள்ள வித்தியாசம்
Allywool Builde, geth Alm விளக்கு முலம் ஆராய முடியுமா?
முன்நிற்கும் பதிலை ஏற்காதது எது?
நீங்களும் சந்தேகப்படலாம்
II. செயலும் செய்பவனும்
காரண சரிரத்திற்குள்ளான பயணம்
இரு கூர் முனைகளைக் கொண்ட வான்போன்றது வார்த்தைகள்
நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு
விழித்துக்டுகொள்ளும்வரை, கனவுகூட உண்மைதான்
கர்மச் சக்ரம்
திட்டமிடாத சேவை, தெய்விகத்திற்கான பாதை
ெகொரிக்க முடியாததைக் கொடுப்பதே தாநம்
III. மரத்தை வேரோடு சாய்த்தல்
ஸம்ஸ்காரத்தைச் செயலிழக்க வைக்கும் தந்திரங்கள்
அஹங்காரத்தைப் பற்றிய சரியான புரிதலே, நம்மை விடுவிக்கும் யுக்தி
ெஜன்ம ஜென்மமாக நம்முன் இருக்கும் பொக்கிஷம்
IV. சுத்திகரிக்கும் நுட்பம்
காமத்தைக் கடக்கும் நூட்பம்
புலன்கள் எனும் மாய வலை
காமத்தைத் தாண்டுவதே விழிப்புணர்வின் முதல்படி
காமம் அன்பாக மலர, நட்புடன் இருங்கள்
மரணச் சமீப அனுபவங்கள்
உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தும் மரணச் சமீப அனுபவம்
V. கட்டுறு மனப்பாங்கு
உங்களின் மதிப்பைத் தீர்மானிப்பது எது?
தத்தவமஸி - அதுவே நீ ஆகிறாய்
பாவம் தொடர்வதில்லை, மனப்பான்மையே தொடர்கிறது
விதியா? விருப்பமா?
நீங்கள் இங்கு எதேச்சையாக வரவில்லை
எதுவுமே முன்பே முடிவுகெய்யப்பட்டது இல்லை!
VI. உங்களின் ஸம்ஸ்காரங்களே நீங்கள்
ஆழ்ந்த தூக்கம் - நம்முடைய மரண செயல்முறைக்கான ஒத்திகையே
எதிர்மறை ஸ்ம்ஸ்காரங்களே, நம் உடல் எடைக்குக் காரணம்
இயற்கைக்கு எதிரானதால், பாதையை மறந்துவிட்டோம்
ஒரே மாதிரியான சக்தி , ஒன்றையொன்று ஈர்க்கும்
ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள்
நீங்கள் புத்திசாலியா அல்லது முட்டாளா?
ஆன்மிகப் பயணத்தின் ஆரம்ப இடம், ஆசிரமம்!
VIII. விழிப்புணாவு, சாதனை அல்ல
சிரத்தை - ஜீவன்முத்திக்கான சாதனம்
இருளும் ஒரு சக்தியே
ஒளியின் கடவுள் மட்டுமல்ல, இருளின் கடவுளும் கிருஷ்ணரே!
உண்ணும்போது உண்ணுங்கள், தூங்கும்போது தூங்குங்கள்
இறைவன் குடிகொண்டிருக்கும் இடம் - உணவு
நித்ய யோகா, உங்கள் அசைவுகளுக்கு உயிர் அளிப்பது
IX. நமது மனம் எப்படி இயங்குகிறது
உங்கள் மனத்தின் இருப்பிடம் எது?
அஹங்காரம் தூங்குவதே இல்லை
எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் நித்யானந்தம்
சரியான இடத்தில் தேனீக்கள்
விஞ்ஞானத்தின் கடைசிப்படியே, ஆன்மிகத்தின் முதல்படி!
கடவுளோ என்றாலும், அடையாள அட்டை கேட்பார்கள்
வெறும் சாட்சியாக இருந்தாலே போதும்
X. கூட்டு விழிப்புணர்வு
அழிவதும் அழியாததும் நானே!

| கடவுள் என்பது ஒரு கருத்து அல்ல; அவர் ஸத்யம் | |-------|----------------------------------------------| | | பிரபஞ்ச சத்தியங்கள் | | | நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியே | | | இயற்கையை எதிர்க்காதீர்கள்! | | | கபிரபஞ்சம் நமது நண்பனே | | | கூட்டு விழிப்புணர்விற்குள் கரைந்துவிடுங்கள், சுதந்திரமடையுங்கள் | | | தலைவனாக வாழ்வோம் அல்லது தொண்டனாக வாழ்வோம் | | | பாரதத்தில் இது ஒருபோதும், நடக்காத காரியம் | | | தேக்கநிலையிலிருந்து மீட்பவர், குரு ஒருவரே | | | நாம் புதிதாக ஏதோவொன்றாக மாறவேண்டியதில்லை | | | ஆழ்ந்த சரணாகதி - முக்திக்கான நுட்பம் | | | • சிரத்தை, பாதையையே இலக்காக்கி விடும் |

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு 'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால், அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கிவிடுகிறோம்.

ஆனால், ஸம்ஸ்க்ரு ்த மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ருத உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு 'த்த்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
கடவுள் (ka)அக்கா
(kka)
கங்கை (ga)கடம் (gha)
சரம் (cha)சச்சரவு
(chcha)
ஜூடி (ja)மஜ்ஜை (jha)
பட்டம் (ta)பட்டம்
(tta)
படம் (da)டம்ஸ் (dha)
தங்கை
(tha)
தாததா
(ththa)
தானம் (da)தா்மம் (dha)
பசு (pa)அப்பா
(pha)
பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்,ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு 'த அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ருதத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரூ த்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸ்மீஸ்க்ரு ்தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸ்மீஸ்க்ரூ தத்தில் மூன்று வகை'ஸ்' க்கள் உண்டு.

  1. ஸ 2. ஷ. ஆனால், மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறியை இந் நூலில் பயன்படுத்தியுள்ளோம்.

ச்ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில், ச' - என ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனை, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் ssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரு தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் ≤ என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால், ஸ்ம்ஸ்க்ரு த்த்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது. அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்மீஸ்க்ரு 'த வார்த்தைகளைப் பொறுத்தமட்டில், 'ந'என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், படிப்போரின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில், 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

மது உன்னதமான இந்து பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத் கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத் கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸம்ஸ்க்ரு தத்தில் சீர்ருதி (Sruti) என்பார்கள். சீர்ருதி என்றால் 'காதால் கேட்பது' என்று பொருள்.

பகவத்தீதையைப்பொதுவாக 'கீதை' என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ரு தனிப்பட்ட இருக்கின்றன. ஆனால், கீதை, இந்து மத கிரிறை கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

இந்து பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளிடைய அபைவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்களுத்துகளின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான ச்ரூதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் விதங்களும் உபரிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்பணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. ஸ்தீயத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான அத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

பிரபஞ்ச சக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வதங்களைப் போன்றோ அல்லது அவா்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உரரிஷதங்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக விளங்குகிறது கீதை. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்விகத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்தக் க்கிறையுமோ அல்லது குதிறையத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதின் கதைச் சுருக்கம்

பருதன் வம்சாவளியினராலும் ஆளப்பட்ட ஆகுசமே பாரதம். 'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது.

இந்த கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மை, சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களான திருதராஷ்டிரர், பாயாண்டு இருவருள், தமையனான திருதராஷ்டிரா் பார்வை அற்றவராக இருந்ததால், இளையவரான பாண்டு அரசராக முடிசூட்டப்பட்டார்.

மன்னரான பாண்டு ஒருமுறை தம்முடைய இளைய மனைவியான மாத்ரியின் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஒரு மானைக் கொல்ல நேர்ந்தது. அப்போது மான் உருவில் இருந்த முனிவா், சாகுந்தறுவாயில் பாண்டுக்கு ஒரு சாபமிட்டார். பாண்டு, தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்பதே அச்சாபம். அதனால் அவருத்குக் குழந்தைகள் இல்லை.

தம்முடைய பாவச் செயலுக்குப் பிராயச்சித்தம் பரிய முடிவுசெய்த பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

கதைக்குள் ஒரு சின்ன கதை

குந்தி, தமது இளமைப் பருவத்தில் துர்வாஸ் முனிவருக்குச் சேவை புரிந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த முனிவர் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி அவர், ஒரு குறிப்பிட்ட மருத்ரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ, அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் பருவத்தில், திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் வேண்டி, அந்த மந்த்ரத்தை உச்சரித்தார். குரியதேவனும் தோன்றினார், அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கா்ணன். ஆனால், சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் அதனை ஒரு பெட்டிக்குள் வைத்து நதியில் விட்டுவிடுகிறார் குந்தி.

அவ்வாறு நதியில்விடப்பட்ட குந்தியின் முதல் மகனான காணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டார். விதியின் வினோத விளையாட்டினால் காணன் துரியோதனனுடன் இணைந்தார்.

திருமணத்திற்குப் பிறகு, அதே வரத்தின் அருளால், குழந்தைச் செல்வம் பெற இயலா நிலையிலுள்ள பாண்டுவின் சம்மதத்துடன், யுதிஷ்டிரா, பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரைப் பெற்றெடுக்கிறார் குந்தி. அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸலறதேவனும் பிறந்தார்கள். பாண்டவர்கள் ஐவரும் அவா்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

யுதிஷ்டிரா், தா்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசீர்வாதத்தால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும், தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும், அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸ்ஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி முலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை. தமது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து, பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோகனன். ஆனால், ஒன்றும் பயனளிக்கவில்லை.

இதற்கிடையில் அர்ஜுனன், பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் தமது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தமது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, ''அம்மா, நான் ஒரு தானப் பொருளை கொண்டுவந்திருக்கிறேன்,'' என்று சொன்னார். அப்பொழுது குந்தி, ' நீ கொண்டுவந்திருக்கும் தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்," என்று அந்தத் தானப் பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'தானப் பொருள் எதுவாகயிருந்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை நிறைவேற்ற, ஐவரும் திரௌபதியை மணம்புரிந்தார்கள்.

பாண்டு விட்டுக்கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே குரு வம்சத்தின் மூத்த வாரிசு என்பதாலும், திருதராஷ்டிரர் அவருக்குப் பாதி தேசத்தைக் கொடுத்தார்.

யுதிஷ்டிரா், இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தமது தம்பியர்களான பீமன், அர்ஜுனன், ஸ்ஹதேவனுடன் ஆண்டுவந்தார். அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத் திற்கு இணங்க வைத்தார். அதில் துரியோதனனின் தாய்மாமனான சுகுனி வஞ்சகமான முறையில் பாண்டவாகளைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார், தம்மையும் இழந்தார்.

துரியோதனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சிசெய்தார். கிருஷ் ணரின் அருளால் திரௌபதி காக்கப்பட்டார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் (அஞ்ஞாத வாசம்) என்ற ஒரு நிபந்தனையையும் விகிக்கார்.

பதினான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் தங்கள் இராஜ்ஜியத்தை மீண்டும் பெற முயற்சிசெய்தார்கள். இந்த முயற்சியில் யாதவர்களின் தலைவாகம் மஹாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமாய் வணங்கப்படுபவருமான 'கிருஷ்ணர்' அவர்களுக்கு உதவி செய்தார்.

ஆனால், துரியோதனன் ஒரு ஊசிமுனை நிலம்கூட தர மறுத்துவிட்டார். இதன் விளைவாக ஒரு பெரிய யுத்தம் மூண்டது. அதுதான் 'மஹாபாரத யுத்தம்'.

பாரததேசத்தின் அனைத்து அரசா்களும் அவரவர்களின் விருப்பப்படி பாண்டவர்களுடனோ அல்லது கௌரவர்களுடனோ இணைந்து போரிடக் கயாரானார்கள்.

கிருஷ்ணர் இரண்டு குடும்பங்களில், யாராவது ஒருவா் பக்கம் இணைய ஒப்புக்கொண்டார். "என்னுடைய ஆயுதம், சேனை எதுவும் இல்லாமல் 'நான்' மட்டும் ஒருபுறம் இருப்பேன். அனைத்துப் போர்த் தளவாடங்களுடன்கூடிய எமது யாதவ சேனை ஒருபுறம் இருக்கும். இந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை கோர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,'' என்று சொன்னார்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு முதலில் அர்ஜுனனுக்கு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில், அர்ஜுனன் மகிழ்ச்சிடனும் நன்றி உணர்வுடனும் தமது நண்பரும் அனுபவமிக்க ஆலோசகருமான கிருஷ்ணரை, தமது தேரோட்டியாகப் பெற்றுக் கொண்டார்.

ஆயுதங்களுடன்கூடிய பலமிக்க கிருஷ்ணரின் யாதவ சேனை தமக்குக் கிடைத்ததில் உள்ளூர் மிகவும் மகிழ்ச்சியடைந்த துரியோதனன், வெளியில் வேறுமாதிரி காட்டிக்கொண்டார். அதாவது அர்ஜுனன் கிருஷ்ணரைத் கேர்ந்தெடுத்த பின்னர், கமக்கு யாதவ சேனையைத்தவிர வேறு வாய்ப்பில்லை என்பதுபோல் காட்டிக்கொண்டார். மேலும், ஆயுதம் ஏந்தாத கிருஷ்ணரைக் கேர்ந்தெடுத்த அர்ஜுனன் நிச்சயம் ஒரு முட்டாள்தான் என்றும் நினைத்தார்!

ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குருகேஷத்ர போர்க்களத்தில், இரு சேனைகளும் கூடின.

அனைத்து அரசர்களும் இளவரசர்களும் ஒருவருக்கொருவர் உறவு முறையினர்தான். ஆனால், ஒருவருக்கொருவர் எதிரெதிர் அணியில் இருந்தார்கள்.

கௌரவ சேனையில் இருந்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆச்சாரியர்களையும் கண்டு அர்ஜுனன் குற்ற உணர்ச்சியினாலும் மன உளைச்சலாலும் தளர்வடைந்தார்; மனச்சோர்வுற்று போரிலிருந்து விலகிச்செல்ல விரும்பினார்.

மனிதனாய் பிறந்த கடவுளுக்கும் கடவுளாய் மாற வேண்டிய மனிதனுக்கும் நடந்த லீலை

குருக்கூத்ர போர்க்களத்தில் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் நடத்திய உரையாடல்தான் பகவத்தீதை.

கிருஷ்ணர், 'நீ என்ன செய்ய வேண்டுமோ அதைத் தயங்காமல் செய், அது மட்டுமே உன் கடமை. போரின் முடிவைப் பற்றிக் கவலைப்படாதே. அதை என்னிடம் விட்டுவிடு. எதிரில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்களே,'' என்று அர்ஜுனனை ஆயுதங்களைக் கையிலெடுத்துப் போரிட்டு எதிரிகளை அமிக்குமாறு உத்வேகப்படுத்தினார்.

உள்ளுலக விஞ்ஞானத்தின் (ஆன்மிகத்தின்) இறுதி அனுபூதி சாரங்கள் நிறைந்த நூலாக கீதை விளங்குகிறது. சில பண்டிதர்கள் சொல்வதுபோல் கீதை வன்முறையைத் தூண்டும் நூல் அல்ல.

அது, உடல் - மனத்தின் நிலையற்ற தன்மையைப் பற்றியும், ஒவ்வொரு

தனிமனிதனும் தர்க்கம், உடல், மனம், எண்ணம் என்ற நிலைகளைக் கடந்த நிலைக்குச் செல்ல வேண்டியதன் கேவையைப் பற்றியும் விளக்குகிறது.

கண் பார்வை இல்லாததால் அரசர் திருதராஷ்டிரர் போரில் பங்கு பெறவில்லை. அவரது அமைச்சரான ஸலஞ்ஜயன்தான் வியாஸரால் அருளப்பட்ட ஞானக்கண் கொண்டு, போர்க்களத்தில் நடப்பவற்றை மன்னருக்குத் தெரிவித்தார்.

ஸ்ஞ்ஜயனின் குரல் மூலமாகவே நாம் கீதையைக் கேட்கிறோம். அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடக்கும் உரையாடலை ஸலஞ்ஜயன் மூலமாகத்தான் கேட்கிறோம்.

போரில் எல்லா கௌரவ இளவரசா்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் கௌரவ சேனையின் தளபதியான பீஷ்மா, துரோணர், காணன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். இறுதியில் பாண்டவர்கள் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றார்கள். அவர்கள் போரிலே வெற்றியடைந்து ஒன்றுபட்ட தேசத்தை ஆண்டார்கள்.

அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையில் நடந்த இந்த உரையாடல், ஒரு மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உரையாடல்.

ஸம்ஸ்க்ரூ க்கீதில் அதை 'நா-நாராயண்' உரையாடல் என்று சொல்வார்கள். அர்ஜுனன் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும், நம் ஒவ்வொருவா மனத்திலும் உள்ளவைதான்.

கிருஷ்ணரின் பதில்கள், காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கின்றன. கிருஷ்ணரின் போதனைகள், ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கு முன்னால் பேரழிவைத் தந்த அந்தப் போர்க்களத்தில் எந்த அளவுக்கு அளவுக்கு இன்றும் ஆழமான லத்யமாக உள்ளது.

பகவத்தை, ஐவன்முக்திக்கான வரைபடம்!

வாழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மஹாபாரதத்தின் உருவகமான உட்பொருளை இவ்வாறு விளக்குகிறார்:

மஹாபாரதப் போர் என்பது ஸம்ஸ்காரங்கள் எனப்படும் நமது மனத்தில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையேயான போராட்டமே தவிர, வேறு ஏதோ ஒன்று அல்ல!

நேர்மரை எண்ணங்களை 'பாண்டவர்கள்' என்று சொல்லலாம் : எதிர்மறை எண்ணங்களை 'கௌரவ இளவாசர்கள்' என்று சொல்லலாம்.

குருக்கிஷ்ரம் போர்க்களம் என்பது நமது மனித உடல்; அர்ஜுனன் தனிமனித உணர்வு நிலை; கிருஷ்ணர் ஜ்ஞுருகுரு.

தனிமனித விழிப்புணா்வு, தம்முடைய ஞானமடைவதற்கான பாதையில் சந்திக்கும் பெரிய தடைகளின் குறியீடுகளாகவே கௌரவப் படையை நடத்திச் செல்லும் பல்வேறு தளபதிகளும் இருக்கின்றனர்.

பீஷ்மர், குரு வம்சத்தின் மதிப்புமிக்க வணக்கத்துக்குரிய பெரியவர், குலபதி. அவர் பெற்றோர் மற்றும் சமுதாயம் நமக்குள் உருவாக்கும் கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.

அடுத்து, கௌரவர் மற்றும் பாண்டவா்களின் ஆச்சாரியரான துரோணர், நமக்கு அறிவையும் ஆன்மிக வழியையும் காட்டியவர்களால், நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் உருவகமாக இருக்கிறார்.

கர்ணன், ஞானமடைவதற்குத் தடைகளை ஏற்படுத்தக்கூடிய தானம், இரக்கம் போன்ற நமது 'நல்ல செய்கை'களால் நமக்குள் ஏற்படும் கட்டுறு மனப்பாங்கின் அடையாளமாக இருக்கிறார்.

இறுதியாக வீழும் துரியோதனன், நமது 'தனிமனித அறைங்காரத்தின் சின்னமாக இருக்கிறார். '

நடைமுறை மாபுகளை சமுதாயத்தாலும் நமக்குள் உருவாக்கப்பட்ட கட்டுறு மனப்பாங்கைக் கடக்க வேண்டியதுள்ளது. அதனால்தான் எுானப் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள், சமுதாயத்தைவிட்டு ஒதுங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது.

பெற்றோர்களால் ஏற்படுத்தப்படும் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு நாம் உடலில் வாழும்வரை உடன் வாழும். அவை இறப்பதில்லை. ஆனால், நம்மைக் கட்டுப்படுத்தும் வலிமை அதற்கு இருக்காது. அதன் தாக்கம் குறைந்துவிடும். அதையே பீஷ்மரின் 'அம்புப் படுக்கை' உணர்த்துகிறது.

துரோணர் என்பது நம் வாழ்வில் நாம் உள்வாங்கிய அனைத்து அறிவுகளையும், நம்மை வழிநடத்திச்செல்கின்ற ஆசிரியர்களையும் குறிக்கிறது. அவர்களால் நம்மை வழிநடத்திச் செல்லத்தான் முடியுமே தவிர, நம்முள் நிலையான முக்தியை மலரச்செய்ய முடியாது. ஆனாலும் நம்மை வழிநடத்திய ஆசிரியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாக உணர்வதால், அவர்களை 'விட்டுவிடுதல்' என்பது மிகவும் சிரமமாக உள்ளது.

இங்குதான் ஜ்ஞாநகுருவாணவர் நம் வாழ்வில் வருகிறார். அதிலிருந்தும் நம்மை விடுவித்து வழிநடத்துகிறார்.

கர்ணன், நற்செய்கைகளின் களஞ்சியம். அவரது நற்செய்கைகளே அவர் ஞானமடைவதைத் தடுக்கும் தடைகளாகவும் இருந்தன. காணனை விடுவிப்பதற்கு அவரது புண்ணியங்களையும், நல்ல செய்கைகளின் பலன்களையும் கருணை உள்ளம் படைத்த கிருஷ்ணர் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

ஒருவரின் தர்ம சிந்தனையாலும் இரக்க குணத்தாலும் உருவாகும் நல்ல செயல்களின் மீதான பற்றைவிடுவதற்கு, ஜ்ஞாநகுருவானவர் வழிகாட்டுகிறார். ஞானத்திற்கான தேடுதலும் ஞான அனுபவமுமே, நாம் உலகிற்கு அளிக்கும் நிலையான சேவை என்பதையும் ஜீஞாரதகுரு தெள்ளத் தெளிவாகக் உணரச் செய்கிறார்.

இறுதியாக நாம், துரியோதனனை அதாவது நம்முடைய அஹங்கார மனப்பாங்கை வந்தடைகிறோம். வெற்றிகொள்வதற்குக் கடினமாக இருக்கும் நம்முடைய அணங்கார மனப்பாங்கைக் கரைக்க இருரை ஸ்த்குருவின் முழு உதவியும் நமக்குத் தேவைப்படுகிறது. இது மிகவும் நுட்பமான வேலை. ஜ்ஞார ஸ்த்குருவின் உதவியும் இங்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் சில சமயங்களில் நம் அறைவ்காரம், நாம் ஜீஞாந ஸத்குருவிடம் கொண்டிருக்கும் தொடர்பையேகூட துண்டித்துவிடும் சக்திவாய்ந்தது.

நூற்றியெண்பது மில்லியன் மனிதர்களிடையே நடைபெற்ற போர். இதில், நூற்றிப் பத்து மில்லியன் கௌரவ சேனை என்பது நமது எதிர்மறை ஸம்ஸ்காரங்களையும், எழுபது மில்லியன் பாண்டவர் சேனை என்பது நமது நேர்மறை எண்ணங்ளையும் குறிக்கிறது. நூற்றுப் பத்து மில்லியன் எதிர்மறை வீரர்களுக்கும், எழுபது மில்லியன் நேர்மறை

வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மஹா யுத்தமானது பதினெட்டு நாள்களுக்கு நீடித்தது.

பதினெட்டு என்ற எண் முக்கியத்துவம்வாய்ந்த ஆம்ந்த உட்பொருளைக் கொண்டது. அது நம்முடைய உடலின் முக்கியமான பத்து புலன்களையும் எட்டுவித எண்ண ஒட்டங்களையும் குறிக்கிறது.

அவற்றுள் குரணேந்தீரியங்கள் என்பவை சுவைக்கல், பார்க்கல், முகர்தல், கேட்டல், மற்றும் தொடு உணர்வு ஆகிய 'அறியும் புலனுணா்வு'களைக் குறிக்கின்றன.

ஐந்து கர்ஹேந்த்ரியங்கள் என்பவை பேசுதல், கரங்களால் செய்யப்படும் செயல்கள், நடத்தல், உடற்கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் அகிய 'செயல்புரியம் பலணைர்வ'களைக் குறிக்கின்றன.

எட்டுவித எண்ண ஒட்டங்கள் என்பது காமம், பயம், குரோதம் (வெறுப்பு), லோபம் (பொறாமை), மதம் (ஆணவம்), நன்றியற்றத் தன்மை மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன.

'தன்னை உணர்தல்' எனப்படும் ஆக்ம ஞானம் நம்முள் மலருவதற்கு, இந்தப் பகினெட்டும்விடப்பட வேண்டும்.

மஹாபாரதம் ஒரு கிதிரைஸ் கதை மட்டுமல்ல, அது நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான வெறும் சண்டை மட்டுமல்ல, அது நமது உடல் - மன அமைப்பில் உறையும் எதிர்மறை, நேர்மரை ஸ்ட்ஸ்காரங்களைக் கரைத்தலைப் பற்றியது. ஜீவன்முக்திக்கு இது நடைபெற்றாக வேண்டியுள்ளது.

இது ஞானமடைதலுக்கான வழிமுறையைப் பற்றிய கதை. மஹாபாரதம், வாழும் வரலாறு. பகவத்தீதை, ஞானமடைதலுக்கான கையே(டு!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அர்ஜுனனைப்போல், நீங்களும் இங்கே இப்புத்தகத்தின் வாயிலாக, ஜனூரூ ஸ்த்குருவுடன் உரையாடுகிறீர்கள். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. லத்குருநாதரின் ஸ்தீய வார்த்தைகளிலிருந்து உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்களையும் சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்று மலருங்கள்.

பொழும் ஞானி THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பகவத்தீதைக்கு இந்தத் தொடரில் விளக்கமளிக்கிறார்.

பகவத்தீதைக்கு பல வருடங்களாக நூற்றுக்கணக்கான விளக்கவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, ஆதி சங்கராச்சாரியர், இராமானுஜர், மத்வர் போன்ற மாபெரும் ஜ்ரூராத குருமார்களும் கீதைக்கு விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த குருமார்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸா், இரமண மஹரிஷி அகியோர் கீதையிலிருக்கும் ஞானக்கருத்துகளைப் பேசியிருக்கிறார்கள்.

பலர், இந்தப் புனித நூலின் மீது எண்ணிலடங்கா விளக்கவுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அளித்திருக்கும் இந்தத் திறனாய்வு உரை, கீதையின் ஒரு மொழிபெயர்ப்போ அல்லது அதன் ஒரு விளக்கவுரையோ அல்ல. அவர் ஒவ்வொரு ல்லோகத்தையும் விளக்கும்போதும், நம்மை உள்ளுலகச் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்கிறார்.

கீதையின் ஒவ்வொரு ல்லோகத்திற்குமான அர்த்தங்கள் ஏழு நிலைகளில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், பொதுவாக, முதல் நிலை விளக்கமே ஸ்த்குருநாதா, பொதுவான முதல் நிலை விளக்கவுரையைத் தாண்டி, நாம் அறியாத பிற நிலைகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் நம்மை அழைத்துச்செல்கிறார்.

என்றென்றும் வாழும் மஹாபாரதம்

பரமஹம்ஸரின் கீதை திறனாய்வு உரையைப் படிப்பது, ஒருவருக்குகள் கிடைப்பதற்கு அரியதான நுண்ணிய ஸூஷ்மமானஉள்முகப் பார்வையைத் தரும். இது வெறுமனே படித்தல் அல்ல. இது ஒரு அனுபவம். இது ஒரு அருமையான த்யானம்.

சிறந்த சிறிதளவு படிப்பது, ஒருதுளி கங்கை நீரைப் பருகுவது, கிருஷ்ணரை அவ்வப்பொழுது நினைப்பது - இம்மூன்றும் மரண தேவனான யமனுடன் உங்களுக்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவிடும், '' என்று சொல்கிறார். ''நீங்கள் மரணபயத்திலிருந்து விடுபட்டுவிடுவீர்கள், மரணபயத்தைக் கடந்துவிடுவீர்கள்,'' என்று சொல்கிறார்.

பரமஹம்ஸரின் விரிவுரைகளை, வழிகாட்டுதலுடன் மேலும் விரிவாக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களின் வசதிக்காகவும் அவர்களது கற்கும் ஆர்வத்திற்காகவும் ஸம்ஸ்க்ரூ ஆ ஸ்லோகங்களும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இப்புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய தினசரிவாழ்வில் பயன்பெறவும், அதையும் கடந்து, அவர்களின் இறுதிநிலையான ஸ்தீயத்தை உணர்வதற்கான பெருமுயற்சிக்கு உறுதுணையாகவும் இந்நூல் விளங்கும் என்பது உறுதி!

முடிவற்ற பேரின்பநிலையாம் தித்யானந்தத்தை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் இப்புத்தகம் ஏற்படுத்துகிறது!

பூர்ணத்வம்

ஞானத்திற்கான நுட்பமான, ஆனந்த வாழ்வின் இரகசியமான 'பூர்ணத்வம்' பகவத்தீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அனைவருக்கும் புரியும்வகையில், 'பூர்ணத்வம்' என்பதின் தாத்பரியம் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 'பூர்ணத்வம்' எனும் வார்த்தைக்கு இப்பகுதியில் வரும் விளக்கத்தைப் படித்துணர்ந்து கொண்டீர்களானால், புத்தகத்தின் உள்ளே நீங்கள் 'பூர்ணத்வம்' பற்றிப் படிக்கும்பொழுது, அந்த சத்தியத்தின் ஆழத்தை அருமையாக உணர்வீர்கள்.

பூர்ணத்வம் - ஓர்அறிமுகம்

ஒவ்வொரு ஜீவனும் அடைய விரும்புவது - 'பூர்ணத்வம்'

வாழ்வின் மிக உயர்ந்த சத்தியம், மிக உயர்ந்த இலட்சியம் - 'பூர்ணத்வம்'

ஒவ்வொரு ஜீவனும் பூர்ணத்தன்மையை அடைய வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் - பிரபஞ்சத்தின் நோக்கம். அதனால்தான் நம் வேதங்களும் சாஸ்திரங்களும் இறுதியில் பூர்ணத்வ நிலையையே வலியுறுத்துகின்றன. இப்புத்தகத்தின் நோக்கமும் -நீங்கள் அனைவரும் பூர்ணத்தன்மையை உணர்வதே.

இங்கு, வாழும் அவதார புருஷர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM...

நம் அன்றாட வாழ்வில், நாம் மிக உயா்ந்த சத்தியமான பூர்ணத்வத்தைக் கடைபிடிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தை உணர்வது எவ்வாறு? பூர்ணத்வத்தை அனுபவிப்பது எவ்வாறு? பூர்ணத்வத்தில் வாழ்வது எவ்வாறு? என்பதை எளிய நடையில், அனைவரும் புரிந்துகொள்(ளும் முறையில் வழங்கியுள்ளார்.

புர்ணத்வம் என்றால் என்ன ?

பூர்ணத்வம் குறைக்கன்மைகளோடும் நீங்கள் நிறைவசெய்தல். உங்களை நீங்களே மன்னித்து, உங்களின் நிறைவுத்தன்மையை பிரகடனப்படுத்துதல்.

உங்கள் வாழ்வில் விழிப்புணர்வில்லாமல்... நீங்கள் உங்களைப் பலப் பாகங்களாக ... துண்டுகளாகப் பிரித்து ... பல மக்களுடனும் ... பல பகிர்ந்துகொண்ட உங்களுடைய பாகங்களையும், துண்டுகளையும் திரும்பப் பெறுவதே பூர்ணத்வம்.

இழந்துவிட்ட எல்லா விஷயங்களையும் திரும்ப மீட்டெடுப்பதே பூர்ணத்வம் ! 'நீங்களும் பிரபஞ்சமும் ஒன்றே' என்று அறியும்வரையிலும், உங்களின் உயர்ந்த இறுதிநிலையை அறியும்வரையிலும், உங்களது அமைதியான விழிப்புணர்வையும், நிலையான ஆனந்தத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளும்வரையிலும், பூர்ணத்வம் செய்வது தொடர வேண்டும்.

ஒரு குழந்தை பூமிக்குக் க் இறங்கிவருவது எனும் புதையலுடன்தான். இது, சமுதாயத்தால் ஒருபோதும் ஆதரிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை, தன் உண்மையான அத்வைத நிலையிலேயே இருப்பதற்கு இந்தச் சமுதாயம் உதவுவதேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சமுதாயச் சூழலால் சிதறிப்போன தனது உணர்வுத் துண்டுகளை, வாழ்க்கை முழுவதும் அது தேட ஆரம்பித்துவிடுகிறது. ஆகவே, தக்கவைத்துக்கொள்வதே முழுமைசெய்தல்.

உங்கள் குறைவுணர்வுகள் என்பது உங்கள் மீது அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு குழந்தைகளைப்போன்றது என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பூர்ணத்வம் செய்யும்பொழுது அந்த குறைவுணர்வுகளில் கரையும் ... பின் கரையும் ... பின் கரையும் ... இப்படி எல்லாக் குறைவுணர்வுகளும் கரையக் கரையக் கரைய, திடீரென ஒரு நாள், நீங்கள் மட்டும் உங்களுடன் இருப்பீர்கள்.

எந்தக் குறைவுணர்வும் இல்லாமல் உங்களுடன் அமர்ந்திருப்பீர்கள். குறைவுணர்வுகளும் கரைந்து விடும். இந்தத் தேவையற்ற புரிதல்கள் உங்களை விட்டு விலகும்பொழுது, நீங்கள் அனுபவிக்கும் அந்த நிறைவுணர்வுதான் 'லட்சுமி'!

நம் எல்லா வறுமைக்கும் மூலகாரணம், நாம் வளர்ந்த பின்பும்கூட சிறுவயது குறைவணர்வகளோடு வாம்வதுகான்.

குறைவுணர்வு - என்றால் என்ன ?

கடந்தகாலம் சார்ந்த எண்ணங்கள் ... துக்கங்கள் ... சந்தேகங்கள் ... குற்றவுணர்ச்சிகள் ... வெறுப்புகள் ... பயங்கள் - இவை உங்கள் நிகம்காலத்தில் அமர்ந்துகொண்டு, எதிர்காலத்தையும் வாழவிடாமல் தடுப்பதுதான் 'குறைவுணர்வுகள்' என்கிறோம். இதை Incompletions என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.

உள் மனத்தடையாலோ அல்லது வெளியில் ஏற்படும் ஏதாவதொரு தடையாலோ, நீங்கள் நினைத்தபடி நிகழாமல் தடைபட்டு நின்றுவிடும் எந்தவொரு செயலுமே, உங்களுக்குள் ஒரு குறைவுணர்வாகத் தொக்கிநின்றுவிடுகிறது.

நிகழ்கால் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் போக்கில், அப்படியே பங்கேற்கவிடாமல் உங்களைத் தடுக்கும் கடந்தகால நிகழ்வின் தாக்கம் எதுவானாலும், அது குறைவுணர்வே. குறைவுணா்வுகள், உங்களைத் தாழ்த்தி, உங்களை உணர்ச்சிவசப்படுவராகவும் பலவீனமானவராகவும் உணரச்செய்து, உங்களுக்குள் ஒரு திருப்தியற்ற உணர்வையே விட்டுச்செல்லும்.

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், குறைவுணா்வு உடையவராக இருப்பீர்கள். மன அழுத்தம் என்பது உங்களுக்குள் நீங்களே குறைவுணர்வுகளை வைக்கோல் போர்போன்று போட்டுத் திணித்து வைத்துக்கொள்வதைத் தவிர வேறெதுவுமில்லை.

'மனிதகுலத்தின் இருக்கின்றனவே' என்பதே மனிதகுலம் சுமந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய குறைவுணர்வு !

என் குறைவணர்வுகள் உருவாகின்றன ?

ஒரு சிறிய கதை:

அன்றாடம் ஒரே விதமான வேலைகளைச் செய்து மிகவும் சலிப்படைந்திருந்தார், மசக்காளி. அவர், ஒருநாள் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் தமக்குள், 'என்ன சலிப்பான வாழ்க்கை இது! ? ... தினமும் காலையில் எழுந்து, பல்விளக்கி, பேப்பர் படித்து, சாமி கும்பிட்டு, காலை உணவு அருந்தி, என் மனைவியோடு சண்டையிட்டுவிட்டு, அலுவலகம் சென்று, ஏதோ வேலைசெய்து, அதிகாரியிடம் திட்டுவாங்கி, பின்பு வீட்டுக்குத் திரும்பி வந்து, டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு, தூங்கி... என்ன வாழ்க்கை இது... நகர மாட்டேன்கின்றதே, ஒரே சலிப்பாக இருக்கிறதே, ஏதோ ஒன்று குறைகிறதே. வாழ்க்கையை விறுவிறுப்பாகவும், சுவையுள்ளதாகவும் மாற்ற நான் எதையாவதைச் சேர்த்தாக வேண்டுமே ... எது என்னை நிறைவடையச் செய்யும்..?, எது என் வாழ்க்கையை உயிர்ப்போடும்... சுவையோடும் ... விறுவிறுப்போடும் ... உத்சாகமானதாகவும் மாற்றும் ' என்று வீடு திரும்பும் வழி முழுக்க யோசித்துக்கொண்டே வந்தார்.

வீட்டை அடைந்தவுடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். அவர் மனைவி கதவைத் திறந்தார்.. உடனே அவர்தன் மனைவியிடம் ''ஷீலா, இந்த வாரக் கடைசியில் கோவாவுக்குப் போகலாம், நாம் அங்கு கடலருகில் விடுதியெடுத்துத் தங்கி, விரும்பும்போதெல்லாம் இளைப்பாறலாம், உணவகத்திற்குச் சென்று விரும்பியதைச் உண்ணலாம், அருந்தலாம் என்ன போகலாமா?'' என்று மூச்சுவிடாமல் கேட்டார். அதைக் கேட்ட மனைவிக்கோ ஒரே சந்தோஷம். உடனே சம்மதித்தார்.

வாரயிறுதியும் வந்தது. மசக்காளியும் அவர் மனைவியும் கோவாவிற்குப் பறந்தார்கள். அங்கு சென்ற மசக்காளிக்கு ஒரே சந்தோஷம். ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழத் துடித்தார். தம் மனைவியுடன் கடற்குளியலையும், அந்தக் காலை இளம்வெயிலையும் அனுபவித்துக் கொண்டிருந்தபொழுது, நினைவு வந்துவிட்டது. உடனே அதை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்!!!

கடற்கரையில் அமர்ந்துகொண்டு கவலைப்படுவதைத்தான் நாம் 'விடுமுறை' எனச் சொல்கிறோம்.

கதை உணர்த்தும் சத்தியம் ...

உங்களைக்காட்டிலும் பெரியதாக ஏதோ ஒன்று வெளியில் உங்களுக்காகக் காத்திருப்பதாக யூகித்துக்கொண்டு, அதுதான் உங்களை நிறைவடையச் செய்யப்போகிறதென்று நெங்கள் நம்புவதினால்தான் குறைவுணர்வுகள் உருவாகின்றன.

உங்கள் குறைவுணர்வுக்குத் தாவும் ஒரு பயணம்தான். வெளியில் இருக்கும் ஏதோ ஒன்றே உங்களை முழுமைபடுத்த முடியும் என்னும் கருத்தே உங்களை உடனடியாக ஒரு சாதாரண உலகாயத நிலைக்குத் தள்ளி, உங்களை ஒரு உணர்வற்ற பொருளின் நிலைக்குக் குறைத்துவிடுகின்றது. உங்களை ஒரு குறைவுணர்வு உள்ளவராக ஆக்கிவிடுகிறது.

எந்தவொரு நிறைவடையாக செயலும் 'கா்மா'வாக ஆகிவிடுதிறது. அது நிறைவடையும்வரை, அதே செயலைத் திரும்ப திரும்பச் செய்வதற்கு அது உங்களை இழுத்துக்கொண்டேயிருக்கும். இது உங்களைப் பல ஜென்மங்கள் எடுக்கவைக்கும்.

குறைவுணர்விலிருந்து குறைவுணர்வை நிலையிலிருந்து செய்யப்படும் எந்தவொரு செயலும் உங்களைப் பூர்ணத்தன்மைக்கு எடுத்துச்சென்று, மற்றவர்களையும் நிறைவடையச் செய்கிறது.

உங்களுக்குள் இருக்கும் குறைவுணர்வுகள்தான் உங்களின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்பதை நீங்கள் உணர்ந்தால்தான் உங்களால் அதிலிருந்து விடுபட முடியும். நீங்கள் உருவாக்கிய குறைவுணர்வுகளை நிறைவுசெய்து, உங்களின் கனவுகளை நீங்கள் நிஜமாக்க முடியும்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்...

நம் வறுமைக்கு காரணம் ... செல்வத்துடன் நமக்கு இருக்கும் குறைவுணர்வு.

நம் நோய்களுக்கு காரணம் ... நம் உடலுடன் நமக்கு இருக்கும் குறைவணர்வ.

நம் துக்கத்திற்கு காரணம்... வாழ்க்கையுடன் நமக்கு இருக்கும் குறைவணர்வ.

நம் தோல்விகளுக்கு காரணம்.. நம் செயல்களின் மீது நமக்கு இருக்கும் குறைவணர்வ.

இந்த ஒவ்வொன்றோடும் பூர்ணத்வம் செய்யும்பொழுது நாம் நினைத்த அளவிற்கு... செல்வத்தையும்... ஆரோக்கியத்தையும்... அனந்தமான வாழ்வையும்... வெற்றியையும் பெறுகிறோம்.

பூர்ணத்வ நுட்பம் -கடவுள் உங்களுக்கு அருளிய பிரசாகம்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் ... நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்பதைவிட யாரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம் என்பதை ஆம்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் வார்த்தையில் இருந்து நாம் கற்பதைவிட அவருடைய வாழ்வைப் பார்த்து நாம் கற்பது மிகவும் அதிகம்.

நீங்கள் கற்கும் இந்தப் பூர்ணத்வ நுட்பம், பூர்ணத்தின் வடிவமாம்... எம்பெருமான் ஈசனால் அன்னை பார்வதி தேவிக்கு அருளப்பட்ட மிக சக்திவாய்ந்த நுட்பம். ஈசன் அருளிய இந்தப் பூர்ணத்வ நுட்பத்தை தங்கள் வாழ்வில் உண்மையாகக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் இறுதியில் அவர் வாழும் 'பூர்ண நிலையை' அடைவது சாத்தியம். இதுதான் கடவுள் உங்களுக்கு அருளிய உண்மையான பிரசாதம் !

ாசன் அருளிய ஞானசூத்திரமாம் விஞ்ஞான பைரவ தந்திரத்தில் 22வது சூத்திரம் சொல்வது :

'கடந்தகால நிகழ்வுகளைப் பார்க்கும் 'அந்த இடத்தில்' உங்கள் கவனத்தைக் குவியுங்கள். கடகடந்தகாலத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், அதனை உற்றுக் கவனியுங்கள். அங்கு உங்கள் வடிவம், இன்றைய குணநலன்களை இழந்து, உணர்வுமாற்றம் அடைந்துவிடும். '

பூர்ணத்வ க்ரியை

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பது உங்கள் உணர்வில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு விடுகிறது.

உங்கள் வாழ்க்கையில் குறைவணர்வுகள் ஏற்படுவதற்கு - காலம், உணர்வு, உங்கள் குறைபுரிந்துணர்வுகள் இவை இவை தேவைப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வு உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன் உங்கள் உணர்வில் பதியப்படுகிறது.

உங்கள் உணர்வில் பதியப்படும் ஒரு குறிப்பிட்ட காலமானது, ஒரு குறிப்பிட்ட குறைபுரிந்துணர்வுடன்கூடியதாக இருந்தால், அந்தக் குறைவுணர்வு அனுபவம் அடுத்தடுத்த கணங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள்.

உதாரணத்திற்கு, உங்களுடைய ஆறாவது வயதில், உங்கள் மூத்த சகோதரர் உங்களை ஏதோ ஒரு காரணத்திற்காக அடித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தச் சமயத்தில், உங்களைச் சக்தியற்றவராக உணர்ந்திருந்தீர்களானால், அது ஒரு ஒரு ஆழமான குறைவுணர்வாக உங்களுள் பதிந்துவிடும்.

இப்போதும், எப்பொழுதெல்லாம் அந்தக் குறைவுணர்வின் தாக்கம் ஏற்படுகின்றதோ, எப்பொழுதெல்லாம் அந்த பலஹீனவுணர்வால் பாதிக்கப்படுகின்றீர்களா, புரிந்துணர்வைக் அந்தக் குறைவுணர்வு உருவாக்கப்பட்ட அந்த சிறுவயது வடிவம், உங்களுடைய நினைவுக்கு ஒரு மைக்ரோ நொடிக்காவது உங்கள் மனக்காட்சியில் வந்தே தீரும். நீங்கள் மறுபடியும் அந்த வடிவை நினைவுகூர்வீர்கள்.

அந்த வடிவிலிருந்து அக்குறைவுணாவு, தன் வலையைத் துவங்கிவிடும். ஒரு வன்குறுந்தகட்டில் (DVD) நிழற்காட்சியாகக் குறுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்ட ஒரு காட்சி, திரும்பவும் போட்டுக் காண்பிக்கப்படுவது போன்றதுதான் இது.

உங்கள் ஆறு வயதில் உருவாக்கப்பட்ட ஒரு குறைவுணர்வினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அந்த நேரத்தில் எப்படி இருந்தீர்களோ, அந்த வடிவைத் திரும்பவும் நினைவு கூர்வீர்கள். அது அப்படியே உங்கள் நினைவிலிருக்கும். ஒரு வினாடிக்கும் மிகமிகக் குறைந்த நேரத்திலிருந்தாலும் கூட உங்களால் அதை நினைவுகூர முடியும். அந்தப் பழைய நினைவை அடித்தளமாக அமைத்து, அதன்மேல் அந்தக் குறைவுணர்வு வளருகிறது. அதுவே இப்போதைய உங்களுடைய நிகழ்காலத்தையும் பாதிக்கிறது.

மஹாதேவர் உங்கள் உள்தளத்திலிருந்து, அந்த ஆறு வயது வடிவையும், அந்த நினைவையும், கரைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த நுட்பத்தைத் கருகின்றார்.

இதைத்தான் அவர், 'உங்கள் கடந்தகாலத்தை நினைவு கூர்ந்து. அதைக் கரைத்துவிடுங்கள்' என்று சொல்கிறார். நீங்கள் இந்த ஒரு வரியைத் தவற விட்டுவிட்டீர்களென்றால், நீங்கள் முழுவதையும் தவறவிட்டுவிடுவீர்கள்.

உங்கள் ஆறு வயதில் ஏற்பட்ட குறைவுணா்வுகளை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடந்தகாலக் குறைவுணாவு உங்கள் நிகழ்கால் முடிவுகளை, நிகழ்கால விழிப்புணர்வை இன்னமும் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நொடிக்கும் மிகக் குறைந்த நேரத்தில் உங்களுக்குள் உருவான குறைவுணர்வை, அந்த ஆறு வயது சிறுவனின் பயந்த, குறுகிய, வெளிறிய முகத்தின் காட்சியை நினைவுகூர்வீர்கள். அந்த நினைவிலிருந்து உங்கள் குறைவுணர்வு வளர்ந்து பெருகத் துவங்கும்.

ஆகவே, ஒவ்வொரு கணமும் உங்கள் தோற்றம் எப்படியிருந்தது என்பது உங்கள் உணர்வில் பதியப்படுகிறது. உணர்வுதான் படச்சுருள்.

மகாதேவர் சொல்கிறார்: இப்போது, அதே காலத்திற்குச் சென்று, அதே வடிவைப்பார்த்து, அதையே திரும்ப வாழுங்கள்.

ஆனால், அதைக் கரையச்செய்துவிட வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும் ? நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவயது வடிவம், கடந்தகாலத்திலிருந்து ஒரு பொக்கிஷம்போல் பாதுகாக்கப்பட்டு, காக்கப்பட்டு வந்த அந்த

நினைவுமலர் வடிவம் 'சட்'டெனக் கரைந்துபோகும்.

கடந்தகாலத்தை நீங்கள் மீண்டும் வாழும்போது, சரியாக இதுதான் நடக்கிறது. அந்த ஆறு வயது சிறுவனிடம் நீங்களே சென்றோ அல்லது அந்த ஆறு வயது சிறுவனையே நீங்கள் இங்குக் கொண்டு வந்தோ, அந்தக் குறைவுணர்வை மீண்டும் நிகழ்காலத்துக்கு எடுத்து வந்து, அதை விழிப்புணர்வோடு வாழுத் துவங்குங்கள்.

உங்கள் சகோதரர் உங்களை விரட்டிக்கொண்டு வருகிறார். அவர் உங்களை அடிக்கிறார். நீங்கள் திகிலடைந்து, பயந்து ஓடி, ஒளிந்து கொள்கிறீர்கள்: உங்களால் கத்தக்கூட முடியவில்லை. பயத்தில் மூச்சுவிடுவதே கடினமாக இருக்கும். அந்தக் குழந்தை பருவக் காட்சியை அப்படியே வாழுங்கள் அப்படி வாழும்போது குறைவுணர்வு கொண்ட சிறுவன், பதறிப்போன சிறுவன் இப்போது அப்படியே கரைந்துபோவான்! அந்த நினைவுகள் கரைந்துபோகும். அந்தக் காட்சி கரைந்துபோகும். இவை எல்லாம் கரைந்தவுடன் உங்கள் உணர்வில் இருக்கும், அந்தக் குறைவுணா்வின் தாக்கமும் கரைந்துபோகும் !

இதுதான், மஹாதேவர் சொன்னது, 'உங்கள் கடந்தகாலத்தை, அதனோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் உற்றுக் கவனியுங்கள். உங்கள் கடந்தகாலம் நிகழும் இடத்தில் உங்கள் கவனம் இருக்கட்டும் அப்பொழுது உங்கள் வடிவம்கூட, தன்னுடைய இப்போதைய பண்புகளை இழந்து, உணர்வுமாற்றம் அடையும்! அந்த வடிவம், தனது பண்புகளை இழந்து விடுகிறது! அப்போது நீங்கள் பூர்ணமாகிவிட்டீர்கள்! இதுதான் பூர்ணத்வத்தின் விளக்கம்.

நீங்கள் இந்த விளக்கத்தைப் பின்பற்றினீர்களென்றால், நீங்கள் அப்போது வைத்திருந்த அந்தக் குறைவுணா்வினையும் அந்த வடிவத்தையும் உங்களால் மீண்டும் நினைவுபடுத்த முடியாது. நீங்கள் பூர்ணத்வம் செய்து விட்டீர்களா, இல்லையா என்னும் உங்கள் சந்தேகம் தெளிந்து விடும்.

குறைவுணர்வு என்பது மிகவும் சிக்கலான உணர்வுப்பதிவு. குழந்தைப் பருவ குறைவுணர்வை, இப்போதுள்ள உடலுக்குள்ளும் கொண்டுவந்து, அதன் அடிப்படையிலேயே இப்போதும் வாழ்வது என்பது, சிறுவயதில் குடித்த 200மில்லி பால் அளவே இப்போது வளர்ந்தபிறகும் போதும் என்று நீங்களாகவே முடிவுசெய்துகொண்டு, ஒரு லிட்டா் பாலைக் குடிக்கவேண்டிய வயதில்கூட அதே 200 மில்லி பாலைக் குடிக்க

முயற்சிப்பது போன்றதுதான். நீங்கள் குழந்தையாய் இருந்தபோது குடித்த அளவே இப்போதும்கூட குடித்து வந்தீர்களென்றால், உங்களுக்கு சத்துக் குறைவுதான் ஏற்படும் !

அந்த வடிவத்தின் அதே போதாத உணர்வை இந்த வடிவத்திற்குள் கொண்டுவந்து வாழ்வதற்கு முயற்சி செய்தீர்களானால், நீங்கள் தொடர்ந்து போதாமையால் சிரமப்படுவீர்கள். வாழ்க்கையில் 'போதாமை' என்பது ஒரு சாபம்!

அதனால், 'போதாமை' என்னும் சாபத்திலிருந்து விடுபட, உங்களுடைய குறைவுணர்வுகளை நிறைவுசெய்வதைத் துள்ளிப் போடாதீர்கள். சிறிதும் தாமதம் செய்யாதீா்கள். ஏனெனில், அவை உங்களிடம் இருப்பனவற்றையெல்லாம் அழித்துவிடும். உங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தையே அழித்துவிடும் !

உங்கள் நிகழ்காலத்தின் மேல் பாரமாக அமா்ந்துகொண்டு, உங்களை பலமில்லாதவராக உணரச்செய்யும் இறந்துபோன கடந்தகாலத்தை எரிக்கு, நீங்கள் நிகழ்காலத்தில் வாழவும், விரிவடையவும், உயிர்ப்போடு இருப்பதற்குமான ஒரு உணர்வை உருவாக்குவதே பூர்ணத்வம்.

பூர்ணத்வத்தைத் தவிர உடனடி சக்தியுள்ள நுட்பம் கிடையாது. பூர்ணத்வத்தைப்போல வேறெந்த செயல்முறையும் நீடித்த, நிலைத்த விளைவுகளையும், விழிப்புணர்வையும் கராது.

அதனால்தான் மஹாதேவர் இதில் மிகத் தெளிவாக சொல்கின்றார் -உங்கள் கடந்தகாலத்தைப் பற்றி நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எல்லா வடிவங்களும், கருத்துக்களின் வடிவங்களும்... அந்தக் கருத்துக்களை உருவாக்கிய நினைவுப்பதிவுகளையும் நீங்கள் கரைத்தே ஆக வேண்டும்.

அவற்றையெல்லாம் சொல்கிறேன், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்! உங்களுக்கு ஞானம் கிடைத்துவிடும்! அவற்றையெல்லாம் கரைத்தவுடனே, நீங்கள் இந்த வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். அவை கரைக்கப்பட்டவுடன், நீங்கள் உணர்வுமாற்றம் பெறுவீர்கள். நீங்கள் ஜீவன்முக்த வாழ்வை வாழ்வீர்கள் !

பூர்ணத்வம் செய்தல், நிறைவுசெய்தல் என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுவே! நிறைவுசெய்தல் என்பதற்கு மகாதேவரின் மிகச் சரியான விளக்கமும் இதுவே!

பூர்ணத்வம் - வாழ்வின் திறவுகோல்!

பூர்ணத்வமே நீங்கள் சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம்! பூர்ணத்வம் - எங்கேயோ வெளியில் தேடியலைந்து அடைய வேண்டிய ஒரு பொருள் அல்ல. உங்களுக்குள்ளேயே புதைந்து இருக்கின்ற ஒரு பொக்கிஷம். அதனால் உடலில் இருக்கும்பொழுதே உணர்வில் பூர்ணத்வத்தைக் கண்டுவிடுங்கள்!

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு, அவர் அடையவேண்டிய இடத்தை அவர் சென்றடையும்பொழுதுதான், அவரது பயணம் நிறைவுபெறும். அதுபோல - இந்த 'வாழ்க்கை' என்னும் சாலையில் 'உடல்' என்னும் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒவ்வொரு 'ஆன்மா'வுக்கும் அது அடையவேண்டிய இறுதி நிலையான 'பூர்ணத்வத்தை' அடையும்பொழுதுதான், அதனுடைய பயணம் நிறைவுபெறும். இல்லையெனில் எத்துணைமுறையானாலும் அது இன்னொரு உடலெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும்.

பூர்ணத்வம் - மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான திறவுகோலாக செயல்படுகின்றது. அதைக்கொண்டு... உங்கள் பிரச்சினைகள் போன்ற எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம். இந்தப் பூர்ணத்வம்தான் எங்கும், எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாக்கும் உங்களின் உண்மையான சொத்து.

பூர்ணத்வம் - உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையின் எல்லாவிதச் சிறப்பம்சங்களையும் திறந்துவிடக்கூடிய ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது. குறைவுணர்வுகளை மட்டும் நிறைவுசெய்வதற்காகப் பயன்படவில்லை. மற்றவர்களிடமிருந்து துன்பங்களையும் முழுமைப்படுத்தி, அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகுக்கும்.

பூர்ணத்வம் மட்டுமே நம் வாழ்வில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாத் துன்பங்களுக்குமான ஒரே தீர்வு!

தனக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் பூர்ணத்வத்தை உணர்வதற்காக அறிவைப் பயன்படுத்துவதே - உண்மையான பகுத்தறிவு.

ஒவ்வொருவரும்- 'நான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறேன்? நான் ஏன் இவ்வாறு செய்கிறேன்?' என்று தன்னைப்பற்றி, தன்னுடைய செயல்களைப்பற்றி, நடவடிக்கைளைப்பற்றி பகுத்தாராய வேண்டும். தன்னுள் குறைவுணர்வை ஏற்படுத்தும் காரணங்களைக் கண்டுபிடித்து, அதை நிரைவசெய்ய வேண்டும்.

உங்களுடைய வாழ்வில் உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்குத் தடையாக இருக்கும் குறைவுணர்வுகளே! இந்தக் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.

ஒவ்வொருவரும் நீங்கள் குறைவுணர்விற்கான உண்மையான காரணத்தை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நிறைவுசெய்து, உங்களின் இயல்பான இறையுணா்வை, புர்ணத்வ உணர்வை உங்களால் உணரமுடியும்.

உங்களின் ஆன்ம சக்தியை உயிர்ப்பிக்கும் பூர்ணத்வம்!

நீங்கள் எவ்வளவுதான் மன அழுத்தத்திலிருந்தாலும், ஒன்றுக்கும் உதவாதவர் என்று உங்களை நீங்களே உணர்ந்தாலும், உங்கள் மீதும், உலகத்தின் மீதும் கோபமும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உங்கள் எல்லோருக்குள்ளும் தூய்மையான விழிப்பணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தத் தூய்மையான விழிப்புணர்வை நம் தினசரி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்.

பணமாக இருந்தாலும். பொருளாக இருந்தாலும் உங்களிடம் இருப்பவற்றை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தாவிடில் அது பயனற்றதே! நீங்கள் ஸ்விட்சர்லாந்து வங்கியில் பில்லியன் டாலர்கள் வைத்திருந்தாலும், அதை உங்களால் அன்றாட வாழ்க்கையில் எடுத்துப் பயன்படுத்த முடியவில்லையென்றால், அது பயனற்றதே!

நீங்கள் பெட்ரோல் கடையிலோ அல்லது உணவு விடுதியிலோ சென்று

'எனக்கு ஸ்விஸ் வங்கியில் வங்கிக்கணக்கு இருக்கிறது. பில்லியன் கணக்கில் டாலர் இருக்கிறது. இதுதான் என் வங்கி கணக்கு எண். எனக்குச் சிறிது உணவு வேண்டும், என் வண்டிக்கு 1 லிட்டர் பெட்ரோல் வேண்டும்' என்று கேட்டால், அவர்கள் தரமாட்டார்கள்.

உங்களிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலும்கூட, நீங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக வியாபார ஒப்பந்தம் செய்தபின்பே உங்களுக்குப் பணம் தருவார்கள். உங்களுக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்பதற்காகத் தரமாட்டார்கள்.

உங்களிடம் இருக்கும் உங்களுடைய எல்லா ஆன்மீக சக்கியும். உங்களுடைய விழிப்புணா்வான ஆத்மாவும் ஸ்விட்சாலாந்து வங்கியில் இருக்கும் பணம் போன்றவைதான்! உங்களிடம் இருக்கின்ற ஆன்ம சக்தியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியவில்லையென்றால், அதை நீங்கள் வைத்துக்கொண்டிருந்தாலும், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

பூர்ணத்வம் - உங்களுக்குள் உறைந்திருக்கும் தூய விழிப்புணர்வான ஆன்ம சக்தியை விழிப்படையச் செய்கின்றது.

உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் உங்களைப் பூர்ணமானவராக உணர்வீர்கள். உங்கள் வாழ்வு பூர்ணத்வ நிலையில் இயங்குவதைப் பார்ப்பீர்கள். உங்கள் வாழ்வு முழுமையாக மாற்றம் அடைவதைக் காண்பீர்கள். ஒரு பூர்ணமான சக்தி உங்களுக்குள் இருந்துகொண்டு உங்களையும் உங்கள் வாழ்வையும் வழிநடத்துவதையும் உணர்வீர்கள்.

நேற்றுவரை நான் பூர்ணத்வம் செய்யவில்லையே, இப்போது ஏன் ?

பூர்ணத்வம், ஏன் செய்யப்பட வேண்டும்? இக்கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பே. அதற்கான பதில் - ஏனெனில், பூர்ணத்வம், உங்கள் விழிப்புணர்வைத் திரும்பப் பெற்றுத்தருகிறது. உங்கள் விழிப்புணர்வு விடுவிக்கப்படும்பொழுது, அது உயா்-விழிப்புணா்வாகிறது.

தண்ணீரைச் சுடாக்கினால், அது குளிர்விக்கப்பட்டால் பனிக்கட்டி ஆகிவிடுகிறது. அதைப்போலவே, உங்கள் விழிப்பணர்வை சுருள அனுமதிக்கும்பொழுது, அது சுருண்டு, சுருண்டு, சுருண்டு விழிப்பற்ற நிலையாக ஆவிடுகிறது. அதை விரிக்கும் பொழுது, அதுவே 'உயர்விழிப்புணர்வாக' மாறுகின்றது.

பூர்ணத்வம் என்பது - உங்கள் உணர்வுக்குள் சிதறிக்கிடக்கும் உங்களின் பல பாகங்களை ஒருங்கிணைப்பது. பூர்ணத்வம் செய்வதால், நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த நபராக மாறிவிடுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வு, உடல், மனம்- எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன. உங்களுடையதாக மாறிவிடுகின்றன. உங்கள் பாகமாக மாறி விடுகின்றன.

இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் எதிர்காலம் மட்டும் பூர்ணமாய் அமையும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கடந்தகாலமும்கூட மாற்றப்பட்டுவிடும்! உங்கள் கடந்தகாலமும் முழுமை அடைந்துவிடும்.

பூர்ணத்வம் மட்டுமே உங்கள் கடந்தகாலத்தைக்கூட மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நுட்பம்! 'கடந்தகாலத்தை மாற்ற முடியாது'-என்றே மனிதர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆழ்ந்து பரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்றால், எதிர்காலத்தையும் மாற்ற முடியாது!

காலத்தின் ஒரே டி.என்.ஏ விதைக்குள்தான் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இந்த மூன்றுமே இருக்கின்றன! காலம், ஒரு விதை என்றால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் டி.என்.ஏ வடிவமாக அந்த விதையில் உள்ளன.

கடந்தகாலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், நிகழ்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்ந்தால், கடந்தகாலத்திலும் இருந்திருப்பீர்கள்! நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்வதால், எதிர்காலத்திலும் பலஹீனமானவராகத்தான் இருப்பீர்கள். நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, உங்களையே குளிப்பாட்டிச் சுத்தப்படுத்திக் கொள்வதைப்போலவே, ஒவ்வொரு நாள் இரவிலும் நீங்கள் பூர்ணத்வம் செய்து உங்கள் அகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு இரவும் பூர்ணத்வம் செய்வது என்பது உங்கள் உயிரின் பாகமாக மாறவேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிவிட வேண்டும்.

தொடர்ந்து பூர்ணத்வம் செய்யுங்கள். ஏனெனில் பூர்ணத்வம், உங்களை ஒருமைத்துவத்துடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை சிரத்தையுடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களை பொறுப்பெடுக்கச் செய்கிறது. பூர்ணத்வம், உங்களையும் வளப்படுத்தி, மற்றவர்களையும் வளப்படுத்தச் செய்கிறது.

உங்களிடமிருந்தே தப்பித்து ஓடாதீர்கள்!

முழுமையாக இருப்பதே உங்களின் உயர்ந்த இயல்பாக இருப்பதால், உங்களுடைய குறைவுணர்வுகளுடன் உங்களால் சௌகரியமாக இருக்கவே முடியாது. உங்கள் குறைவுணர்வுகள் உங்களை ஒரு குறையுடைவராகக் காட்டுகின்றன என்பதற்காகவே அவற்றை நீங்கள் எதிர்கொள்வதில்லை. அதனால்தான் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள எப்பொழுதும் விரும்புவதில்லை.

உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களுடைய குறைவுணர்வுகள் என்னும் பேய்களிடமிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்கள் தப்பித்து ஓட ஓட, உங்கள் குறைவுணர்வுகள், உங்களை வாழ்க்கையின் மூலமாகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மூலமாகவும் மேலும் மேலும் துரத்தி வேட்டையாடுகிறது.

குறைவுணர்வுகளை அவற்றிடமிருந்து விடுதலையடைய ஒரே வழி.

நீங்கள் ஐந்து வயது குழந்தையாய் இருந்தபொழுது உங்களுக்கு ஒரு பொம்மைக் காரே போதும். ஆனால் உங்களுக்கு 25 வயதாகும்போது, உண்மையான கார் தேவை. ஆனால் இந்த இருபத்தியைந்து வயதிற்கு பிறகும் அதே பொம்மைக் காரை வைத்துக் கொண்டு, ''ஆ! நான் காரில் போகிறேன்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதைப்போலவேதான் நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறீர்கள்! இப்போது நீங்கள் நிஜமான காரில் செல்ல வேண்டிய நேரம் வந்து

விட்டது. உங்கள் பொம்மைக் கார்களை விட்டுவிடுங்கள்.

சிறுவயது கார்கள், சிறுவயது பரிசுகள், உங்களது பார்பி பொம்மைகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். எல்லாமும் கண்டிப்பாகத் தூக்கியெறியப்பட வேண்டியவையே. துரதிருஷ்டவசமாக, சமுதாயம் உங்களுக்கு, பொம்மைகளை மட்டுமே விட்டுவிடக் கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அந்தச் சிறுவயதில் உருவாக்கிய விளையாட்டு உணர்வுகளையும், தேவையற்ற புரிதல்களையும், குறைவுணர்வுகளையும் விட்டுவிடக் கற்றுத்தரவில்லை. அவை அனைத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழ அனுமதியுங்கள்.

பூர்ணத்வம், உஉங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளையும்... போராட்டங்களையும்... பிரச்சினைகளையும் தவிர்த்துவிடுகிறது. உங்களை ஒருங்கிணைக்கிறது.

பூர்ணத்வம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்!

சில சரிசெய்யப்பட முடியாத சேதங்களை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். 'அவற்றை நான் ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது இரு வருடங்களுக்குப் பிறகு நிறைவுசெய்து கொள்வேன் 'என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், தீவிரவாதிகள் எவ்வாறு சும்மாயிருக்க மாட்டார்களோ, அவ்வாறே உங்களுடைய குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது.

'இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீவிரவாதிகளோடு நான் போரிடுவேன்', என்று நீங்கள் சொல்ல முடியாது. அதுவரையில் அவர்கள், உங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். உங்களைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.

அதேபோல் குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது. அவை உங்களது வாழ்க்கை லட்சியங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தொடர்ந்து அழித்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் எதற்காகப் பிறப்பெடுத்தீா்கள், நீங்கள் எதை நிறைவேற்ற இந்த உடலில் இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வின் இலட்சியம், மற்றும் அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் குறைவுணர்வுகள் அழித்து விடும்.

குறைவுணர்வுகள், அழித்துவிடும்! விரோதிகளைப்போல உங்களுக்குள்ளேயே தங்கி உங்களையே அழிக்கும் வேலையைச் செய்யவல்லது. அவை உங்களை மிகவும் கொடுமைசெய்து இன்பமடையும்.

உங்களது சிறு மலரினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களென்றால், அந்தச் சிறு மலர்கூட உங்களுக்குக் கிடைக்க அவை அனுமதிக்காது. அவை சரியாக அந்தக் குறிப்பிட்ட மலரையே வாடிப்போகச் செய்யும்! அதற்குத் தேவையானதெல்லாம் ஒன்றே, நீங்கள் அந்த மலரைப் பெற்றுவிடக்கூடாது, அவ்வளவுதான்!

பல நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனித்திருக்கலாம், மிகச் சாதாரணமான பொருளைக்கூட... எந்தவொரு சாதாரண மனிதனாலும் எளிமையாகப் பெறக்கூடிய ஒரு பொருளைக்கூட, நீங்கள் அடைய மிகவும் கஷ்டப்படுவீர்கள். அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது, அதை அடைய நீங்கள் போராடினாலும் அதன் சிறு பகுதிகூட உங்களுக்குக் கிடைக்காது. அதை அடைவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பவை உங்களுடைய குறைவுணர்வுகள்தான்! ஏனெனில், நீங்கள் விரும்புவது எவ்வளவு சிறியவையாக இருந்தாலும்கூட, உங்களுடைய குறைவுணர்வுகள் அவை உங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும்!

மேலும், குறைவுணர்வுகள் இருக்கும்பொழுது நீங்கள் சாதாரண விஷயத்தையும் தவறான முறையிலேயே அணுகுவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளச் சொல்லி அவருடன் சண்டையிடத் துவங்குவீர்கள். உங்களின் இந்தச் சண்டை அவரை உங்களோடு நெருங்க விடுமா? இல்லை! குறைவுணர்வுகள் உங்களுக்குச் சண்டையிடத் கற்றுக் கொடுக்கும்.

குறைவுணர்வுகளின் திட்டத்தையும் - பொருளாதாரத் திட்டங்களையோ, உறவுகள் சம்பந்தப்பட்ட திட்டங்களையோ - தீட்டாதீர்கள். அதேபோல் என்ன முடிவுகளாக இருந்தாலும் - வாழ்க்கை பற்றிய முடிவுகளையோ, உடல் சார்ந்த முடிவுகளையோ, மனோரீதியான முடிவுகளையோ, ஞானமடைவது அறிவுரைப்படி எடுக்காதீர்கள்.

உங்களுடைய குறைவுணாவுகளைப் பூர்த்திசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். உங்களது குறைவுணர்வுகள் நீங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அப்பாவி அல்ல. அதனால் இப்போதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் உங்களது உடலும், மனமும் அழிந்துவிடும். உங்களுடைய சிந்தனைத் திறனையே முழுவதுமாக விமுங்கிவிடும்.

உங்களைத் தாக்க, உங்களின் சக்தியையே பயன்படுத்தும். இது எப்படிப்பட்டதென்றால் உங்களுடைய பாதுகாப்புப் படையையே உங்களது நாட்டைத் தாக்க உபயோகிப்பது போன்றது. இதைத்தான் குறைவுணர்வுகள் செய்கின்றன. அது மிகவும் ஆபத்தானது. திரும்பவும் சரிசெய்யப்பட முடியாதது. இப்பொழுதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால்... குறைவுணர்வுகளின் சக்தி அதிகமாக இருப்பதால், உங்களது உடலும், மனமும் அழிக்கப்பட்டுவிடும்.

நீங்கள் ஒவ்வொருவருமே பூர்ணத்தின் வெளிப்பாடே!

நம் உபநிடதத்தில் சொல்லப்படும் மிக அழகான ஒரு ஸ்லோகம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே //

இதன் பொருள்:

தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. முழுமையிலிருந்து முழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுமையாகவே இருக்கிறது.

பூர்ணத்வத்தில் இருந்து நீங்கள்தான் பூர்ணம் என்பதை உணர்வதுதான் ஞானம்.

'நீங்கள்தான் பூர்ணம்' என்பதை நீங்கள் உணரும்பொழுது, இந்தப்

பிரபஞ்சத்தின் பூர்ணத்வத்தை அனுபவமாக உணர்கின்றீர்கள், நீங்கள் இந்தப் பூர்ணத்தன்மையை அனுபவமாக உணர்ந்தீர்களானால்... நீங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்துவீர்கள்.

நாம் வெளிப்பட்டவர்கள்தான். பூர்ணம் வெளிவந்த சுடர்கள்தான். ஆனால் அஞ்ஞானம் எனும் இருளால் அதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் உண்மையான வாழ்வை இழந்துகொண்டிருக்கிறோம். பூர்ணத்வம் செய்வது நம்முடைய வாழ்க்கையை நமக்குத் திருப்பி வழங்குகிறது!

நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, வேதப் பாரம்பரியத்தில் நீங்கள் படித்த அனைத்தும் நிஜமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் வேதப் பாரம்பரியத்தை அடைவதற்கு, அதீதமான சக்திகளைப் பெறுவதற்கு, பூர்ணத்வம் ஒரு பாலமாக இருக்கிறது.

எல்லா நிலைகளிலும் பூர்ணத்வமே வாழ்க்கை.

உங்களுக்கும், இராமானுஜா, ஆதிசங்கரா, போன்றவர்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அது பூர்ணத்வத்தின் நிலைப்பாடுதான்.

பூர்ணத்வமே ஆன்மீகத்தின் வளர்ச்சி! பூர்ணத்வத்தினால், உங்கள் முழு வாழ்க்கையும் மாறிவிடுகிறது.

பூர்ணத்வத்தால், நேரிடையாக வாழத்துவங்குகிறீர்கள்!

உங்களுக்குள் அமைதி, நிம்மதி நிலைகொள்ள வேண்டுமென்றால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

உங்கள் துறையில் நீங்கள் திறன்மிக்கவராக வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

அமகான உறவுகள் வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.

நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் வேலையில், உறவுகளில் என எல்லாவற்றிலும் மேன்மையடைவீர்கள். இந்த வெளிவிளைவை மட்டுமல்ல, உங்களுக்குள் உங்களுடைய உணர்வு திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் விழிப்புணர்வு, உங்களுக்குத் திரும்ப வந்துவிடும்.

எவ்வளவுக்கெவ்வளவு திரும்ப வருகின்றதோ... அந்த அளவிற்கு உங்கள் வாழ்வில் பல அதிசயங்கள் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் உணர்வைத் திரும்பப் பெறும்பொழுது, நீங்களும் பூர்ணத்தில் இருந்து வெளிப்பட்டவர்தான் என்ற சத்தியத்தை உணர்ந்துகொள்வீர்கள்.

உங்களின் உண்மையான அடையாளம்!

உங்களின் உண்மையான அடையாளம் எது என்பதை நீங்கள் மறந்திருப்பதே உங்களின் எல்லாக் குறைவுணர்வுகளுக்கும் காரணம்.

உதாரணத்திற்கு... உண்மையில் கோடிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கும் ஒரு செல்வந்தர்தான், ஆனால் தீடீரென ஏதோ சில காரணத்தால், நீங்கள் பிரக்ஞையற்ற நிலையில் விழுந்துவிட்டீர்கள். அதன்பின்பு நீங்கள் விழிக்கும்போது, இயற்கையாகவே, உங்கள் ஸ்விஸ் வங்கி கணக்கு எண், அதற்கான கடவுச்சொல், எவ்வளவு வைப்புத்தொகை ஆகிய எல்லாவற்றையுமே மறந்துவிடுவீர்கள். அதனால் உங்களை ஒரு பிச்சைக்காரராகவே நம்புவீர்கள். ஆனாலும் உலகத்திற்கு உங்களை ஒரு பணக்காரராக காட்டிக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காக நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள். ஆனால், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நீங்கள் உணர்வீர்கள்.

ஆனால் நிஜத்தில் நீங்கள் ஒரு பெரும் பணக்காரர்! ஒரு பணக்காரரான நீங்கள், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நம்புகிறீர்கள். ஏழையாகவே வாழ்கிறீர்கள். உங்கள் கணக்கில் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதைக்கூட அறியாமலே இருக்கிறீர்கள்.

நீங்கள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுவைத்துவிட்டு, உங்கள் கணக்கு எண்ணை மறந்துவிட்டதைப் போலத்தான், பூர்ணத்வம்தான் உங்கள் உண்மைநிலை என்பதை மறந்து, உங்களுக்குள் உங்களை ஒரு குறைவுணர்வுள்ளவராகவே நம்புகிறீர்கள். ஆனால் வெளி-உலகிற்கு உங்களை ஒரு விரும்புகிறீர்கள். அப்படியே காட்டிக்கொள்ளவும் செய்கிறீர்கள்.

பூர்ணத்வம், எல்லாத் தடைகளையும், குறைவுணர்வுகளையும் உருக்கிக் கரைத்துவிடும். உங்களுடைய உணர்வு மலர்வதற்குத் தடையாக இருக்கும் தடைகளெல்லாம் பெரிய மலைகளாக, பெரிய மலைத்தொடர்களாக இருக்கின்றன. எனினும், பூர்ணத்வத்தால்-மலையளவுள்ள குறைவுணர்களைக்கூட கரைத்துவிட முடியும். ஆகவே, நிறைவுசெய்யுங்கள்! ஞானம் அடைவதையே நினைவில் வைத்து, சரியான கொள்ளுங்கள்.

பூர்ணத்வமே கடவுள். பூர்ணத்வமே வாழ்க்கை. பூர்ணத்வம், உங்களைப் பிரபஞ்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. உண்மையிலேயே, பூர்ணத்வம் உங்களுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறது. எல்லாக் கா்மங்களிலிருந்தும், எல்லா தோஷங்களில் இருந்தும் - அது நாகதோஷ்மோ, சனிதோஷ்மோ, ஜாதக தோஷமோ, வாஸ்து தோஷமோ - அவற்றிலிருந்து பூர்ணத்வம் உங்களை விடுவிக்கிறது. ஆகவே பூர்ணத்வக் கிரியாவை செய்ய ஆரம்பியுங்கள். அனைத்து மதங்களின் சாரமும் பூர்ணத்வமே ! ! !

ஸ்ரீமத் பக்குத்திதை

வளப்படுத்துதலை, உங்கள் வாழ்க்கைமுறையாக்கிடும் தீர்வு

அத்தியாயம்-15

கேஸ்வி கேட்கும்போதெல்லாம் நாம் நம் காவத்தையும் திர்க்கும் தன்மையையும் வெளிப்படுத்துகிகேறாம். ക്റ്റ്ട്രേக்கുവ്വപ്രശ്ഭവന്തും எட் நம் அஞ்ஞாதைத்தையும் தெளிவின் தேடவையும் வெளிப்படுத்துகிகேறாம்.

வினாக்களின் வாசலில் ...

  • ் ஆர்ஜுனன் அமைதியில் ஆழ்ந்ததாகச் சொல்கிரீர்கள். இன்னும் அவருக்குள் சுந்தேகம் இருப்பதாகவும் சொல்கிரீர்கள். ஒருவர் தமக்கு இருப்பது சந்தேகமா அல்லது கேள்வியா என்று எப்படி வேறுபடுத்துவது ? நமக்குள் இருக்கும் சுந்தேகங்களைக் கேள்விகள் என்றெண்ணி மரைத்தோமானால், அது இன்னும் அதிகமான குழுப்பத்தை ஏற்படுத்தாதா, ஸ்வாமிஜி ?
  • இர்ம காரியங்களில் ஈடுபடுவது நல்லது என்று நமக்கு முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். தர்மம் என்பது எல்லா நேரங்களிலும் சிறந்ததாகாது என்று ரீங்கள் செரல்லது குமப்பமரக உள்ளது. தயவுசெய்து விளக்கவும்.
  • ള സഖന്ഥിച്ചി,

நீங்கள் பயன்படுத்தும் 'அஹங்காரம்' என்னும் வார்த்தை ஃப்ராய்ட் (Freud) என்பவர் உபயோகிக்கும் வார்த்தையைப் போன்றதுதான், இருப்பினும் இரண்டும் ஒன்றல்ல என்று நீங்கள் சொல்கிரீர்கள். இது எனக்குப் புரியவில்லை, தயவுசெய்து தெளிவாக விளக்குங்கள்.

  • ള സഖന്ഥിച്ചി, மிரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பும் அனுபவங்கள் ஜீவன்முக்தியை நேரக்கி அழைத்துச் செல்லுமா ?

  • ള സഖന്ഥിച്ചി, டுவம் எதைச் செய்கிரோமேர அதைக் கட்டுறு மனப்பாங்குதான் செய்ய வைக்கிறது என்று தாங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் எதைச் செய்ய வேண்டும் என்பதை உத்தரவிடக்கூடிய, முண்கூட்டியே திட்டம் வகுக்கப்பட்ட அமைப்புதான் மனித உடல் - மன அமைப்பை இயக்குகிறதா?

ള സമരഗ്ഗജ.

ஆண்மிக வளர்ச்சிக்கு ஆசிரமச் சூழல் மிக முக்கிய பங்காற்றுகிறது என்று சொன்னீர்கள். ஆசிரம வாழ்க்கை வாழ இயலாத மக்களின் ரிலை என்ன? அவர்களால் முன்னேற முடியாதா?

ള സഖന്ധിച്ചി,

நீங்கள் யோகாவைப் பற்றிச் சொன்னீர்கள். இன்றைய நாகரிக மக்கள் யோகாவை ஆரோக்கியத்திற்கான ஒரு பயிற்சியாகவே பயன்படுத்துகிறார்கள். இது தவற்ற ?

ള സഖന്യஜ,

மனம் எப்படி வேலை செய்கிறது என்பதை மிக அருமையாக விளக்கினீர்கள். இதை நம் அன்றாட செயல்பாடுகளில் எவ்வாறு பயன்படுத்துவது?

ള സഖന്യമ്മ,

நாம் மன அளவிலும், அதைவிட உயர்ந்த அளவிலும்கூட ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களெண்றால், ஏன் நம்மால் அந்த இணைப்பை உணர முடியவில்லை? நாம் எப்படி அந்தத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது?

வளப்படுத்துதலை,

உங்கள்

வாழ்க்கைமுறையாக்குங்கள்

Uகவத்திதையின் பதினைந்தாம் அத்தியாயமான புரு வேராத்தம யாகத்தில் கிருஷ்ணர் மட்டுமே பேசுகிறார். அர்ஜுனன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அர்ஜுனனின் உள்மனப் பேச்சு அமைதியாக்கப்பட்டது. அதன் விளைவாக அவருள் இருந்த கேள்விகள் மறைந்தன.

கிருஷ்ணர், தாம் யார் என்பதையும், தம்முடைய சக்தி என்ன என்பதையும், உயிர்படைத்தவைகளுள், காம் மேலானவராகச் சிறந்து விளங்குவதற்குக் காரணம் என்ன எனபதையும் விளக்குகிறார்.

மேலும் அவர் அர்ஜுனனிடம் என்ன பகிர்ந்துகொண்டாரோ, அது மிகவும் ஆழ்ந்த இரகசியம் என்பதையும் விளக்குகிறார்.

அர்ஜுனன், தம்முடைய 'சுய'த்துள் நிலைபெற்றிருந்தார். அவரது குழப்பங்கள் மறைந்துவிட்டன. விச் வரூர தர்சுர யோகத்தில் கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைக் கண்டதாலும், அதன்மூலம் அவருக்குக் கிடைத்த நேரடி அனுபவத்தினாலும், அவருள் குடிகொண்டிருந்த கேள்விகள் அத்தனையும் கரைந்தேபோயின.

Part 2: Bhagavad Gita Explained _ Chapter 15_Tamil_part_2.md

லத்யங்களை உள்வாங்க அர்ஜுனன் தயாராகிவிட்டதை அறிந்து, கிருஷ்ணர் திருப்தியடைந்தார்.

தேடுதல் இல்லாத சந்தேகம் - கேள்வி, தேடுதல் உள்ள கேள்வி - சந்தேகம்

இதுவரை கிருஷ்ணர் அவருக்கு என்னவெல்லாம் போதித்தாரோ, அவற்றை உள்வாங்குவதற்குத் தேவையான ஆழ்ந்த அறிவையும் தெளிவான புரிதலையும் அவர் பெற்றுவிட்டார்; தம்முடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளத் தயாராகி விட்டார். அர்ஜுனன் ஆழ்ந்த வலிமைமிக்க ஆன்மிக அனுபவத்தைப் பெற்றுவிட்டார். அவர் ஒரு

புதிய 'இருப்பாக' இருக்கிறார்.

கிருஷ்ணர், தம்முடைய பிரபஞ்ச வடிவத்தை வெளிப்படுத்தியதின் விளைவாக, கூட்டு விழிப்புணர்வு நிலையில், தாமும் ஒரு அங்கம்தான் என்ற விழிப்புணர்வை, புரிதலை அர்ஜுனன் பெற்றார். இந்த அனுபவம் அவரைப் பக்தியில் ஆழ்த்தியது. இந்தப் பக்தி வெறும் கிருஷ்ணரிடம் மட்டும் ஏற்படவில்லை, கிருஷ்ணரின் மூலமாக மொத்த மனிதகுலத்தின் மீது வந்தது.

அர்ஜுனன், பேசுகிறார், கிருஷ்ணர் சொல்வதைக் கேட்கிறார், தமக்காக அல்ல.

அர்ஜுனனிடம் இதற்கு மேல், எந்தவிதமான தர்க்க ரீதியான கேள்விகளும் இல்லை. அவர், கிருஷ்ணரை உள்வாங்குவதற்கான நிலையை அடைந்துவிட்டார். அதற்கு அவர் முழுமையாகத் தயாராகியிருந்தார். குழுப்பங்களும் குள்விகளும் நிறைந்திருந்த 'எண்ணங்கள் எண்ணங்களற்ற நிலையை (Thoughtless State), கேள்விகள் மறைந்த மனமற்ற நிலையை (No-Mind State) அடைந்துவிட்டார்.

நமக்குள் கேள்விகள் இருக்கும்வரை, நாம் விடையைப் பெற மாட்டோம். நாம் முன்கூட்டியே தீர்மானித்த தீர்மானங்களையும், நம்முடைய வரையறுக்கப்பட்ட கேள்விகளை எழுப்புகிறோம். கேள்விகள், நமக்கும் அறிவிற்கும் இடையேயும், நமக்கும் குருவிற்கும் தடையாகச் செயல்படுகின்றன. புத்தா், லாவோட்சே (Lao Tse) உட்பட, எல்லாப் பெரிய குரூமார்களுக்கும் கேள்விகள் மீது ஒரு வெறுப்பு இருந்தது.

குருமார்கள், வெளிப்படுத்துகிறார்கள். அங்கு சக்தி பரிமாற்றம் (Transmission) நிகழ்கிறது.

ஒரு அனுபவத்தை வார்த்தைகளால் சொல்வது என்பது அந்த

அனுபவத்தை மறுப்பதே. ஒருமுறை வார்த்தையில் சொல்லிவிட்டால் போதும், அந்த அனுபவம், அதன் பொருளை இழந்துவிடுகிறது. லாவோட்சேசொல்கிறார், ''உண்மையான ஸ்தீயத்தை அனுபவமாக பெற்றிருந்தால், அதை வார்த்தைகளால் சொல்லி, மற்றவர்களுக்குப் பரியவைக்க முடியாது. சொல்லி மற்றவர்களுக்குப் புரியவைக்க முடிந்தால், அது ஸ்தீயம் ஆகாது.''

ஸ்ரீயத்தை வார்க்கைகளால் சொல்லி மற்றவர்களுக்குப் புரியவைக்க முடியாது.

ஒரு "உணர்ந்ததைக் கற்றுக்கொடுக்க முடியாது, அப்படிக் கற்றுக்கொடுக்க முடிந்தால், அது

உணரப்படாத ஒன்றைப் பற்றியதாகத்தான் இருக்கும்!'' அதாவது அதை நாம் இன்னும் உணரவில்லை என்றே பொருள்.

ஆனால் கிருஷ்ணர் மாறுபட்டவர். அவர் மனிதகுல நன்மைக்காக, எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏற்படக்கூடிய முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் உரையாடலில் தம்மை முழுழுமையாக ராடுபடுத்திக்கொள்கிறார். மேலான விழிப்புணர்வுடைய கடவுளாக இருப்பதால், அர்ஜுனனின் குழப்பத்தைத் தீர்ப்பதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்.

அர்ஜுனனின் கேள்விகள், குழப்பங்களில் இருந்து எழுந்தவை. ஒரு க்ஷ்ரியராக, கொல்வதென்பது அர்ஜுனனுக்குப் பழக்கப்பட்ட ஒன்றே. ஆனால் அந்தக் குருஷ்தர போர்க்களத்தில் அவருக்கு இருந்த குழப்பம், மனிதர்களைக் கொல்வதைப் பற்றியதல்ல. தம்முடைய உறவினர்களை, ஆசிரியர்களை, நண்பர்களைக் கொல்வதைப் பற்றியது.

அர்ஜுனனின் குழப்பம், அஹிம்ஸை கொள்கையினால் ஏற்பட்டதல்ல; அப்படியிருந்திருந்தால் கிருஷ்ணர், அர்ஜுனனைச் சண்டையிடத் தூண்டியிருப்பாரா என்பதே சந்தேகம்தான்.

அர்ஜுனனின் குழப்பம், மனஅழுத்தம், சந்தேகங்கள், கேள்விகள் அனைத்தும் அஹங்காரத்திலிருந்து, 'நான்', 'எனது' என்ற உடைமை உணர்விலிருந்து எழுந்தவை.

அர்ஜுனன் முன்னே கூடியிருப்பவர்கள், அர்ஜுனனால் போரில் கொல்லப்பட வேண்டிய அனைவருமே யாரோ அன்னியா்கள் அல்ல, அவர்கள் அவரது உறவினர்களும் நண்பர்களும்தான்! ஆகவே அர்ஜுனனின் மனத்தில் ஏற்பட்ட குழுப்பம் அஹிம்சையினால் ஏற்பட்டதல்ல, அவருடைய 'எனது' என்ற உடைமை உணர்வினால் ஏற்பட்டதே.

அர்ஜுனனின் மதிமயக்கம், அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவர் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே என்ற அவரது பார்வை, அவா்களைக் கொல்வதற்கான தார்மீக உரிமை அவருக்கு இல்லை என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தியது.

குருவின் சக்கி எப்படிப்பட்டதென்றால், ஒரு கேள்விக்கு அளிக்கப்படும் பதில், அருத்து பின்தொடர்ந்து வரக்கூடிய பல கேள்விகளைக் கரைந்துபோகச்செய்யும்

ஒரு க்ஷ்த்ரியன் என்ற முறையில், கொல்வதில் அர்ஜுனனுக்குத் தடுமாற்றமோ அல்லது ஒழுக்கத்தை மீறிய மீறிய செயல் என்ற எண்ணமோ இல்லை. அஹங்காரத்திலிருந்து பிறந்த வன்முறையும், 'எனது' என்ற உடைமைக் வன்முறையுமே அவருக்கு ஒரு தடையாக அமைந்ததேயன்றி, அது அவறிம்ஸை என்னும் நீதிக் கொள்கையினால் ஏற்பட்ட தடை அல்ல.

அர்ஜுனனின் கேள்விகளுக்கு ஒன்றன்பின்

ஒன்றாகக் கிருஷ்ணர் குருவின் ஒரு கேள்விக்கு அளிக்கப்படும் பதில், அடுத்து பின்தொடர்ந்து வரக்கூடிய பல கேள்விகளைக் வகையில்தான் இருக்கும் !

கிருஷ்ணரின் அந்தத் தெய்விக தரிசன அனுபவத்தால் அர்ஜுனனின் உள்மன ஒட்டத்தின் வேகம் குறைந்தது, ஏறக்குறைய நின்றேவிட்டது எனலாம். இதன் விபரம் அத்தியாயம் பதினொன்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

கடவுளின் மனத்தில் கடம்பெற ... 'நான்', 'எனது' என்ற உடைமை உணர்வைக் களைந்துவிடுங்கள்.

அர்ஜுனனிடம் எஞ்சிநின்ற கேள்விகள் அவருக்கானது மட்டும் அல்ல, மனிதகுலத்தின் சார்பாகத் தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்பிய சந்தேகங்களே.

இந்தக் கேள்விகள், இப்பொழுது முற்றிலும் வேறுபட்ட கோணத்தைக் கொண்டிருந்தன, அவை, அவா் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றியதல்ல. கிருஷ்ணரின் விசீலருப தர்ச் நீத்தைப் பார்த்த பிறகு, அவரது கேள்விகள் அனைத்தும் தெய்விக கிருஷ்ணரின் இயல்பைப் பற்றியும், அவரை எப்படி அடைவது என்பதைப் பற்றியுமானவையாகவே இருந்தன.

இப்பொழுது கிருஷ்ணர், தாம் யார் என்பதையும், தம்மை அடைவது எப்படி என்பதையும் அர்ஜுனனிடம் விளக்குகிறார். அர்ஜுனன், தம் தர்க்க ரீதியான கேள்விகளைக் கடந்துவிட்டதைக் கிருஷ்ணர் புரிந்துகொண்டார். அர்ஜுனனிடம் கடைசியில் சந்தேகங்கள் மட்டுமே!

சந்தேகம் என்றால் அந்த நபர், குருவை ஜீரணிக்க, ஏற்றுக்கொள்ள, கிரகித்துக்கொள்ளத் குருவிடமிருந்து வரக்கூடிய எல்லா வார்த்தைகளுமே, சந்தேகங்களைத் தீர்க்கக்கூடியவைதான். குரூ தம்மைத்தாமே வெளிப்படுத்த உதவுவது சீடனின் சந்தேகங்களே! குளுவிகள் குருவை வெளிப்படுத்த அனுமதிப்பதில்லை.

வன்முறையானவைதான். வார்த்தைகளை இரண்டு பிரிக்கலாம். ஒன்று கேள்விகளை உடையது, மற்றொன்று சந்தேகங்களை உடையது.

கேள்வி என்பது வன்முறையானது, நமக்கு இது தெரியும் என்று தெரியப்படுத்துவதற்கு அல்லது நாம் உண்மை என்று நம்பும் ஒன்றை தற்காத்துக் கொள்ளுவதற்காக வெளிப்படுத்தும் செருக்கேதான் கேள்விகள்.

கேள்விகள், ஸ்தீயத்தைத் தேடுவதில்லை. ஆணால் சந்தேகங்கள், ஸ்தீயத்தைத் தேருகின்றன.

பெரும்பாலான அதைப்பற்றித் வெளிக்காட்டுவதற்காக, கேள்விகள் கேட்கிறோம். மிகப் பெரிய கேள்விகளை மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு.

ஒருவர் என்னிடம், ' ப்ரூற்மம் என்பது புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்ட, தர்க்க அறிவுக்கு எட்டாத ஒன்று' என்று மீரூர்ம ஸூத்ரம் சொல்கிறது, இது சரிதானே?' என்று கேட்டார். அவர் பீரூற்ம ஸூத்ரம் படித்திருக்கிறார் என்பதைக் காட்டுவதே இந்தக் கேள்வியின் நோக்கம். இதில் தேடுதல் இல்லை.

தேடுதல் இல்லாத சந்தேகம்தான், கேள்வி. தேடுதல் உள்ள கேள்விதான், சந்தேகம். கேள்விகள், ஸத்யத்தைத் தேடுவதில்லை. ஆனால் சந்தேகங்கள், ஸ்தீயத்தைத் தேடுகின்றன.

ணத்யத்தின் புரிதலே, அற்புதத்தின் ஆரம்பம்

நம்மில் யாருமே லத்யத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால், மனிதனால் நிறைய ஸதீயங்களைக் கையாள முடிவதில்லை. அவனால் ஓரளவு லத்யங்களையே சமாளிக்க முடிகிறது.

இன்னொருபுறம், ஆரம்பிக்கிறது. அப்போது, தான் நிற்கிற பூமி நமுவிச்சென்று கொண்டிருப்பதை உணர்கிறான். அது அவனுக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது.

ஸ்தீயத்தை நேர்மையாகக் கொடுத்தால், ஒருசிலரே கேட்கத் தயாராக இருக்கிறார்கள். மக்கள், உண்மையான ஸ்தீயத்தைக் கொடுத்த வினாடியில் பயந்துவிடுகிறார்கள். அதீயும், மக்களைப் பயமுறுத்துகிறது. அதனால், அவர்கள்

ஒரு மேற்கத்திய வேதாந்தி மிக அழகாக எழுதினார், "தயவுசெய்து பொய்களைக் ககளைந்துவிடாதீர்கள்; மனிதன் அதன் முமேலேயே வாழட்டும், அதனுடனேயே வாழட்டும்.''

ஒருவரின்பொய்களை அகற்றிவிடுவது என்பதுதாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்தப் பொய்களை அடிப்படையாகக்கொண்டே, ஒருவர் வாழ்கிறார். பொய்களை அடிப்படையாகக்கொண்டுதான் நாம் வாழ்ந்துகொண்டும் மடிந்துகொண்டும் இருக்கிறோம். பொய்கள், நமக்கு ஆறுதலளிக்கிறது. ஸத்யங்கள், நம்மை பயமுறுத்துகின்றன.

நாம் ஏன் அலங்கரித்துக்கொள்கிறோம், தலைமுடிக்குச் சாயம் பூசிக் கொள்கிறோம். மேலும் உடையலங்காரம் செய்துகொள்கிறோம் ?

நாம் ஸ்தீயத்தைப் பார்க்க விரும்புவதில்லை. நமக்கு வயதாகிறது என்ற முதுமையடைகிறோம் என்ற உண்மையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை; நாம் போலியாக நடிக்கிறோம், பொய் சொல்கிறோம்.

நாம், நமக்குள்ளேயே மறைத்து தெரிந்தபிறகும், விதவிதமான அலங்காரங்களை செய்துகொள்கிறோம் ? நாம், எதுவாகக் அது அல்ல நாம்' என்பது நமக்கே நன்றாகத் தெரியும். நாம் எண்ணற்ற ஸ்தீயத்தை வழிகளில் ஏன் இத்தனை சமுதாய நன்னடத்தைப் ஒருசிலரே பண்புகளை வைத்திருக்கிறோம் ?

சமுதாய மரியாதைக்காக நாம் நிறைய சம்பிரதாயங்களைச் செய்கிறோம். நமக்கு, நம்

ரோமையாகக் கொடுத்தால் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்.

'நன்றி' போன்ற வார்த்தைகள் கற்றுத்தரப்படுகின்றன. நாம் அவற்றை மனதாரச் சொல்ல நினைக்கின்றோமா இல்லையோ, உண்மையில் அந்தச் குழ்நிலைக்கு அவசியமா இல்லையா என்பதைப் பற்றிக்கூட பொருட்படுத்தாமல், சமூதாய தன்னடத்தைக் க் கோட்பாடுகள் சொல்கின்றன என்பதற்காக அவற்றைச் சொல்கிறோம்.

ஒருவரைப் பார்க்கும்பொழுது, உண்மையில் நாம் அதை நல்லவிதமாக உணராவிட்டாலும்கூட, 'உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி' என்று சொல்கிறோம்.

ஸ்த்யத்தின் ஒரு குறிப்பிட்ட முக்கியமான கருத்தை உங்கள் வாழ்வில் கடைபிடிக்க ஆரம்பியுங்கள், அந்த வினாடியோ அது பல அற்புதங்களை நிகழ்த்தத் தொடங்கிவிடும்.

சில நேரங்களில், நான்கூட இந்த விளையாட்டை விளையாட வேண்டியதாகிவிடும். மக்கள் என்னை முதன் முறையாகப் அவர்களுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியாதபோது, அவர்கள் என்னிடம் எந்த வார்த்தையில் பெசினாலும்சரி, நான் அவர்களிடம் சமுதாய ரீதியான மரியாதையுடன் இருப்பதுதான் எனக்கு மிகவும் இல்லாவிட்டால் அவர்கள் மனதளவில் காயப்படுவார்கள். அவர்கள், உண்மையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பதில்லை.

அதனால் நான், அவர்கள் மனத்திற்கு இனிமையானதையே வழங்கிவிடுவேன்.

அவர்கள் இன்னும் தயாராகாதபொழுது, நாம் ஏன் அவர்களது சமுதாய ரீதியான சௌகரியமான சூழ்நிலையைத் தொந்தரவு செய்ய வேண்டும் ?

நாம் உண்மையாகவே 'இனிமையாக' உணர்ந்திருந்தால், நம் முழு உடலும், நம் இருப்புமே அந்த இனிமையை வெளிப்படுத்திவிடும்.

நாம் ஒருவரைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்பதை அவருக்குப் புரியவைப்பதற்கு, 'உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி' என்று அவரிடம் சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமா என்ன ? நம்முடைய மொத்த உடலும், நம் புன்னகையும் வெளிப்படுத்தும் சந்தோஷமே அதற்குச் சான்றாக இருக்கும். நாம் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

தங்கள் உணர்ச்சிகளைத்தங்களுக்குள் மறைத்துக்கொண்டு, எந்தளவிற்குக் குறைத்து வெளிக்காட்டுகிறார்களோ, அந்தளவிற்குத்தான் ஒரு நாடோ அல்லது மக்களோ நாகரிகத்தில் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள். ஒரு நாடோ அல்லது மக்களோ தங்களை எந்தளவிற்கு நாகரிகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதுகிறார்களோ, அந்தளவிற்குக் குறைவான அளவே அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள்.

யாராவது புன்னகைசெய்தால், நாம் வெறும் உதட்டளவில் புன்னகைக்கிறோம். இது வெறும் செயற்கையான புன்னகை, இந்தப் புன்னகை கண்களைத் தொடுவதேயில்லை. நம் கண்கள் ஒருபோதும் சிரிப்பதில்லை, இதயமும் சிரிப்பதில்லை.

நம் சிரிப்பு, உதட்டில் தொடங்கி உதட்டளவிலேயே தெரிந்துகொள்ளுங்கள். நன்றாகத் உண்மையான சிரிப்பு வயிற்றிலிருந்து வரும். ஆனால் ஒருவர் வயிற்றிலிருந்து உணர்வு சிரித்தாரென்றால், மக்கள், அவர் ஏதோ தவறுசெய்துவிட்டு, சிரிப்பதாக வெறித்துப் பார்ப்பார்கள். ஸ்த்யத்தைப் போலவே சிரிப்பும் மக்களைக் கலவரப்படுத்துகிறது.

நமக்கு நன்றாகத் தெரியும், ஸதீயம் என்பது

வேறு ஏதோ ஒன்று. ஸ்தீயத்தை எதிர்கொள்ள நமக்குத் தைரியம் இல்லை. வார்த்தைகளிலும் சரி, உடல் மொழியிலும் சரி, நம்மால் அவ்வளவு ஸ்தீயமாக இருக்க முடியாது என்று நினைக்கிறோம்.

ஸ்தீயம் நேரடியாக நமக்கு ஜீவன்முக்தியை அளிக்கிறது. நம்முள் ஒரு உருமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஸ்த்யத்தின் ஒரு குறிப்பிட்ட முக்கியமான கருத்தையோ, ஸ்தீயத்தின் ஒரு சிறிய பரிமாணத்தையோ, எங்கேனும் ஒருவர் நேர்மையான முறையில் உணர்ந்துகொண்டாலோ, பிடித்துக்கொண்டாலோ, அந்த வினாடியே அது பல அற்புதங்களை நிகழ்த்தத் தொடங்கிவிடும்.

கண்கள், ஆன்மாவின் வாசல்

விவேகானந்தா் மிக அழகாகச் சொல்கிறார், 'நீங்கள் உலகிலுள்ள எல்லா நூலகங்களிலுமுள்ள மொத்தப் புத்தகங்களை மனப்பாடம் செய்தாலுமே, அது உங்களுக்கு வித்யா அஹங்காரத்தை மட்டுமே வளர்க்க உதவும்; வேறு எதற்கும் உதவாது. ஏதாவதொரு கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள் . உங்கள் இருப்புநிலைவரை எடுத்துச்சென்று கிரகித்துக்கொள்ளுங்கள், அதை அனுபவமாக்குங்கள். அந்த ஒரே ஒரு கருத்து, உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.

அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'பெரிய புராண'த்தை நாம் படித்தோமென்றால், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பார்க்கலாம். அந்த ஞானிகள், போற்றத்தக்க வகையில் பெரிதாக ஏதும் செய்திருக்க மாட்டார்கள், அதில் சில நாயன்மார்கள், மலர்களைப் பறித்துக் கடவுளுக்குப் படைத்தார்கள். அவ்வளவுதான். இருந்தாலும், அவர்கள் ஞானமடைந்தார்கள்.

நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. நாம் செய்யும் செயலில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பதே முக்கியம். கடவுளுக்கு மலர்களைச் சமாப்பிக்கும்போது, அந்தச் செயலில் நாயன்மார்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தார்கள்.

நாம்கூட கடவுளை மகிழ்விப்பதற்காக, தினமும் மலர்களைப் படைக்கிறோம். இன்னும் பலவற்றையும் செய்கிறோம். ஆனாலும் நாம் இன்னமும் குானமடையவில்லை. தோட்டத்தைப் பராமரிப்பதற்கான அல்லது மலர்களை வாங்குவதற்கான செலவுதான் அதிகரித்திருக்கும் ! நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. நாம் செய்யும் செயலில் நாயன்மார்கள் கடவுளுக்கு மலர்களைப் படைப்பதற்காக மலாகளைக் கொய்யும்போதும், அவற்றை மாலையாகத் தொடுக்கும்போதும், தங்கள் இஷ்ட தெய்வத்தை மட்டுமே நினைத்தார்கள். அவர்கள் முழுமையாகக் கடவுளை மூழ்கியிருந்தார்கள். அவர்கள் சிறிதளவும் சிதறிப் போகவில்லை.

நாம், நம் இஷ்ட தெய்வத்திற்குப் படைப்பதற்காக மலர்களைக் கொய்யும்போதும்கூட, எதையோ பற்றிச் சிந்திக்கிறோம். தினமும் தவறாது பிரார்த்தனை செய்யும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் கவனம் மீதோ அல்லது வேறு ஏதோ ஒன்றின் மீதோ இருக்கும்.

நாம் இதய பூர்வமான ஈடுபாட்டுடனிருந்தால், கடினமான வேலைகூட, ஒரு இனிமையான வழிபாடாக மாறிவிடுகிறது.

விஷ்ணு ஸ்ஹஸ்ரநாமம், லலிதா ஸல்ஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களைத் தினமும் படிக்கும் மக்களை நாம் கவனித்ததுண்டு.

முழுமையாகச் செய்தால் ஒருமணிநேரத்திற்கு மேல் ஆகக்கூடிய அந்த ஸ்லோகங்களை, உணவேதும் உண்ணாமல் விரதமிருந்து சொல்வதாகப் பெருமிதப்பட்டுக்கொள்வார்கள். அனால் ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள் எத்தனையாவது ஸ்லோகம் வருகிறோம், இன்னும் எத்தனை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அவர்கள், அந்த ஒருமணிநேரத்திற்குள் சலித்து, களைத்துவிடுகின்றனர்; அதனை ஒரு அவர்களால் தாங்கள் உச்சாடனம் செய்யும் மந்திரங்களிலோ அல்லது பிரார்த்தனையின் தாத்பரியத்திலோ உணர்வுகளை ஒருமுகப்படுத்த முடிவதேயில்லை. அவர்களிடம் நேர்மையில்லை.

நாம் இதய பூர்வமாக வழிபாட்டில் ஈடுபடாதபொழுது அது ஒரு சாதாரணமான தினசரி வேலையாக ஆகிறது. ஆனால், நாம் இதய பூர்வமான ஈடுபாட்டுடனிருந்தால், கடினமான வேலைகூட, ஒரு இனிமையான வழிபாடாக மாறிவிடுகிறது.

ஞானிகள், பிரார்த்தனையையோ, பயத்தினாலோ அல்லது பேராசையினாலோ செய்யவில்லை; செய்ய விரும்பினார்கள். அன்பினாலும், இயற்கையோடு இருந்த இணக்கத்தினாலும், இதயத்தின் இருப்பு இதைச் செய்தார்கள். அவர்களுக்கு இதைச் செய்ய வேண்டுமென்ற உந்துதல் இருந்தது.

நாம் நம் படுக்கையிலிருந்து எழுந்த வினாடியிலிருந்து, அந்த நாள் முடியும்வரை நன்றாக ஆராய்ந்து பார்த்தோமானால், அந்த முழு நாளுமே பொய்களால் நிறைந்திருக்கும்.

திறந்த மனத்துடன் இருங்கள். எது எல்லாம் வெளியே வருகிறதோ, அதுவே உங்கள் அனுபவம்.

முதலில், நம்முடைய புன்னகையே பொய்யானது. நாம் புன்னகை செய்யும்பொழுது, நம் மனத்தில் என்ன இருக்கிறது என்று அடுத்தவர் புரிந்துகொள்ளக்கூடாது என்று நினைக்கிறோம்; அதனால் நாம் மற்றவரின் கண்களை நேருக்குதேர் பார்ப்பதில்லை. ஏன் ? அவர் நம் மனத்தைப் படித்துவிடுவாரோ என்று பயப்படுகிறோம். நம் இதயம் கொதித்துக் கொண்டிருந்தாலும்கூட, நம்மால் ஒரு பெரிய புன்னகையை உதடுகளில் காட்ட முடியும். எது எப்படியானாலும், நம் கண்களால் எதையும் மறைக்க முடியாது.

நம் கண்களால் எதையுமே மறைக்க முடியாது. கண்கள், நம் ஆன்மாவிற்குள் செல்வதற்கான நுழைவாயில். எதிரில் இருக்கும் நபரின் ஆன்மாவை, நாம் நேரடியாக அவர் கண்களில் பார்க்கிறோம்.

நாம் பல நேரங்களில், அடுத்தவரின் கண்களுக்குள் பார்ப்பதேயில்லை. ஏனென்றால், நாம் பேசுவதையும் செய்யும் செயல்களையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாம் என்று நினைக்கிறோம்.

குறிப்பு - அனுபவமாகாத ஸத்யம்

மாபெரும் தத்துவ மேதையும் பேராசிரியருமான ஒருவா், என்னுடைய சில சத்சங்கங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவர் என்னைக் கேட்டார், "சுவாமிஜி, நான் ஒரே பாடத்தை பல வருடங்களாகக் கற்றுக்கொடுக்கிற போதிலும், ஒரு பதினைந்து நிமிட வகுப்பு எடுக்க வேண்டியிருந்தாலும்கூட, குறைந்தது ஒருமணிநேரமாவது, நான் என்ன பேச வேண்டும் என்பதற்கான குறிப்பு தயார்செய்ய வேண்டியுள்ளது.

ஆனால் நான் கவனித்தவரை, நீங்கள் எதையுமே தயார்செய்யாமல் தினமும் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள். மேலும் ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்களைப் பேசுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றிக்கொண்டேயிருப்பதால், உங்களுக்குக் குறிப்பெடுப்பதற்கான நேரமில்லை என்பதையும் நான் பார்க்கிறேன். ஆனாலும் எப்படி உங்களால் தொடர்ந்து பல மணி நேரங்கள் பேசமுடிகிறது ?''

அதற்கான பதில் இதுதான் : "நீங்கள் வெளிப்படுத்துவது, உங்கள் உண்மையான அனுபவமாகியிருந்தால், தயார்செய்ய வேண்டிய அவசியமே இல்லை. "

திறந்த மனத்துடன் இருங்கள். எது எல்லாம் வெளியே வருகிறதோ, அதுவே உங்கள் அனுபவம். உதாரணமாக, நம் பெயரை யாராவது கேட்டால், நாம் தயார்செய்கிறோமா? அதற்கு ஏதும் குறிப்புகள் தேவையா? நிச்சயமாக இல்லை! ஏனென்றால், அது நம் அனுபவம். நமக்கு அனுபவமாகாத ஒன்றிற்கு விளக்கம் தருவதற்குத்தான், நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் சொற்பொழிவாற்றுவதற்குத் தயார்செய்ய வேண்டியுள்ளதென்றால், அல்லது நாம் மேடையேறிப் பேச பயமாயிருக்கிறதென்றால், இதன் பொருள் நாம் பொய்களால் நிறைந்துள்ளோம். நம் மூழு இருப்புமே பொய்; நம் வாழ்வே ஒரு பொய்.

மேடையில் ஏன் நினைப்பதையெல்லாம் அப்படியே பேசி விடுவார்களோ என்று பயம். மனத்தினுள் ஓடிக்கொண்டிருப்தையெல்லாம் வெளியே கொட்டிவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

உள்ளே நிறைய அழுக்கு இருக்கிறது என்று நமக்கே தெரியும். அந்தக் குப்பைகளுள் சிலவற்றைத் தவறிக் கொட்டிவிடுமோ என்று பயப்படுகிறோம். அதனால்தான் நாம் என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும் என்று ஆயத்தம் செய்கிறோம்.

நம்மைத் தயார்செய்து கொள்ளுதல் என்பது நம் உள் மனப் பேச்சை மறைப்பதற்கான முயற்சியே! நாம் சம்பந்தமில்லாத ஒன்றைப் பேசவில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்; நாம் ஒவ்வொரு கருத்தாக எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவற்றை மறந்துவிட்டால், மனத்தில் உள்ளதை உள்ளபடியாகவே வெளியே சொல்லிவிடுவோமோ என்று பயப்படுகிறோம்.

வேறு எதையாவது வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே, நாம் நம்மைத் தயார்செய்து கொள்கிறோம். நம்மைத் தயார்செய்து கொள்ளுகல் என்பது நம் உள் மனப் பேச்சை மறைப்பதற்கான முயற்சிகான்.

பேச்சைத் தயார்செய்துகொள்ள வேண்டும் என்றால் அவர் சொல்வது எல்லாமே பொய்தான். அவர் வெறுமனே அதை மனப்பாடம் செய்து அனுபவமாக மாறவில்லை. அது, அவர் இருப்பின் அங்கமாக மாறவில்லை.

''உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, உங்கள் அருகாமையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,' என்பது போன்ற இத்தனைக் கனிவான வார்த்தைகளை நாம் ஏன் தயார்செய்து கொள்கிறோம்.

பிறகு சிறிது நேரம் கழித்து, ''எனக்கு முக்கியமான சில வேலைகள் இருப்பதால், இப்போது நான் போயாக வேண்டியுள்ளது; இன்னொரு நாள் சந்திக்கிறேன்,'' என்று சொல்கிறோம். ஏன் இது போன்றவற்றைச் சொல்ல வேண்டும் ? உண்மையிலேயே நாம் அவர் அருகாமையை அருமையாக உணர்ந்தோமென்றால், நம்முடைய முழு இருப்புமே, அதை வெளிப்படுத்தும். நம் உடலே, அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிடும். நாம் அதை, வார்த்தைகளில் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது.

ஒரு சின்ன கதை:

ஒரு ஆசிரியை, தங்கள் பள்ளியைச் சுற்றிக் காண்பிப்பதற்காக ஒரு விருந்தினரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அந்த வழியாகச் சென்ற மாணவர்கள் அந்த ஆசிரியருக்கு வணக்கம் தெரிவித்தார்கள்.

அந்த ஆசிரியை, மெதுவாகத் தலையசைத்து, மெதுவான குரலில், 'உங்களுக்கும் அதே' (Same to you) என்று முணுமுணுத்தார்.

விருந்தினர் கேட்டார், ''நீங்கள் ஒருமுறைகூட அவர்களைத் திரும்ப வாழ்த்தவில்லையே, 'உங்களுக்கும் அதே' என்று சொல்கிறீர்களே, ஏன் ?''

அந்த ஆசிரியை சொன்னார், ''நான் திரும்ப வாழ்த்தியிருக்கிறேன். அவர்கள் மனத்தில் உண்மையாக என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும்.''

அதனால், யாருக்கு உங்கள் ஒளிந்திருக்கும் எண்ணங்களைப் பற்றி விழிப்புடனிருங்கள். அவர்கள் 'Same to you' என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள். சிறிது எச்சரிக்கையுடனி(ருங்கள் !

நாம் உண்மையில் நிலைபெற்றிருந்தால், நம் உள்மனப் பேச்சு மறைந்துவிடும், நாம் யோசிக்க வேண்டிய அவசியமேயில்லை

பல நேரங்களில், நாம் எப்பொழுது, எதைப் பேச வேண்டும் என்பதைத் தயார்செய்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது.

ஆனால் நாம் உண்மையில் நிலைபெற்றிருந்தால், நம் உள்மனப் பேச்சு மறைந்துவிடும், நம் சிந்தனை மறைந்துவிடும், நாம் யோசிக்க வேண்டிய அவசியமேயில்லை, பேசிவிட்டு அமைதியாக வேண்டியதுதான். நாம் ஏன் தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும் ?

ஒரு மேடைப்பேச்சிற்கோ அல்லது சொற்பொழிவிற்கோ மட்டுமல்ல, நண்பர்களைப் பார்க்கும்போதும் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் போதும்கூட, நாம் திட்டமிடுகிரோம், வார்த்தைகளை ஒத்திகை பார்க்கிறோம்.

'எப்படி ஆரம்பிக்க வேண்டும், எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும், மேலும் விஷயத்தை எப்படித் தொடரவேண்டும்' என்பதுபோன்ற பல விஷயங்களை ஒத்திகை பார்க்கிரோம். நாம், முழுமையாக ஒருமுறை இறுதி ஒத்திகை பார்த்துவிடுகிறோம்.

ஒருவேளை, வேறு ஆரம்பித்து விட்டால், அவ்வளவுதான், நாம் தொலைந்தோம்; அடுத்து என்ன சொல்வதென்றே நமக்குத் தெரியாது. ஏனென்றால், நமக்கு எது தெரியுமோ, நாம் எதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தோமோ, அதை மட்டுமே முழுமையாக ஒத்திகை பார்த்திருப்போம்.

நம் மேலதிகாரியிடம் பேசுவதற்கு, நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும், அது சரியானதே! அவரிடம் பேசும்பொமுது நாம் கனிவுடன் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் வேலையை இழந்துவிடுவோம். மேலும் சமூதாய விளையாட்டில், அதுவும் ஒரு பகுதியாகிவிட்டதென்பதால், அதை ஏற்றுக்கொள்வோம்!

ஆனால், நிலைமை அதைவிட மிக மோசமாக உள்ளது. நாம் தொடர்ந்து, நம் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உரையாட வேண்டியவற்றைக்கூட தயார்செய்கிறோம்.

நாம் தயார்செய்ய வேண்டியிருக்கிறது என்றாலே, அது பொய்தான்.

நாம் அதை, உண்மை என்பது போன்றே சொன்னாலும்கூட, அது பொய்தான்.

உண்மை வேறு.

நாம் உண்மைகளைப் பல உள் அர்த்தங்களுடன் சொல்ல முடியும். அதில் பெரும்பாலானவை பொய்களாகத்தான் இருக்கும். ஒரு பொய்யை சிறு ஒப்பனைசெய்து, அலங்கரித்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முடியும்.

மஹாபாரதத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் யுத்தம் மூண்டபோது, யுத்தத்தின் ஒரு கட்டத்தில், துரோணர் கௌரவா்களின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

யுத்தப் பாதையிலிருந்து துரோணாச்சாரியரை அகற்றாமல், அவர் தலைமை தாங்கும் கௌரவப் படையை வீழ்த்த இயலாது என்பதையும், துரோணாச்சாரியாரின் மன அமைதியைக் குலைக்காமல், அவரைக் கொல்ல முடியாது என்பதையும், துரோணாச்சாரியரை நிலைதடுமாறச் செய்ய ஒரேவழி, 'அவரது மகன் இறந்துவிட்டார்' என்ற செய்தியை அவருக்கு எட்டச்செய்வதுதான் என்பதையும் கிருஷ்ணர் நன்கறிவார்.

துரோணாச்சாரியரைக் கொன்றால் மட்டுமே, கௌரவப் படையை வெல்ல முடியும். துரோணாச்சாரியரைக் வெல்லுமென்றால், அவரது மகன் அசுவத்தாமன் இறக்க வேண்டும் அல்லது அசுவத்தாமன் இறந்துவிட்டார்' என்ற செய்தி அவருக்கு எட்ட வேண்டும். ஏனென்றால் துரோணரின் முழு சக்தியும் அவரது மகன் அசுவத்தாமனை நோக்கியே இருந்தது. துரோணச்சாரியாருக்கு, தம் மகனைத் தவிர வேறு யாருடனும் பந்தமில்லை. கிருஷ்ணருக்கு, துரோணரிடம் சென்று அசுவத்தாமன் இறந்துவிட்டார் என்று சொல்ல ஒருவர் தேவைப்பட்டார்.

யாரோ ஒருவர் சென்று, 'உங்கள் மகன் கொல்லப்பட்டான்' என்று சொன்னால் நிச்சயம் துரோணர் நம்பமாட்டார். ஏனென்றால், அசுவத்தாமனை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது. ஆகவே, அசுவத்தாமனின் மரணத்தை அறிவிக்க, பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரைக் கிருஷ்ணர் தேர்ந்தெடுத்தார். யுதிஷ்டிரர் சத்தியங்களை மட்டுமே பேசுவார். அதனால் எல்லோரும் அவரை சத்தியவான் என்று நம்பினார்கள்.

துரோணாச்சாரியாரின் மகன் 'அசுவத்தாமன் இறந்து விட்டான்' என்று சொல்லுமாறு யுதிஷ்டிரரைக் கிருஷ்ணர் கேட்டுக்கொண்டார். யுதிஷ்டிரர், தம்மால் பொய்சொல்ல முடியாது என்றும், அசுவத்தாமன் உயிருடனிருக்கையில், தாம் எப்படி அவர் இறந்துவிட்டதாகச் சொல்ல முடியும் என்றும் வினவினார்.

கிருஷ்ணர் சொன்னார், ''சரி பரவாயில்லை. அசுவத்தாமன் என்ற பெயர் கொண்ட இந்த யானையை உன் சகோதரன் பீமன் கொல்வான். அதன்பிறகு, 'இறந்துவிட்டான், அசுவத்தாமன் எனும் யானை' என்று நீ சொல். நீ 'யானை' என்கிற வார்த்தையைச் சொல்லும்பொழுது, அந்த வார்த்தை, பிறர் காதில்விழா வண்ணம், நான் என் சங்கை ஒலிக்கச்செய்கிறேன். இது, நீ பொய் சொன்னதாக ஆகாது; 'பொய் பேசாத தர்மவான்' என்ற உன் பெயரையும் காப்பாற்றும் ; அதேசமயம் எந்த வேலையை முடிக்க வேண்டுமோ அந்த வேலையையும் செய்துமுடித்துவிடும், '' என்று சொன்னார்.

நாம் சத்தியத்தைத்தான் பேசப் போகிறோம் என்று யுதிஷ்டிரரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அவர், ''இறந்துவிட்டான், அசுவத்தாமன் எனும் யானை," என்று அறிவித்தார். யானை என்ற வார்த்தையைச் சொல்லும்போது, கிருஷ்ணர், தம் சங்கை முழக்கி, யாருக்கும் அந்த வார்த்தை கேட்காமல் பார்த்துக்கொண்டார்.

துரோணர், யுதிஷ்டிரரை நம்பினார். அது தவிர, சங்கை முழக்குவது வெற்றியின் அடையாளம். முழக்கியவுடன், அசுவத்தாமன் இறந்ததாக எண்ணி, அவர் ஆழ்ந்த மனச்சோர்வில் வீழ்ந்தார்; சக்தி இழந்தவரானார். தம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, தியானத்தில் ஆழ்ந்தார். சண்டையிலிருந்து விலகிவிட்ட துரோணரை, பாண்டவர்களின் தலைமை சேனாதிபதியான திருஷ்டத்யும்னன் கொன்றார்.

மகனின் மரணம் மிகுந்த மனவலியைத் தரக்கூடியது. மகன் இறக்கும்பொழுது, தந்தையினுடைய இருப்பின் ஒரு பகுதியும் இறக்கிறது. துரோணாச்சாரியருக்கும்கூட அதைக் கையாள்வது பெரிய விஷயமாக இருந்தது. இந்தவிதத்தில்தான், துரோணாச்சாரியரை வீழ்த்தி, கௌரவர்களின் வீழ்ச்சிக்குக் கிருஷ்ணர் வழிவகுத்தார்.

இந்தச் சம்பவத்தில், யுதிஷ்டிரா் பொய் சொல்லவில்லை; அவர் உண்மையைத்தான் பேசினார். அனாலும் அவர் அங்கு சத்தியத்தை உரைக்கவில்லை. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. உண்மையெல்லாம் சத்தியமாகிவிடாது.

நேர்மையின் அரசராகக் கருதப்பட்ட தா்மராஜர் பொய் பேசினாலும், அவர் சத்தியத்தைப் பேசவில்லை.

கதையின் அடுத்த பகுதி இவ்வாறாகச் செல்கிறது.

சத்தியத்தைப் பேசும் அவரின் இயல்பினால் தர்மராஜாவின் கால்கள் தொட்டதில்லை என்றும், மேலும், அவருடைய ரதம்கூட தரையைத் தொட்டதில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இங்கு இது நேரடியான ஒரு உண்மை அல்ல.

ஒருவர் பரவசத்தில், போானந்தத்தில் இருக்கும்போது, அவர் இலகுவாக இருப்பதுபோல், பறப்பதுபோல் உணர்கிறார்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். பேரானந்தத்தில் இருக்கும்போது, அவா் இலகுவாக இருப்பதுபோல், பறப்பதுபோல் உணர்கிறார். உண்மையில், தா்மராஜரின் உடல், பூமியில்தான் நடக்கிறது. ஆனால், பூமியின் மேல் பறப்பதுபோல், அவ்வளவு இலகுவாக உணர்ந்தார் தாமராஜர். அது, எல்லைகளே அற்ற ஒரு விழிப்புணர்வு அனுபவம்.

''இறந்துவிட்டான், அசுவத்தாமன் எனும் யானை,' என்ற அவர் சொன்ன வினாடியே, அது ஒரு உண்மையேயானாலும்கூட, அதுவரை பூமியைத் தொடாது நடந்து கொண்டிருந்த அவரது பாதங்கள் பூமியைத் தொட்டன. பூமிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அவரது ரதம், பூமியைத் தொட்டது என்று வியாஸர் எழுதுகிறார்.

அவர் தம் எல்லையற்ற விழிப்புணர்வு நிலையை இழந்து, பூமியைத் தொட்டார். சத்தியம் தொலைந்தது. அவர் நேர்மையை இழந்தார்.

நம் நிஜ வாழ்வில் ஏன் இவ்வளவு பொய்கள் சொல்கிறோம்? ஒரு கணவர், தம் மனைவியிடம், தாம் அவரைக் காதலிப்பதாக ஏன் அடிக்கடி சொல்கிறார். அவர், தம் மனைவியைக் காதலிப்பதாக இருந்தால், அவருடைய உடல் மொழியே அதை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அதை வார்த்தையில் சொல்லும்போது, உண்மையில், தம் மனைவியிடம் தாம் அன்பு செலுத்த வேண்டும் என்பதைத் தமக்குத்தாமே நினைவுபடுத்திக்கொள்கிறார், அவ்வளவுதான்!

நாம் நிறைய வார்த்தைகளைப் பேசினாலே, நாம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறோம் உண்மையைப் பேசவில்லை. மிகையாக அழகு செய்வதின் மூலம், நாம் பொய்களை மறைக்கிறோம்.

சத்தியத்தைப் பேசுவது என்பது ஆபத்தானது. சத்தியங்களைப் பேசினால், ஞானிகள் மத்தியில் இடம் கிடைக்கும். ஆனால் மற்ற மக்கள் மத்தியில் இடம் கிடைக்காது. அது அவ்வளவு மிகவும் அபாயகரமானது.

குருவின் வார்த்தை உபதேசமா ? நுட்பமா ?

சத்யம், தர்க்க ரீதியான கேள்விகளையும் வாதங்களையும் கடந்து நிலைத்து நிற்கக்கூடியது. சத்யம், தர்க்க ரீதியான கேள்விகளையும் வாதங்களையும் நிற்கக்கூடியது. அது தர்க்க ரீதியான அலசல்களையும் தாக்குப்பிடித்து நிலைத்து நிற்கிறது.

ஒரு பொருளை, அது தூய்மையான தங்கத்தில் செய்யப்பட்டதுதானா என்று அறிந்துகொள்ள வேண்டுமானால், அதை அமிலத்தில் போட்டு சோதிக்கிறார்கள். அமிலப் பரிசோதனை.

தேவைப்படுகிறது. அதேபோல், லத்யத்தைப் பரிசோதிக்கவும் தா்க்க ஆராய்ச்சி என்னும் அமிலப் பரிசோதனை தேவைப்படுகிறது.

லத்யத்தின் முன் நம் தர்க்கம், எளிதில் வீழ்ந்து தோற்றுவிடும். ஏதோ ஒன்றின் முன் நம் தர்க்கம் வீழ்ந்தால், நீங்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ளலாம், அது ஸ்தீயமே என்று!

எது ஒன்று ஸ்தீயமோ அது தர்க்கத்தை அழித்துவிடும்; இதன் பொருள், நம் தர்க்கம் களைத்துப்போய் தானாகவே விழுந்துவிடும்.

இறுதி வேண்டும். எந்தத் தர்க்க ரீதியான அமிலப் பரிசோதனையில் இட்டாலும், அது அனைத்தையும் தாங்க வேண்டும்.

கேள்விகேட்கும் மன நிலையில் சீடர் இருந்தால், நிரூபித்தாக வேண்டும். கேள்விகேட்கும் சீடரின் பரிசோதனைக்கும், குரு தயாராக இருக்க வேண்டும். அது ஒரு பெருஞ்சுமை

சீடர் சந்தேகத்தில் இருந்தால், குரு ஸ்தீயங்களைத் திறந்து வைப்பார். அங்கு அப்பட்டமான

குருவின் வார்த்தைகள் வெறும் உட்பதேசமா அல்லது உணர்வுமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த நுட்பமா என்பதை சீடரின் மனநிலைதான் தீர்மானிக்கிறது.

சொல்லப்படும். சந்தேகங்கள் இருக்கும் மனத்திற்கு, எந்த ஒரு லகுயத்தையும் கற்பிக்க முடியும், விளக்க முடியும். கேள்விகேட்கும் மனத்திற்கு, எதையுமே விளக்க முடியாது.

அவர் ஸ்தீயங்களை வார்த்தைகளால் மறைக்க மாட்டார்; வார்த்தைகளால் விளையாட மாட்டார்.

குருவின் உணர்வுமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த நுட்பமா என்பதை சீடரின் மனநிலைதான் தீர்மானிக்கிறது. சீடர் முழுமையாக இசைவாகயிருந்தால், அவருக்கு குரூவால் உதவ முடியும். குரூ ஞானமடைந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை!

ஒரு சின்ன கதை

யமுனை நதிக்கரையில் வாழ்ந்து வந்த ஒரு பண்டிதர், கிருஷ்ணரை நியமத்துடன் பூஜைசெய்து, நாள்தோறும் வழிபட்டு வந்தார்.

அவருடைய பூஜைக்கான அபிஷேகப் பால்கொண்டு வரும் பெண்மணி, ஒருநாள் வரவில்லை.

மறுநாள் அந்தப் பெண்மணி வந்தவுடன், "நீ ஏன் நேற்று வரவில்லை ?' என்று பண்டிதர் கேட்டார்.

சீடரின் நம்பிக்கை, எப்படிப்பட்ட குடையையும் மீறி அவரை வெற்றிபெறச் செய்யும்.

அந்தப் பெண்மணியோ, "முதல் நாள் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், என்னால் ஆற்றைக் கடக்க முடியவில்லை,'' என்று பதில் சொன்னார்.

உடனே பண்டிதா் அவரிடம், 'கிருஷ்ணரின் பெயரை உச்சாடனம் செய்து, ஸம்ஸார ஸாகரம் என்னும் பிறவிப்பெருங்கடலையே பலர் கடந்துள்ளார்கள். உன்னால் ஒரு சிறு ஆற்றைக் கடக்க முடியவில்லையா! அவர் பெயரை உச்சாடனம் செய்துகொண்டே ஆற்றைக் கடந்து வா,'' என்றார்.

ஒரு பண்டிதருக்கே உரிய இலக்கணங்களுடன், தம்முடைய வறண்ட அறிவைப் பெருமையுடன் பேசி, அந்தப் பெண்மணியின் மனத்தில், தம்மைப் பற்றியதொரு உயர்ந்த ஏற்ப டுத்து வ தற்காகவு ம் , அதேசமயம், அவர் வராமல் இருந்ததைக் டிப்பதற்காகவுமே சொன்னார்.

அன்றிலிருந்து அந்தப் பெண்மணி சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். சில நாள்கள் கழித்து, பலத்த மழையின் காரணமாக ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் அந்தப் பெண்மணி சரியான நேரத்திற்கு வந்து பண்டிதரை ஆச்சரியத்திற்குள்ளாக்கினார். அவர் அந்தப் பெண்ணிடம், ''உன்னால் எப்படி ஆற்றைக் கடக்க முடிந்தது ?'' என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண்மணி, 'தங்களின் வழிகாட்டுதலின்படிதான், குருவே! தாங்கள் சொன்னபடி, கிருஷ்ணரின் நாமத்தை உச்சாடனம் செய்தபடி, நீரின் மேல் நடந்து வந்தேன்!''என்றார்.

பண்டிதரால் இதை நம்ப முடியவில்லை. அவர், அந்தப் பெண்மணி அதை நிரூபிக்க வேண்டும் என்றார். அந்தப் பெண்மணியும் அதற்கு ஒப்புக்கொண்டார். அவர்கள் இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள்.

அந்தப் பெண்மணி, கிருஷ்ணரின் பெயரை உச்சாடனம் செய்துகொண்டே தண்ணீரின் மேல் நடந்து சென்றார். அவர் மிகவும் எளிதாக ஆற்றைக் கடந்து விட்டார்.

அங்கு நடந்த நிகழ்வைப் பண்டிதரால் நம்ப முடியவில்லை. 'அறியாமையிலிருக்கும் ஒரு பெண், நான் சொல்லிக்கொடுத்ததைக் கேட்டு, தண்ணீரின் மேல் நடக்கமுடிகிறது. ஒரு மாபெரும் பண்டிதரான நான் ஏன் நடக்க முடியாது ?' என்று அவர் நினைத்தார்.

அவர் கிருஷ்ணரின் நாமத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். இருந்தாலும் தண்ணீரை நனையாமல் இருக்க தற்காக, அதைத் தூக்கிப்பிடித்தபடியே தண்ணீருக்குள் இறங்கினார், அப்படியே முழ்கியே விட்டார்.

பால் விற்கும் பெண்ணிடம் சொன்னதில், அவருக்கே இல்லை. காட்டிக்கொள்வதற்காகத்தான் அவ்வாறு சொன்னார்.

ஆனால் மனநிலையில்

கேட்பவர் உள்வாங்கும் மனநிலையில் இருந்தால், குரு சொல்லும் சாதாரண வார்த்தைகள்கூட, சீடரின் வளர்ச்சீக்கான ஒரு நுட்பமே!

சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகள்கூட, அவர் வளர்ச்சிக்கான ஒரு நுட்பமாக அமைந்தது. அது அவருக்கு நன்மையையே தந்தது.

குரு ஞானம் அடையாதவராக இருந்தாலும், அவர் சொல்லும் வார்த்தைகளில் அவருக்கே அபைவமில்லை என்றாலும்கூட, சீடரின் நம்பிக்கை, எப்படிப்பட்ட தடையையும் மீறி அவரை வெற்றிபெறச் செய்யும்.

நம்பிக்கையின் வேர், சந்தேகம்

சந்தேகமும் நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சந்தேகம்

சந்தேகமும் நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

இல்லாமல் நம்பிக்கை இருக்க முடியாது.

பெரும்பான்மையான மக்கள் என்னிடம் ''ஸ்வாமிஜி, தாங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம். ஆனாலும் எங்களுக்குள் சந்தேகங்கள் எப்படிக்கடப்பது?''என்று கேட்பதுண்டு. ''சந்தேகம் இருந்தால் பரவாயில்லை,'' என்று நான் அவர்களுக்குச் சொல்வதுண்டு.

சீடரின் சந்தேகங்கள் தீர்க்கப்படும் பொழுது, நம்பிக்கை அழ்ப்படுகிறது. அப்போது, குருவின் அருளால், புதிய புரிதலுக்கான வெளிப்படுகிறது, உடனே நம்பிக்கை

அடுக்கு மீட்கப்படுகிறது

இறுதியாக அந்தச் சீடர், நம்பிக்கை - சந்தேகம் என்ற சுழலை, செயல்முறையைக் கடந்துசெல்கிறார். அவர் லத்யத்தை அடைகிறார். இந்த நிலையை அடையும்வரை மீண்டும் மீண்டும் சந்தேகமும் நம்பிக்கையும் அவருக்குள் எழுவது வழக்கமே.

இப்போது, அர்ஜுனன் ஒரு புரிதலுக்கு வந்துவிட்டார். அவர், தமக்கு நேரடியாகக் கிடைத்த முதலாவது ஆன்மிக அனுபவத்திற்குப் பிறகு, கேள்விகேட்கும் மனநிலையைக் கடந்து, சந்தேகம் என்ற நிலையை அடைந்துவிட்டார். இதற்கு மேல் அவரிடம், கேள்விகள் ஏதும் இல்லை. அதற்குப்பின் அவர், தமக்கு எது நன்மை தரும் என்று கேட்கவில்லை. அதுபோன்ற சுய லாபக் கணக்குகள் மறைந்துவிட்டன. இதற்கு மேல், அவரிடம், கிம் தத் பீரூற்ம கிமத்யாதுமம் கிம் காம புருந்ஷாத்தம (8–1) பிரம்மன் என்றால் என்ன? நான் என்றால் என்ன? எது கடமை? - போன்ற கேள்விகள் அவருக்குள் இல்லை.

முன்பு அவர் வார்த்தைகளால் விளையாடிக் கொண்டிருந்தார். இப்போது எல்லாம் மறைந்து விட்டது. முதல் அத்தியாயத்தில், கிருஷ்ணர், முழுமையாக அமைதியில் இருந்தார். அர்ஜுனன் அதிகமாகப் பேசினார். அவர் நேர்மையைப் பற்றி, பழமையான வீத நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டினார். இப்பொழுது இந்த அத்தியாயத்தில், அர்ஜுனன் முழுமையாக அமைதியில் இருந்தார்.

பூமி கிரகத்தில் அவதரிக்கும் ஒவ்வொரு குருவும் சந்திக்கும் பிரச்சினை இதுவே.

அரைகுறை அஞ்ஞானத்தில் மாணவரைவிட, வெகுளித்தனமான ஒரு மாணவர் சிறந்தவர்.

ஒரு புதிய, ஏதும் தெரியாத மாணவர் தம் குருவை உடனடியாக உள்கிரகித்துக்கொள்கிறார்.

ஒரு சின்ன கதை

ஒரு இசை வித்வானிடம் சென்ற ஒரு மாணவர், ''குரூவி, நான் ஏற்கெனவே நான்காண்டுகளாக இசை பயின்றுவருகிறேன். இப்போது நான் உங்களிடம் இசை பயில விரும்புகிறேன். நான் இசையைச் சிறப்பாகக் கற்க எவ்வளவு காலம் ஆகும் ?'' என்று கேட்டார்.

ஆசிரியா், ''ஆறு ஆண்டுகள் ஆகலாம்,'' என்றார்.

அப்போது இன்னொரு நபர் குட்டார், "நான் இரண்டு ஆண்டுகளாகத்தான் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்,'' என்று கேட்டார். உடனே ஆசிரியர், ''இரண்டு ஆண்டுகள்,'' என்று சொன்னார்.

மூன்றாவதாக இருந்த நபர், ''குரூவை, எனக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இப்போதுதான் முதன் முதலாகக் கற்க வந்திருக்கிறேன். நான் இசையைக் கற்க எவ்வளவு காலம் ஆகும்?'' என்று கேட்டார்.

அசிரியர், ''உனக்குக் காலமே தேவைப்படாது, உன்னால் உடனடியாக என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியும்,'' என்று சொன்னார்.

ஒரு புதிய, ஏதும் தெரியாத மாணவர் தம் குருவை உடனடியாக உள்கிரகித்துக்கொள்கிறார். அவர் தம் குருவிடமிருந்து சுலபமாகப் பெற்றுக்கொள்கிறார். அவர் நேரடியாக தம் இருப்பிற்குள் குருவை உள்வாங்கிக்கொள்கிறார். ஆனால், அரைகுறையாகக் கற்றுக்கொண்டு வருபவர்களைக் கற்றவற்றையெல்லாம் குருவானவர் நீக்க வேண்டியிருக்கிறது.

இப்புவியில் அவதரிக்கும் எழுதிவைக்கப்பட்ட அதே ஞானத்தைத்தான் எடுத்துவருகிறார்கள். ஆனால் அவர்கள், அந்த ஞானத்தால் நிரம்பிய வாழ்வையும் சேர்த்து எடுத்துவருகிறார்கள்.

உண்மை தேடுதலுக்கும் போலி தேடுதலுக்கும் உள்ள வித்தியாசம்

நாம் புத்தகத்தில் படிப்பது வெறும் வார்த்தைகள்தான்! அவை, படிப்பவரிடம் எந்தவிதமான உணர்வுமாற்றத்தையும் ஏற்படுத்தாது. எந்தப் புத்தகமும் நமக்கு லத்யத்தைத் தர முடியாது. அவை அதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல.

ஒரு சின்ன கதை

இராமகிருஷ்ண புத்தகத்திற்கான சொல்ல, அதை ஒரு சீடா் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில், "குருவை, தயவுசெய்து மீண்டும் அதைச் சொல்லுங்கள், '' என்று சீடர் கேட்டார். குரு, அந்த வாக்கியத்தை மீண்டும் சொன்னார்.

மாணவர் எழுதுவதை நிறுத்திவிட்டு,

'' குரூவை, இந்த வாக்கியம் நீங்கள் சென்ற அத்தியாயத்தில் சொன்ன வாக்கியத்திற்கு முரண்பாடாக இருக்கிறதே. இது குழப்பமாக இருக்கிறது,'' என்று கேட்டார்.

இராமகிருஷ்ணர் அவரிடம். ''கவலைப்படாதே, சீடா் சமாதானமடையவில்லை.

நோக்கம். ''இந்தப் உண்மைகளை, செய்திகளை வழங்குவது அல்ல; உணர்வுமாற்றத்தை ஏற்படுத்துவதும்தான்.

இது, ஒரு வாழும் ஞானியிடம் செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தை மக்களிடம் விளக்கினார்.

குருவின் வார்த்தைகள், உண்மைகளோடு சம்பந்தப்பட்டவை அல்ல; அவை ஸ்தீயங்கள்!

உண்மைகள் என்பது பதிவேடு; ஸ்தீயங்கள் என்பது எதிரொலி!

இறுதி எல்லாப் புத்தகங்களையும் பொறுத்தவரை இதுதான் அதீயம். இப்போது பிரச்சினை என்னவென்றால், சில மக்கள் புத்தகங்களையே இறுதியான சான்றாக எடுத்துக்கொள்கிறார்கள். அவா்கள், தங்கள் பட்டறிவைச் சான்றாக எடுத்துக்கொள்கிறார்கள். ஸ்தீயத்தை வாழ்வதற்குப் பதிலாக, புத்தகத்தையே அதிகார பூர்வமான லக்யமாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள், தாங்கள் படித்த புத்தகங்களையும் வீத நூல்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, குருவின் வார்த்தைகளுக்கு ஆதாரம் கேட்கிறார்கள்.

வார்த்தைகளின் அர்த்தமே முக்கியமான பிரச்சினை. உதாரணமாக குரு, 'ஆத்மன்' என்ற வார்த்தையைச் சொல்கிறாரென்றால், அது, ஸம்ஸ்க்ருத அகராதியிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால் நாம், ஆத்மன் என்ற வார்த்தையை நம்முடைய ஆக்ஸ்போர்டு அகராதியில் தேடுகிறோம். இயல்பாகவே, பிரச்சினை எழு ஆரம்பித்துவிடுகிறது.

இந்நிலையில் நாம் லாந்தித்யத்தில் இருந்தால், நாம் அவரிடம் நம்முடைய சந்தேகங்களை உடனடியாகத் தெளிவுப்படுத்திக்கொள்ள நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை, நம் முகத்தைப் பார்த்தே குரு தெரிந்துகொள்வார். தெளிவாகப் புரியும்வரை, அவர் மேலும் விளக்கமளிப்பார்.

நம் தேடல் தீவிரமானதாக இருந்தால், வாழும் குருவுடன் ஒரு ஆழமான இணைப்பை நாம் உணர்வோம்.

புத்தகம் படிக்கும்பொழுது நாம், நாம், நம் மனத்துடன்தான் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் நம்மில் பலர், வாழும் குருவின் வார்த்தைகளைக் கவனித்துக் கேட்பதைவிட, உணர்கிறோம். இதுதான் உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்கும், போலியான தேடுதல் உள்ளவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.

நம்முடைய தேடல் உண்மையானதாக இருந்தால், அது ஒரு உண்மையான உந்துதலாக இருந்தால், நிச்சயம் நாம் ஒரு வாழும் ஞானியைத்தான் தேடிச்செல்வோம்.

நம் தேடல், நேரத்தைக் கழிப்பதற்காகவும் பொழுதுபோக்குவதற்காகவும் இருந்தால், நாம் புத்தகங்களுடனும் பழைய குருவின்புகைப்படத்துடனும் சௌகரியமாக உணர்வோம். நம் தேடல் தீவிரமானதாக இருந்தால், வாழும் குருவுடன் ஒரு ஆழமான இணைப்பை நாம் உணர்வோம்.

இருண்ட காட்டை, ஒரு சிறு விளக்கு ஒறலம் ஆராய முடியுமா?

வியாஸ பகவானின் புதல்வரும் மாமுனிவரும் இளைஞருமான சுகப்பிரம்மா், தம்மைவிட வயதில் மூத்த மாமூனிவர்களுக்கு, பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை, குறிப்பாக கிருஷ்ணரின் அவதாரத்தை விளக்கும் ஸ்ரீமத் பாகவத புராணத்தைச் சொல்கிறார்.

பாகவதக் கதையைச் சொல்லி முடித்தவுடன், அங்கு கூடியிருந்த ரிஷ்களுள் ஒருவர் கண்ணீர் கசிய, சுகப்பிரம்மரின் பாதத்தில் விழுந்தார். அவர் உணர்ச்சி பொங்க, "தயவுசெய்து இவற்றை எழுத்தில் வடித்துவிடாதீா்கள். எழுத்துக்களில் வடிக்கும்பொழுது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஸ்த்யத்தின் ஆழமும், மேலான அழகும் தொலைந்துவிடும். பாகவதக் கதையை நீங்கள் விவரிக்கும்போது நிகழ்ந்த சக்தி ஒட்டத்தையும், வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த உயிர்ப்பையும், நீங்கள் சொல்வதை நேரில் கவனித்ததன் மூலம் எங்கள் ஆன்மா அடைந்த அனுபவத்தையும், ஒருவர் புத்தகத்தைப் படிப்பதால் அடைந்துவிட முடியாது! இங்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. குருவின் நேரடி உபதேசத்தில் நிறைந்திருக்கும் அத்யத்தையும், அதன் சக்தியையும் புத்தக வார்த்தைகள் முழுவதுமாகக் குறைத்துவிடும்,'' என்றார்.

சுகர், ஒப்புக்கொள்கிறேன். நாம் இதைப் புத்தகமாக எழுதி வைக்க வேண்டும். இதிலுள்ள வார்த்தைகள், படிப்போரின் சிறந்த ஆதாரமாகவும், உந்துசக்தியாகவும் அமையும். இந்த வார்த்தைகளிலுள்ள லக்யத்தை அனுபவமாகப் பெற அவர்களைத் தூண்டும்!' என்று விளக்கினார்.

ஸத்யம் என்பது உருவகம். அது ஒரு தகவல் அல்ல. அது காலத்தையும் இடத்தையும் தாண்டியது.

தகவல்கள், சரித்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட கடந்தகால நிகழ்ச்சிகளின் ஒரு காலஅட்டவணை.

மேற்கத்திய மக்கள், எப்போதுமே தகவல்கள், காலஅட்டவணை, சரித்திரக் குறிப்பு மற்றும் ஏதாவது ஒருவகையில் நிரூபிக்கக்கூடிய ஒன்றின்மேல்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அறிவியலைப் பட்டறிவின் மூலமே நிரூபிக்க வேண்டும். எந்த விஷயத்தையும் உலகத்திற்குத் தருவதற்குமுன், அவர்கள் அதைத் தர்க்க ரீதியாக நிரூபித்தாக வேண்டும்.

ஆனால் கிழக்கத்திய மக்களின் கவனம் ஸத்யத்தின் மேல் குவிந்துள்ளது. ஸ்கீயம் என்பது உருவகம். அது ஒரு தகவல் அல்ல. அது காலத்தையும் இடத்தையும் தாண்டியது. நேரடியான தர்க்கத்தினால் நிரூபிக்கபட முடியாதது. தர்க்க ரீதியாக லத்யத்தை நிரூபிக்க முடியுமென்றால், தா்க்கம் ஸத்யத்தைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும். நல்லவேளையாக, அதற்கான வாய்ப்பே இல்லை.

பகவான் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் வாழ்வைப்பற்றி விவரிக்கும் இராமாயண இதிகாசத்தில், அரக்கா்களின் அரசனான இராவணன், இராமரின் மனைவி சீதையைக் கடத்திச்சென்றுவிடுகிறான். இராமர், சீதையை மீட்க வன இராஜ்ஜியமான கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரங்களின் உதவியை நாடுகிறார். இந்த இராஜ்ஜியத்தை வானர சகோதரர்களுள் ஒருவரான சுக்ரீவன், அனுமனின் உதவியுடன் ஆண்டுவந்தார்.

வால்மீகி, வானரங்களின் தொகையைச் சொல்கிறார். உண்மையில் பார்த்தோமானால், கிஷ்கிந்தையில் அத்தனை லட்சம் குரங்குகள் இருப்பதற்கான இடமே இல்லை. அவர், ஸ்தீயத்தின் அடிப்படையில் இந்த மிகப்பெரிய எண்ணிக்கையை உருவகப்படுத்தப்பட்ட லத்யுமே. அவர், இந்த எண்ணிக்கையின் மூலம், வானரங்களின் வலிமையின் அளவைச் சொல்கிறார். அவர் எந்த வலிமையைப் பற்றிப் பேசுகிறாரோ, அதை எண்ணிக்கையாகச் சொல்கிறார்.

வால்மீகியின் கவனம் ஸ்த்யும் சம்பந்தப்பட்டது. அவர், தாம் குறிப்பிடும் எண்ணிக்கையின் மூலம், வானரவீரர்களின் எண்ணிக்கையைச் சொல்ல வரவில்லை, அவர்களின் சக்தியைப் பற்றிச் சொல்கிறார்.

வால்மீகியின் கவனம், உண்மையைச் சொல்வதைவிட, வலிமையின் அளவைப் பற்றிய லத்யத்தைச் சொல்வதில் இருந்தது.

விஞ்ஞானம், அளவிட்டுக் காட்டுவதையுமே விரும்புகிறது. அதற்காக, அறிவியலால் நிரூபிக்கப்படாததும் அளவிடமுடியாததும் ஸ்தீயமில்லை என்றாகிவிடாது.

நியூட்டன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பதான் கண்டுபிடித்தார். ஆனால் புவிஈர்ப்புவிசையானது, ஆரம்பத்திலிருந்து செயல்படுகிறது. அதன் இருப்புநிலை, பிரபஞ்சத்தில் இருந்து வருகிறது. இல்லாவிட்டால், சூரியனும் கோள்களும் இப்போது நகர்ந்து கொண்டிருப்பதுபோல் முன்பு நகர்ந்திருக்க முடியாது. ஆனால் சமூகமும், சில மதங்களும் இந்த உண்மையை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.

பூமி, எப்போதுமே உருண்டையாகத்தான் இருக்கிறது. அதுதான் ஸத்யும். இருந்தாலும், இந்த ஸதீயத்தை மக்கள் முன்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தக் கசப்பான விவாதத்தில், பல மக்கள் கொல்லப்பட்டார்கள். இறுதியாக, உடன்படிக்கைக்கு வந்தார்கள்.

விஞ்ஞானம் வரையறுக்கப்பட்டுள்ளது. இது, ஒரு அடர்ந்த, இருண்ட காட்டை ஒரு சிறு விளக்கு மூலம் ஆராய்வது போன்றது.

சிறு விளக்கு, தன் முன்னே சிலஅடி தூரத்தில் உள்ளதை மட்டுமே காண்பிக்கும். அது போலவே விஞ்ஞானமும் ஒரு குறுகிய வட்டத்தை மட்டுமே பார்த்து விட்டு, அதன் அடிப்படையில் தன் கோட்பாடுகளைப் பரிந்துரைக்கிறது.

அடுத்ததாக விஞ்ஞானம், அந்த விளக்கை எடுத்துக்கொண்டு மேலும் சில அடிகள் முன்னே சென்று, அங்கு இருப்பதைக் காண்கிறது. இப்போது பார்ப்பது முன்பு பார்த்ததைவிட முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. புதிய முதலில் ஒதுக்கிவிடுகிறார்கள். இப்படித்தான் விஞ்ஞானம் செயல்படுகிறது.

ஸ்தீயும். மின்னலைப் போன்றது, இது உடனடியாக ஒரு கணக்கில் நீகழக்கூடியது !

ஒரு மின்னல் வெளிச்சத்தில் காடு முழுவதையும் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இப்படித்தான் ஜ்ஞாடுகுமார்கள் விஞ்ஞானத்திற்கும் ஆன்மிகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.

ஸ்கீயம் மின்னலைப் போன்றது, அது, உடனடியாக ஒரு கணத்தில் நிகழக்கூடியது, அது அத்தமானது, அது படிப்படியாக நிகழ்வது கிடையாது. 'உண்மை' என்பது தாக்கம், அது படிப்படியாக முன்னேறுவது, இங்கு அடுத்த பகுதிக்குச் செல்வதற்குமுன், முதல் பகுதியைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஸ்த்யம் உடனடியானதாகவும் புனிதமானதாகவும் இருக்கும். அதனால்தான் பட்டறிவு மூலமாக ஸ்தீயத்தைக் கிரகிப்பதென்பது கடினமானதாக இருக்கிறது. அது தர்க்கத்தைப் போன்றது அல்ல, அது பகுத்தறிவு அல்ல.

நூற்றாண்டுகளாக, பல அனுபவித்திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்களுடைய இருப்புக்குள் பார்த்த ஸத்யமானது சமுதாயம் மற்றும் மதங்கள் ஏற்றுக்கொண்ட ஸத்யங்களுடன் ஒத்துப்போகவில்லை என்பதை அனுபவ பூர்வமாகப் பார்க்கிறார்கள்.

ஸத்யத்தை மொழிபெயர்ப்பதும் ஒழுங்குபடுத்துவதும் கடினமாதலால், சமுதாயமும் மதமும்

உண்மையும் ஸத்யமும் எப்போதும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதில்லை. கட்டுப்பாடுகளுக்கும், ஸத்யத்துடன் எந்தவித சம்பந்தமும் இல்லை. விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும், உண்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.

உண்மையும் ஸத்யமும் சேர்ந்து இருப்பதில்லை. உண்மை ஒரு பரிமாணத்தை மட்டுமே கொண்டது. அதாவது ஒரு விஷயத்துடன் சம்பந்தப்பட்டது. அப்படியிருக்க, ஸத்யம் என்பது இடம், காலம் சம்பந்தப்பட்டது. பல பரிமாணங்களை உடையது.

இங்கு அர்ஜுனன் பண்பட்ட நிலையை அடைந்துவிட்டார். இனியும் அவர், உண்மைகளை மட்டும் கேட்டு திருப்தி அடையப்போவதில்லை. அவருடைய கேள்வி, ஸத்யத்தை நோக்கியே இருந்தது.

அவரது குழப்பங்கள் மறைந்துவிட்டன. அவரிடம் வெறும் சந்தேகங்கள் மட்டுமே இருந்தன. சந்தேகங்கள் உயர்ந்தவை. இவை, சீடர் குருவை ஏற்பதற்கும் உள்வாங்குவதற்கும் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள். சந்தேகங்கள், பச்சைக் குறிகள்; அதேசமயம் கேள்விகள், சிகப்புக் குறிகள்.

முன்நீற்கும் பதிலை ஏற்காதது எது ?

குருவை மேலும் திறந்தவராக இருக்கவிடாமல் தடுப்பது, நம் கேள்விகள். அவை குருவைத் தடுத்து, நம் வார்த்தைகளுக்கான அவரது பதிலைக் கேட்கின்றன.

மேலும், நம்மால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதபொழுது, நாம் வாழும் குருவின் சான்றை, வாழும் சக்தியையே கேள்வி கேட்கிறோம். நாம் நம்முடைய பட்டறிவை அவரை மதிப்பிடுவதற்கான ஒரு அளவுகோலாக, பயன்படுத்துகிறோம். நாம் நம் வரையறைக்குட்பட்ட பட்டறிவால், அவரை வரையறைக்குட்படுத்துகிறோம்.

ஒரு சின்ன கதை

ஒரு இளைஞர், தம் கிராமம் அருகே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவரை அணுகி, தாம் ஒரு குருவைத் தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்.

அந்தப் பெரியவர், "எனக்கு ஒரு குருவைத் தெரியும்," என்று சொல்லிவிட்டு, அந்த குருவினுடைய தோற்றம், எங்கு அவரைக் கண்டுபிடிப்பது போன்ற பல விபரங்களைச் சொன்னார். அந்த இளைஞர் அந்தப் பெரியவருக்கு நன்றிசொல்லி விடைபெற்றுக்கொண்டார். பெரியவர் சொன்ன அடையாளங்களுடன்கூடிய ஒரு குருவை, முப்பது வருடங்களாகத் தேடினார். குருவைக் கண்டுபிடிக்க முடியாததால் தேடுவதை விட்டுவிட்டு, தம் சொந்த கிராமத்திற்கே திரும்பினார்.

அவர், தம் வீட்டையடையும் முன், குருவின் விளக்கத்திற்கு அப்படியே ஒத்துப்போகும் ஒரு வயதான மனிதரைப் பார்த்தார். அருகில் வந்த பிறகுதான், அந்த வயதானவர் வேறு யாரும் அல்ல, இவரிடமிருந்துதான் தம் தேடலைத் துவங்கினார் என்பதை அந்த இளைஞர் கண்டுகொண்டார்!

''உங்களைக் கண்டுபிடிப்பதற்கு என்னுடைய முப்பது வருடங்களை ஏன் வீணாக்கினீர்கள்?' என்று அந்த இளைஞர் கேட்டார்.

வயது முதிர்ந்தவர், ''வருடங்கள் அவை உன்னைப் பக்குவப்படுத்தின. நீ முப்பது வருடங்களுக்கு முன் என்னிடம் வந்தபொழுது, நான் அமர்ந்திருக்கும் இந்த மரத்தையும், என்னைப் பற்றியும் தெளிவாக விவரித்தேன். என்னால் உன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஏனென்றால், நீ யாத்திரை

செய்யும் அவசரத்திலும், அலைந்து திரிந்து உன் அஹங்காரத்தைத் திருப்திப்படுத்தும் அவசரத்திலும் இருந்தாய். உன் அஹங்காரத்திலிருந்து எழுந்த கேள்விகளைக் கரைப்பதற்கு, இந்தத் தேடல் அவசியமே. இப்போது நீ பக்குவமடைந்து, என்னை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறாய்,'' என்று சொன்னார்.

சீடர், உள் வாங்கும் தன்மையில் இல்லாவிட்டால், அவரால் குருவைக்கூடத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. கேள்விகள், அஹங்காரத்தில் இருந்து எழுகின்றன. சந்தேகங்கள், உணர்வில் இருந்து எழுகின்றன.

அர்ஜுனன் அத்தியாயத்தில், கிருஷ்ணர் ஆன்மாவைப் பற்றிப் பேசும்போது, ஆன்மாவை எந்த ஆயுதத்தாலும் வெட்ட முடியாது, எந்த நெருப்பாலும் எரிக்க முடியாது - நைநம் சிந்தந்தி ச’ஸ்த்ரானி நைநம் தஹதி பவக: | (2 – 23) என்கிறார்.

உடனே அர்ஜுனன் கேட்டார். ''ஒரு ஞானி எப்படிப் பேசுவார்?''

அவர் ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டார்? கிருஷ்ணரைப் பற்றிக் கணிப்பதற்காக, கிருஷ்ணர் ஞானமடைந்தவர்தானா என்று பார்ப்பதற்காக, அவரது அஹங்காரத்திலிருந்து எழுந்த கேள்வி அது. அர்ஜுனன், குருவின் சான்றைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அது வன்முறையோடு, கேள்வியோடு ஆரம்பித்தது.

ராஜவித்யா ராஜ குஹ்யம் என்னும் ஒன்பதாவது அத்தியாயத்தில், 'பிரபஞ்ச சக்தியே ஞானம்' என்கிற மேலான இரகசியத்தை கிருஷ்ணர் வெளிப்படுத்தியவுடன், கேள்விகள் மிக மெதுவாகத் தணிந்தன.

விபூதி அத்தியாயத்தில், கிருஷ்ணரின் மகிமைகளைக் கேட்டவுடன், அவருக்குள் அன்பு தர்ச் நியாகம் என்னும் பதினொன்றாவது அத்தியாயத்தில், பிரபஞ்ச

ஆன்மாவை எந்த ஆயுதத்தாலும் வெட்ட முடியாது, எந்த நெருப்பாலும் எரிக்க முடியாது. (கீதை - 2.23)

வெளிப்படுத்தியபொழுது, அர்ஜுனன் இறுதி அனுபவமாக உணர்ந்தார்.

ஒன்பதாவது அத்தியாயத்தில், தெய்விக அறிவும் தெய்விக இரகசியங்களும் வெளிப்படுத்தப்பட்டதில் உருமாற்றம் நிகழ்ந்தது. பத்தாவது அத்தியாயத்தில், தெய்விக வெளிப்பாடுகளைப் பற்றிய வர்ணனையால், பக்தியும் அன்பும் மலர ஆரம்பித்தது. பதினொன்றாவது அத்தியாயத்தில் கண்ட விஸ்வரூப தர்ச் னத்தால், அர்ஜுனனுள் 'இறுதி விழிப்புணர்வு' அனுபவம் நிகழ்ந்தது. இப்போது கேள்விகள் எல்லாம் தீர்ந்தன.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அழகாகச் சொல்கிறார், ''விருந்துகளில்

உணவு சப்தமுமாக இருக்கும். உணவு பரிமாறத் தொடங்கியதுமே, பரிமாறும் சப்தமும் மட்டுமே கேட்கும். அதுபோல் முழுமையான அனுபவம் நிகழும்வரை, அங்குக் கேள்விகள் இருக்கும். அதன் பிறகு, அந்த அனுபவத்தின் வெளிப்பாடு மட்டுமே இருக்கும். மற்ற சப்தங்களும் காணாமல் போய்விடும்.''

கேள்விகள், குருவிடமிருந்து சான்றுகளைக் கேட்கும்; சந்தேகங்கள், அப்படியல்ல. அவை வெறும் சில குறிப்புகளை மட்டுமே கேட்கும்.

அர்ஜுனன், திறனையே கேள்வி கேட்டார். பிறகு, தம் சுய லாபத்தைப் பற்றிய கணக்கீடுகளை

நோக்கி நகர்ந்தார். இப்பொழுது, ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார். முதலில் இருந்தது எதிர்ப்பு, பிறகு அலட்சியம், இறுதியாக ஏற்றுக்கொள்ளுதல்.

உருவாக்கும் கண்ணி, கணக்கிடுவதிலிருந்து மாறுபட்டது. கடவுள் மட்டுமே உருவாக்க முடியும். யாராவது எதையாவது உருவாக்கினால், அந்த நேரத்தில் அவர்கள் தெய்விகத்தை அனுபவிக்கிறார்கள்.

அதனால்தான் வீர காலத்தில், கர்ப்பிணிகளை வணங்கும் வழக்கம் இருந்தது. அவர்களின் வெறும் தொடுதல் மூலமாகவே மக்கள் குணமடைவதாக நம்பப்பட்டது.

கட்டுமானப் பணியைப்பொறுத்தமட்டில், பொறியாளர்கள் நிறைய சம்பாதிப்பார்கள். ஆனாலும் கட்டிடக் கலைஞர்கள்தான் மன திருப்தியை அடைகிறார்கள். ஏனென்றால் கட்டிடக் கலைஞர்களே அங்குப் படைப்பாளிகள். உருவாக்கும் ஆற்றல் இல்லாவிட்டால், நாம் நம் வாழ்க்கையையே தவறவிடுகிறோம்.

இங்கு அர்ஜுனன் எல்லாவற்றையும் முடித்துவிட்டார். அவருடைய சுயலாபக்கணக்குகளும் முடிந்தன, கேள்விகளும் முடிந்தன. அவர், சந்தேகம் என்னும் நிலைக்கு இறங்கிவந்துவிட்டார். கேள்விகள் இருக்கும்போது, அவருடைய குரல் வித்தியாசமாக இருந்தது. கேள்விகள், குருவிடமிருந்து சான்றைக் கேட்கும்; சந்தேகங்கள்,

அப்படியல்ல. அவை வெறும் சில குறிப்புகளை மட்டுமே கேட்கும்.

அர்ஜுனன், தம் குருவை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார். அதனால்தான் இந்த அத்தியாயம் முழுவதும், அர்ஜுனன் அமைதியாக இருக்கிறார். அவர், குருவை உள் வாங்குவதற்குத் தயாராக இருக்கிறார். அவரை நோக்கி வீசப்படும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்.

நீங்களும் சந்தேகப்படலாம்

கேள்வி: அர்ஜுனன் அமைதியில் ஆழ்ந்ததாகச் சொல்கிறீர்கள். இன்னும் அவருக்குள் சந்தேகம் இருப்பதாகவும் சொல்கிறீர்கள். ஒருவர் தமக்கு இருப்பது சந்தேகமா அல்லது கேள்வியா என்று எப்படி வேறுபடுத்துவது ? நமக்குள் இருக்கும் சந்தேகங்களைக் கேள்விகள் என்றெண்ணி மறைத்தோமானால், அது இன்னும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தாதா?

நிச்சயமாக! அடக்குதல் ஒருபோதும் தீர்வாகாது. ஒருவரிடம் இருப்பது சந்தேகம் என்றால், அது தீர்த்துவைக்கப்படவேண்டும். ஒருவர் எப்படி சந்தேகத்திற்கும் கேள்விக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்வது ?

பெரும்பாலான நேரங்களில், நாம், மற்றவர்கள் நம்மிடம் சொல்வதைக் கவனிப்பதில்லை. அடுத்தவர் வாயைத்திறந்த கணமே, நாம் அடுத்து பேச்சை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து, பொறுமையின்றி, காத்துக்கொண்டிருப்போம். நாம் காத்துக்கொண்டிருக்கும்

அந்த பேச்சைத் தடுப்பதற்கும் மறுப்பதற்கும், நம்மைத் தயார்படுத்திக்கொள்வதற்கான நேரமாகத்தான் கவனிப்பது ஆகாது. அது, போருக்கான முன்னேற்பாடு.

நமக்குக் கேட்டலில் கவனம் இருக்க வேண்டுமானால், நம் எதிரில் இருப்பவரை மதிக்க மட்டுமே, அவர் என்ன சொல்கிறார் என்பதில் கவனம் செலுத்த முடியும். அவர்,

சொல்ல நினைப்பதற்கும் நாம் செவிசாய்க்க வேண்டும்.

நம்மிடம் சொல்வதற்கென்று, மதிப்பு மிக்க ஏதோ ஒன்றை தம்மிடம் வைத்திருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எதிரில் இருப்பவர் சொல்ல நினைக்கும் எதற்குமே எந்த மதிப்பும் இல்லை என்று நீங்கள் நம்பினால். பின்பு கவனிப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இன்னும் அதிக உபயோகம் தரக்கூடிய ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.

மனம் மற்றும் உடலின் குறுக்கீடு இல்லாமல், அக்கறையோடு கவனித்தோமானால், சொல்லப்படும் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வோம். உள்வாங்குதல் நிகழ்ந்தால், சொல்லப்படுகிற கருத்தை

நீங்கள் சந்தேகப்படும்பொழுது, கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை நோக்கி எழுகிறீர்கள். கேள்விகேட்கும்பொழுது, கற்பிக்க வேண்டும் என்ற ஆவலோடு எழுகிறீர்கள்.

நாம் நமக்குள் எந்த எந்த ஒரு வன்முறையும் இருக்காது. அதனால் அங்கு எந்தக் கேள்விகளும் இருக்காது.

நீங்கள் உணர்ந்ததிலிருந்து ஏதோ ஒன்றைச் சொல்கிறார் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் அல்லது அவர் சொல்வதைத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ளவேண்டும் ஆர்வமாக இருப்பீர்கள், மேலும் அவரின் புரிதலை, நோக்கத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். நீங்கள் அந்தக் கருத்தை

எடைபோட்டு, கண்டனத்தைத் தெரிவிக்கமாட்டீர்கள்.

நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை நோக்கி எழுகிறீர்கள். கேள்விகேட்கும்பொழுது, கற்பிக்க வேண்டும் என்ற ஆவலோடு எழுகிறீர்கள்.

நீங்கள் சந்தேகப்படும்போது, திறந்த மனத்துடன் இருக்கிறீர்கள்; கேள்விகேட்கும்போது, இறுகிய மனத்துடன் இருக்கிறீர்கள்.

நான் தியான வகுப்புகள் எடுக்க ஆரம்பித்த காலங்களில், அறையின் வெளியில் இருக்கும் ஒரு பலகையில், 'தயவுசெய்து உங்கள் காலணிகளையும் மனத்தையும் வெளியில் விட்டுவிட்டு வாருங்கள்' என்ற வாசகம் இருக்கும். உங்கள் முழு மனத்தையும் உள்ளே கொண்டு வரும்பொழுது, உங்கள் மனம் அறிவின் கர்வத்தினால் நிரம்பி வழியும்பொழுது, அங்கு நிகழ்வது பட்டறிவின் வன்முறையே! அது, எதையுமே உள்ளே நுழைய அனுமதிக்காது. பிறகு தியான வகுப்பின் உள்ளே வருவதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?

என் முன்னால் திறந்த மனத்துடன் அமர்ந்திருக்கும்பொழுது, என் சக்தியே உங்கள் கேள்விகளை உணர்ந்துகொள்ளும். நீங்கள் விழிப்புடனிருந்தால், பதிலைக் காண்பீர்கள், உங்கள் மனம் மூடியிருந்தால், நான் சொல்வதில் கவனம் செலுத்தாமல், கேள்விகளைத் தயார்செய்து கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் உண்மையாகவே கவனிக்கும்போது, கேள்விகள் கரைந்துவிடும். நான் சொல்வதைப் பொய்யென நிரூபிக்கும் வன்முறை இல்லாமல், நான் என்ன சொல்கிறேன், எதைச் சொல்கிறேன் என்பதைக் கற்பதில் மட்டுமே ஆர்வம் அதிகரிக்கும். நான் சொன்னதை நீங்கள் ஜீரணித்துவிட்டீர்கள். இன்னும் அதிகம் வேண்டும் என்ற பசியில் இருக்கிறீர்கள்.

உங்களுக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. இந்தச் சந்தேகங்கள் உங்கள் உள் உலகில் இருந்து எழுவதுபோல் தெரியும். ஸத்யம் என்னவென்றால், இவற்றுக்கான பதில்களும் உங்களுக்கு உள்ளேயே இருக்கின்றன. நீங்கள் வெறுமனே தேடினால் போதும், அவ்வளவுதான். உங்கள் எல்லா கேள்விகளுக்குமான விடைகளும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.

செயலும் செய்பவரும்

  • 15.1 பகவான் சொல்கிறார்: மேலே வேரும், கீழே கிளைகளும் பரப்பி வளரும் ஆலமரமானது அழியா வாழ்வெனும் மரத்திற்கு உருவகமாக இருக்கிறது. இதுத்தளின் துதிப்பாடல்கள்தான் இலைகள் என்று சொல்லப்படுகிறது. இந்த அழியா மரத்தை அறிந்துகொள்ளும் ஒருவர் வேதங்களையும் அறிந்தவராகிறார்.
  • 15.2 பூமிக்குக் கீழேயும் மேலேயும் பரவியுள்ள இந்த மரத்தின் கிளைகள் மனிதனின் மூன்று குணங்களால் வலுவூட்டப்படுகின்றன. புலனின்பப் பொருட்களே அதன் மொட்டுகள். கீழே செல்லும் வேர்கள், மனித நிலையிலிருந்து செய்யும் செயல்களின் விளைவுகளால் கட்டுண்டு உள்ளன.

காரண சரீரத்திற்குள்ளான பயணம்

கிருஷ்ணர், காரண சரீரத்தை ஆலமரம் எனக் குறிப்பிடுகிறார். இது சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி. அத்தியாயம் பதினான்கு முதல் பதினேழுவரை, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்பொழிவுகள்.

பதினான்காவது அத்தியாயமான குணத்ரய விபாக யாகத்தில், கிருஷ்ணர் நம் இருப்பின் முதல் நான்கு சரீரத்தைப் பற்றிப் பேசுகிறார். புரூஷாத்தம யாகம், என்னும் இந்த அத்தியாயத்தில் அவர் ஐந்தாம் சரீரத்தைப் பற்றிப் பேசுகிறார்.

நம்மைச் சுற்றி ஏழு சக்தி அடுக்குகள் இருக்கின்றன. நாம் இதைப் பற்றி மிக விளக்கமாக தியானந்த ஸ்புரண தியான முகாமில் விளக்கமாகப் பேசியுள்ளோம்.

இந்த மரணத்தின்பொழுது எதிர்கொள்ளப்போகும் அந்த அனுபவத்திற்குள் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அப்போது அந்த ஆன்மா, தன் இந்த உடலைவிடுவதற்குமுன், தன்னைச் சுற்றியிருக்கும் ஸ்தூல, ப்ராண, மனோ, ஸூக்ஷ்ம, காரண, ஆனந்த மற்றும் நிர்வாண என்னும் ஏழு சக்தி சரீரங்களைக் கடந்து செல்கிறது.

இந்த ஏழு அடுக்குகளையும் உள்ளடக்கியதுதான் நம் உடல் - மன - ஆன்மா அமைப்பு. முதல் அடுக்கு, எலும்புகளாலும் சதையாலும் ஆன நம் ஸ்தூல சரீரம். மற்ற அடுக்குகள் நம் இருப்பின் அங்கங்கள். இரண்டாவது அடுக்கு ப்ராண சரீரம். இது நம் ஸ்தூல சரீரத்திற்குள் இருக்கும்

சுய முரண்பாடுடைய ஆசைகள், நம்மை ரஜஸ்ஸிலும் தமஸ்ஸிலும் மூழ்கடித்து விடுகின்றன.

ப்ராண, அபான, உதான, வியான, ஸமான போன்ற வெவ்வேறு காற்றின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும்

சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், இந்த ப்ராண சரீரம் ஆசைகளால் நிறைந்தது என்று விளக்கினார். அவர் மேலும், நாம் எப்படி முரண்பாடுடைய ஆசைகளை உருவாக்கித் துக்கப்படுகிறோம் என்பதையும் விளக்கினார். ஆசைகள், நம்மை ரஜஸில் (அமைதியின்மை) ஆழ்த்துகின்றன. துக்கப்படச் செய்கின்றன. மேலும் தமஸில் (சுறுசுறுப்பற்ற நிலை அல்லது மனச்சோர்வு) நம்மை மூழ்கடித்து விடுகின்றன.

ஐந்தாவது அடுக்கு காரண சரீரம். இங்குதான் நம் எல்லா ஸம்ஸ்காரங்களும் விதை வடிவில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இரவும் ஆழ்ந்த தூக்கத்தில், நாம் இந்தக் காரண சரீரத்திற்குள் நுழைகிறோம். இந்த அடுக்கிலிருந்து ஸம்ஸ்காரங்களை எடுத்துத்தான் உலகத்தை உருவாக்குகிறோம்.

இந்த காரண இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், ஆசையின் சக்தியை பயன்படுத்துவது என்று விளக்கினார்.

ஆசைகளும் ஒரு சக்தியே, அவற்றை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றைக் கடந்துசெல்ல முடியும்.

ஆசைகளும் ஒரு சக்தியே, சுய முரண்பாடுடைய ஆசைகளை உருவாக்குவதன் மூலம், அந்தச் சக்தி தவறாக உபயோகப்படுத்தப் படுகிறது. சுய முரண்பாடுடைய ஆசைகள் நம்மை அமைதியின்மையில் தள்ளுகின்றன. அதன் பிறகும் நம்மை நாமே சரிசெய்து கொள்ளவில்லையென்றால், நாம் மனச்சோர்வில் விழுகிறோம். அவர், சுய முரண்பாடுடைய ஆசைகளை நீக்குவதற்கான நுட்பத்தைத் தருகிறார்.

சில ஆசைகள் மட்டுமே நம்முடைய சொந்த ஆசைகள், நாம் சென்ற பிறவியிலிருந்து கொண்டுவந்த மன அமைப்பிலிருந்து பிறந்தவை. இதை ப்ராரப்த கர்மா என்றும் சொல்வோம். நாம் பிறக்கும்போதே எடுத்து வந்தவை. இந்த ஆசைகள், அவற்றுக்கான அடிப்படை தேவைகளையும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால், அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கான சக்தியையும் தங்களுடன் எடுத்து வந்துவிடுகின்றன.

ஜைன மதத்தைத் தோற்றுவித்த மஹாவீரர், 'நமக்குத் தேவையான எல்லாவற்றோடும்தான் நாம் இந்தப் பூமிக்கு அனுப்பப்படுகிறோம்' என்கிறார்.

ரமண மகரிஷி சொல்கிறார், ''இந்தப் பிரபஞ்சத்தால், இப்பூவுலகில் வாழும் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும். ஆனால் ஒரே ஒரு ஒரு நபரின் ஆசையைக்கூட முழுமையாக அதனால் பூர்த்திசெய்ய முடியாது!''

எவ்வளவு உண்மை!

இந்தப் பிரபஞ்சம் நம்முடைய உண்மையான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்வதற்கான ஆற்றலை நமக்கு வழங்கி இருக்கிறது. இருந்தாலும் இங்கு வந்தவுடன், மேலும் பல ஆசைகளைச் சேர்த்துக்கொள்கிறோம். ஒப்பிடுதல், பின்பற்றுதல், பொறாமைப்படுதல் மூலமாக மற்றவர்களின் ஆசைகளைக் கடன் வாங்குகிறோம்.

கடன் வாங்கப்பட்ட ஆசைகள், இன்னும் ஆழமாகச் சொல்லப்போனால், மற்றவர்களின் உடைமைகளை அடைய வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்த ஆசைகளாக இருந்தால், அங்கு நம் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் இருக்கும்.

நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்வது என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுவே அதனால்தான், தம் எளிய உணவான ரொட்டிகளையும் பருப்பையும்கூட ஒரு ஏழை மனிதர் அவ்வளவு சுவைத்து உண்கிறார்!

கடன்வாங்கிய ஆசைகள் துன்பத்தையே தரும். துக்கத்திற்கே அடிகோலும். நீங்கள் எப்போதாவது ஒரு செல்வந்தர் மகிழ்ச்சியுடன் உண்மையான உணவருந்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்

அவருக்குக் குடல்புண், சர்க்கரை நோய், இதயக் கோளாறு போன்ற பிரச்சினைகளைக் கொடுத்திருக்கும். அதனால் அவருக்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட திட்டமிட்ட உணவு தேவைப்படும். அவருக்குத் தம்மைச் சரியாகப் பராமரித்துக்கொள்வதற்கும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்குமே, தனிப்பட்ட பயிற்சியாளர்களும் உணவு ஆலோசகர்களும் தேவைப்படுகிறார்கள்.

நம்முள் ஆழமாகப் பதிந்துள்ள ஸம்ஸ்காரங்கள் எனப்படும் புலனின்ப உணர்ச்சிகளின் அனுபவப் பதிவுகளே, ஆசைக்குக் காரணமாகின்றன. ஸம்ஸ்காரங்கள், விழிப்புணர்வற்ற மன சரீரத்தில் சேர்த்துவைக்கப்பட்டுள்ளன.

நம் புலன்களால் உணர்பவற்றுள், தொண்ணூறு சதவீதத்திற்கு மேலானவை விழிப்பறு பகுதியில்தான் பதிந்து வைக்கப்படுகின்றன. மீதமுள்ள பத்து சதவீதமே விழிப்புணர்வுப் பகுதிக்குள் செல்கிறது. ஆனால், அதைக்கூட சமாளிக்க முடியாமல் நம் மனம் தடுமாறுகிறது. அதுவே நூறு சதவீதமாக இருந்தால், எப்படியிருக்கும் என்று கற்பனைசெய்து பாருங்கள்.

நம்முடைய ஸ்ம்ஸ்காரங்கள், நம் செயல்களை நடத்திச்செல்கின்றன.

ப்ருறைதாரண்யக உபரிஷத் சொல்கிறது, 'நம்முடைய ஆசைகளே நாம்; நம்முடைய ஆசைகளின் உருவகமே நாம். நம்முடைய ஆசைகளே நம் மன சக்திக்கு வடிவம் தருகின்றன. நம் மனசக்தி, நம் செயல்களுக்கு வடிவம் தருகிறது. நம் செயல்கள் நம்மை உருவாக்குகின்றன. அதாவது, நாம் இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன. ''

கடன்வாங்கப்பட்ட இந்த ஆசைகளை நிரைவேற்றிக் கொள்வதற்கான சக்தியைக் உண்மையான இல்லை என்பதை நாம் உணர்வதில்லை. இவை பொறாமையினாலும் ஒப்பிடுதலினாலும் மற்றவர்களிடமிருந்து மட்டுமே பொறுக்கியெடுக்கப்பட்டவை. பெரும்பாலும் நம் ஸம்ஸ்காரங்களை நம்மை வரையறுக்கின்றன.

இப்போது கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்கள் விதை வடிவத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அடுத்த அடுக்கிற்கு நகர்கிறார். நாம் ஆசை, கடன்வாங்கிய ஆசைகள் துண்பத்தையே கரும்.

அச்சம், கவலை என்ற மூன்று அடுக்குகளைக் கடந்துசென்றாலும்கூட, விதை வடிவத்தில் இருக்கும் இந்த ஸம்ஸ்காரங்கள் நீக்கப்படவேண்டும்.

கிருஷ்ணர் இந்த ஸம்ஸ்காரங்களை அழிப்பதற்கான நுட்பத்தைச் சொல்கிறார். இவை, இந்த நிமிடம் நம்மிடம், தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாம்; இருந்தாலும், அவற்றை விதை வடிவத்தில் இருக்க அனுமதித்தோமென்றால், ஒரு சமயம் இல்லாவிட்டாலும் இன்னொரு சமயம் அவை நம்மை உபயோகப்படுத்தியே தீரும்.

ஒரு அலுவலகத்தில், சில கோப்புகள் மேஜைமீது இருக்கும்; சில அலமாரியில் இருக்கும்; மற்றவை நிலவறையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கும். சென்ற மூன்று அடுக்குகளும் அலுவலக மேஜை மற்றும் அலமாரியைப் போன்றவை.

இந்தக் காரண ச்ரீரம், நிலவறை பாதுகாப்பு பெட்டகத்தைப்போன்றது.

சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், மேஜையைக் காலிசெய்வதற்கான நுட்பத்தை விளக்கினார். இப்போது, பாதுகாப்புப் பெட்டக அறையைக் காலிசெய்யும் நுட்டத்தைத் தருகிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், மரத்தின் வேர்கள் வெளியில் இருக்கின்றன. அதன் கிளைகள் உள்ளே இருக்கின்றன. ஒரு மரத்திற்கு அதன் வேர்கள்தான் ஆகாரம் அளிக்கின்றன. வேர் வழியாகத்தான் தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் அவை எடுத்துக்கொள்ளும். ஒரு வளர்ச்சியை அதன் வேர்கள்தான் தீர்மானிக்கின்றன.

ஸ்தூல் ஐம்புலன்களே ஸ்மீஸ்காரங்களை வலுப்படுத்துகின்றன. அதனால்தான் கிருஷ்ணர், ''மரத்தின் வேர்கள், ஸ்தூல ச'ரீரத்தில் இருக்கின்றன," என்கிறார்.

காரண ச்ரீர்த்தில் விதை வடிவில் இருக்கும் ஐம்புலன்களால் உருவாக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், இதன் இலைகள் வேத மர்த்ரங்கள் என்றும், யார் ஒருவர் இந்த மரத்தைத் தெரிந்துவைத்துள்ளாரோ அவரே

நாம் ஆரை, அச்சம், கவலை என்ற மூன்று அருக்குகளைக் கடந்துடுசன்றாலும்கூட, விதை வடிவத்தில் இருக்கும் ஸ்மீஸ்காரங்களை நீக்கியே ஆகவேண்டும்.

வேதங்களை அறிந்தவர் என்றும் சொல்கிறார்.

அவர் வேத மந்தரூற் - - எதுவெல்லாம் மனத்தைக் கட்டுப்படுத்துகிறதோ, நிலைநிறுத்துகிறதோ, அவை வரையறுக்கப்படுகின்றன. மேலும் மனிதனின் வாழ்க்கையை மீட்டுக்கொடுப்பவை மந்திரங்கள் என்றும் வரையறுக்கப்படுகின்றன.

கூர் முனைகளைக்கொண்ட வாள்போன்றது வார்த்தைகள்

நமக்குள் படிந்திருக்கும் வார்க்கைகள்கான். நம் பாதைக்கு வழிவகுக்கின்றன. நாம் தனியாக இருக்கும்பொழுது வெளிப்படுத்தும் வார்க்கைகள்கான், காரண கீர்ர்த்தில் அச்சிடப்பட்டிருக்கும் ஸம்ஸ்காரருக்கள். நம் வாழ்க்கை அவற்றைச் சுற்றித்தான் சுழன்றுகொண்டு இருக்கிறது.

வார்த்தைகள், இருபக்கமும் கூர்தீட்டப்பட்ட வாள் போன்றது. நாம் அடுத்தவரைத் தாக்க எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோமோ, அவை நமக்கு உள்ளேயும் படிகிறது. நமக்குள்ளிருந்து வெடித்து வெளிவர வாய்ப்பு கிட்டும்பொழுதெல்லாம்,

அவை வெடித்து வெளிக் கிளம்புகின்றன.

கொரோமான வார்க்கைகளை மற்றவர்களுக்கும், மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தும் அளவிற்கு, இங்கு எந்த மனிதனும் புத்திசாலி இல்லை. அது ஒரு விழிப்புணர்வற்ற செயல். அதனால்தான் பழங்கால இந்து சமூகம் பல்வேறு பழக்க வமக்கங்களை வார்த்தைகளைப் கட்டுப்படுத்தியது.

கொசூரமான வார்க்கைகளை மற்றவர்களுக்கும் மென்மையான வார்க்கதைகளை கனக்குள்ளேயும் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு எந்த மனிதனும் புத்திசாலி இல்லை.

நம் மனம், எப்போதும் உள் அரட்டையால்

அக்ரமிக்கப்பட்டிருக்கும். இந்த அரட்டையின் ஒரு பகுதியைத்தான் நாம் எப்போதாவது வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறோம். மற்றொரு பகுதியை சமூக விளைவுகளுக்குப் பயந்து அடக்கிவைக்கிறோம்.

நாம் காயப்படுத்திவிடுமோ என்றோ அல்லது மற்றவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள வெளிப்படுத்துவதில்லை. இந்த எல்லா வார்த்தைகளும் வார்த்தைகளின் இருப்பிடமான மணிப்பூரக சக்கரத்திற்குள் ஆழமாகப் பதிந்துவிடும்.

சில கேட்பவருடனான நம் உறவுநிலையைப் பொறுத்தே, நாம் சௌகரியமாக உணர்கிறோம்.

நாம் நினைக்கும் துணை, பணிபுரிபவர்கள் போன்றோரிடம் வார்த்தைகளைப் கடுமையான பயன்படுத்துகிறோம். கடுமையான வார்த்தைகளை, நம்மைவிட அதிகாரம் தொண் ட வர்களி ட மு ம் அன்னியர்களிடமும் பயன்படுத்துவதற்கு கனவில்கூட துணிவுகொள்வதில்லை.

கடுமையான வெளிப்படுத்தினாலும் வெளியே அல்லது நமக்குள்ளேயே வெளிப்படுத்திக்

பழங்கால இந்து சூமகம். பல்வேறு பழக்க வழக்கங்களை வித்தது, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தியது.

கொண்டாலும், அவை நமக்குள் தங்கிவிடுகின்றன. எந்த வார்த்தையை வெளியே வெளிப்படுத்துகிறோமோ, அது உள்ளேகூட செல்கிறது. இது நம் தொப்புள் பகுதியிலுள்ள மணியீழருக சக்தி மையத்திற்குள் தங்கிவிடும்.

நாம் வெளியே வெளிப்படுத்திய வார்த்தைகள் மற்றும் நமக்குள்ளேயே வெளிப்படுத்திக்கொண்ட வார்த்தைகள் - இந்த இரண்டு விதமான வார்த்தைகளுமே, நம் ஸ்ஸ்காரம் என்னும் வங்கிக் கணக்கை வளர்க்கின்றன.

The Hidden Messages in Water (தண்ணீரில் மறைந்திருக்கும் செய்திகள்) என்னும் புத்தகத்தைப் பற்றி நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். இதில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர் டாக்டர். மசரு இமோடோ (Dr. Masaru Emoto), தண்ணீரைக்கொண்டு தாம் மேற்கொண்ட ஆராய்ச்சிகளைப் பற்றிப் பேசுகிறார்.

இமோடோ, சாதாரண குழாய்த் தண்ணீரை, ஒரேமாதிரியான கண்ணாடிப் புட்டிகளில் நிரப்பி வைத்தார். புட்டிகளின் மேல் - காதல், வெறுப்பு, பயம் கவலை, நம்பிக்கை, சரணாகதி, குழுந்தைகள், எதிரிகள் - போன்ற வார்த்தைகளை எழுதிய சீட்டை ஒட்டினார்.

தினமும் ஒவ்வொரு புட்டியின் முன்னும் நின்று, அந்தப் புட்டியின்மேல் எழுதி ஒட்டப்பட்ட தலைப்பைப் பற்றிப் பல நிமிடங்கள் பேசுவார். உதாரணமாக, அன்பு என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கும் புட்டியின்முன் நின்று, அன்பைப் பற்றி அன்புடன் பேசுவார்; பயம் என்ற சீட்டு ஒட்டப்பட்டிருக்கும் புட்டியின்முன், பயத்தைப் பற்றிப் பயத்துடன் பேசுவார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தப் புட்டிகளில் இருந்த தண்ணீரை உறையவைத்து, அப்பனிப் படிகங்களைச் சக்திவாய்ந்த நுண்ணோக்கி மூலம் பார்த்தார். எந்தெந்த தண்ணீர் மாதிரிக்குமுன், என்னென்ன பேசினாரோ, அந்தந்த கருத்தையே அந்தப் படிகங்கள் பிரதிபலித்தவிதம் அவரை ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது.

அன்பு என்னும் சீட்டு ஒட்டவைக்கப்பட்டிருந்த புட்டியின் பனிப்படிகம் வைரத்தைப்போல் பளபளப்பாகப் பிரகாசித்தது. பயம் என்ற சீட்டு எழுதப்பட்ட புட்டியின் பனிப்படிகம் பிசாசு போலவும், கோணல்மாணல்களாகவும் தெரிந்தது.

எமோட்டோ, அடுத்து தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அசுத்த நீரையெடுத்து உறையவைத்து, அந்தப் படிகத்தை ஆராய்ச்சி செய்தார். எதிர்ப்பார்த்ததைப்போல், அது மிகவும் மோசமாகக் காணப்பட்டது.

அவர், புத்தமதத் துறவிகளை அழைத்து, அந்தப் பாட்டில் நீர்களுக்கு, பிரார்த்தனை சக்தியை அளிக்குமாறு செய்தார். அப்படிச் சக்தியூட்டப்பட்ட நீரைப் படிகங்களாக்கியபொழுது, அவை பார்ப்பதற்கு வைரங்களைப்போல் இருந்தன.

எமோட்டோ, நம்முடைய வார்த்தைகளும் எண்ணங்களும்கூட, நீர் போன்ற இயற்கை மூலகக்கூறுகளைப் பாதிக்கும் என்ற தீர்மானத்திற்கு வர்கார். நம்முடைய வீத நூல்களில் சொல்லப்பட்டவை, அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு கண்டுபிடிப்புகளினால் மனிதகுல வரலாற்றில் ஒரு முக்கியமான புரிதலும் பயனும் ஏற்பட்டது.

மனித உடல் என்பது கிட்டத்தட்ட 80 ச தவீதம் நீரினால் ஆனது. அதனால், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், கேட்பவரையும் அல்லது யாரை நோக்கிச் சொல்லப்படுகிறதோ பாதிக்கும். பாதிப்பு ஏற்படுகிறது.

இதைப் புரிந்துகொள்ளும் ஒருவர், பிறரிடம் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், அதைச் செயல்கள்மூலம் செய்வதைவிட,

நாம் வெளியே வெளிப்படுத்திய மற்றும் நமக்குள்ளேயே வெளிப்படுத்திக்கொண்ட இந்த இரண்டுவிதமான வார்த்தைகளுமே ஸம்ஸ்காரம் என்னும் நம் வங்கிக் கணக்கை வளர்க்கின்றன.

வார்க்கைகளை

மட்டுமே பேசப் பயிற்சி செய்பவருக்குள்

இயற்கையாகவே

ரேர்மரை எண்ணங்களே உருவாகும்.

தம் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் சாதித்துக் கொள்வார்.

நம்முடைய வார்த்தைகளும் எண்ணங்களும் மற்றவர்கள் முமேல் எவ்வாறு அதிக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும், அவர்களை எந்தளவிற்குப் பாதிக்கிறது என்பதும் நமக்கேகூட தெரியாது. அவை, ஒருங்கிணைக்கப்படாமலும், ஆற்றலற்றதாகவும் இருந்தாலும்கூட நம்மையும் மற்றவரையும் பாதிக்கும்.

வியாபாரத்திலும், பெரிய கூட்டுநிறுவனங்களிலும் இருப்பவர்களுக்கு 'தகவல் பரிமாற்றம்' என்பது வெற்றிக்கான ஒரு சாவி.

தகவல் பரிமாற்றம் என்பது மொழியை நாம் எவ்வளவு எளிதாக உபயோகிக்கிறோம், எவ்வாறு சரளமாகப் பேசுகிறோம் என்பதைப் பற்றியதல்ல ; அது பற்றியதும் அல்ல. அல்ல. நேர்மரையான உணர்கிறோமோ நிணைக்கிறோமோ அதை

நம்முடைய உணர்வகளும் எண்ணங்களும் எதிர்மறையாகயிருந்தால், மறைப்பதற்கு முயற்சிசெய்தாலும், நம்முள் இருக்கும் உணர்வுகளையும் வார்த்தைகளும் நம்முடைய உடல்மொழியும் வெளிப்படுத்திவிடும்

வெளிப்படுத்துவதே தகவல் பரிமாற்றம்.

எவரொருவர் நோமறையான வார்த்தைகளை மட்டுமே பேசப் பயிற்சி செய்து, அவற்றை உபயோகிக்கும் கலையில் வல்லவராகிறாரோ, அவருக்குள் இயற்கையாகவே நேர்மறை எண்ணங்களே உருவாகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

சில சூழ்நிலைகளைக் குறித்தும் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவது கடினம். ஆனாலும், நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த நாம் உபயோகிக்கும் எதிர்மறை வார்த்தைகளை, தொடா்ந்து முயற்சிசெய்து நேர்மறை வார்த்தைகளாக மாற்றியமைத்தால், மற்றவர்கள்மேல் நாம் வைத்திருக்கும் மனப்பாங்கு மாறிவிடும்.

நல்லதும் உண்டு, கெட்டதும் உண்ம

வியாபாரத்தில், இந்தச் செயல்முறையைக் கையாளும்பொழுது, வியாபாரம் செயல்படுத்தும்போது சந்தோஷத்தை அளிக்கிறது.

இதன் அடிப்படை மிக எளிமையானது. நாம் மனத்தில் பாவனைசெய்து பார்க்காமல், ஒரு வார்த்தையைச் முடியாது. நாம் 'பசு' என்று சொல்லும் அந்த நேரம், நம்முடைய மனம் பசுவை மனக்கண்ணில் பாவனைசெய்யும். யானையை நினைத்துக்கொண்டு, 'பசு' என்று சொல்வதற்கு முயற்சிசெய்யுங்கள். அதைச் செய்ய முடியுமென்றாலும்கூட, அது, கட்டாயமாக, நமக்கு ஒரு அசௌகர்யத்தைக் கொடுக்கும்.

அதேபோல் நாம் ஒருவரைப் பெற்றி அல்லது குழலைப் பற்றி எதிர்மறையான வார்த்தைகளால் நம்முடைய மனத்திரையில் அந்தக் காட்சி தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றியோ அல்லது அல்லது குழ்நிலையைப் பற்றியோ, நம் மனத்தில் எதிர்மறை எண்ணம் மேலெழும் முன்பே, அந்நபரைப் பற்றிய அல்லது குழ்நிலையைப் பற்றிய நேர்மறை எண்ணத்தால், நம்மால் அதை அழித்துவிட முடியும். அதற்குத் தேவை தொடர் பயிற்சியும் விழிப்புணர்வுமே !

வார்த்தைகள் மாறுவதால், நம் மன அமைப்பும் மாறிவிடுகிறது.

ஒவ்வொரு செய்திக்குள்ளும் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் மறைந்திருக்கிறது. அதனால் காரணச் சீரிந்தைப் பற்றிய நல்ல செய்தியும் உண்டு. கெட்ட செய்தியும் உண்டு.

இந்த இடத்தில் கெட்ட செய்தி என்னவென்றால், நம்முடைய நிகழ்காலத்தைய எதிர்மரைகளே, நாம் இனி சந்திக்கப்போகும் எல்லாத் துக்கங்களுக்கும் காரணம்.

நல்ல செய்தி என்னவென்றால், நம்முடைய காரண சீர்ரேத்தை எந்த நேரத்திலும் நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

Part 3: Bhagavad Gita Explained _ Chapter 15

கிருஷ்ணர் எவர் ஒருவர் இந்த மரத்தைப் பற்றி அறிந்திருந்திருக்கிறாரோ, உருவாகக் காரணமான ஸம்ஸ்காரங்களுக்கு, ஐம்புலன்களால் உணர்ச்சிகளே காரணம் என்ற அறிவைப் பெற்றிருக்கிறாரோ அறிந்தவராகவும், வழிநடத்தும் ஆற்றலைப் பற்றிய அறிவைப் பெற்றவராகவும் இருக்கிறார். '

காரண சூரியத்தை எந்த ரேரத்திலும் நம்மால் மீண்டும் மாற்றி அமைக்க முடியும்.

வேரின் மூலமாகப் பெறப்படும் நீர்தான் மரத்தின் தன்மையைத் தீர்மானிக்கிறது. நல்ல நீரும் உரமும் கிடைத்தால் அந்த

மரம் செழிப்பாக வளரும், அதன் இலைகள் பசுமையாக இருக்கும். விஷத்தை ஊற்றினால், அந்த மரத்தின் இலைகள் உதிர்ந்துவிடும், மெதுவாக மரம் இறந்தே விடும்.

காரண ச்ரீரத்தில் வேரூன்றியிருக்கும் இந்த ஸம்ஸ்கார மரம், ஐம்புலன்களின் மூலமாகவே வாழ்கிறது.

கிருஷ்ணர் அச்வத்த என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார், அதன் அர்த்தம் 'நிரந்தரமில்லாதது' என்பதாகும். அதாவது நேற்று இருந்ததுபோன்று இன்று இருக்காது; இன்று இருப்பதுபோல் நாளை இருக்காது என்பதாகும். இது பொருள்சார்ந்த வாழ்க்கையைக் குறிக்கிறது, இங்கே எதுவுமே, நாம் எதுவாகக் காண்கிறோமோ அதுபோல் இருப்பதில்லை. எல்லாமே புத்தர் சொல்வதைப்போல் அநிச்ச - நிலையில்லாதது.

கனவுகூட உண்மைதான்

வாழ்க்கை, மக்கள் சொல்வதைப்போல் பொய்யானது இல்லை! அது உண்மையாகவே, பொய்யானதாக இருந்தால், அதை நம்மால் அனுபவிக்க முடியாது. ஆனால் உண்மை என்னவென்றால், நாம் அதைச் சந்தோஷமாக அனுபவிக்கிறோம். பொருள்சார்ந்த உலகியல் வாழ்க்கை தற்காலிகமானதுதான் என்றாலும்கூட, அது உண்மைதானே? நாம் எதையெல்லாம் அனுபவமாக உணர்கிறோமோ, அவை அனைத்துமே நிலையில்லாதது எனபதால் மட்டுமே, அவற்றை நாம் 'பொய்' என்று

சொல்லிவிட முடியுமா?

'பொய்யானது' 'இருப்பு' இல்லை என்று அர்த்தம். ஏதாவது ஒன்றுக்கு 'இருப்பு இல்லை' என்றால், நம்மால் அதைப் புலன்களால் உணர்ந்துகொள்ளவோ, அனுபவிக்கவோ முடியாது, தற்காலிகமாகக்கூட !

அதனால் கனவுகூட உண்மைதான். ஆனால் நாம் கனவை உண்மையில்லையென்று சொல்கிறோம். அனுபவித்ததை நாம் மறுக்க முடியுமா? முடியாது.

வார்க்கைகளை மாற்றுவதால், நாம் நம் மன அமைப்பை மாற்றிவிட முடியும்.

கனவுகளைத் திரும்பவும் மிகத் தெளிவாக நினைவுபடுத்திச் சொல்கிறார்களே! பிறகு எப்படிக் கனவுகள் பொய்யாக இருக்க முடியும் ? இருந்தபோதிலும், கனவு காணும்போது, 'சுய விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை' என்பது மட்டும்தான் உண்மை

ஒருமுறை நாம் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறோம். கனவில், சிங்கமோ அல்லது ஒரு கொலைகாரனோ நம்மைத் துரத்தி வந்து பிடிப்பது என்பது ஒருபோதும் நடக்காது. அது திரைப்படங்களில் வேண்டுமானால் நிகழலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்காது. நாம் பயமுறுத்தப்பட்டவுடன், நம்மைப் பற்றிய விழிப்பு நிலைக்குள் வந்துவிடுவோம், நாம் விழித்துகொள்வோம், கனவும் முடிந்துவிடும்.

'இருப்பு' இல்லாமல் இருக்கிறது என்பதற்காக, கனவுகள் பொய்யானவை கிடையாது. விழித்துக்கொள்ளும்வரை அவை உண்மையே. விழித்துக்கொண்ட பிறகே அவை 'பொய்'.

இதேபோலத்தான், இப்போது நாம் விழித்துக் கொண்டிருந்தாலும் விழிப்புணர்வில்லாமல் இருப்பதாக அதனால்தான் அவர்கள் ஜாக்ரத், இரக்ரத் - 'விழித்துக்கொள்ளுங்கள், விழித்துக்கொள்ளுங்கள்' என்று சொல்கிறார்கள். அவா்கள் அவ்வாறு சொல்லும்போது, நம்மைத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளச் சொல்லவில்லை. அவா்கள் நம்மை விழிப்பறு நிலையிலிருந்து, விழிப்புள்ள நிலைக்கு விழித்துக்கொள்ளச் சொல்கிறார்கள்!

அச்வத்த - இந்த விழிப்புணர்வற்ற நிலையைக் குறிக்கிறது.

வழிநடத்தப்பட்டு, புலன்களால் உருவாக்கப்பட்ட, இந்த விழிப்புணர்வற்ற நிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் வேதங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும்.

கிருஷ்ணர், இந்த நிலையைப் பற்றி நிறைய விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே போகிறார்.

வேர்கள், மேல்நோக்கியும் செல்கின்றன, கீழ்நோக்கியும் செல்கின்றன என்றும் ...

மரத்தின் இலைகள், ஐம்புலன்களின் தந்திரத்தாலும் மனிதகுலத்தின் செயல்களின் விளைவுகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் ...

அதாவது வேர்கள், ஸ்தூல ச்ரீரத்தில் மட்டுமல்ல, செயல்களிலும் இருக்கின்றன என்றும் ...

மொத்த மனிதகுலத்தின் செயல்களும் எப்போதும் பலனைச் சார்ந்தே இருப்பதால், அவை பேராசையினாலும் அச்சத்தினாலுமே வழிநடத்தப்படுகின்றன, அதனால், மனிதனுள் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்றும் ... சொல்கிறார் கிருஷ்ணர்.

அச்வத்த மரம், ஒரு மனித உடலைப் போன்றது, அதனுடைய வேர்கள் மேலே உள்ளன, மனிதனின் முடியைப்போல! இந்த முடி, பிரபஞ்ச சக்தியைப் பெறுவதற்குரிய ஒரு வாய்க்காலாகக் கருதப்படுகிறது.

ஆலமரத்தின் கிளைகள், நம்முடைய அவயங்களான கைகளும் கால்களும் போன்றவை.

மனித அமைப்பு உண்மையில் முற்றிலும் தலைகீழானது.

கர்மச் சக்ரம்

கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்களைக் களைய ஒரு அழகான யுக்தியைத் தருகிறார். பேராசையும் பயமும் நம்மை வழிநடத்தவில்லையென்றால், நம்முடைய செயல்கள் பலனைச்சார்ந்ததாக இல்லாமல் இருந்தால், எந்த ஸம்ஸ்காரங்களும் உருவாகாது.

நீங்கள் நாள்தோறும் ஒரு அரைமணி நேரமாவது, எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல், சுயநலமின்றி சேவைசெய்தால், அது உங்களுக்கு நிறைய நற்பலன்களைக் கரும்.

சேவை செய்யும்பொழுது, எதையும் திட்டமிடாதீர்கள். சேவை செய்வதற்குத் தன்னார்வத் தொண்டர்களைக் குழுவாக வைத்துக் கொள்ளக்கூடத் திட்டமிடக்கூடாது.

எந்த வேலையாக இருந்தாலும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். அது அற்பமானதாகவும் நேரத்தை வீண்டிப்பதாகவும்கூடத் தோன்றலாம். ஆனால் பின்வரும் நாட்களில், இந்தக் காலங்கள் மட்டுமே உபயோகம் நிறைந்ததாக உணர்வீர்கள்.

உங்களுடைய சக்தியூட்டப்பட்டால், நீங்கள் குழப்பம் உண்டாக்குவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு தொந்தரவாகவும் இருப்பீர்கள்.

காம் மூலப்பொருட்கள் இருக்கின்றன. வாஸனாக்கள் விதை போன்றவை. ஸம்ஸ்காரங்கள் செடி போன்றவை. கர்மா என்பது வளர்ந்த மரம் போன்றது.

வாஸனாக்கள் என்றால் மன இயல்பு. மனித ஆன்மா ஒரு உடலைவிட்டு, இன்னொரு சாரத்தைத்தான் வாஸனாக்கள் என்கிறோம்.

ஒரு நிமிடம், நாமெல்லோரும், ஒரு வெண்மையான காற்றுக் இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்ளுங்கள்.

அந்தக் வெவ்வேறு வண்ணங்களால் வர்ணம் தீட்டியிருப்பதாகக் கொள்ளுங்கள். வெள்ளைநிறக் காகிதத்தில் வண்ண வண்ண வட்டங்கள் கற்பனைசெய்துகொள்ளுங்கள்.

வெண்மையான

ரிஷிகள், ஜாகாத் -'விழ்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லும்போது. நம்மை விழ்ப்பறு நிலையிலிருந்து, விழிப்பு நிலைக்கு விழ்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள்!

வட்டத்திற்கு வெளியில் இருக்கும் சக்தி பிரபஞ்ச சக்தி, வட்டத்திற்கு உள்ளே இருக்கும் சக்தி நம்முடைய உயிர்ச் சக்கி.

வட்டத்தின் வண்ண வெளிக்கோடுகள்தான் நம்முடைய உடலும் மனமும், அதாவது அதுதான் நம்முடைய எல்லைகள். அந்தக் குமிழிக்குள் இருக்கும் வெண்மையான வெற்றிடமே ஆத்மா. வெளியில் இருக்கும் வெண்மையான வெற்றிடம் ம்ரூர்மும். இருக்கும் வெண்மையான வெற்றிடமும், வெளியில் இருக்கும் வெண்மையான வெற்றிடமும் ஒன்றே.

நாம் இறக்கும்பொழுது, இந்த வண்ணக் கோடு அழிக்கப்பட்டுவிடும். நம் உள்ளிருக்கும் சக்தி. வெளியில் இருக்கும் சக்தியோடு

ஒன்றுசேர்ந்துவிடும். இருந்தாலும் அது முழுமையாக ஒன்றுகலந்து விடுவதில்லை, ஒரு சிறு பிரிவு இருக்கும்.

ஏனென்றால், ஒவ்வொருவரின் ஆத்மாவும், வாஸனாக்களால் மெல்லியதாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஆத்மா, ப்ரவற்மத்தோடு இணையும்பொழுது, வாஸனாக்களின் சாரமான இந்த வண்ணத் தீற்றல்களின் காரணமாக, ப்ரூற்மத்திலிருந்து பிரிந்தே இருக்கிறது.

அந்த ஆத்மா, தன்னுடைய அந்த வாஸைனாக்களுக் கேற்ற மனத்தையும், தான் பகுப்பிறவியெடுக்கத் தேடும். இவ்வாறுதான்

தீர்மானிக்கப்படுகிறது.

வாஸனாக்கள் விதை போன்றவை. இது மிகவும் நுண்ணியது. நமக்கு உள்நோக்கிப் பார்க்கக்கூடிய திறமை இருந்தால், அந்த விதைக்குள் இனி வளரப்போகும் செடியைப் பார்க்க முடியும்.

உண்மையில், ஒருமுறை பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர்கள், பூக்கள் இல்லாத ஒரு ரோஜாச் செடியைப் புகைப்படம் எடுத்தபோது, அந்தப் புகைப்படத்தில், இனி உருவாகப்போகும் ரோஜாப்பூக்களின் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

ஒரு மரணத்தின்போது, அவர் உடல் - மன அமைப்பை விடும்போது அவர் பிரபஞ்ச சக்தியுடன் பிரிவற்று முழுமையாகக் கலந்துவிடுகிறார். அதனால் அவருக்கு மறுபிறவி கிடையாது.

மற்ற மனிதர்கள், புதிய உடலெடுப்பதற்குத் தேவையான வாஸனாக்களையும் தங்களுடன் எடுத்துச்செல்கிறார்கள்.

இந்த மனோ அமைப்பே, புதிய உடல் - மன அமைப்பு வளர்வதற்கான ஸம்ஸ்காரங்களை உருவாக்குகிறது. புதிய உடல் - மன அமைப்பின் அனுபவங்கள், பழைய பிறவியிலிருந்து எடுத்து வந்த வாஸனாக்களை அனுமதித்து, ஸம்ஸ்காரங்களாக மலரச் செய்கிறது. இறுதியாக ஸம்ஸ்காரங்கள் நம்மைச் செயலைச் செய்யுமாறு தூண்டுகின்றன. இந்தச் செயலே காமா எனப்படும்.

வாஸனாக்கள் விதைகள் என்றால், ஸம்ஸ்காரங்கள் செடி போன்றவை. காமா என்பது வாஸனை என்ற விதையிலிருந்து ஸம்ஸ்காரம் என்று அழைக்கப்படும் பின்பு முழுமையாக வளர்ந்த ஒரு மரம். வாஸனாக்கள், பிஜ்காமா - கர்மத்தின் விதை என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு உதாரணத்திற்கு, கடையில் தனக்குத் ஒரு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும்பொழுது, அக்கடையின் 'ஷோ கேசில்' ஒரு ஒரு ஒரு குறிப்பிட்ட காலணியைப் பார்க்கிறார் என்று வைத்துக் உங்களுடைய சேவை, பேராசையினாலும் பயத்தினாலும் சக்கியூட்டப்பட்டால், நீங்கள் குழப்பம் உண்டாக்குவீர்கள்.

கொள்வோம். முதலில் பார்க்கும்போது வேண்டுமானால், அது ஒரு ஆர்வத்தின் காரணமாகப் பார்த்த பார்வையாக இருக்கலாம். ஆனால் அவர் அதனால் ஈர்க்கப்பட்டிருந்தால், அவர் இன்னும் சில முறைகள் அதனைப் பார்ப்பார். அப்போது அவர் மனத்தில், அந்த ஜோடிக் காலணியை அடைய வேண்டுமென்ற ஒரு விதை விதைக்கப்படுகிறது. அதுதான் வாசணை, விதை எனப்படும்.

இன்னும் சிலமுறைகள் பார்த்தபின், அவருடைய மனத்தில், அவா அந்தக் காலணியை அணிந்துகொண்டால் எவ்வளவு அழகாக இருப்பார் என்றும், அடுத்த வாரம் நிகழவிருக்கும் விருந்து நிகழ்ச்சி க்கு, அதை அணிந்துசென்றால், மற்றவர்கள் எப்படியெல்லாம் வியந்து பேசுவார்கள் என்றும், ஒரு காட்சி உருவாகிவிடும். இப்போது

அவர் மனத்தில், ஒரு திடமான ஆசை வளர்த்துவிடுகிறது. இதுவே ஸம்ஸ்காரம். இது வாஸனாவின் வேலை. அந்த விதையிலிருந்து ஒரு செடி வளர்ந்துவிட்டது.

கடைசியில் அவர், அவர், தம்மால் அந்தக் காலணிகள் இல்லாமல் இருக்க முடியாது என்று நம்புகிறார், அவற்றை வாங்கியும்விடுகிறார். இதுவே காமா -செயல் எனும் மரம்.

அந்த விருந்து முடிந்தபிறகும், ஒரு வாரத்திற்கு அந்தக் காலணிகளை, எல்லா இடங்களுக்கும் அவர் அணிந்துசெல்வார்.

வாஸனாக்கள் - விகை, ஸ்ம்ஸ்காரங்கள் - செடி, கா்மா – வளர்ந்த மரம்.

அடுத்த இரண்டு வாரங்களில், அதை அணிவதில் இருந்த ஈர்ப்பு குறைந்து, அதை எப்போதாவது ஒரு நேரம்தான் அணிவார். விரைவில், அந்தக் காலணிகளை மாடிப்படியின் கீழ்ப்பகுதியில் எறிந்துவிடுவார், அவற்றைத் தாம் திரும்பவும் பார்த்துவிட முடியாதபடி!

பிறகு அவர் மற்றொரு ஜோடி காலணிகளைப் பார்க்கிறார்!

இந்த ஸம்ஸ்கார சுழலும் காமச் சுழலும் போய்க் கொண்டேதான் இருக்கும். ஆசைகள், முழுழுமையாக நிறைவேற்றப்படாமல் இருக்கும்வரை, அவை திரும்பவும் தோன்றுகின்றன. இந்த ஸ்ம்ஸ்காரங்கள், திரும்பவும் தோன்றுவதற்காக இருந்துகொண்டே இருக்கும்.

ஒரு ஜோடி காலணிகள் மட்டும் போதும் என்பது நமது நிலையாக இருந்தால், நம்முடைய ஆசையும் அந்த ஒரு ஜோடி காலணியிலேயே நிரைவேறிவிடும் : அதுவே நம்முடைய இயல்பு நிலையாக இருக்கும் : காலணிகளுக்கான நம்முடைய ஸம்ஸ்காரங்கள் நம்மைத் தொந்தரவு செய்யாது. நமக்குக் கிடைத்ததை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம். நமக்குக் கிடைத்த பிறகும், அதை முழுமையாக அனுபவிக்காமல், அடுத்ததற்கு ஏங்கி ஆசைப்பட மாட்டோம்.

ஆனால் வியாபார பலம்வாய்ந்த தொழிலதிபர்கள், தங்கள் நிறுவனங்கள் எவ்வளவு சாதனைகள் செய்தாலும், அவற்றால் அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.

வியாபாரத்தத்துவம் சொல்கிறது, 'எது வளர்ச்சியடையவில்லையோ அது சுருங்கி இறந்துவிடுகிறது' என்று. எனவே அங்கு விரிவடைவதற்கான போராட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

ஒரு வியாபாரம், சுயநல நோக்கம் கொண்டிருக்கும்வரை, அது அந்த முதலாளியின் இலாபமாகவோ, பங்குதாரர்களின் இலாபமாகவோ இருக்கும்வரை, சாதனைகள் மகத்தானவையாகவே இருந்தாலும் அவர்களுக்குத் திருப்தியளிப்பதில்லை, - அது !

தீட்டமிடாத சேவை, தெய்விகத்திற்கான பாதை

அடைய வேண்டும் என்ற போராசை. அது எதைப்பற்றியதாக இருந்தாலும், சுயநல மனப்போக்கையும் நடவடிக்கைகளையும் ஒருவருக்குள் உருவாக்குகிறது. அதனால்தான் 'கூட்டுநிறுவனங்கள் (Corporations), மக்கள் நலனிலும் சுற்றுச்சூழலிலும் அக்கறைகொள்வதில்லை' என்ற கெட்ட பெயரைச் சம்பாதித்திருக்கின்றன.

கூட்டுநிறுவனத்தின் குறிக்கோள்கள், வெளிப்படையானவையாகவும் சமுதாயத்திற்கும் இந்த இந்த உலகத்திற்கும் மேலான பெலனைத் தருவதாகவும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவும் இருந்தால், அவை கூட்டுநிறுவனத்தின் ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிடும். ஒரு தனி மனிதனுக்குள் மலரும் சுயநலமற்ற தன்மை எப்படி அவனுடைய ஸ்ம்ல்காரங்களைக் கரைக்கிறதோ, அதுபோல் கூட்டுநிறுவனத்தின் சுயநலமற்ற தன்மை, அதன் ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிடும்.

சுயநலமான ஆசைகள், ஒருபோதும் நிறைவைத் தருவதில்லை.

அவை நம்முடைய அஹங்காரத்தை ஊட்டி வளர்க்கும் உணவு. இந்தப் பிரபஞ்சத்திற்கு அவை எந்த சேவையையும் செய்வதில்லை !

ஒரு சின்ன கதை

ஒரு பள்ளியில், சாரண இயக்க (Scouts) மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தினமும் ஏதாவதொரு சமூக சேவையாவது செய்ய வேண்டும் என்றும், அதைச் சாரணர் ஆசிரியரிடம் கெரிவிக்க வெண்டும் என்பதே அந்த அறிவுரை.

ஆசைகள், முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருக்கும்வரை, அவை திரும்பவும் கோன்ற்க் கொண்டே கருக்கும்.

மறுநாள் காலையில், மூன்று பேர் கொண்ட மாணவர் குழு ஒன்று சாரண ஆசிரியரைச் சந்தித்து, ஒரு வயதான பெண்மணி சாலையைக் கடக்க, தாங்கள் மூவரும் சேர்ந்து உதவியதாகச் சொன்னார்கள்.

ஆசியருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. " சாலையைக் கடக்க ஒரு வயதான பெண்மணிக்கு உதவுவது நல்ல சேவையே. ஆனால் அதற்கு மூவர் தேவையில்லையே. ஒருவரே போதுமே!' என்றார்.

உடனே அதில் ஒரு மாணவன், 'இல்லை ஐயா, மூன்று பேர் தேவைப்படும் ஒரு சேவை அது, ஏனென்றால் அவர் சாலையைக் கடக்க விரும்பவில்லை, அதனால் நாங்கள் அவரைத் தூக்கிச்செல்ல வேண்டியதாயிற்று! ''என்று சொன்னான்.

திட்டமிட்ட சேவை, நம்மை இது மாதிரியான ஒரு குழ்நிலைக்குத்தான் இட்டுச் செல்லும். அதனால் எதையும் திட்டமிடாதீர்கள். வெறுமனே எங்கு வேண்டுமானாலும் சேவை செய்யுங்கள். அப்படிச் செய்யும் சேவையானது, சக்தியைச் செலுத்தும்.

ஒருநாளில் குறைந்தது ஒரு அரைமணி நேரமாவது சுய நலமில்லாத ஏதாவது ஒரு சேவை செய்யுங்கள்.

நான் என்னுடைய பக்தர்களிடம், தினமும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது சங்கத்திற்காகச் சேவை செய்யுமாறு சொல்வேன். இந்தச் சேவையே தீயானம் !

அது நம்முள் கூட்டு விழிப்புறு மனோநிலையைப் பதியவைத்து, அந்தச் இருக்கும் தெய்விகத் தன்மையை, நாம் உணருவதற்கான பாதையை வகுக்கிறது.

ஒரு தனி மனிதனுக்குள் மலரும் கூயநலமற்ற தன்மை அவனுடைய ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிடும்.

பகவான், காமாநுபந்திரி மறுஷ்ய லோக்க என்று சொல்கிறார். செயல்களுமே சுழல்கின்றன. சேவையையாவது, பெயரையோ குறிக்கோளாகக் கொள்ளாமல் செய்யங்கள்.

மற்றவர்கள் மனத்தில் உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை விதைக்க வேண்டும் என்று முயற்சிசெய்யாதீர்கள். நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர வைக்கத் திட்டமிடாதீர்கள். ஒரு வேலையை அதன் நன்மைக்காகவே செய்யுங்கள்.

மனித நேய சேவை அல்லது அறக்கட்டளை சேவை என்று கருதப்படும் சேவைகளைச் செய்யும்போதுகூட்ட, அந்தச் செயல்களின் பலனில் நம்மைப் பந்தப்படுத்திக் கொள்ளாமலிருப்பதற்கு, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

"உலகத்திலுள்ள மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது,

எதையும் திட்டமிடாதீர்கள். வெறுமனே எங்கு வேண்டுமானாலும் சேவை செய்யுங்கள். அப்படிச் செய்யும் சேவையானது உங்கள் இருப்புத் கன்மையில் அளவில்லாச் சக்கியைச் செலுத்தும்.

செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?'' என்று மக்கள் கேட்கிறார்கள்.

உண்மையாகவே மனிதகுலத்தின் துக்கங்களை உணர்ந்து, அவற்றைக் களைவதற்கு உதவ வேண்டும் என்று நாம் விரும்பி வேலைசெய்தால், அது நல்லது தான். ஆனால் அந்தக் கருணையை உணர வேண்டுமானால், நாம் விரிவடைந்த விழிப்புணர்வு பற்றிய உணர்வு பெற்றிருத்தல் வேண்டும். அது தீயானத்தினால் மட்டுமே சாத்தியம்.

பெரும்பாலும் நாம் சேவைகளை, நன்மதிப்பைப் பெற வேண்டும் என்ற இருக்கிறதோ இல்லையோ, மற்றவர்கள் கவனத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கும் நம்முடைய ஏக்கத்தை ஏதோ ஒரு காலகட்டத்தில் நிறைவேற்றும் என்று நம்பியும் செய்கிறோம். அவை நமக்கு ஏதாவதொரு விதத்தில் நன்மையைத் தரும் என்ற நோக்கத்தோடு செய்கிறோம் அல்லது உஊடகங்களில் நம்முடைய பெயரும் புகைப்பட மும் வெளியிடப்பட வேண்டுமென்ற ஆசையில் செய்கிறோம்

ஆன்மிகப் பாதையில் பாவம் அல்லது புண்ணியம் என்ற கருத்தே கிடையாது. சித்திரகுப்தரோ அல்லது புனித பீட்டரோ மேலுலக நுழைவாயிலில் நின்றுகொண்டு, 'உங்களுக்கு ஒதுக்கப்பட்ட சமூக சேவைகளைப் பூவுலகில் செய்தீர்களா ?'' என்று கேட்கப் போவதில்லை.

நீங்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செயலாற்றும்பொழுது, அதை நீங்களும் சமுதாயமும் - அறச்செயல், வியாபாரம், கருணை - என்று எப்படி வரையறுத்தாலும், அவை சுயநல நோக்கைக் கொண்டிருக்காது.

உங்களுடைய இந்தச் செயல்கள் பயத்தினாலும் பேராசையினாலும் ஊக்குவிக்கப்பட்டவை அல்ல. அதனால் அவை, ஜென்ம ஜென்மமாக நம்மைப் பின்தொடரும் ஸ்ம்ஸ்காரங்களை விளைவிக்காது. பட்டறிவு மனத்திற்கு இதை ஏற்றுக்கொள்வது என்பது கடினமாக இருக்கும்.

ஒரு தனிமனிதனும் கூட்டுநிறுவனங்களும் புதிய திட்டங்களைத் தீட்டி, தா்ம காரியங்களை மேற்கொள்ளும்பொழுது, அவர்கள் தங்கள் வெற்றியை அளப்பதற்கு, தங்களால் அடையப்பட்ட பலன்களைக் கணக்கிடுகிறார்கள்.

தாங்கள் போட்ட பணத்திற்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன்கள் கிடைத்தனவா என்று கணக்கி(டுகிறார்கள்.

நோக்கங்கள் வேண்டும்; வரவு, செலவுப் பட்டியல்கள் உருவாக்கப்படவேண்டும் ; பயன்கள் மற்றும் அதன் அதன் சரிப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செயல்முறைகளைப்பற்றி விளக்கிவிட்டு, பயன்களைப்பற்றி இருப்பதற்கான வரையறுக்காமல் வழிமுறையும் இருக்கிறது. சிறந்தமுறை.

திட்டமிட்ட செயல்முறை பின்பற்றப்படும்போது, பலன்களும்

இயற்கையாகவே தொடர்ந்துவரும்.

சரியான பாதையை நாம் பின்பற்றினால், சரியான இடத்தைச் சென்றடைவோம். இதை நம்புவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது.

'நான் எந்தவிதமான வெகுமதியையும் எதிர்பாராமல் வெலை செய்வேன்' என்று சொல்வதற்கு நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது. ஒரு தன்னம்பிக்கை நிறைந்த மனிதனால் மட்டுமே, செயலுக்கு உரிமைகொண்டாடுவதைவிட 'செயல்புரிவது'தான் முக்கியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

அந்தஸ்து முக்கியமல்ல, எந்தத் தன்மையிலிருந்து செய்கிறோம் என்பதுதான் முக்கியம். நம்மால் இந்த ஸதீயத்தை ஏற்றுக்கொள்ள

முடிந்தால் இருக்கும் உண்மையான சுதந்திரத்தைக் கண்டுகொள்வோம்.

எதிர்காலத்தை ஒருவித கவலையோடு எதிர்கொள்ளுள் தோள்களின் மீது பாரமாக அமர்ந்து, நம்மை அழுத்திக்கொண்டிருக்கிறது.

நாம் கடந்தகால பலன்களைக்கொண்டு, எதிர்காலச் செயல்களை வரையறுக்கிறோம்.

இதுபோன்ற 'செயல்திருத்த வரையறைகளால் ஒரு பலனும் இல்லை. ஏனென்றால், கூயநலமற்ற செயல்கள், ஜென்ம ஜென்மமாக நம்மைப் பிண்கொடரும் ஸம்ஸ்காரங்களை விளைவிக்காது.

கடந்தகாலச் சூழ்நிலையிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். நிகழ்காலத்தில் கவனத்தைச் செலுத்தி, பாதையையும் செயல் முறையையும் வகுத்து, அது பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்வது மட்டுமே.

இதை விழிப்புணர்வுடன் செய்தால், அதற்கான பலன்கள் தானாகவே பின்கொடரும்.

கொடுப்பதே தாநம்

கேள்வி: கேள்விப்பட்டிருக்கினரேம். ஆனால் நீங்கள், தாரம்எல்லாத் தருணங்களுக்கும் நல்லதல்ல என்று சொல்லும்போது குழப்பமாக உள்ளது. தயவுசெய்து விளக்குங்கள்.

முதலில் தாரும் என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். தாரம் என்பது சுயநலமற்ற காரணங்களிலிருந்து ஏற்பட வேண்டும். ஸம்ஸ்க்ரு த்த்தில் செல்வம் என்ற வார்த்தைக்கு தர் என்றும், தானத்திற்கு தார் என்றும் சொல்வார்கள். நம்முடைய செல்வத்தையும் பொருளியல் உடைமைகளையும் விட்டுவிடுவதே தாரும்.

உங்களால் விட்டுவிட முடிவதை 'விடுதல்' அல்ல தாரும். உங்களால் விடமுடிந்ததை விட்டீட்டீர்களானால், அது தாரும் ஆகாது. அது உங்களுடைய சௌகரியத்திற்காகச் செய்வதாகும்.

'வருமான வரி குறைப்பு' வசதியைப் பெறுவதற்காகச் செய்யப்படுவது, தாரம் ஆகாது, அது வியாபாரம். செய்தித்தாளில் உங்கள் பெயரும் புகைப்பட மும் இடம்பெற வேண்டுமென்பதற்காகச் செய்யப்படுவது தாரம் ஆகாது. அது உங்கள் அஹங்காரத்தை ஊக்கப்படுத்தும் செயல் மட்டுமே. சுய நலமற்றதாகவும் எந்தவித உள் நோக்கமற்றதாகவும் தாநம் இருக்க வேண்டும்.

தாரம் என்பது 'நான்' மற்றும் 'எனது' என்ற உணர்ச்சிகளிலிருந்து எழ (மடியாது.

தாரம் என்றால், உங்களால் கொடுக்க முடியாத ஒன்றைக்கூட மற்றவர்களுக்காகக் கொடுப்பது. தாரும் என்பது அடுத்தவர்களையும் உங்களைப்போல் கருதி, உங்களிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் !

உண்மையான தாரம், விரிவடைந்த விழிப்புணர்வு நிலையில் ஏற்படுகிறது. அது நீங்கள், வஸு-தேவ குடும்பகம் - இந்த உலகே உங்கள் குடும்பம் என்று நம்பும்போது நடக்கிறது.

மஹாபாரதத்தில் இருந்து ஒரு அழகான கதை.

பாண்டவர்கள் மஹாபாரதப் போரில் வெற்றி பெற்றபின், பாண்டவப் பேரரசரான நடத்தினார்கள். அந்த யாகம் முடிவுபெற்றபின், வந்திருந்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர்கள் திருப்திபெறும்வகையில் துருமீ வழங்கப்பட்டது.

ஒரு தன்னம்பிக்கை நிறைந்த மணிதனால் மட்டுமே, செயலுக்கு உரிமைகொண்டாடுவதை விட. செயல்புரிவது' தான் முக்கியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

அப்போது, பாதி உடல் மட்டும் தங்கமாக மின்னிக் கொண்டிருந்த கீரிப்பிள்ளை ஒன்று யாகசாலைக்குள் நுழைந்தது. நடைபெற்று முடிந்த யாக சாம்பலில் தன் மீதிஉடலை இப்படியும் அப்படியுமாகப் புரட்டிவிட்டு, "இந்த யாகம் அந்த ஏழை பிராமணன் செய்த யாகத்திற்கு ஈடாகாது!' என்று சொன்னது.

இதைக் கேட்டுத் திடுக்கிட்ட இளவரச ர்கள், இதுபோன்ற யாகத்தை நாங்கள் இதற்கு முன் கண்டதில்லை என்று சொல்லும்போது, நீ மட்டும் இவ்வாறு சொல்வதற்கான காரணம் என்ன?' என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தக் கீரிப்பிள்ளை, கன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தது.

பஞ்சம் தலைவிரித்தாடிய காலம் அது. அப்போது தந்தை, தாய், மகன் மற்றும் மருமகள் என நால்வர் அடங்கிய ஒரு பிராம்மண குடும்பமும் பல நாள்கள் உண்ண உணவில்லாமல் வாடிக்கொண்டிருந்தது.

பல நாட்களுக்குப்பின் அவா்களுக்கு சி றிது மாவு பிஷ்யாகக் கிடைக்கவே, அதை நான்கு பாகங்களாக்கி, இறைவனைப்

பிரார்த்தித்துவிட்டு, உண்ணத்தயாரானபொழுது, வீட்டிற்கு முன். ஒருவர் பிலைக்காக நின்றார்.

உடனே தந்தையானவர், தம்முடைய பங்கு உணவை அவருக்குக் கொடுத்தார். அவர் உண்டுவிட்டு, அது தம்முடைய பசியைப் போக்கப் போதுமானதாக இல்லை என்று சொல்லவே, அடுத்து அந்தத் தாயானவர், தம்முடைய பங்கை அவருக்குக் கொடுத்தார். அதுவும் போதவில்லை என்று சொல்லவே, மகன் தம் பங்கு உணவைக் கொடுத்தார். அப்போதும் அவா திருப்தியடையாததால், மருமக(ளும் தமக்கான பங்கு உணவைக் கொடுத்தார். அதன்பிறகே வந்த விருந்தாளி திருப்தியுடன் சென்றார்.

ஆனால் அக்குடும்பத்தினர், பசியால் அன்றிரவே இறந்தனர். அவர்களின் தியாக உணர்வால் மனம் மகிழந்த இந்திரன், அவர்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச்சென்றார்.

அன்றிரவு அவர்களுடைய வீட்டிற்கு நான் செல்ல நேர்ந்தது. அப்போது என் உடம்பின் பாதி பாகத்தில், விருந்தாளி உண்ணும்போது கீழே சிதறிய மாவு பட நேரிட்டது. உடனே என்னைடைய அந்தப் பாதி உடம்பு தங்கமாக மாறி விட்டது.

அன்றிலிருந்து, என்னுடைய மறுபாதி உடம்பையும் தங்கமாக மாற்ற, தார தாமங்கள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் சென்று, அங்கு நடைபெற்று முடிந்த யாகத்தின் சாம்பலில் விழுந்து புரள்வது என்னுடைய வழக்கம். ஆனால் இதுவரை என்னுடைய அந்த எண்ணம் ஈடேறவில்லை. தாமராஜரின் யாகத்திலாவது என்னுடைய எண்ணம் ஈடேறும் என்று நினைத்து வந்தேன். ஆனால் இங்கும் ஏமாற்றமே மிஞ்சியது என்று கூறியது.

இந்த பூமியில் மிகச்சிறந்த ஆட்சியாளர் என்று புகழப்பெற்ற ஒருவருடைய யாகம்கூட, ஒரு ஏழை பிராமண குடும்பத்தின் தியாகத்திற்கு இணையாகவில்லை,

இதுவே தாரம். தாரத்தில் எதிர்பார்ப்புகளே இருக்க முடியாது. நீங்கள் எப்பொழுது உங்களிடம் இருக்கும் சிறந்த பொருட்களையும், அது தேவைப்படும் அதைப்பற்றிய எண்ணம்கூட இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகர்கிறீர்களோ, அப்பொழுதுதான் உடையவராகிறீர்கள். பெறவில்லையென்றாலும்கூட, நீங்கள் சந்தோஷமாக இருந்தால், நீங்கள் தார சிந்தனை உடையவர்; இல்லையென்றால் அது மற்றொரு வியாபாரமே

மரத்தை வேரோடு சாய்த்தல்

  • 15.3 இந்த மரத்தின் உண்மையான உருவத்தைக் காண முடியாது. அது எங்கே முடிகிறது, எங்கே தொடங்குகிறது, எங்கே இருக்கிறது என்பதையும் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை, பற்றற்றதன்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு ஒருவர் திடமான உறுதியோடு சாய்க்க வேண்டும்.
  • 15.4 ஆதியில் யாரிடம் இருந்து எல்லாச் செயல்களும் தொடங்கியதோ, ஒருமுறை சென்ற ஒருவர், பிறகு அங்கிருந்து திரும்பிவர முடியாத இடம் எதுவோ, அந்த இடத்தைத் தேடிச்சென்று, அந்த மகோன்னத இருப்புநிலையிடம் சரணயடைய வேண்டும்.

ணம்ஸ்காரத்தைச் செயலிமக்க வைக்கும் தந்திரங்கள்

கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்கள் சேர்த்துவைக்கப்பட்டுள்ள, காரண கீர்த்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். அவர் ஒரு அசாதாரணமான விஞ்ஞானி.

ஒரு விஞ்ஞானியால்தான் அத்யத்தை நேர்மையாகத் தேட முடியும். தம் சொந்த நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் விட்டுவிட்டு, தேடுதலின்போது படிப்படியாகக் கண்டுபிடிக்கப்படும் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்குத் தேவையான போதுமான தைரியத்தையும் அவரே பெற்றிருக்க முடியும்.

இந்தப் பண்புகளை நாம் கிருஷ்ணரிடம் காணலாம். அவர் தம்முடைய வெளிப்படுத்துதலிலும் தேடுதலிலும் நேர்மையானவராக இருக்கிறார். அவர் பெரிய லக்குத்திற்காக, தம்முடைய சிறிய புரிந்துகொள்ளுதல்களை விட்டுவிடத் தயாராக இருக்கிறார். அவர் இன்றைய புதுப்பிக்கப்பட்ட ஞானத்திற்காக, நேற்றைய ஸ்த்யத்தை விடத் தயாராக இருக்கிறார்.

நாம் கடந்த வருட ரயில்வே அட்டவணையைப் பார்த்துக்கொண்டு, இன்றைய புகைவண்டிக்குக் காத்திருக்க முடியாது. கிருஷ்ணர், தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்கிறார். இறுதியாக, அவர் இரகசியங்களைப் பொதுமக்களிடம் தைரியமாகத் திறந்துவைக்கிறார். அவர் பதிப்புரிமை பற்றியோ, பட்டறிவுசொத்துரிமை பற்றியோ கவலைப்படவில்லை.

க்ருஷ்ணர், இரகசியங்களைப் பொதுமக்களிடம் தைரியமாகத் திறந்து வைக்கிறார். அவர் பகிப்புரிமை பற்றியோ, பட்டறவு சொத்துரிமை பற்றியோ கவலைப்படவில்லை.

இந்து பாரம்பரியத்தில் அறிவு எல்லோருக்கும் சொந்தமானதாகவும், இலவசமாகக் கற்பிக்கப்பட நம்பப்பட்டது. ஒரு கருத்தே கிருஷ்ணர் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தும் அளவிற்குத் தைரியமாக இருந்தார்.

அவர் அழகாகச் சொல்கிறார்: நரூபமஸ்யேறை த தோபலப்யதே - ஒருவராலும் இந்த மரத்தின் அமைப்பைப் புரிந்துகொள்ள முடியாது.

எவராலும் அது அது எங்கே துவங்குகிறது, எங்கே முடிகிறது அல்லது அதன் மூல ஆதாரம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. இருந்தபோதிலும் பற்றின்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு. திடமான மனோ பலத்தினாலும் உறுதியான தீர்மானத்தினாலும் ஒருவர் இந்த மரத்தை வெட்ட வேண்டும்.

ஒருவர். கம் காரண சூரிக்கில் என்ன சேர்த்து வைத்திருக்கிறார் என்பதை என்பதை எவராலும் பார்க்க முடியாது. அது பண்டோரா பெட்டியைப் (Pandora's Box) போன்றது.

எல்லா ஸம்ஸ்காரங்களையும் பற்றின்மை என்ற உறுதியான கீர்மானத்தினால் வெட்டிவிட முடியும்.

பண்டோரா பெட்டி என்பது கிரேக்க பழங்கதை மரபுப்படி, மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் ஒருசேர உள்ளடக்கிய ஒரு பெட்டி. அதைத் திறந்துவிட்டால் போதும், அதன்பிறகு நிகழ்வது, நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்காது.

இந்தக் காரணச் ரீர்த்தில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் எல்லா ஸம்ஸ்காரங்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் நான்கை அழிக்கும்பொழுது, பத்து ஸம்ஸ்காரங்கள் மேற்பரப்பிற்கு வரும். உள்ளே என்ன இருக்கிறதென்று யாருக்கும் தெரியாது. ஒரே ஒரு விஷயம் மட்டுமே சாத்தியம், எல்லா ஸம்ஸ்காரங்களையும் பற்றின்மை என்ற உறுதியான கீர்மானத்தினால் வெட்டிவிட முடியும்.

உறுதியான தீர்மானத்தினாலும் புத்திசாலித்தனத்தாலும் முழு காரண ச 'ரீர்த்தையும் தூய்மையாக்க முடியும்.

மக்கள் தங்கள் குருவிடம், ஸம்ஸ்காரங்களிலிருந்து வெளியே வருவது எப்படி ? என்று கேட்கிறார்கள்.

திடமான தீர்மானத்தாலும் ஞானத்தாலும் மட்டுமே அப்படிச் செய்ய முடியும். உதாரணத்திற்கு, நாம் அறியாமல் நெருப்பில் கையை வைத்துவிட்டால், நெருப்பிலிருந்து கையை எடுக்க குருவின் உதவியைக் கேட்போமா ? இல்லை. நெருப்பு சுட்டவுடனேயே, கைகளை நாம் எடுத்துவிடுவோம். நம்மிடம் புரிதல் இல்லை என்றால் மட்டுமே குருவிடம் கேட்போம்.

புரிதல் இருந்தால், அதைத் தொடர்ந்து சரியான செயல்கள் நடைபெறும். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அங்கே புரிதல் நிகழவில்லை.

ஸ்ம்ஸ்காரங்கள் விடுபட, அவற்றைக் கரைக்க உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் புத்திசாலித்தனமும் பற்றின்மை என்ற உறுதியான தீர்மானமும் தான்.

கிருஷ்ணர் விவரிக்கிறார். அந்த ஸ்ம்ஸ்கார மரத்தை வெட்டியபின், 'திரும்ப வருதல்' இல்லாத நித்யமான அமைதியிடம் சரணடைந்தபின், நாம் மீண்டும் இங்கே திரும்பி வரமாட்டோம். அந்த இடமே மொத்தப் பிரபஞ்சமும் நிலைபெற்றிருக்கும் இடம்.

அஹங்காரத்தைப் பற்றிய சரியான பூரீதலே நம்மை விடுவிக்கும் யுக்தி

ஃப்ராய்ட் (Freud) மற்றும் ஜங்க் (Jung) என்பவர்கள், அடையாளம் அல்லது அஹங்காரம் என்னும் கருத்தைப் பற்றியும், மூளையின் பாகங்கள் மற்றும் உடல் - மன அமைப்பினைப் பற்றியும் தீவிரமாகப் பகுத்து ஆராய்ந்தார்கள்.

நான் பயன்படுத்துவதிலிருந்தும், அதனுடைய அர்த்தத்தில் இருந்தும் வேறுவிதமாகப் பயன்படுத்துகிறேன்.

உங்களை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்களோ, நம்புகிரீர்களோ அந்த நினைவுகளின் தொகுப்பையே 'அடையாளம்' என்கிறேன்!

உங்களை கருதுகிறீர்களோ, அந்த 'அடையாளம்' என்கிறேன்!

அதாவது உங்களைப் பற்றிய கருத்தை உங்களுடைய வரையறுக்கும் நினைவுகளின் தொகுப்பையே அடையாளம் அல்லது அஹங்காரம் என்கிறேன். இதுவே உங்களுடைய தனித்தன்மையை உருவாக்குகிறது.

நம்முடைய எல்லாத் தீர்மானங்களும்

நம்முடைய இயக்கப்படுகின்றன. நினைவுப் பகிவுகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களின் தொகுப்பாகிறது.

அடையாளத்தால் பெரும்பாலான விழிப்பறு பகுதியில்தான் இருக்கின்றன. நமக்கு இங்கே என்ன சேமிக்கப்பட்டுள்ளன என்று கெரியாகு.

தொண்ணூறு சதவீதத்திற்கு மேற்பட்ட நம் புலன்களின் புரிதல்கள், நம்முடைய விழிப்புணர்வற்ற மனத்தில் சேகரித்து

காரண ச்ரீர்த்தைக் கடந்து ஆண்ம சூரிரத்திற்குள் நகர்ந்து விட்டால், ஸம்ஸ்காரங்களின் உத்தாவிற்கேற்ப நாம் செயல்பட மாட்டோம்.

வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நம்முடைய விழிப்புறு முளை கிரகித்தால், நாம் பைத்தியமாகிவிடுவோம்.

ஒருவருடைய விழிப்பறு மனத்தில் சேமிக்கப்பட்டுள்ள லம்ஸ்காரங்களோ அவருடைய 'அடையாளம்'!

இது, நம்முடைய காரண ச்ரீர்த்தில் இருக்கிறது. ஆழமான மற்றும் ஒருமுகப்பட்ட தீயானத்தினால், இந்த விழிப்புணாவற்ற காரண சீர்ர்த்தை அடைந்து, அங்குச் சேர்த்துவைக்கப்பட்டுள்ள லம்ஸ்காரங்களை நம்மால் கரைத்துவிட முடியும். ஒருமுறை இதைச் செய்துவிட்டால் போதும், மீண்டும் பழைய மனிதனாக ஆக மாட்டோம். ஸம்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டு நாம் சுதந்திரம் பெறுவோம்.

ரித்யானர்த ஸ்புரண நிகழ்ச்சியில், இருளையே நம்முடைய வழிகாட்டும் சக்தியாகக்கொண்டு, செய்வோம். இது உருவகமாக, நாம் சாதாரணமாக அறிந்திராத விழிப்புணர்வின்மையைத்தான் குறிக்கிறது.

உடலை விட்ட ஆன்மா, இந்தக் காரண சீரீர் அடுக்கை உணர்விழந்த நிலையில்தான், கோமா நிலையில்தான் கடக்கிறது. ஆன்மா இந்த அடுக்கைக் கடந்துசெல்லாத வரை, அதனால் மீண்டும் அந்த உடம்பிற்குள் வர முடியும். இதுவே ஸம்ஸ்காரத்தின் சக்தி, வலிமை !

இந்த எண்ணப்பதிவுகளுக்கும் ஆசைகளுக்கும் இந்த ஆன்மாவை மீண்டும் உடலுக்குள் இழுத்துவரக்கூடிய சக்தி இருக்கிறது.

அதனால்தான், நினைவற்ற நிலையில் இருப்பவர்கள் கூட, திரும்பபெறுகிறார்கள். அவர்கள், தங்களின் நிறைவேறாத ஆசைகளால் திரும்பவும் இழுக்கப்படுகிறார்கள். ஆனால், அந்த ஆன்மா இந்தக் காரண சிரீரத்தைக் கடந்து விட்டால், அது மீண்டும் அந்த உடலுக்குள் நுழைய முடியாது; அது அடுத்த அடுக்கான ஆண்ம ச

விழ்புணர்வற்ற நிலை என்று சொல்லப்படும் ஆழ்மனத்தோடு நாம் விளையாடும்போது, உண்மையில் நாம் நமக்குத் தெரியாக ஒன்றோடுதான் விளையாடிக் கொண்டிருக்கிறோம்

ஸம்ஸ்காரங்கள் கரையும் இந்தப் புள்ளியை ஒருமுறை அடைந்து, ஆன்மச் ரீர்அடுக்கிற்குள் நகர்ந்துவிட்டால்,

நினைவுப்பதிவுகளின் உத்தரவிற்கேற்ப, விழிப்புணர்வில்லாமல் நாமும் நடந்துகொள்ள மாட்டோம்.

நாம் முன்பிருந்த நிலையான 'உள்ளுணர்ச்சி' நிலையிலிருந்து 'நுண்ணுணா்வு' நிலைக்கு அறியாமையுடன்கூடிய விழிப்புநிலையில் இருக்க முமாட்டோம் விழிப்புணர்வின் உண்மையான விழிப்புற்ற நிலையில் இருப்போம்.

மனோவசியம், மனக்கட்டுப்பாடு, பாவனை போன்ற பல யுக்திகள் விழிப்புணர்வற்ற நிலையைத்திறப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. விழிப்புணர்வற்ற நிலை என்று சொல்லப்படும் ஆழ்மனத்தோடு அல்லது கனவு மனத்தோடு நாம் விளையாடும்போது, உண்மையில்

நாம் நமக்குத் தெரியாத ஒன்றோடுதான் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

நாம் இந்தப் பகுதிக்குள், தீயானத்தைப் பற்றிய விழிப்புணர்வும், த்யாணத்தின் துணையும் இல்லாமல் ப யண ம் மெ சய் யு ம் பொ மு து , நாம் நம்மால் விளைவுகளைத்தான் அதனால்தான் ஆசைப்படுகிறோம்

கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது, ஏனென்றால் அது உண்மையாக நடந்துவிடவும்கூடும்.

மனத்தின் அழ்மனப்பகுதியோ அல்லது விழிப்பறு பகுதியோ விமிப்பணர்வில்லாமல் செயல்படுத்தப்பட்டால், அது அமைதியற்ற, ஒழுங்கற்ற விளைவுகளையே விளைவிக்கும்.

வயது வந்தவர்கள், தாங்கள் சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதற்குத் தங்கள் பெற்றோர்களே காரணம் என்றும் குறைசொல்வது இப்போதைய நவீன உலகில் அதிகரித்துள்ளது.

ஆனால் இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், இவற்றுள் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டதுதான்! இந்தக் கருத்துக்கள் எல்லாமே, அந்த வாலிபர்களுக்குள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த, மனோதத்துவ சிகிச்சை நிபுணர்களால் விதைக்கப்பட்டவை என தெரியவந்தது.

மனோவசியத்தால் மறைந்திருக்கும் உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் முடியலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம். இருந்தபோதிலும், அதைத் தவறானவர்கள் கையாளும்பொழுது, விழிப்புணர்வற்ற பகுதியில் தீங்கிழைக்கக்கூடிய நினைவுப்பதிவுகளை விதைத்துவிடுகிறார்கள்.

'உயர்' விழிப்புணர்வு தியானத்தின் வாயிலாக, விழிப்பணர்வற்ற பகுதிக்குள் விழிப்புணர்வைக்கொண்டு வருவதுதான், இவ்வாறு சேர்த்துவைக்கப்பட்ட ஸம்ஸ்காரங்களை அழிப்பதற்கான சரியான வழி.

கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் பயன்படுத்தும் 'அஹங்காரம்' என்னும் வார்த்தை ஃப்ராய்ட் (Freud) வார்த்தையைப் போன்றதுதான், இருப்பினும் இரண்டும் சொல்கிறீர்கள். இது எனக்குப் பரியவில்லை, தயவுசெய்து தெளிவாக விளக்குங்கள்.

ஃப்ராய்ட் பற்றி பெற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவர், அவர், பாதிக்கப்பட்ட பலரிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் கிடைத்த

'உயர்' விழிப்புணர்வு த்யானத்தின் வாயிலாக, விழிப்பணர்வற்ற பகுதிக்குள் விழ்ப்புணர்வைக் கொண்டுவருவதுதான், ஸ்ம்ஸ்காரங்களை அழிப்பதற்கான சரியான வழி.

முடிவுகளைக்கொண்டு உருவாக்கினார். அவருடைய கருத்துக்கள், திசையில் செலுத்தியுள்ளன. அவர் இந்த ஆராய்ச்சியை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே வைத்துச்செய்யாமல், ஞானமடைந்த மக்களிடமும் மேற்கொண்டுவிட்டு, அதன்பிறகு ஒரு முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அப்போது மட்டுமே அது சமச்சீரான ஆராய்ச்சியாக இருக்கும்.

ஃப்ராய்டும், அவர் காலத்தைச் சேர்ந்த கார்ல் ஜங்கும் ஜெர்மானிய மொழியில் - 'அது' (It), 'நான்' (I), 'நான் - ஐத் தாண்டியது (Over-I)' என்ற வார்த்தைகளையே உபயோகித்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர்கள்தான் அவற்றை 'அஹங்காரம்'(Ego), மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஃப்ராய்டைப் பொறுத்தவரை, 'அது' அல்லது 'அடையாளம்' என்பது இயல்புணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட இன்பங்களைப் பற்றியது. முதன்மை உணர்ச்சிகளான ஆசையையும் அச்சத்தையும் பற்றியது. இது பெரும்பாலும் விழிப்புணர்வில்லாதது.

'நான் - ஐத் தாண்டியது' அல்லது உயா அஹங்காரம் என்பது சமுதாய, மத மற்றும் அரசியல் கட்டுறு மனப்பாங்குகளின் அடிப்படையிலான மனசாட்சியைப் பற்றியது. தந்தைபோன்று கட்டுப்படுத்தும் ஒருவகை கட்டுறு மனப்பாங்கு இது! நம்மை ஆட்சிசெய்யும் சமுதாய ஒழுக்கமுறை இது.

குரு, 'அவரங்காரம்' என்ற வார்க்கையை வெறுமனே 'நான்' என்பதைக் குறிப்பதற்கு மட்டுமல்லாமல், 'எனது' என்பதைக் குறிக்கவும் உபயோகிக்கிறார்.

நான் என்பது, 'அது'வுக்கும், 'நான் - ஐத் தாண்டியது'வுக்கும் இடையேயான ஒரு அடையாளம். ஃப்ராய்டைப் பொறுத்தவரை அஹங்காரம் விழிப்புணர்வுள்ளதாகவும், மற்றொரு பகுதி விழிப்புணர்வற்றதாகவும் இருக்கிறது. இது ஒரு எளிய விளக்கம்.

ஆனால் உண்மையில், அஹங்காரத்தின் வெளிப்பாடு வேண்டுமானால் இருக்கலாம். விழிப்புணர்வுள்ளதாக

இந்த ஆனால் வெளிக்காட்ட வைப்பது விழிப்பணர்வற்ற நிலையே.

நீங்கள் விருப்பப்பட்ட எந்த வார்த்தையை வேண்டுமானாலும் ஆனால் வார்த்தையை வெறுமனே 'நான்' என்பதைக் குறிப்பதற்கு மட்டுமல்லாமல், 'எனது' என்பதைக் குறிக்கவும் உபயோகிக்கிறார். இவை இரண்டும் இணைந்துதான், 'நீங்கள் யார்' என்று நினைக்கிறீர்களோ, அதை உருவாக்குகிறது.

நீங்கள், உங்களுடைய உடைமைகள் என்று எதைப் பார்க்கிறீர்களோ அதன் அடிப்படையில்கான் உங்கள் அடையாளத்தை வரையறுக்கிறீர்கள்.

நம்மில் பலர், 'நான்' என்பதை உணர்வதால்தான், 'எனது' என்ற கருத்தே எழுகிறது என்று நினைக்கிறோம். இல்லை! உங்களுடைய முதல் தேவைகளான உயிர்வாழ வேண்டுமென்ற விருப்பம் மற்றும் இன்பத் தேவைகள், இவை இரண்டும்தான் 'எனது' என்பதை வரையறுக்கிறது. இவை மூலாதாரச் சக்ரத்திலிருந்து எழுகின்றன.

நீங்கள், உங்களுடைய உடைமைகள் என்று எதைப் பார்க்கிறீர்களோ, அதன் அடிப்படையில்தான் உங்கள் அடையாளத்தை வரையறுக்கிறீர்கள், நீங்கள் என்னவாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையும் முடிவுசெய்கிறீர்கள்.

நான்' என்ற பயத்தையும் பாதுகாப்பின்மையையும் புற்றிய வெளிப்பாடு, ஸ்வாதிஷ்டாநச் சக்ரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

ஆனால் 'எனது' என்ற பேராசையைப் பற்றிய வெளிப்பாடு, முதல் சக்கரமான மூலாதாரச் சக்ரத்திலிருந்து எழுகிறது.

ஜென்ம ஜென்மமாக நம்முள் இருக்கும் பொக்கீஷம்

'நான்', 'எனது' என்ற இவை இரண்டும் சேர்ந்த கலவையைத்தான் குரு குறிப்பிடுகிறார். அஹங்காரத்திற்கு உள்முகம் மற்றும் வெளிமுகம், அதாவது அஹங்காரம், மமகாரம் என்ற இரண்டு முகங்கள் உண்டு.

நீங்கள், உங்களை மற்றவர்களிடம் என்னவாகக் காட்டுகிறீர்களோ, அதுவே வெளியில் நீங்கள் இருக்க விரும்பும் நிலை. இதுவே அணங்காரம் எனப்படுகிறது. இது பெரும்பாலும், நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதைவிட மிகைப்படுத்தியே, உங்களை வெளியே காட்டுவதாகவே இருக்கும். இங்கு உங்களுக்கு நீங்களே மாயையாக இருக்கிறீர்கள். அஹங்காரம், ஒரு மிகப் பெரிய மாயையாக இருக்கிறது.

நீங்கள், உள்ளுக்குள் உங்களைப் பற்றி என்னவாக நினைக்கிறீர்களோ, அதுவே மமகாரம் எனப்படுகிறது. அது எப்போதும் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதைவிட குறைந்ததாகவே இருக்கும்.

''இல்லை, இல்லை, என்னைப் பற்றி நான் உயர்ந்த மதிப்பீடுகான் வைக்கிருக்கிரேன், ' என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பல நேரங்களில் இந்த உயர் சுயமதிப்பீடு, உங்கள் பாதுகாப்பின்மை உணர்விலிருந்து பிறக்கிறது. அது, சமுதாயத்திடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, நீங்கள் எழுப்பிக்கொள்ளும் ஒரு சுவர். நீங்கள் அந்தச் சுவரின் பின்னால் ஒரு கைதியாகவே இருக்கிறீர்கள். இது, உங்களுக்குள் ஒரு குட்சுமமான வன்முறையை வை வளர்க்க ஆரம்பிக்கிறது.

உண்மையாகவே, உங்களைப் பற்றிய உயர் சுயமதிப்பீடு இருக்குமானால், 'நீங்கள்

கடவுள்' என்பதை ஏன் நீங்கள் ஒப்புக்கொள்வதில்லை ? ஏன் முடியாது.

நான், 'நீங்கள் கடவுள்' என்று உங்களுக்குச் சொல்கிறேன். என்னுடைய சங்கம் தொடங்கப்பட்டதே, 'நீங்கள் கடவுள்' என்பதை உங்களுக்குநிரூபிப்பதற்காகவே தவிர, நான் கடவுள் என்பதை நிலைநாட்டுவதற்காக அல்ல !

'நீங்கள் கடவுள்' என்பதற்குப் பதிலாக, 'நீங்கள் பாவிகள்' என்று உங்களை அழைக்கும் உங்கள் மதத்தை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். பாவம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ? அறியாமையே பாவம் !

'நீங்கள் தெய்வம்', 'நீங்கள் கடவுள்' என்ற வகுமத்தை உணராமல்

இருப்பதே அறியாமை; இந்த ஸ்தீயத்தை சமுதாயமும் மதமும் உங்களை உணர்ந்துகொள்ள விடாது. ஏனென்றால், அதை நீங்கள் உணர்ந்துகொண்டால், அவர்களால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

மதங்கள், உங்களை அச்சுறுத்துவதின் மூலமும், ஆசைக்குட்படுத்துவதன் மூலமும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உங்களைக் கொண்டுவர ஆசைப்படுகின்றன. நரகத்தைப் பற்றிய பயம் மற்றும் சொர்க்கத்தைப் பற்றிய பேராசை என்பது, ஒரு கையில் சாட்டையையும் மற்றொரு கையில் காரட்டையும் வைத்துக்கொண்டு, உங்களை ஏமாற்றுவதற்கு பயன்படுக்காம் கருவிகளே!

சமுதாயமும் தன் பங்கிற்கு, பெற்றோர் மூலமாகவும் பெரியவர்கள் மூலமாகவும் ஏனென்றால் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால், நீங்கள் கட்டுப்படுத்த முடியாதவர்களாவீர்கள். நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருப்பீர்கள்.

உங்கள்மீது இவர்களால் சுமத்தப்படும் கட்டுறு மனப்பாங்குகள்தான், உங்களுக்குள் ஸம்ஸ்காரங்களை உருவாக்குகின்றன. இந்த ஸம்ஸ்காரங்களினால் நீங்கள் பந்தத்திற்குள் சிக்கிக்கொள்கிறீர்கள். அதனால் அவர்கள், உங்களைப் பிறப்பிலிருந்தே கட்டுப்படுத்துகிறார்கள்.

அவர்கள் என்பது உயர் அஹங்காரம் - உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் மூத்த சகோதரர்.

இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், பந்தத்தின் தன்மையைப் பற்றியும், நீங்கள் அதை உடைத்தெறிந்து, அதிலிருந்து விடுதலையடைவது எப்படி என்பதைப் பற்றியும் விளக்குகிறார்.

சுத்திகரிக்கும் நுட்பம்

  • 15.5 அஹங்காரத்திலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபட்டவர்கள், தனக்குள் வசிப்பவர்கள், காமத்தைக் கடந்தவர்கள், சுகதுக்கம் என்ற இருமையிலிருந்து விடுபட்டவர்கள், குழப்பம் இல்லாதவர்கள் மற்றும் அந்த மேலான புருஷரிடம் எவ்வாறு சரணடைய வேண்டும் என்று அறிந்தவர்கள்- இவர்கள் அழியா ஞானத்தை அடைகின்றனர்.
  • 15.6 என்னுடைய அந்த நித்யமான விழிப்புணர்வு நிலை சூரியனாலும் சந்திரனாலும் அல்லது அக்னியாலும் பிரகாசிப்பதல்ல. யார் அந்த வெளியை அடைகிறார்களோ, அவர்கள் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை.

காமத்தைக் கடக்கும் நட்பம்

கிருஷ்ணர், முந்தைய அத்தியாயங்களிலும், இந்தக் கருத்தையே வெளிப்படுத்தினார். ஆனால் அப்போது அர்ஜுனனால் அதைப் புரிந்துகொள்ள கேள்விகேட்கும் மனநிலையில் இருந்தார்.

கேள்விகேட்கும் மனநிலையில் இருக்கும்பொழுது, நாம் முழு பாடத்தையும் தவறவிட்டுவிட்டு, மும்முரமாகக் குகள்விகளைத் தயாரித்துக் கொண்டிருப்போம். ஆனால் இப்பொழுது அர்ஜுனனுக்கு, கேள்விகேட்கும் மனநிலை போய்விட்டது. இப்போது அங்கே சந்தேகங்கள் மட்டுமே இருக்கின்றன, கேள்விகள் இல்லை. கிருஷ்ணர், அதே ஸ்த்யத்தை இப்போது மீண்டும் ஆழமாக விளக்குகிறார்.

சீடர், சந்தேகங்களோடு அமர்ந்திருக்கிறார், ஆனால் உள்வாங்கும் திறந்த மனத்துடன்! அவர் தம்முடைய இருப்புத்தன்மையைத் திறந்துவைத்து, குரு தமக்குள் ஊடுருவக் காத்துக்கொண்டிருக்கிறார்.

அர்ஜுனன், கிருஷ்ணரை உள்வாங்கத் தயாராக இருந்தார். அவர் குருவின் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உள்பேச்சு நின்றுவிட்டதால், அங்கே எந்தக் கேள்விகளும் எழுவில்லை. இப்போது அவர், கிருஷ்ணரை உள்வாங்குவதற்குரிய உள்தளத்தையும் விழிப்புணர்வையும் பெற்றிருக்கிறார். அதனால்தான் இப்போது அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஜென் புத்த மதத்தில், விடுகதை போன்ற அல்லது புதிர் போன்ற

வாக்கியங்களை 'கோன்' (Koan) என்று அழைக்கிறார்கள். ஒரே ஒரு வாக்கியம் மட்டும் கொடுக்கப்படும். உதாரணத்திற்கு, 'ஒரு கை இசை ஓசை எப்படி இருக்கும் ?' உன்னுடைய தாயும் தந்தையும் பிறக்கும் முன் உன்னுடைய முகம் எப்படி இருந்தது ? - என்பது போன்ற ஜென் கோன்கள் பல இருக்கின்றன.

அந்தச் சீடர்கள், இந்தக் கோனைப் பற்றி தீயானம் செய்துவிட்டு, அதற்கான பதிலுடன் தங்கள் குருவிடம் திரும்புவார்கள். அந்த குரு, அவர்கள் முதுகில் பலமாக ஓசைவருமாறு ஒரு தட்டுதட்டி, அவர்களை அவர்களுளைய சொந்த வழியில் செல்லுமாறு அனுப்புவார். இறுதியில், அவர்கள் 'ஒரு கை ஓசையை' அனுபவமாகப் பெறுவர்.

'கோன்' என்பது விவரிக்கக்கூடிய பதில் இல்லை. அது ஒரு அனுபவம் மட்டுமே!

இங்கே அஹங்காரத்திலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்களோ, யாரெல்லாம் தமக்குள் வசிக்கிறார்களோ, யாரெல்லாம் வைராக்யும் என்றால் பந்தத்தையும் பந்தமில்லாக் கன்மையையும் கடந்தநிலை.

காமத்தைக் கடந்தவர்களோ, சுகம் துக்கம் என்ற இருமையிலிருந்து சுதந்திரம் பெற்றவர்களோ, யாரெல்லாம் குழப்பமடையாதவர்களோ, பரமாத்மாவிடம் சரணாகதியடைவது பற்றி அறிந்தவர்களோ, அவர்கள் எல்லோருமே அழிவில்லாத நித்ய விழிப்பு நிலையை அடைகிறார்கள், '' என்று சொல்கிறார்.

வார்த்தைகள் என்ன அழகாக உபயோகிக்கப்பட்டுள்ளன. அவர் காமத்தைத் துறந்தவர்கள் என்று சொல்லவில்லை. ஏனென்றால் துறத்தலால் மட்டுமே காமத்தைக் கடந்துவிட முடியாது!

வைராக்யம் என்றால் பந்தத்தையும் பந்தமில்லாத் தன்மையையும் தாண்டியது. ராக என்றால் பற்று என்று அர்த்தம். ஆராக என்றால் பற்றற்ற தன்மையையும் விராக அல்லது வைராக்ய என்றால் பற்று மற்றும் பற்றின்மை இரண்டையும் கடந்தது, எதனோடும் இணைத்துக் கொள்ளாதிருக்கலையே வைராக்ய என்கிறோம்.

ஏழு வயதுவரை நாம் பொம்மைகளின் மீது பற்றாக இருக்கிறோம். எட்டு ஒன்பது வயதில், அவற்றை அவிட்டுவிட நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். இருபது வயதில், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் மீது பற்று அல்லது பற்றின்மை என்பதைத் தாண்டிய நிலையில் இருப்போம். ஆனால் கட்டாயப்படுத்துதலின்பேரில் கைவிடுதலால்,

வேண்டுமானால் கைவிட்டிருக்கலாம்; அனால் அவற்றின் மீதான ஏக்கம் நம் உள் மனத்தில் இருந்துகொண்டே இருக்கும்.

அதனால்தான் உபயோகிக்கிறார். அவர், 'யாரெல்லாம் காமத்தைக் கடந்தவர்களோ' என்று சொல்கிறார்.

இந்த நிலையில், நம்மால் என்ன இயலும் என்பதும் நமக்குத் தெரியும். அது அங்கு இருப்பதும் நமக்குத் தெரியும். நம் தேவைக்கு ஏற்றவாறு அகை உபயோகிக்கலாம் அல்லது தூக்கியெறிந்து விடலாம்.

வாழ்க்கையும் ஒரு பொம்மை மாதிரி தான். இதை முழுதாகப் புரிந்துகொண்டால், நீங்கள் ராஜாவைப்போல் உலகியல்சார்ந்த ராஜாவாக அல்ல, ஞான ராஜாவாக, ராஜரிஷியாக ! வாழ்க்கையும்

ஒரு இது இது புரிந்துகொள்வதற்காக அல்ல, அல்ல, தீயானிப்ப தற்காக! இந்த நுட்பத்தை தீயாணித்தால், இந்தப் பண்புநலன்கள் உங்களுள் மலரத் துவங்கும். மேலும், காரண ச்ரீர்த்தைப் பற்றிய ஒரு தெளிவான கருத்தை உங்களுக்குத் தரும்.

முன்பு அழிப்பதற்கான வழிகளைச் சொன்னார். இப்போது, சரியான ஒரு ச் ரீர்த்தைக் கட்டமைப்பதைப் பற்றிப் பேசுகிறார். அது உங்கள் காரண ச 'ரிரத்தைப் புனரமைப்பது பற்றியது.

கிருஷ்ணர், காரண சீர்ர்த்தைப் புதுப்பிக்கும் யுக்திகளைக் கொடுக்கிறார்.

கிருஷ்ணருடைய வார்த்தைகள் ஜென் கோன்களைப் போன்றவை. உண்மையில் கிருஷ்ணர், அதே வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் உபயோகிக்கிறார். வார்த்தைகளையும் வெளிப்படுத்துதல்களையும் மட்டுமல்ல, அவர், அதே எழுத்துக்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். ஆரம்பத்தில் அவர், இந்த வார்த்தைகளை அறிவுரைகளாகப் பயன்படுத்தினார். இப்பொழுது அதே வார்த்தைகளை, செயல்முறை யுக்திகளாகப் பயன்படுத்துகிறார்.

இந்த அத்தியாயம், நம்முடைய காரண சூரித்தைக் கட்டமைப்பதைப் பற்றியது, ஸ்மீஸ்காரங்களைக் கட்டமைப்பதைப் பற்றியது.

இந்தச் செயல்முறை, நம்முடைய காரண சீர்ரத்தில் நேர்மறையான லம்ஸ்காரங்களை உருவாக்குகிறது. அர்ஜுனன் கேள்விகேட்கும் மன நிலையில் இருந்தவரை, அதே வார்த்தைகள் அறிவுரைகளாகச் சொல்லப்பட்டன. அவர் சந்தேக மனநிலைக்குள் நுழைந்தவுடன், அதே வார்த்தைகள் நுட்பங்களாகத் தரப்படுகின்றன.

சீடர், கேள்விகேட்கும் மன நிலையில் இருக்கும்பொழுது, குருவின் வார்த்தைகள் எப்போது சீடர், கேள்வி கேட்பதை நிறுத்தி,

கவனிக்க ஆரம்பிக்கிறாரோ, அப்போது அதே வார்த்தைகள் வார்த்தைகள் க இருக்கும்.

வார்த்தைகள், அறிவுரைகளாக மட்டுமே இருக்கும்வரை, திறக்க, உங்களுக்குச் சாவிகள் தேவைப்படுகின்றன. அனால் அவை நுட்பங்களாக அதுகும்பொழுது, அந்த நுட்பங்களே சாவிகள் ஆகின்றன. அவை கதவைத் திறக்கத் தயாராக இருக்கின்றன.

அர்ஜுனன், இந்த அத்தியாயங்களின் முந்தைய சாராம்சத்தைப் பெற்றுக்கொண்டார்.

வட இந்து மடாலயங்களில், ஒவ்வொரு முறை உணவருந்தும் முன்பும் இந்த 15வது அத்தியாயம் ஒருப்படுகிறது.

வட இந்து மடாலயங்களில், ஒவ்வொரு முறை உணவருந்தும் முன்பும், இந்த அத்தியாயம் ஓதப்படுகிறது. இந்த 15வது அத்தியாயம் உள் ஒளிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி என்பதால், ஒவ்வொரு உணவுக்கு முன்னும் உச்சாடனம் செய்யப்பட வேண்டும்.

இந்த அத்தியாயத்தின் சொற்களே, உங்கள் காரண ச்ரீர்த்தைப் புனரமைப்பதில் அதிசயங்களை நிகழ்த்தும்.

இதை உச்சாடனம் செய்வதற்கு சில நிமிடங்களே தேவைப்படும். எவராலும் இதைச் செய்ய முடியும். அதன் பொருளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குப் பொருள் விளங்கினால், மிகவும் நல்லது, உங்களுக்குப் பொருள் தெரியாவிட்டாலும், அதை உச்சாடனம் செய்வது மிகுந்த பயனை நல்கவல்லது.

இச்சொற்களை உச்சாடனம் செய்வது, கொரண சிரித்தைச் சீரமைக்கும். குறிப்பாக ச்ரணாகதி மன நிலையில், குருவின் மீதான அலாதி செய்யும்போது, இது நேரடியாகக் காரண ச 'ரீர்த்தைத் தொடுகிறது.

சீடன் குருவுடன் முழுமையாக இசைந்திருந்தால், பிர்பஞ்ச கருப்பு குருவின் மூலமாக அவருக்கு உதவுகிறது.

அர்ஜுனன், முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறார். அவர் குருவாடு

முழுமையாக இணங்கியிருக்கிறார். சீடன் குருவுடன் முழுமையாக இசைந்திருந்தால், பிரபஞ்ச இருப்பு குருவின் மூலமாக அவருக்கு உதவுகிறது.

அர்ஜுனனுக்கு விளக்கங்களோ, தர்க்கமோ தேவையாக இல்லை. அவர் குருவை உள்வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறார். அதனால் கிருஷ்ணர், காரண ச்ரீர்த்தைச் சீரமைப்பதற்கான சொற்களை உச்சரிக்கிறார். அவர், நல்ல ஸம்ஸ்காரங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தருகிறார்.

புலன்கள் எனும் மாய வலை

அவர் சொல்கிறார்: கா்வம், தவறான நம்பிக்கைகள், பெந்தம் இவற்றிலிருந்து நிலைத்திருப்பவா்களும், காமத்தைக் கடந்தவர்களும், சுக துக்கம் என்ற இருநிலைகளிருந்து விடுபட்டவர்களும், குழப்பமில்லாதவர்களும், மேலான பிரபஞ்சத்திடம் ச ரணாகதி அடைய அறிந்தவர்களும், எல்லையற்ற ரீத்யமான விழிப்புணர்வை அடைகிறார்கள்.

காமத்தை விடுவது என்பது ஒரு மனிதனுக்குக் கடினமானது. மாமுனிவர்களும்கூட காமத்திற்கு அடிபணிந்திருக்கிறார்கள். காமம், உடலைப் பொறுத்தது. உடலைப் பற்றிய உணர்வு இருக்கும்வரை, காமம் இருக்கும். உடல் உணர்வுக்கு அப்பால் சென்றுவிட்ட ஒருவரே, காமத்தைத் துறக்க முடியும்.

ஒரு சிறுவன், தன் பெற்றோருடன் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படத்திற்குச் சென்றான். அது, வனவிலங்குகளைப் பற்றிய படம். சிறுவன் அத்திரைப்படத்தை முழுமையாக ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென ஒரு காட்சி, அந்த சிங்கக் குட்டி வேடனின் பொறியில் சிக்கிகொண்டு, பயத்தால் திகிலடைந்துபோயிருக்கும் நிலையைக் காட்டுவதாக இருந்தது.

இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவனால் பொறுக்க முடியவில்லை. அவன், தன் இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்திறங்கி, திரையின் பக்கம் ஒடினான். சிங்க குட்டியைக் கூண்டில் அடைக்க இருந்த வேடனுடன் சண்டையிடுவதுபோல், தன் கை, கால்களை வேகமாக ஒங்கி வீசினான்.

அப்போது திரையில், மற்ற வன விலங்குகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து வேடனை விரட்டி, சிங்கக் குட்டியைக் காப்பாற்றுவதுபோன்ற காட்சி வந்தது.

சிறுவன், தன் இருக்கைக்குத் திரும்பி, தன் சொன்னான்: ''பாருங்கள், நான் முதலில் சென்றதால்கான், எல்லா விலங்குகளும் என்னைப் பின்தொடர்ந்து வந்தன. நாங்கள் எல்லோருமாக அந்த சிங்கக் குட்டியைக் காப்பாற்றினோம். ' '

காமத்தை விடுவது என்பது ஒரு மனிதனுக்குக் கடினமானது. உடல் உணர்வுக்கப்பால் சென்றுவிட்ட ஒருவரே காமத்தைத் துறக்க முடியும்.

சிறுவன், சினிமாவை உண்மையென்று நினைத்ததுபோல், நாம், நம் புலன்கள் மூலம் கிரகிக்கப்பட்ட விஷயங்களை உண்மையென்று நம்புகிறோம். நாம், நம் புலன்கள் உருவாக்கிய மாயையில் சிக்கிக்கொள்கிறோம். நமக்குள் இருக்கும் காமம்தான் மிகவும் சக்தி வாய்ந்த மாயை.

ஆதி சங்காராச்சாரியார் பஜகோவிர்தத்தின் ஸ்லோகங்களில் சொல்கிறார்: நாரி ஸ்தன பர நாபி தேசம் த்ரு 'ஷ்ட்வ மா கா மோறைடவேசம் ஏதரு மாம்ஸ வசா ²தி விகாரம் மனஸி விசிந்தய வாரம் வாரம்

பஜகோவிடுத்தம் கருதப்படுகிறது.

இங்கு சங்கரர், 'பெண்களின் மார்பையும் நாபியையும் பார்ப்பதனால் மாயையின் தீவிரமான ஆசைகளைக் கடந்துவிட முடியாது; இவை வெறும் சதைப் பிண்டங்களே, விரைவில் அழுகக்கூடியதே என்று மீண்டும் மீண்டும் உணருங்கள்' என்கிறார்.

காமத்தை அடக்குவதும், தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பதும் ஒருவரை ஒருபோதும் ஜீவன்முக்தராக ஆக்குவதில்லை. அது ஒருவரைப் பைத்தியமாகத்தான் ஆக்கும்.

மனத்தின் கற்பனைகளை நீக்காமல், உடலால் மட்டும் ப்ரூரிமசாயத்தைக் கடைபிடிப்பது, உடலுறவில் ஈடுபடுவதைவிட, அதிகமான துக்கத்தை உருவாக்கும். ஞானம், ஒருவர் தம் புலன் உணர்ச்சிகளைக் கடப்பதற்கும், மனமற்ற நிலையை அடைவதற்கும் உதவுவதன்மூலம், காமத்தையும் பாலுறவையும் கடக்க உதவுகிறது.

காமத்தைத் தாண்டுவதே விழ்ப்புணர்வின் முதல்படி

ப்ரவற்மசாரி என்ற புரிந்துகொள்ளப்படுகிறது. தவறாக மொழிபெயர்க்கவும் படுகிறது. இந்த வார்த்தை, ப்ரூற்மம் மற்றும் சாய் என்னும் இரண்டு வார்த்தைகளில் இருந்து வருகிறது.

ப்ரூம் என்பது இறுதியான மற்றும் உண்மையான கையம் என்று பொருள். சாய் என்றால் பாதையைப் பின்பற்றிச் செல்லுதல் அல்லது பாதையில்

நானம். ஒருவர் தம் புலன் உணர்ச்சிகளைக் கடப்பதற்கும், மனமற்ற நிலையை அடைவதற்கும் உதவுவதன் மூலம், காமத்தைக் கடக்க உதவுகிறது.

நடத்தல் என்று பொருள். ஸ்தீயம் எனும் பாதையைப் பின்பற்றும் ஒருவரே ப்ரூற்மசாரி.

ஆனால் பெரும்பாலும், இந்த வார்த்தைக்கு 'மணமாகாதவர்' கொடுக்கப்படுகிறது.

ஏனென்றால் வைத காலத்தில் ஒருவரின் வாழ்க்கையின் முதல்நிலை ப்ரூற்மசாயமாக இருந்தது; அக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏழு வயது ஆகும்போது, பெற்றோர்கள் அவர்களை ஆன்மிக குருவின் பொறுப்பில் விட்டுவிடுவர். குழந்தையின் இயல்பான

ஆர்வத்தைப் (மனப்பாங்கை) பொறுத்து, அதற்கு எந்த வகையான கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதை குருதான் தீர்மானிப்பார்.

ஏழு வயதில், அவாகளுடைய மனத்தை நிலைநிறுத்துவதற்கும், உள்ளுலகை நோக்கிக் கவனத்தைத் திருப்புவதற்கும், காயக்ரி மர்த்ரம் கற்றுத்தரப்பட்டது.

விடலைப்பருவம் முடியும்வரை, குழந்தைகள் தங்கள் குருவுடன்இருப்பர். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி, மற்றும் வளர்ப்பு முறையைப் பொறுத்து, அவர்கள் திருமணம் புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள். அதனால் பீரூஸ்மசாயம் என்ற வார்த்தைக்கே 'திருமணமாகாதவர்' என்ற பொருளைக் கொடுத்து விட்டனர்.

இந்தக் குழந்தைகள், அவரவர்களின் அர்வத்தைப் பொறுத்து வெவ்வேறு பாடங்களைக் கற்றார்கள்.

ஆன்மிகத்தில் உறுதியான விருப்பத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு, 6வதங்கள், போன்றவை கற்றுத்தரப்பட்டன.

ஸ்தீயம் எனும் பாதையைப் பின்பற்றும் ஒருவரே பரவறமசாரி.

ஆன்மிகத்தில் இல்லாதவர்களுக்கு, இல்லறக்கில் வாழ்வதற்கான பயிற்சியும் காமசூத்திரமும் கற்றுத்தரப்பட்டது.

காமசூத்திரம், ஆண் பெண் உறவுக்கான ஒரு கையேடு அல்ல. இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான ஞானகுரு வாத்ஸ்யாயனருக்கு, இதை எழுதியபொழுது வயது பதினாறு தான்.

வாத்ஸ்யாயனர், தாம் ஞானமடைந்தவுடன் தம் அன்னையிடம் சென்று, தாம் ஞானமடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால் அவருடைய அன்னைக்கோ அவர் இன்னமும் சிறுகுழந்தைதான்.

தாய் கேட்டார், ''நீ ஞானம் அடைந்துவிட்டதாக சொல்வதன் பொருள் என்ன ? ' '

வாத்ஸ்யாயனர் சொன்னார், ''இப்போது எனக்கு எல்லாம் தெரியும்!''

அவரது தாய் குறுக்கிட்டு, ''நீ ஒரு குழந்தைதான். உனக்கு எல்லாம் தெரியுமென்றால், காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் எனக்குச் சொல்வாயாக, '' என்று சொன்னார்.

வாத்ஸ்யாயனர், காதல், காமம் இந்த இரண்டிலுமே எந்தவித நேரடியான லெளக்க அனுபவமும் இல்லாமல், தம்முடைய தாய்க்கு இவற்றைப்பற்றிக் கற்பித்ததுதான் காமசூத்திரம்.

ஒரு கடந்தவராகவும், அர்த்தனாரீஸ்வரா ஆகவும் அதாவது ஆண் - பெண் இருவருக்குமான இயல்புகளை ஒருங்கே வெளிப்படுத்துபவராகவும்

இருக்கிறார். முக்கியமான இயல்பு, கடந்திருப்பது தான்.

கிருஷ்ணர் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இனிய வார்க்கைகளை மட்டுமே தருவதில் நம்பிக்கை இல்லாதவர். அவர் சொல்கிறார், 'காமத்தை வென்றவர்'. அவர் நேரடியான வார்த்தைகளைத் தருவதில் கண்டிப்பானவர்.

இன விருத்திக்காக இயற்கை கொடுத்த முதல் அடிப்படை உணர்வுதான் காமம். உயர் விழிப்புணர்வை உணர்வதற்கான முதல்

முக்கியமான படியே காமத்தைக் கடப்பதும் அதை வெற்றிகொள்வதும் தான்.

மனிதர்களுக்கு எப்போதுமே காதலுக்கும் காமத்திற்கும் இடையில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கிறது. அவர்கள், மிருகங்கள் மட்டுமே காமம் நிறைந்தவை என்று நினைக்கிறார்கள். உண்மையில், விலங்குகள் மட்டுமே தம் துணையுடன் இணையும்போது தூய்மையான காமத்தில் இருக்கின்றன.

மனிதர்களால் மட்டுமே, அவர்களின் பகுத்தறிவின் காரணமாக, அவர்களால் முழுமுமையான காமத்திலும் இருக்க முடியாது, முழுமையான காதலிலும் இருக்க முடியாது. அதனால்தான், அவர்கள் திருப்தியில்லாத, நிறைவேற்றப்படாத, முழுமையடையாத

பகுதியிலேயே எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

எப்போது ஒரு ஆணும் பெண்ணும், நூறு சதவிகிதம் தூய்மையான காமத்தால் தூண்டப்பட்டு, தாம்பத்தியத்தில் அப்போது அவர்களுடைய இந்தக் காமம், காதலாக மாறுவதைக் காண்பார்கள். அதற்கு, அவர்கள் ஒருவருள் ஒருவர் மூழ்க வேண்டும். பின்பு இந்தச் செயலே, காதலை வெளிப்படுத்தும் ஒரு அனுபவமாக இருக்கும்.

பழங்காலத்தில், கிட்டதட்ட அவர்களது நாற்பதாவது வயதில் உதிர்ந்துவிடும். ஏனென்றால் இவற்றை அவர்கள் முழுமையாக

அனுபவித்திருப்பார்கள். ஒரு முழுமையாக அனுபவிக்கப்படும்போது, அது உங்கள் அமைப்பை விட்டு உதிர்ந்துவிடும்.

திருமணத்தின்போது உச்சாடனம் செய்யப்படும் மந்திரங்களின் பொருள் உங்களுக்குத் தெரியுமா? இந்தக் காலத்தில், திருமணம் நடத்தும் அர்ச்சகர்களுக்கு மட்டும்தான் அர்த்தம் தெரிகிறதேதவிர, வேறு ஒருவருக்கும் தெரிவதில்லை.

ஒரு ஆரை முழுமையாக

அனுபவிக்கப்படும்போது, அது உங்கள் அமைப்பை விட்டு உதிர்ந்துவிடும்.

சப்தபதியில், அதாவது இந்து மத திருமண சம்பிரதாயங்களில், அக்னி சாட்சியாக,

மணமகள் கழுத்தில் மணமகன் தாலியைக் கட்டிய பிறகு, தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்து ஏழு அடிகள் நடந்து, அந்த அக்னியை வலம்வருவார்கள்.

அப்போது தெய்விக மந்திரங்களை உச்சாடனம் செய்வார்கள். அதில் மனைவி கணவரிடம், "என் பதினோறாவது மகனாகுங்கள்," என்று சொல்வார். கணவன் மனைவியிடம், "என் பதினோறாவது மகளாகுங்கள், '' என்று சொல்வார்.

இதன் பொருள், திருமணமான பதினொறாவது வருடத்தில், அவா்களது நெருக்கம், ஒருவருக்கொருவர் குழந்தையாகும் அளவிற்கு உயர்ந்திருக்க வேண்டும் என்பதாகும். அவர்கள் காமசூத்திரத்தின்படி வாழ்ந்தால், நிச்சயமாக அங்கு ஆழமான நெருக்கம் இருக்கும்.

அங்கு அருமையான உறவு இருக்கும். இந்த வார்த்தைகள், கவிதைகள் அல்ல. வாழ்வதற்கான வழிமுறைகள்.

இப்போது, பாதுகாப்பிற்கான அல்லது பொருட்சார்ந்த பயனுக்கான ஆகிவிட்டன. நீங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழலாம். ஆனால் ஒரு குடும்பமாக வாழவில்லை.

உங்கள் வாழ்க்கைக் துணையின் உடலைப் பற்றியும், உங்கள் உடலைப் பற்றியும், நீங்கள்கொண்டுள்ள கற்பனைகளையும் கனவுகளையும் உங்கள் காமத்திலிருந்து நீக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கைத் துணையின் உடலைப் பற்றியும் உங்கள் உடலைப் பற்றியும் நீங்கள் கொண்டுள்ள கற்பனைகளையும் கனவகளையும் உங்கள் காமத்திலிருந்து நீக்க வேண்டும்.

நம்மில் பலர், நம் உடலைப் பார்த்தே வெட்கப்படுகிறோம். நாம் அதை வெறுக்கிறோம். எல்லா உடல் வலிகளும் தீராத தோல் நோய்களும், நம் உடலைக் குறைத்து மதிப்பிடுவதினாலும் அவமரியாதை செய்வதினாலும்தான் ஏற்படுகின்றன.

காமம் அன்பாக மலர், நட்புடன் இருங்கள்

நாம், வேறொருவரைப் பார்த்து அவரைப்போன்று இருக்க வேண்டுமென விரும்புகிறோம். நாம் அவரைபோன்றே நம் உடலை வடிவமைப்பதற்கும், உடை அணிவதற்கும் விரும்புகிறோம். நம் சொந்த உடம்புக்குள் எல்லைகட்டி நிற்பதைவிட்டு, வேறொருவராக இருப்பதற்குக் கற்பனைசெய்கிறோம்.

நம் பெயரைக் கேட்ட மாத்திரத்தில், முதலில் நமக்கு நினைவுக்கு வருவது, நம் முகமே. முழு உடலும் நம் நினைவுக்கு வருவது இல்லை. ஏனென்றால், நாம் நம் உடலுடன் சௌகரியமாக உணரவில்லை.

நம்மை நாமே முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் யாரோ ஒருவரைப் பார்த்து அவரைப் பின்பற்றினால், நாம் மிகச் சிறப்பான அழகுடன் இருக்கலாம். ஆனால் அது, ஒரு நேர்த்தியான அழகாகவோ வசீகரமிக்கதாகவோ இருக்கவே முடியாது. ஏனென்றால், நேர்த்தி, நம் உள்ளிருந்து வருவது.

அடுத்த சில நாட்களுக்கு, குளித்த பிறகு, அன்புடன் உங்கள் உடலைக் கவனியுங்கள். உங்கள் உடலுடன் ஒரு சௌகரியத்தை உணருங்கள். நம் உடல் எந்த நேரமும் ஆனந்த ஊற்றாகவே இருக்கிறது. இருந்தும், நாம் வெறும் வலியைத்தான் உணர்கிறோம்.

நாம் நம் உடலுடன், தளர்வான மனநிலையில் அமர்ந்தோமானால், நம் மனம் அலைபாய்ந்து திரிவதில்லை.

பொதுவாக, நாம் வீட்டில் இருந்தால், நம் மனம் அலுவலகத்தில் இருக்கும். நாம் அலுவலகத்தில் வேலைசெய்யும்பொழுது, ஒரு விருந்தில் இருக்க வேண்டுமென விரும்பும். மொத்தத்தில் நம் உடல் எங்கு இருக்கிறதோ, அங்கு நம் மனம் இருப்பதில்லை.

அது மட்டுமல்லாமல், நாம் சொல்வதைச் செய்யும் வரை, நமக்குக் கீழ்ப்படியும்வரைதான், நாம் ஒரு நபரை விரும்புகிறோம். ஒரு தாய் சொல்கிறார், ''என் மகள், எனக்கு விருப்பமில்லாத ஒருவரைத் திருமணம்செய்துகொள்வதற்கு முன்புவரை, நான் அவளை ஆழமாக விரும்பினேன்! ''

அந்தத் தாய், தம்முடைய கருத்துக்கும் தனிப்பட்ட குணத்துக்கும் மறு உருவமாக மகள் இருக்கும்வரை, தம் மகளின் மீது அன்பை உணர்ந்தார். இதுதான் அன்பா ? இது, உங்கள் அஹங்காரத்திற்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது.

அன்பில் நட்புத்தன்மையைச் சேருங்கள். இப்போதைய நிலையில், நம் காதலும் காமமும் அடுத்தவரை சொந்தமாக்கிக்கொள்வதற்கும்

அவர்கள் நம்மை அவர்களை ஆழ்ந்த வன்முறையையே முலமாகக் கொண்டுள்ளன. நம்முடைய காதலிலும் காமத்திலும் வன்முறையே வேரூன்றியுள்ளது. இது ஒரு போரே.

ஆனால் இதற்குமாறாக நட்புணர்வைச் வாழ்க்கைத்துணையை, அவர் இருக்கிறபடி ஏற்றுக்கொள்ளுங்கள், அவரை வெறுமனே ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவருடைய உடல்,

நாம் நம் உடலுடன், தளர்வான மனநிலையில் அமர்ந்தோமானால், நம் மனம் அலைபாய்ந்து திரவதில்லை.

மனம் மற்றும் இருப்பு -என அனைத்துவகையிலும், உள்ளவாறே வரவேற்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

நாம், நம் உடலுடனாவது சிநேகமாக இருக்கிறோமா? அதுவும் இல்லை. நாம் அப்படி அப்படி இருப்பதில்லை. ஆழ்ந்து நாம் நம் உடலை அவமரியாதை செய்வதையும், முறையில் புரிந்துகொள்ள முடியும்.

நம் கண்கள் தூக்கத்திற்காகக் கெஞ்சினாலும், நாம் நள்ளிரவுவரை தொலைக்காட்சியைக் காண்கிறோம்; வயிறு முழுமையாக நிரம்பியிருக்கும்போதுகூட, உணவை மேலும் திணித்துக்கொள்கிறோம். நம் நுரையீரல்கள் அலறினாலும்கூட, புகைபிடிக்கிறோம். நினைவற்றுப் போகும்வரை குடிக்கிறோம்.

நம் உடலை ஒரு குப்பைத்தொட்டிபோல நடத்துகிறோம். அசுத்தத்தின் நாற்றத்திலிருந்து தப்ப நினைத்து, அந்த அசுத்தத்திற்குள்ளேயே மூக்கை நுழைத்துக்கொள்ளும் பன்றிபோல நாம் இருக்கிறோம். எதை நாம் களிப்பென்று எண்ணுகிறோமோ, அதற்காக நம் உடலை சித்ரவதை செய்கிரோம்.

உலகளாவிய பயங்கரவாதத்தினால் நாம் கவலையடைந்திருக்கிறோம்.

ஆனால் நம் வீட்டிலும், நம் உடலுக்கும் எதிராக நாம் நடத்தும்

உங்கள் வாழ்க்கைத்துணையை, அவருடைய உடல், மனம் மற்றும் இருப்பு -என அனைத்துவகையிலும், உள்ளவாறே வரவேற்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

வண்முறையை அலட்சியம்செய்கிறோம். பிறரைத் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பது மற்றும் நம்மையே துன்புறுத்தி அதில் இன்பம் நம்முடைய வக்ர குணங்கள் நம்மைக் கவலைகொள்ளச் செய்வதில்லை. ஆனால் பயங்கரவாதம் நம்மைக் கவலைகொள்ளச் செய்கிறது.

கு ற் ற வு ணார்ச்சி யாாலும் , குறைகளைச் மற்றவர்களின் சகித்துக்கொள்ள முடியாத நம்முடைய கடுமைத்தன்மையினாலும் நம்மை நாமே சிக்கிரவதை இதுவும் வடிவிலிருக்கும் ஒரு பயங்கரவாதமே.

ஒருவர் ஒருமுறை என்னிடம் சொன்னார், ''என் மனைவி ஒரு ஒரு வக்கீல்.'' நான் கேட்டேன், " "ஒ அப்படியா, அவர் நீதிமன்றமெல்லாம் செல்கிறாரா ?'

அவர் வீட்டிலேயே வாதம் செய்கிறார்!''

உங்கள் வார்த்தைகளும், உங்கள் உடல்மொழியும் மற்றவர்களைக் குணப்படுத்துவதாக இருக்கட்டும். எப்போகும் நட்புத் தன்மையுடன் இருங்கள்.

உங்கள் விட்டுவிடுங்கள். உங்களை நோக்கிய உறவு முறையில் அன்பைச் சேருங்கள். மற்றவர்களிடம்கொள்ளும் உறவுமுறையிலும் அன்பைச் சேருங்கள். அவர்களின் உடல், மனம் மற்றும் இருப்பு உட்பட அனைத்திலும் அன்பைச் சேருங்கள்!

உங்கள் வார்த்தைகளும், உங்கள் உடல்மொழியும் மற்றவர்களைக் குணப்படுத்துவதாக இருக்கட்டும். எப்போதும் நட்புத் தன்மையுடன் இருங்கள். இது ஒரு ஆன்மிக செயல்முறை. விரதங்கள் இருப்பதற்கும், பூஜைகள் நல்லெண்ணத்தையும் உங்களோடு கொண்டுசெல்லுங்கள்.

முதன்முறையாக நீங்கள் மற்றவர்களை சிநேக பாவத்துடன் அணுகும்பொழுது, அவர்கள் உங்களை ஏற்காமல் இருக்கலாம். ஏனென்றால், நீங்கள் இதற்கு முன் அவர்களிடம் காட்டிய அணுகுமுறை சற்று கடுமையாக இருந்திருக்கலாம். ஆனாலும் தளர்வடைந்துவிடாமல் முயற்சியைத் தொடருங்கள். அவா்கள் உங்களிடம் சரியான அணுகுமுறையைக் காட்டாவிட்டாலும், நீங்கள் நிறுத்ததாதீர்கள். அவர்களுக்கு நட்புத்தன்மையை வெளிப்படுத்தும்வரை தொடருங்கள்.

உங்களுடைய மற்றும் மற்றவர்களுடைய உடல், மனம் மற்றும் இருப்பு குறித்த கற்பனைகளை விட்டுவிடுங்கள். உங்களோடும் மற்றவர்களோடும் விடாமல் தொடர்ந்து சிநேக பாவத்துடன் இருங்கள்; காமம் அன்பாக மாறும், உங்கள் இருப்பு, எப்போதும் ரீத்ய ஆனந்தத்தில் இருக்கும் !

மாணச் சமூப அரைவங்கள்

கிருஷ்ணர் சொல்கிறார், ''அந்த நிலையான மேலான விழிப்புணர்வு வெளி, அதாவது என்னுடைய விழிப்புணாவு நிலை சூரியனாலோ, சந்திரனாலோ அல்லது நெருப்பினாலோ பிரகாசிக்கப்படுவதில்லை. அந்த வெளியில் நுழைபவர்கள் எவரும் மீண்டும் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை. ''

இச்சொற்கள் அறிவுரைகள் அல்ல. அவை ஆழ்ந்து சிந்திப்பதற்கானவை. எல்லோரும் கொடுக்கத் தயாராய் இருப்பது, அனால் ஒருவரும் எடுத்துக்கொள்ள விரும்பாதது, அறிவுரையே!

கிருஷ்ணர், நம் காரண ச்ரீரத்தைச் சீரமைப்பதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்கிறார். இந்த வார்த்தைகள், சிந்திப்பதற்கும் தீயானிப்பதற்கும் உரியவை.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தீயான முகாமில், பங்கேற்பாளர்கள் காரண சூர்ரேத்தின் மீது வேலைசெய்யும்பொழுது, இருள்மீது தீயானம் செய்வதற்கு வழிநடத்தப்படுகிறார்கள். இந்த இருள், ஒளியின்மை அல்ல, அது ஒரு சக்தி.

ஆத்மா, இந்தப் பொருட்சார்ந்த உலகைவிட்டுச் செல்லும்போது, காரண ச்ரீரத்தின் சக்திப் பாதை மூலமாகத்தான், தன் இறுதி அடியை எடுத்துவைக்கிறது. ஆத்மா இந்தக் காரண சிரீர்ப் பாதையிலேயே மாட்டிக்கொள்ளும்போது, ஒருவர் கோமா நிலையில் விழுகிறார். ஒருவர் இந்த அடுக்கிலேயேகூட, தடுதல் ஏற்பட்டு நீண்டகாலம் கங்கிவிடக்கூடும்.

"என்னுடைய விழிப்புணர்வு நிலை சூரியனாலோ, சந்திரனாலோ அல்லது நெருப்பினாலோ பிரகாச்க்கப்படுவதில்லை. அந்த வெளியில் நுழைபவர்கள் மீண்டும் இந்த உலகிற்குத் கிரும்புவதில்லை." - ஸ்ரீ கிருஷ்ணர்.

மரணத்தின்போது ஏற்படக்கூடிய வலியை ஸ்தூல சிரிரத்தால் தாங்க முடியாதபோது, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள 'கோமா' நிலைக்குச் சென்றுவிடுகிறது. அந்த நபர் கோமாவில் இருக்கும்வரை, ஆன்மா காரண ச் ரீர்த்திலை இருக்கும். அது, எப்போது வேண்டுமானாலும் காரண சீர்ர்த்திலிருந்து மீண்டும் முடியும். அதனால்தான், பல வருடங்களாகக் கோமாவில் இருந்த பலரும் மீண்டும்

உணர்வுபெற்று எழுந்ததையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எல்லா மாணச் சமீப அரைபவங்களுமே (Near-Death-Experiences) காரண சூர்ர்த்தின் சக்திவரை சென்றுவிட்டுத் திரும்பி வந்தவர்களுடையதே!

ஆத்மா, திரும்பி வரமுடியாத பகுதிக்குச் செல்லும்முன், அதாவது காரண ச்ரீத்தைக் கடந்து ஆன்ம ச்ரீர்த்தை அடையும்முன், பல்வேறு காரணங்களுக்காக, தான் விட்டுச்சென்ற உடலுக்கு மீண்டும் திரும்பிவிடுகிறது. இப்பயணம் கோமாவைப்போல் ஒரு நீண்ட பயணம் அல்ல, இது ஒரு துரிதப் பயணம்!

சக்திவாய்ந்த இருள் அடுக்கான காரண ச்ரீர்த்தில், குரியனோ சந்திரனோ

நெருப்போ சிரிர்த்தைக் கடந்தவர்கள், ஆண்ம சீரிரத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். அதன்பின், உண்மையான விடுதலையைக் குறிக்கும் நிர்வாண சூரித்தை அடைகிறார்கள்.

நம்முடைய சில சில தீயான நிகழ்ச்சிகளில், ஆசிரியர்கள் கற்றுத்தரும் இருள் தீயானம் மூலம், ஒருவர், திருஷ்ணர் விவரிக்கும் இந்த ஸ்த்யத்தின் மீது, இந்த நுட்பத்தின் மீது தியானிக்க முடியும்.

இருள் தயானம். மரணபயத்திலிருந்தும், அடையாளம் பறிபோவதைப் பற்றிய பயத்திலிருந்தும் ஒருவரை விடுவித்துவிடும்.

இந்த மரணபயத்திலிருந்தும், பறிபோவதைப் பற்றிய பயத்திலிருந்தும்

விடுவித்துவிடும். 'நம்முடைய அடையாளம் பறிபோய்விடுமோ' என்ற பயமே மரணபயத்திற்கு காரணமாக இருக்கிறது.

உடலின் மரணம், அது நம்முடைய விருப்பத் தேர்வு அல்ல. அது நிச்சயிக்கப்பட்ட ஒன்று! உடல் - மனத்திலிருந்து ஆன்மா பிரிந்துசெல்வது என்பது வேதனை நிறைந்தது.

விவேகானந்தா், 'அந்த வேதனை, ஆயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டுவதைப் போன்றதொரு வலியைத் தரக்கூடியது' என்கிறார்.

மரணத்தின்போது ஆன்மா இந்த உடல் கூட்டை விட்டு விட்டு, அதி அந்தமில்லா சக்தியில் ஒன்றுசோ்கிறது. பிறகு அது வேறொரு கூட்டில், வேறொரு உடலில் மீண்டும் தோன்றுகிறது.

முன்பே கூறியதுபோல், இது, இது, ஒரு வெள்ளைப் வரைவதுபோன்றதே. இருப்பது பிரபஞ்ச வரையப்பட்ட வெளிக்கோடுகள்தான் ஆன்மாவைச் உடல்கள். இந்த வெளிக்கோடுகள்தான், தனி அன்மாவை, சுயத்தை அந்தப் பிரபஞ்ச ச சக்தியிலிருந்து, ப்ரூற்மத்திலிருந்து பிரிக்கின்றன.

உடலின் மரணம், அது நம்முடைய விருப்பத் தேர்வு அல்ல. அது நீச்சயிக்கப்பட்ட ஒன்று!

நாம் இந்த வட்டங்களை அழிக்கும்பொழுது, வட்டத்திற்குள் இருக்கும்

பின்புலத்தில் இருக்கும் வெண்மையுடன் கலக்கிறது. தனி மனித இருப்பு, பிரபஞ்ச இருப்போடு ஒன்றுசேர்கிறது; சுயம் ப்ரூற்மத்தோடு இணைகிறது.

ஆன்மா, பற்று மற்றும் காமத்தைக் கடந்து, பிரபஞ்ச இருப்பின் மீது உணர்வுகளை ஒன்றாக்கும்பொழுது, அது இன்னொரு சிக்கலான உடல் - மன அமைப்புக்குள் திரும்பிவர வேண்டியிருப்பதில்லை. அப்படியில்லையென்றால், அது மீண்டும், இந்த உடல் - மனம் என்னும் சிக்கலான அமைப்புக்குள் வர வேண்டியிருக்கிறது.

உடல் மரணம் அடைவது நிச்சயம். அனால் ஆன்மாவின் மரணம் சாத்தியமில்லாதது. ஆன்மா வாழ்ந்துகொண்டே இருக்கும். ஆன்மா உயர் விழிப்புணர்வு நிலைகளுக்கு உயரும்பொழுது, மலரும்பொழுது, அது மீண்டும், முற்பிறவியில் கடந்துசென்ற மன அமைப்பிற்குத் திரும்பாது என்பதைக் கிருஷ்ணர் சுட்டிக்காட்டுகிறார்.

உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தும் மரணச் சமீப அமைவம்

கேள்வி : மரணச் சமீப அனுபவம் (Near Death Experience) ஞானத்திற்கு வழிகோலுமா ?

மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு, மீண்டும்வரும் அனுபவங்கள், மேலான ஆன்மிக அனுபவங்கள்தான். ஆனால், அவை ஞான அனுபவங்கள் அல்ல.

நீங்கள் ஞானம் அடைவதற்கு இறக்கவோ அல்லது இறப்பிற்கு அருகில் செல்லவோ தேவையில்லை! மாறாக, நீங்கள் குானம் அடையும்பொழுது, நீங்கள் உங்கள் பழைய அடையாளத்தை இழந்துவிடுவதால், வேறுவகையில் இறப்பீர்கள்.

பலருக்கு அத்தகைய சக்திவாய்ந்த மரணச் சமீப அனுபவம் நிகழ்ந்திருக்கின்றன. அது மிகவும் வித்தியாசமாகவும், அவர்களின் தர்க்க அறிவிற்கு அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஏனென்றால், அது அவர்களை ஒரு உணர்வுமாற்றத்திற்குள் எடுத்துச்செல்கிறது. இந்த உணர்வுமாற்றம், அவா்களுடைய சிந்தனை முறையிலும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான மரணச் சமீப அனுபவங்கள், ஒரே மாதிரியாக இருக்கின்றன. இந்த அனுபவத்தை அடைந்த மக்கள், அவர்கள் உடலிலிருந்து விலகி மிதந்துசென்றதாகச் சொல்கிறார்கள். அவர்கள், தாங்கள் இறப்பதை தாங்களே பார்க்கிறார்கள்; அறுவைசிகிச்சை அறையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியா்களின் செயல்களைப் பார்க்கிறார்கள், பேச்சுக்களைக் கேட்கிறார்கள். சாதாரணமாக ஒருவர் அறுவைசிகிச்சைக்கான படுக்கையில் படுத்துக்கொண்டு பார்க்க முடியாதவற்றைகூட, அவர்கள் பார்க்கிறார்கள்.

அவர்கள் ஒரு இருண்ட வெளியைக் கடந்துசென்று, அதன் இறுதியில் வெளிச்சத்தைக் காண்கிறார்கள். அந்த வெளிச்சம் இதமாக இருக்கிறது. அவர்கள் பயத்தை அனுபவிக்கவில்லை, அமைதியை அனுபவிக்கிறார்கள். இதுவே, அவர்கள் எல்லோருக்குமான ஒரு பொதுவான அனுபவமாக இருப்பதை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, அவர்கள் மருத்துவ ரீதியாக பயற்சிபெற்றவர்களாக அவர்கள் உடல் - மன இயக்கம் மெல்ல மெல்ல செயலிழப்பதைப் பார்க்கின்றனர். அவர்களால் உதவிகேட்க முடிந்தால், உதவி கேட்கலாம். ஆனால், அது எந்தவிதமான பயத்தினாலும் அல்ல. அவர்கள், இருண்ட குகையின் இறுதியில் எது இருந்தாலும், அதை நோக்கி மகிழ்ச்சியுடன் நகரத்

ஆன்மா, உயர் விழிப்புணர்வு நிலைகளுக்கு உயரும்பொழுது, அது மீண்டும், முற்பிறவியில் கடந்துசென்ற மன அமைப்பிற்குத் கிரும்புவதில்லை!

அவரவர்கள் கலாச்சார, மத நம்பிக்கையைப் பொறுத்து, சில உருவங்கள் காட்சியளித்து, கையசைத்து அவர்களைத் திரும்பிப்போகும்படி சொல்கின்றன; அல்லது அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பின்பு அவர்கள் உடலுக்குத் திரும்பிவந்துவிட்டதாக உணர்ந்து, விழித்துக்கொள்கிறார்கள்.

மக்கள், மரணச் சமீப அனுபவத்தைப் பெறும்பொழுது, தங்கள் மரணபயத்தை விட்டுவிடுகிறார்கள். அப்போது அவா்கள் எத்தகைய அனுபவத்தை அடைந்திருந்தாலும், அந்த அனுபவம் துரும் உணர்வுமாற்றம் இதுவே: இந்த வாழ்க்கையில் நாம் அடைய வேண்டியது ஏதோ ஒன்று இருக்கிறது, அது, இந்தப் பொருள்சார்ந்த

நன்மைகளைவிட உயர்வானது, மேலானது என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தருகிறது .

நாம் கட்டுப்பட்டவர்கள் அனைவருமே தாண்டிய நிலையில் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்புடையவர்களே என்ற விழிப்புணர்வை வளர்க்கிறது.

பலர், இவற்றை நம்ப ஆரம்பிக்கிறார்கள். அதிக பொறுமையை வளர்த்துக்கொள்கிறார்கள், உறவுகளில்

செலுத்துகின்றனர். மகோன்னத இருப்பான கடவுளின் மீது அதிக நம்பிக்கை வளர்த்துக்கொள்கிறார்கள்.

நம்முடைய தயானந்த ஸ்பூண தயான முகாமில், இந்த மரண அனுபவத்தைப் போன்ற ஒரு தீயானத்தை பங்கேற்பாளர்களைச் செய்யவைக்கிறோம். நம் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத மரண சமீப அனுபவத்தைப் பெற்றால்தான், மரணபயத்தைக் கடக்க முடியும் என்று சொல்லமுடியாது ; பாதுகாப்பான கட்டுப்பாடான குழ்நிலையில் செய்யப்படும் இந்த த்யானத்தின் மூலமே மரணபயத்தை ஒருவர் விட்டுவிட முடியும்.

பங்கேற்பாளர்கள், அனுபவத்திற்குள்ளும் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். வாழ்க்கை

என்றாலே உடைமைகளையும் செல்வத்தையும் சேர்ப்பதுதான் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அவர்களுடைய வாழ்க்கையில் அடைவதற்கு இவற்றைவிட மேலான ஏதோ ஒன்றும் இருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். தாங்கள் யார் என்பதையும், தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதையும்கூட கண்டறிகிறார்கள்.

ஞானம், உங்களின் இயற்கை நிலை. உண்மையில் நீங்கள் யார் என்பதை உணரும்பொழுது, நீங்கள் ஞானம் அடைகிறீர்கள். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு மரணச் சமீப அனுபவம் ஒருவருக்கு அவருடைய இருப்பை உணரவைத்து, அதன் மூலம் ஞானத்திற்கு வழிகாட்ட முடியும்.

கட்டுறு மனப்பாங்கு

  • 15.7 கட்டுறு மனப்பாங்குடைய இந்த லௌக்க வலகில் வாழும் உயிரினங்கள், நித்தியமான என் இருப்பின் ஒரு பகுதியே. ப்ரக்ரு’தி-செயல்பாட்டுச் சக்தியில் வசிக்கும் மனம் உட்பட அறு புலன்களாலும் அவை ஈர்க்கப்படுகின்றன.
  • 15.8 மலரிலுள்ள நறுமணத்தைக் காற்று எடுத்துச்செல்வதுபோல், இந்த உடல்-மன அமைப்புக்குள் குடிகொண்டிருக்கும் ஜீவாத்மா, ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்குச் செல்லும்போது, இவற்றை (ஆறு புலன்கள்) எடுத்துச்செல்கிறது.

Part 4: Bhagavad Gita Explained _ Chapter 15_Tamil_part_4.md

உங்களின் மதிப்பைக் கீர்மானிப்பது எது ?

கிருஷ்ணர் 'கட்டுறு மனப்பாங்கு' என்னும் புதிய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

அண்மைக் காலத்திய ஆராய்ச்சி, மனிதர்கள் இரண்டு கால்களால் நடப்பதேகூட கட்டுறு மனப்பாங்கினால்தான் என்று கெரிவிக்கிறது.

சமீபத்தில் ஒரு விஞ்ஞான ஆராய்ச்சிக் குழு காட்டிற்குச் சென்றபொழுது, அங்கு ஒநாய்களால் வளர்த்து ஆளாக்கப்பட்ட ஒரு பதினேமு வயது வாலிபனைக் காண்நேர்ந்தது. அவனைத் தங்களுடன் அழைத்து வந்த அவ்விஞ்ஞானிகள் அவனுக்கு இரண்டு கால்களில் நடப்பதற்கும், சில வார்த்தைளைப் பேசுவதற்கும் கற்றுத்தர முயன்றார்கள். அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை, அவன் ஒரு வருடத்திற்குள் இறந்து விட்டான்.

மனிதன், தன் கட்டுறு மனப்பாங்கினால்தான் இரண்டு கால்களால் நடக்கிறான். மனிதனின் இயல்பு என்று நாம் நினைப்பவையெல்லாம் கட்டுறு மனப்பாங்கைத் தவிர, வேறொன்றுமில்லை.

ஜென் புத்த மதத்தில், கட்டுறு மனப்பாங்கை நீக்குவதற்கு ஒரு அழகான நுட்பம் இருக்கிறது.

சாதகன், ஒரு இருபத்தொரு நாட்களுக்குத் தொடர்ந்து ஒரு தனி அறையில் இருக்க வேண்டும். அவன் உணவருந்தலாம், தூங்கலாம். ஆனால், அவன் இதுவரை பார்த்தது, கேட்டது அனைத்தையும்

மனிதனின் கயல்பு என்று நாம் நினைப்பவையெல்லாம் கட்டுறு மனப்பாங்கைத் தவிர, வேறொன்றுமில்லை.

தன் மனத்திலிருந்து தூக்கியெறிந்துவிட வேண்டும். இப்படிச்செய்யும் பட்சத்தில், இருபத்தொரு நாட்களுக்குள் அவர் ஞானமடைந்திருப்பார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இது ஒரு கடுமையான வேலை. இத்தகைய நிலையில் இருபத்தொரு இருப்பதுகூட ஒரு கடினமான வேலைதான்!

இங்கே உலகம்' என்று சொல்கிறார், எல்லாமே கட்டுறுத்தப்பட்டவைதான்.

சரி - தவறு, மரியாதை - அவமரியாதை என எல்லாமே கட்டுறு மனப்பாங்குதான். நாம், மரியாதை மற்றும் அவமரியாதை என்று நினைக்கக் கற்றுத்தரப்பட்டதால் அவ்வாறு நினைக்கிறோம்.

நாம் பல பல வகைகளில் கட்டுறுத்தப் பட்டவர்களாக இருக்கிறோம். ஒரு பிரிவு மக்கள் கூட்டமாகச் சேர்ந்து, நமக்குச் சான்றிதழ் அளித்து, கைகளைத் தட்டினால், அதை நாம் மரியாதை என்று எடுத்துக்கொள்கிறோம். அப்படித்தான் நமக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளது.

ஒருபோதும் அடுத்தவரின் கைகட்டல்களை வைத்து உங்களை எடைபோடாதீர்கள். இந்த அங்கீகார ஏக்கம், பலரைப் பைத்தியமாக மாற்றியுள்ளது.

ஆனால், ஒருபோதும் அடுத்தவரின் கைதட்டல்களை வைத்து உங்களை எடைபோடாதீர்கள். இந்த அங்கீகார ஏக்கம், பலரைப் பைத்தியமாக மாற்றியுள்ளது. கூட்டத்தின் தீர்ப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

ஒரு சின்ன கதை

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பத்தாயிரம் போ் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பத்திரிகையாளர் ஒருவர் சர்ச்சிலிடம், ''இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து, நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

சர்ச்சில் உடனே சொன்ன பதில்: "ஒருபோதும் கூட்டத்தைவைத்து என் முக்கியத்துவத்தை எடைபோடாதீர்கள். இன்று பத்தாயிரம் மக்கள் இருக்கிறார்கள். நாளையே என்னைப் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்போவதாக நீங்கள் அறிவித்தால், அங்கு ஒரு லட்சம் மக்கள் கூடியிருப்பார்கள். அது பார்க்கவேண்டிய ஒருகாட்சி!''

சரி - தவறு, மரியாதை - அவமரியாதை என்பதையெல்லாம் கூட்டத்தின் அளவு முடிவுசெய்ய முடியாது. உங்களின் ஒருங்குவித்தல், சீர்த்தை, ஆழமான சுய - விழிப்புணர்வு இவையே உங்களின் மதிப்பைத் தீர்மானிக்கும்.

தத்த்வமல் - அதுவே நீ ஆகிறாய்

கிருஷ்ணர், உங்கள் காரண சீர்ரத்தை அதாவது உங்கள் ஸம்ஸ்காரத்தை மாற்றி வடிவமைக்கும் தீயான மந்திரத்தை வழங்குகிறார்.

மற்றொரு ஒரு சின்ன கதை

ஒரு குஃபி ஞானி, ஒரு மன்னரிடம் தமக்கான ஒருவேளை உணவைப் பிச்சையாகக் கேட்டார். மன்னன் அவரிடம், ''இங்கு யாருக்குமே உன்னைக் தெரியாது,'' என்று கத்தினார்.

தெரிந்துகொள்வதைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.

அந்த ஞானி சிரித்துக்கொண்டே, "ஆம் நான் இங்கு இருக்கும் தெரியாது. இருப்பினும் என்னை எனக்குத் தெரியும். ஆனால் உங்களைப்பொறுத்த விஷயத்தில், எல்லோருக்குமே உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கு உங்களைத் தெரியாது!" என்றார்.

தன்னைத் தானே தெரிந்துகொள்ளாதவரே, மற்றவர்கள் தம்மைத் தெரிந்துகொள்வதைப் பற்றிக் கவலைப்படுவார்.

காரண மனப்பாங்கிலிருந்து கட்டுறு

விடுபட்ட ஒரு வெளிக்குள் நுழைவீர்கள். அங்கு நீங்கள் எல்லாக் கட்டுறுமனப்பாங்குகளிலிருந்தும் விடுபட்டிருப்பீர்கள்!

கிருஷ்ணர் சொல்கிறார், "அவாகள் மனம் உட்பட ஆறு புலன்களால் கவரப்பட்டிருக்கிறார்கள். ' '

ஐந்து ஆறு புலன்கள் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். என்றாலும் என்னைப் பொறுத்தவரை, மனம் ஒன்றுதான் புலன். புலன்கள் என்று சொல்லப்படும் மற்ற ஐந்து புலன்களும் அதன் அடிமைகளே!

மனம் இங்கும் அங்குமாகத் தாவிக்கொண்டே இருக்கும். மனத்தைக் கையாள முடிந்தால் மற்ற ஐந்து புலன்களையும் கையாள முடியும்.

ஒரு சின்ன கதை :

ராணி மாதலஸா, ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஒவ்வொரு குழந்தையும் இராஜ்ஜியத்தைவிட்டுச் சென்றுவிடுகிறது!

இதைக் கண்ட மன்னா் ஆச்சரியுமடைந்தார். எப்படி வரிசையாக ஏழு குழந்தைகளும் ஞானமடைந்தன என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.

நடந்தது என்ன என்று விஷயத்தை ஆராய்ந்துபார்த்ததில், மாதலஸா தத்தவமனி (அதுவே நீ ஆகிறாய்) என்ற வார்த்தையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டார்.

தக்கீவுமலி என்ற வார்க்கையை வெறுமனே உள்வாங்கியதன் மூலமே, அவர்களின் மன அமைப்பு மாறியிருந்தது. அவர்களின் காரண ச ரீரத்திலிருந்த ஸ்ம்ஸ்காரங்கள் நீங்கின. அவர்கள் ஞானிகளானார்கள்.

ஞானம் அடைதல் என்பது ஸம்ஸ்காரங்களை நீக்குவது. நம்முள் அழப்பதிந்துள்ள பதிவுகளை கட்டுறுமனப்பாங்கைக் கரைப்பது. நாம் நம்முடைய உண்மையான தூய்மையான நிலைக்குத் திரும்புகிறோம். இதனால்தான் ஞான நிலையை ஸமாதி என்ற வார்த்தையால்

குறிப்பிடுகிறார்கள். ஸமாதி என்பதற்கு 'பூர்வீக நிலைக்குத் திரும்புதல்' என்று பொருள்.

பாவம் தொடர்வதில்லை மனப்பான்மையே தொடர்கிறது

காற்று மணத்தை எடுத்துச்செல்வதுபோல், உடல் - மனத்தைத் தாங்கி இந்தப் பொருள்சார்ந்த உலகில் வாழும் ஆன்மா, ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்குச் செல்லும்பொழுது, இந்த ஸம்ஸ்காரங்களையும் தன்கூடவே எடுத்துச்செல்கிறது.

ஒரு உடலில் இருக்கும் ஸம்ஸ்காரங்கள் அந்த உடலை விட்டுச் சென்றவுடன்,

வேறொரு ரு உடலில் தஞ்சமடைகிறது. கிருஷ்ணர், இவ்விதம் தொடர்ந்து நடக்கும் ஸம்ஸ்காரங்களின் விஷச் சுழற்சியை ஸம்ஸாரம் என்று குறிப்பிடுகிறார்.

கிருஷ்ணர், 'இவற்றை எடுத்துக்கொண்டு' என்று சொல்கிறார். 'இவற்றை' என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார்? முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணார், மனத்தையும் சேர்த்து ஆறு புலன்களைப் பற்றிப் பேசினார். அதைத்தான் இங்குக் குறிப்பிடுகிறார்.

காற்றானது நறுமணத்தை எடுத்துச்செல்வதுபோல், ஆன்மா ஒரு உடலைவிட்டு வேறொரு உட்டலுக்குச் செல்லும்பொழுது, ஸம்ஸ்காரங்களை எடுத்துச் செல்கிறது.

காற்றானது நறுமணத்தை எடுத்துச்செல்வதுபோல், ஆன்மா ஆரு உடலைவிட்டு வேறொரு உடலுக்குச் செல்லும்பொழுது, ஐந்து புலன்களுடன் ஆறாவதாக மனத்தையும் சேர்த்து எடுத்துச்செல்கிறது.

காற்று எப்படி நறுமணத்தை எடுத்துச்செல்கிறதோ அதேபோல், விழிப்புணர்வுநிலை ஸம்ஸ்காரங்களை, ஒரு எடுத்துச்செல்கிறது.

கிருஷ்ணர், மக்கள் அடிக்கடி கேட்கும், ''ஒரு பிறவியிலிருந்து மற்றொரு பிறவிக்கு ஒருவருடைய பாவங்கள் பின்தொடர்ந்து வருகின்றனவா,'' என்ற பாவங்களைப் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கிறார். பாவங்கள் ஒருபோதும் நம்மைத் தொடர்வதில்லை. அதன் பதிவுகள்தான் நம்மோடு பயணிக்கின்றன.

உதாரணமாக, ஒரு மனிதர் நூறு கொலைகள் செய்கிறார் என்றால், அந்த எண்ணிக்கை தொடராது, ஆனால் அந்த வன்முறை என்ற அடிப்படை மன அமைப்பு அவரைத் தொடரும். வெறும் அந்த மன அமைப்புத்தான் எடுத்துச்செல்லப்படுகிறது. அது அவரைத் தொந்தரவு செய்யும்.

காமா என்னும் கருத்து, பல நேரங்களில், நம்முடைய எதிர்மறை செயல்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு முகமூடியே. 'இது நம் காமா', 'இது நம் விதி', 'இது நம் தலையெழுத்து, நாம் என்ன செய்ய முடியும் ?', 'என்ன நடக்க வேண்டும் என்று இருந்ததோ, அதுவே நடந்தது' என்று சொல்லியே, நம்முடைய எதிர்மறை செயல்களை நியாயப்படுத்துகிறோம். இது வெறும் கற்பனையே.

விதியா ? விருப்பமா ?

ஒரு செயலைத் தீர்மானிப்பதற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் நமக்குச் சுதந்திரம் இருக்கிறது. மாறாக ஜ்ஞாரகுருவிற்குத்தான் அச்சுதந்திரம் இருப்பதில்லை !

ஜ்ஞாடுகுழுமார்கள், செல்லப்படுகிறார்கள். அவா்கள் அவளால் வழிநடத்தப்படுகிறார்கள். அந்தப் பிரபஞ்ச சக்தி, அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறதோ, அதைச் செய்ய வழிநடத்துகிறது. புரிந்துகொள்ளுங்கள், ஒரு அடியைக்கூட நான் சுயமாக எடுத்து வைக்க முடியாது. என்னுடைய கை கால்கள்கூட அவளின் விருப்பட்டியேகான் அசையும்.

ஒரு சாதாரண மனிதர், அவருடைய விதியின் கட்டுப்பாட்டில் இருப்பார். நம் வாழ்வில், இயற்கை நமக்குப் பல பாதைகளை வழங்குகிறது, நம்முள் பல பாதைகளைத் திறந்துவைக்கிறது. எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். நாம்தான் நம் பாதையைத் தீர்மானிக்கிறோம்.

நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை, நம் ஆன்மா சுமந்துவரும் வாஸனாவே தீர்மானிக்கிறது. இது, நம் கடந்தகால செயல்களின் நட்பமான பதிவுகளான ஸம்ஸ்காருத்தளும் காமங்களும் ஆகும்.

அந்த வாணனாவை, துர்நாற்றமாகவோ அல்லது அருமையான ஒரு நறுமணமாகவோ மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அது நம் கையில்தான் இருக்கிறது. அது வரையறுக்கப்பட்டதோ அல்லது முன்பே கீர்மானிக்கப்பட்டதோ அல்ல.

நாம் அதே ராட்டினத்தில் சுற்றிச் சுற்றிப் பயணிக்க விரும்புகிறோமோ அல்லது அதை சுதந்திரமாக நடக்க முடிவுசெய்கிறோமோ என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

இராமகிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார். அதாவது நாம் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்வதுபோல், ஆன்மா ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் செல்கிறது. அவர் தம் ஸ்தூல

வாஸனாவை, துர்நாற்றமாகவோ அல்லது அருமையான ஒரு நறுமணமாகவோ மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது.

உடலைவிட்டுச்சென்றபோது, அவர் மனைவி அன்னை சாரதாதேவியார் தம் நகைகளைக் கழற்றவிருந்தார்.

சாரதாதேவியார் அவரது மங்கல நாணைக் கழற்றமுற்படும்பொழுது, இராமகிருஷ்ணர் அவர் முன் தோன்றி, "நான் எங்கே சென்று விட்டேன்? இன்னொரு அறைக்குத்தானே சென்றிருக்கிறேன். அதனால், நகைகளைக் கழற்றாதே, " என்று சொன்னார்.

அப்போது முதல், தம்முடைய இறுதிக்காலம்வரை, அன்னையார் அவரின் அந்த வார்த்தைகளைப் பின்பற்றினார். இன்றைய காலகட்டத்தில் இது சுலபமாகத் தெரியலாம். ஆனால், அந்தக்காலத்தில்,

ரைம் காரண ச்ரீர்த்தை ஸம்ஸ்காரங்களால் ந்ரைத்துக்கொள்ளாக போது, மரணத்தைக்கண்டு நாம் பயப்பட மாட்டோம்.

பழைமையில் உ ஊறிப்போயிருக்கும் ஒரு வைதீகக் குடும்பத்தில், அதுவும் ஒரு கிராமத்தில் இப்படிச் செய்வது மிகவும் கஷ்டமானதொரு செயல். ஆனால் அன்னை சாரதாதேவி மிகவும் தைரியமானவர்.

சமூகக் எல்லாச் கட்டுறு மனப்பாங்குகளையும், பதித்திருக்கும் விட்டுவிட்ட ஒருவர், ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்குச் செல்வதுபோல, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு எளிதாகச் செல்கிறார்.

நாம் ் வீடுகளைக் கட்டிக்கொள்கிறோம், வங்கியில் பணமும் நிறைய சேர்த்துவைத்துக் கொள்கிறோம், கொள்கிறோம், இறுதியில் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கும் நேரத்தில், திடீரென்று மரணம் நம் முன்னால் வந்து நிற்கிறது. நாம் மரணத்தைக்கண்டு பயப்படுவதற்குக் காரணம், அது நம்மிடம் உள்ள அனைத்தையும் பறித்துக்கொள்கிறது என்பதற்காகத்தான்.

நாம் எதிலும் பற்றின்றி இருக்கும்போது, காரண ச்ரீர்த்தை ஸம்ஸ்காரங்களால் நிறைத்துக்கொள்ளாதபோது, மாட்டிக்கொள்ளாமல் இருக்கும்போது, நாம் மரணத்தைக்கண்டு பயப்பட மாட்டோம். அது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குப் போவதைப் போன்றதே என்பதைப் புரிந்துகொண்டிருப்போம்.

கிருஷ்ணர் வேறு ஒரு இடத்தில் இதைப்பற்றிச் சொல்லும்பொழுது, 'ஒரு உடையிலிருந்து மற்றொரு உடைக்கு மாறுவதுபோல்' என்கிறார்.

நீங்கள் இங்கு எதேச்சையாக வரவில்லை

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அடிக்கடி சொல்லும் ஒரு கதை :

தர்த்ர சாம்ஸ்த்ரத்தை ஆழமாகப் பயிற்சிசெய்துகொண்டிருந்த ஒரு ஆன்மிக சாதகர், பிரபஞ்சத் தாயை வணங்குவதற்காக காட்டிற்குச் சென்றார். சடங்குகளுக்குத் திரு தேவையான அனைத்துப் பொருட்களையும் சேகரித்துக்கொண்டு, பிரார்த்திக்க ஆரம்பித்தார். அப்போது, அங்கு வர்க புலி ஒன்று அவரைக் கொன்றுவிட்டது. அப்போது அந்த வழியே சென்றுகொண்டிருந்த ஒரு வழிப்போக்கா் இதைப்பார்த்து விட்டு, தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேகமாக ஒரு மரத்தில் ஏறிக்கொண்டார்.

பின் அந்தப் புலி அங்கிருந்து சென்றவுடன், அவர் கீழே இறங்கினார். அப்பொழுது அவர் மனத்தில் தோன்றிய ஒரு சிறு ஆர்வத்தின் காரணமாக, அந்தப் பிணத்தின் அருகே அமர்ந்து, பிரார்த்திக்க ஆரம்பித்தார். அப்போது திடீரென பிரபஞ்ச அன்னை அவர் முன்னே கோன்றி, அவரிடம், "நீ செய்த பிரார்த்தனையால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்," என்றார்.

இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அந்த மனிதர், ''அம்மா, இறந்துபோன அந்த மனிதர் மிகவும் தீவிரமாகப் பிரார்த்தித்தார். இருந்தும் அவர் கொல்லப்படுவதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள். இவ்வழியாகச் சென்று கொண்டிருந்த நான், அவர் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து

இப்போதுதான் உங்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தேன். ஆனால், என்னை மட்டும் ஆசீர்வதிக்கிறீர்களே இது ஏன் ?' என்று கேட்டார்.

அதற்கு தேவி, "இதற்கு முன் பல பிறவிகளாக நீ என் பக்தனாக இருந்தாய். உன்னுடைய ஸம்ஸ்காரங்களும் வாஸனாக்களும்தான் உன்னை இங்கு அழைத்து வந்துள்ளன. அவற்றின் பலனாகத்தான் நான் உன் முன்பாகத் தோன்றிணேன்," என்று சொன்னார்.

நாம் மரணத்தைக்கண்டு பயப்படுவதற்குக் காரணம், அது நம்மிடம் உள்ள அனைத்தையும் பரித்துக் கொள்கிறது என்பதற்காகத்தான்.

இதற்கு முந்தைய பிறவிகளிலிருந்து இந்தப் பிறவிக்கு, ஆன்மாவால் எடுத்து வரப்பட்ட வாஸனாக்கள், மன அமைப்பு மற்றும் ப்ரார்க்க காமாக்கள்தான் இந்தப் பிறவியின் ஸம்ஸ்காரங்களைத் தீர்மானிக்கின்றன. வாஸனாக்கள், மன அமைப்பு மற்றும் ப்ரார்க் காமாக்களின் விளைவே ஸம்ஸ்காரங்கள். இது எப்போதுமே ஒரு இன்ப, துன்பக் கலவையாகவே இருக்கிறது.

இல்லை!

கேள்வி: சுவாமிஜி, நாம் எதைச் செய்கிறோமோ அதைக் கட்டுறு மனப்பாங்குதான் செய்யவைக்கிறது என்று தாங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் எதைச் செய்ய வேண்டும் என்பதை உத்தரவிடக்கூடிய, முன்கூட்டியே திட்டம் வகுக்கப்பட்ட ஒரு அமைப்புதான், மனித உடல் - மன அமைப்பை இயக்குகிறதா ?

இந்தக் கேள்விக்குப் பல நிலைகளில் பதில்சொல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஆரம்ப கால அறிவியல், உடல் வளரவளர, அதனுடன் மூளையும் இயல்பாகவே வளர்கிறது என்று நம்பியது. பொதுவான உடற்கூறுகளைப் பொறுத்தமட்டிலும்கூட, ஒரு மனிதர் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும், அவர் ஒரே மாதிரியான வளர்ச்சியையே பெறுவார் என்று நம்பியது.

சில வருடங்களுக்கு முன்பு, லாஸ் ஏஞ்சலீஸ் புறநகர் பகுதியில், பூட்டப்பட்ட ஒரு அறையிலிருந்து ஒரு இளம் பெண்ணை மீட்டார்கள்.

வாஸனாக்கள், மன அமைப்பு மற்றும் ப்ரார்ப்த காமாக்களின் விளைவே கது எப்போதுமே ஒரு இன்ப, துன்பக் கலவையாகவே இருக்கிறது. அவளது பெற்றோர், ஏதோ காரணத்திற்காக அவளை தனிமையிலேயே யே இருக்கவைத்தார்கள். அவளை அந்த அறையிலிருந்து மீட்ட பிறகும்கூட, அவளால் நடக்கவோ, யார் பேசவோ. புரிந்துகொள்ளவோ பத்து வருடங்களுக்குப்பின் அவள் இறந்தேபோய்விட்டாள் என்று நினைக்கிலே றன். பிரேதப் பரிசோதனை செய்த நரம்பியல் வல்லுனர்கள், அவளது பல பகுதிகள் சொன்னார்கள்.

மூளையின் அளவிற்கு உபயோகிக்கிறோமோ, அந்த அளவிற்கே நமது மூளை செல்களுக்கு இடையேயான தொடர்புகள் (Synaptic) சிறப்பாக அமையும் என்பதை இப்போது தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.

நம் மூளை, அதனுள் லட்சக்கணக்கான ... லட்சக்கணக்கான என்று சொல்வதைவிட கோடிக்கணக்கான என்று சொல்லலாம், கோடிக்கணக்கான தொடர்புகளை சாத்தியத்துடன்தான் எந்த அளவிற்கு அந்த மூளைப்பகுதியை

டிளையின் ஒரு பகுதியை எந்த அளவிற்கு உபயோக்க்கிறோமோ, அந்த அளவிற்கே நமது மூளை செல்களுக்கு இடையேயான தொடர்புகள் (Synaptic) சிறப்பாக அமையும்

உபயோகப்படுத்துகிறோமோ, அதைப்பொறுத்தே, அந்தப் பகுதியின் இணைப்புகள் முடுக்கிவிடப்படுகின்றன.

நடத்தலும் அசைவுகளும் சில இணைப்புக்களைச் செயல்படுத்தச் செய்கின்றன. பேசுவது, கேட்பது, பார்ப்பதுபோன்ற புலன்கள் வழியாக நம்முள் செல்லும் விஷயங்கள், சில இணைப்புக்களை உயிர்பெறச் செய்கின்றன.

இந்தப் நிறைய இணைப்புகள் படுத்தப்படாமலேயே அவை இருந்துவிட்டன.

இந்த உடல் - மனம் என்ற அமைப்பிற்குள் இயல்பாகவே இருக்கும் அளப்பரிய உள்ளாற்றலை, இந்தக் கட்டுறு மனப்பாங்கு வீண்டித்துவிடுகிறது என்ற உண்மையை அறிவியல் உலகும் ஏற்றுக்கொள்கிறது. அது எதிர்மறையாகவும் இருக்கலாம்.

நேர்மறை எதிர்மறை என்பதெல்லாம் பெரும்பாலும் வட்டாரக் கலாசாரம் மற்றும் வளர்க்கப்படும் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவுசெய்யப்படுகிறது.

பிறக்கும்போதே இருக்கும் இந்த உடல் - மனம் அமைப்பானது,

சில தன்னிச்சையான, சுயமான செயல்களுக்கான பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறது. இதுகூட, அளிக்கப்படும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படை பராமரிப்பு விஷயங்களைப் பொறுத்தே அமைகிறது.

அதனால் எதுவுமே முன்பே முடிவுசெய்யப்பட்டது இல்லை. ஆம் நம்முடைய முந்தைய பிறப்பின் கடைசி ஆசையே, இந்தப் பிறவியில் நம் உடல் எந்தச் சூழ்நிலையில் பிறக்க வேண்டும் என்பதை முடிவுசெய்கிறது என்பது உண்மைதான். அனாலும் அந்த முடிவு, இந்த உடல் எப்படிப்பட்ட பரிமாணத்தை அடையவேண்டும் என்பதற்கான சாத்தியங்களாக மட்டுமே இருக்க முடியும். இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற ஒரு நிச்சயிக்கப்பட்ட முடிவாக இருக்க முடியாது.

குவாண்டம் இயற்பியல் வல்லுநர்கள் (Quantum physicists) இதைப் புரிந்துகொண்டு, நடப்பதற்கான சொல்லிக்கொண்டிருப்பதுபோல், அவை இயற்கையின் விதிப்படி தீர்மானிக்கப்படுவதில்லை அறிந்திருக்கிறது.

இயற்கை இருக்கிறது, அவ்வளவுதான். அதற்கென்று விதிகள் கிடையாது. அது விதிகளுக்கு அப்பாற்பட்டது.

உங்களின் ஸம்ஸ்காரங்களே நீங்கள்

  • 15.9 ஜீவாத்மாவானது, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் சென்று, காரண ச்ரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் புதிய கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன்கூடிய புதிய உடலை எடுத்து, தன் புது மன அமைப்பை அனுபவிக்கிறது.
  • 15.10 குணங்களுடன்கூடிய ஜீவாத்மாவானது எப்படி ஒரு உடலில் நுழைகிறது, அனுபவிக்கிறது, அவ்வுடலைத் துறந்து செல்கிறது என்பதை அறியாமையில் மூழ்கியிருக்கும் முடர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஞானக்கண் பெற்றிருப்பவரே இதை அணைத்தையும் காண்கிறார்.

நம்முடைய மரண செயல்முறைக்கான ஒத்திகையே

அழியா ஆன்மாவானது, ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்குச் செல்லும் போது, அடிப்படையில் புதிய உடலையெடுத்து, கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன், தன் புது மன அமைப்பை அனுபவிக்கிறது.

உங்களுடைய அடிப்படையில்தான், உங்களுடைய உடலையே உருவாக்குகிறீர்கள் என்கிற உண்மையை ஆன்மா வெளிப்படுத்துகிறது.

நம்முடைய காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களைப் பொறுத்தே, நம்முடைய புலன்களை நாம் உருவாக்குகிறோம். உடற்கூறுகளுக்கும் மனத்திற்கும் இடையேயான தொடர்பு சாஸ்த்ரத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்நூலைக் கற்றுத்தேர்ந்தவர்கள், நம்முடைய உடற்கூறுகளை வைத்தே, நம்முடைய மன அமைப்பைக் கணித்துவிடுவர்.

நம்முடைய காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களைப் பொறுத்தே, நம்முடைய புலன்களை அதாவது, நம்முடைய மன அமைப்பைப் பொறுத்தே, ஆன்மாவானது புலன்களைத் தேர்வுசெய்கிறது என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இது, நாம் இன்னொரு உடல் எடுக்கும்போது மட்டும் நடப்பதல்ல. ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து நாம் வெளிவரும்போதும், நம்முடைய புலன்கள் மீண்டும் பிறக்கின்றன. அதனால், நம்முடைய மன அமைப்பினை மாற்றுவதாலேயே, சிறிதுகாலத்திலேயே நம்முடைய முக அமைப்பை மாற்றிவிட முடியும்.

உடல் முழுதும் பரவியிருக்கிற புத்திசாலித்தனத்தைத்தான் மனஸ் என்கிறோம் ! நம்முடைய ஒவ்வொரு திசுவிலும் இந்த புத்திசாலித்தனம் உறைந்துள்ளது. ஒவ்வொரு திசுவும், மரபுசார்ந்த புத்திசாலித்தனத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலும் மனமும் தனித்தனி அமைப்பு அல்ல. அது உடல் - மனம் அல்லது மன - உடல் என்கிற ஒரே அமைப்புதான்.

இந்த உடல் - மன அமைப்பிற்குள், ஒவ்வொரு வினாடியும், ஆயிரமாயிரம் திசுக்கள் இறக்கின்றன, புதிதாய் ஆயிரமாயிரம் திசுக்கள் பிறக்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இத்தொடர் செயல்முறை, இயற்கை அல்லது பிரபஞ்ச புத்திசாலித்தனத்தின் ஆணைப்படிதான் நடக்கிறது. இது நம்மால் நடக்கவில்லை, நம்மையும் மீறி நடக்கிற ஒரு விஷயம்.

இந்தச் வருடத்திற்குள்ளாகவே, உடலின் ஒவ்வொரு பாகமும், ஒவ்வொரு திசுவும் புதுப்பிக்கப்படுகின்றன. இன்று இருக்கும் நமது இந்த உடலும், ஒரு வருடத்திற்கு முன்னால் இருந்த நமது உடலும் ஒன்றல்ல. அதேபோல இன்று இருக்கும் நமது உடலும், ஒரு வருடத்திற்குப் பிறகு இருக்கப்போகும் நமது உடலும் ஒன்றாக இருக்காது. இது வெறும் கட்டுக்கதையல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை

உடலும் மனமும் தனித்தனி அமைப்பு அல்ல. அது உடல் - மனம் அல்லது மன - உடல் என்கிற ஒரே அமைப்புதான்.

பின் ஏன் நம் நடத்தை மட்டும் பல வருடங்களாக ஒரேமாதிரியாகவே உள்ளது? அதே திசுக்கள் நம் உடலில் இல்லாவிட்டாலும்கூட, ஏன் அதே நோய்கள் தொடர்ந்து நீடித்து நாம் தொந்தரவுக்குள்ளாகிறோம் ?

ஒவ்வொரு திசு இறக்கும்போதும், புதிதாய்ப் பிறக்கும் திசுவும் பின்பற்றும்படியாகச் சில பதிவுகளை விட்டுச்செல்கின்றன. அவைதான் நம்முடைய ஸம்ஸ்காரங்கள்.

நம்முடைய உடல் - மன அமைப்பே முழுமையாக மாறிவிட்ட பின்னருங்கூட, அதே உடல் - மன அமைப்பு தொடர்வதை, இந்த ஸம்ஸ்காரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஸம்ஸ்காரங்கள், உடல் - மன அமைப்பைவிட சக்திவாய்ந்தவை. இவையே எல்லா முடிவுகளையும் எடுக்கின்றன, அதன்படி நம்மைச் செலுத்தவும் செய்கின்றன.

ஒவ்வொரு நாளும் நாம் ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்வது, நம்முடைய மரண செயல்முறைக்கான ஒத்திகையே. நாம் ஒவ்வொரு நாளும் இறந்து மீண்டும் பிறக்கிறோம். நாம் அனுமதித்தால், நம்முடைய ஸூக்ஷ்ம சரீரம் ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறி, சக்தியூட்டப்பட்டு மீண்டும் வருகிறது. நாள்தோறும் இயல்பாகவே நடக்கும் இந்தப் புத்துணர்வாக்கல், இந்தச் சக்தியூட்டல் செயல்முறையை எந்தளவிற்குப் பயனுள்ளதாக்குவது என்பது நம் கையில்தான் இருக்கிறது.

எதிர்மறை நம் உடல் எடைக்குக் காரணம்

தியானத்தின் மூலம் இந்த ஸம்ஸ்காரங்களை மாற்றியமைத்து, நாம் மீண்டும் புதிதாகப் பிறக்கலாம். ஸம்ஸ்காரங்களைச் சீரமைப்பதன் மூலம், நம்முடைய குணம், நடத்தை மற்றும் பண்புகளை மாற்றியமைக்கலாம்.

அதனால்தான், தியானம் செய்ய ஆரம்பித்தபின் மக்கள், தங்கள் கருணையை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.

அழகு, ஒப்பனை செய்வதால் உருவாக்கப்படுகிறது; கருணை, தியானத்தினால் அதிகப்படுத்தும், அடுத்தவரை அமைதியற்ற தன்மைக்கு (ரஜஸ் ) எடுத்துச்செல்லும். ஆனால் கருணை, தன் அருகில் இருப்பவர்களை தங்கள் இல்லத்தில் இருப்பதுபோன்றே உணரச்செய்யும். அது சூழ்நிலையையே அமைதிப்படுத்தும். கருணை, சத்வத்தை உருவாக்கும், அடுத்தவருக்குள் சக்தி பொங்கச் செய்யும்.

த்யானத்தின் மூலம் ஸம்ஸ்காரங்களை மாற்றியமைத்து, நாம் மீண்டும் புதிதாகப் பிறக்கலாம்.

ரமணர் நினைவுகூறும் மக்கள் சொல்கிற ஒரு விஷயம் என்னவெனில், அவர்கள் மெளனத்தின் மூலமாகவே ஞானத்தை அடுத்தவருக்குள் பாய்ச்சினார்கள் என்பதுதான்.

ஜ்ஞானகுருமார்களின் ஸாந்நித்யம் நம்மைச் சுற்றி இருக்கும் சூழலின் சக்தியில் ஊடுருவி, மாற்றியமைக்கிறது. ஸாந்நித்யத்தில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுவே, 'நாம் வெறுமனே இருப்பது!'

நம்மைத் திறந்துவைத்து, அமைதியாக, குருவின் அருளை அனுமதித்தாலே போதும். இங்கு நாம் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. என்ன செய்ய வேண்டுமோ அதை குருவின் கருணை செய்துவிடும்.

பாரதத்தின் தலைசிறந்த காப்பியமான இராமாயணத்தில் அருமையான பகுதி இது: இளவரசி சீதை, தமது தந்தையான ஜனகரின் அரசவையில் நுழையும்போது, அங்கே அமர்ந்திருந்த ஞானிகளும் பேரரசர்களும் தாமாகவே எழுந்து நின்றார்கள். இது அரசவையின் நடைமுறை வழக்கம் அல்ல. சீதை வெளிப்படுத்திய கருணையே அவர்களுக்குள் இத்தகைய பதில்செயலை நிகழ்த்தியது.

அழகு, அடுத்த மனிதருக்குள் ஏக்கத்தையே ஏற்படுத்தும். கருணை ஒன்றே மரியாதையை ஏற்படுத்தும். சீதையின் 'இருப்பிலிருந்து' வெளிப்பட்ட கருணையானது அனைவரையும் எழுந்து நிற்கச்செய்தது.

ஜென் புத்தமதம் சொல்கிறது, ஒரு மனிதர் புல்வெளியில் நடக்கும்போது, அவர் நடந்த இடத்திலிருக்கும் புல் சாகாமலும், அங்குப் பாதை ஏற்படாமலும் இருக்குமேயானால் அவருக்கு சந்நியாசம் சாத்தியம் என்று சொல்கிறது.

நான்கூட முதலில் இதை நம்பவில்லை. 'நம்முடைய முழு உடலின் பாரத்தையும் எப்படிப் புல்லால் தாங்க முடியும், அதுவுமல்லாமல் அந்த இடத்தில் பாதை ஏற்படாமல் எப்படி இருக்க முடியும், இது சாத்தியம் இல்லை' என்றே நினைத்தேன்.

ஒருமுறை, தென்னிந்திய காட்டுக்குள் யானைசவாரி செய்யும் வாய்ப்புகிட்டியது. எங்கள் இருப்பிடத்திற்குத் திரும்புகையில் நேரமாகிவிட்டதால், இருட்டிவிட்டது. அந்த யானைப் பாகனிடம் டார்ச் லைட்டோ அல்லது வேறெந்த விளக்கோ இல்லை. இந்த இருட்டில் எப்படிப் பாதையைக் கண்டுபிடிப்பீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, 'நான் தினமும் நடப்பதால், இங்கே ஒரு பாதை அமைந்திருக்கிறது. அந்தப் பாதையில், இந்த இருட்டில்கூட என்னால் நம் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துச் சென்றடைய முடியும், ' என்றார்.

உடனே நான், அந்த யானையைப் பற்றிக் கேட்டேன். ஏனென்றால், அந்த யானையும் தினமும் அந்தப் பாதையில் அவருடன் நடக்கிறது, அப்படியானால் அது நடக்கும் பாதையும் இருக்க வேண்டுமே என்கிற காரணத்தால் அதைப் பற்றிக் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. யானை நடப்பதால் பாதை உருவாகாது. யானை மட்டுமல்ல, எந்த விலங்கு நடந்தாலும்கூட பாதை உருவாவதில்லை, என்பதுதான் அந்த பதில்.

ஒரு புல் நுணியைக்கூட சேதப்படுத்தாமல் நம்மால் புல்வெளிமீது நடக்க முடியுமானால், நாம் சந்நியாசத்திற்குத் தகுதியானவர்கள்! நடக்கும்போது புல்லை சேதப்படுத்துவது கிடையாது! என்பதுதான் அந்த பதில்.

நான் ஒரு சிறிய கணக்குப் போட்டேன். யானையின் ஒரு காலால் பூமியில் ஏற்படும் அழுத்தம், குறைந்தபட்சம் ஒரு சராசரி மனிதர் ஏற்படுத்தும் அழுத்தம்போல் நான்கு மடங்கு அளவுக்காவது அதிகமாக இருக்கும். அப்படியிருந்தும், அது பாதையை உருவாக்குவதில்லை, ஒரு சிறு புல் நுனியைக்கூட சேதப்படுத்துவதில்லை, சுற்றுச்சூழலுக்குச் சேதாரம் செய்வதில்லை.

அதனால்தான் ஜென் புத்தமதம் சொல்கிறது: 'ஒரு புல் நுணியைக்கூட சேதப்படுத்தாமல் நம்மால் புல்வெளிமீது நடக்க முடியுமானால், நாம் சந்நியாசத்திற்குத் தகுதியானவர்கள்! "

நம்முடைய காரண சரீரத்தில் பதிந்திருக்கும் வன்முறை மற்றும் எதிர்மறை ஸம்ஸ்காரங்கள், நம்மைப் பூமிக்குப் பாரமானவர்களாக உணரச் செய்கிறது.

நம்முடைய பாரத்தை உணர்ந்தோமென்றால், ஸம்ஸ்காரங்களைச் சுமந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள்.

பாரம் என்பது நம் உடல் எடையோடு சம்பந்தப்பட்டதல்ல, அது, நம் உள் வெளியில் இருக்கும் பதிவுகளோடு சம்பந்தப்பட்டது. தம்மை எடையற்று உணரும் ஒருவர், தம்முடைய இருப்புத்தன்மையிலிருந்து கருணையை வெளிப்படுத்துவார். அவர் புல்வெளியில் நடக்கும்போது பாதை உருவாவதில்லை, ஒரு புல் நுனியைக்கூட சேதப்படுத்துவதில்லை.

நம்முடைய பாதங்கள் பாதையை ஏற்படுத்தாதபோதும், காற்றில் மிதப்பதுபோல் செயல்படாதபோதும் மட்டுமே, நாம் ஆன்மிகத்தில் மலர்ந்தவர்களாக ஆகிறோம் என ஜென் மதம் வரையறுக்கிறது.

இயற்கைக்கு எதிரானதால் பாதையை மறந்துவிட்டோம்

இயற்கைக்கு எதிராகப் போய் விட்ட ஒரே மிருகம் மனிதன் மட்டுமே!

ஒரு சின்ன கதை,

ஒருவர் தம்முடைய வளர்க்கும் செல்லப் பூனையிடமிருந்தும் விலக நினைத்தார். ஆனால் பாரதத்தில், ஒரு கணவர், தாம் நினைத்தவுடன் தம் மனைவியை சிறு சிறு காரணங்களுக்காக விவாகரத்து செய்ய முடியாது. அதனால் பூனையிடமிருந்தாவது தப்பிக்கலாம் என்று முடிவுசெய்தார்.

அந்தப் பூனையைக் காரில் எடுத்துக்கொண்டு, ஒரு பத்து மைல்களுக்கு அப்பால் சென்று விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். அவர் ஆச்சரியப்படும் வகையில், அவர் வீட்டிற்குள் நுழையும்போது பூனையும் உள்ளே நுழைந்தது.

அடுத்த நாள் அந்தப் பூனையைக் காரில் எடுத்துக்கொண்டு, நாற்பத்தைந்து நிமிடங்கள் பயணம்செய்தார். அவரே இதுவரை பார்த்திராத ஒரு அடர்ந்த காட்டைப் பார்த்தார், அங்கே அந்தப் பூனையை விட்டுவிட்டு திரும்பி காரோட்டிக்கொண்டு ஒருவித நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தார். அந்தப் பூனை, அமைதியாக வீட்டு வாசலில் அமர்ந்திருந்தது, அவர் அதிர்ச்சியடைந்தார்!

மூன்றாவதுநாள், அவர் முன் ஜாக்கிரதையாக, அந்தப் பூனையின் கண்களைக் கட்டி, ஒரு சாக்கில் போட்டு காரில் ஏற்றினார். மிகவும் குழப்பமான பாதைகளைத் தேர்ந்தெடுத்து, வண்டியை ஒட்டிச்சென்று, ஏதோ ஒரு இடத்தில் பூனையை விட்டுவிட்டார். அதன்பின் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

ஒரு மணிநேரம் பயணம்செய்தபிறகு, அவர் தம் மனைவிக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ''அம்மா, அந்தப் பூனை வீட்டில் இருக்கிறதா?'' என்று கேட்டார். அதற்கு அவருடைய மனைவி, ''ஆம், இப்போது என் அருகில்தான் இருக்கிறது, '' என்றார். உடனே அதற்கு அவர் 'தயவுசெய்து, நான் வீட்டிற்கு வர, நீதான் எப்படியாவது உதவ வேண்டும். நான் வந்த வழியை மறந்து விட்டேன்,'' என்றார்.

விலங்குகள் இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. மனிதர்களாகிய நாம்தான் இயற்கைக்கு எதிராகச் சென்றுவிட்டோம், அதனால் பாதையையும் மறந்துவிட்டோம்.

ஒரே மாதிரியான சக்தி ஒன்றையொன்று ஈர்க்கும்

இங்கே கிருஷ்ணர் சொல்கிறார், நாம் நமது ஸம்ஸ்காரங்களைப் பொறுத்தே, நமது புலன்களை அமைத்துக்கொள்கிறோம். இது நாம் இறந்து மீண்டும் பிறக்கும்போது மட்டும் நிகழ்வதில்லை. ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போதும், நாம் நமது ஸம்ஸ்காரங்களுக்கேற்ப புலன்களை மறுவடிவமைக்கிறோம்.

நாம் தூக்கத்திலிருந்து விழிக்கும் அந்தச் சில வினாடிகள் மிகவும் முக்கியமானவை. நாம் அப்போது என்ன உணர்கிறோமோ, அதுவே அந்த நாள் முழுவதும் பிரதிபலிக்கும்.

நாம் சரியான மன அமைப்புடன் விழிக்கும்பொழுது, நாம் அதற்கேற்ற புலன்களையே பெறுகிறோம். அதனால் அந்த நாள் முழுவதுமே நாம் சந்தோஷமாக இருப்போம். மாறாக, எதிர்மறை மன அமைப்புடன் விழிக்கும்போது, நாம் நாள் முழுவதும் துக்கப்படுகிறோம்.

நாம் தூக்கத்திலிருந்து விழிக்கும் அந்தச் சில வினாடிகள் மிகவும் முக்கியமானவை. நாம் அப்போது என்ன உணர்கிறோமோ, அதுவே அந்த நாள் முழுவதும் பிரதிபலிக்கும். அப்போது நேர்மறையை வெளிப்படுத்தினால், நம்முடைய அந்த நாள் முழுதும் சந்தோஷமாக இருக்கும்; எரிச்சலை வெளிப்படுத்தினால், அந்த நாள் முழுதும் எரிச்சலாகவே இருக்கும்.

சூஃபி குருமார்கள், சூஷ்ம சரீரம் ஸ்தூல சரீரத்தில் நிலைகொள்ளும், கண்விழிக்கும் அந்த நேரத்தில் இந்த அருமையான தியானத்தை நாள்தோறும் பயிற்சிசெய்வார்கள்.

கண்களை மூடிக்கொண்டே, கைகளால் தலையைத் தடவியபடியே, மிகுந்த விழிப்புணர்வுடனும் அழகான உடல் - மன அமைப்பை கொடுத்ததற்காகப் பிரபஞ்சத்திற்கு நன்றியை வெளிப்படுத்துங்கள்.

நம்பிக்கையுடனும், ''என் தலையையும் தலைமுடியையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அவை மிகவும் அழகாக இருக்கின்றன. இவ்வளவு அழகான தலையையும் தலைமுடியையும் தந்ததற்காக, நான் இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்,'' என்று சொல்கிறார்கள்.

இப்படியே, உடலின் ஒவ்வொரு பகுதியையும் தொட்டு, பிரபஞ்ச சக்திக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

நாளைமுதல் நீங்களும் இந்த தியானத்தைச் செய்யுங்கள். உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் மிகுந்த அன்புடன் தொடுங்கள். அந்த உடல் பாகத்திற்கு உங்கள் அன்பினை வெளிப்படுத்துங்கள். அந்தப் பாகத்தின் அழகுக்கும் கருணைக்கும் பாராட்டுதலைத் தெரிவியுங்கள். இவ்வளவு அழகான உடல் - மன அமைப்பை கொடுத்ததற்காகப் பிரபஞ்சத்திற்கு நன்றியை வெளிப்படுத்துங்கள்.

இதை உங்கள் உடல் முழுவதும், தலை முதல் பாதங்கள்வரை செய்யுங்கள். இறுதியாக உங்கள் பாதங்களை மிகுந்த அன்புணர்வுடன் தொட்டபடி, "'என் பாதங்களை நான் நேசிக்கிறேன். இவை மிகவும் அழகாக இருக்கின்றன. இவ்வளவு அழகான பாதங்களைக் கொடுத்ததற்கு, பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கிறேன்,'' என்று உணர்வுபூர்வமாகச் சொல்லுங்கள்.

இதை விழிப்புணர்வுடன், குறைந்தபட்சம் ஒரு இருபத்தியோரு நாட்களுக்குத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நேசிக்க ஆரம்பிப்பீர்கள். அதன் விளைவு, நீங்கள் அடுத்தவரையும் மிகச் சுலபமாக நேசிக்க முடியும்.

கிருஷ்ணர் சொல்கிறார், நாம் உருவாக்கும் புலன்களைப் பொறுத்தே, நாம் அனுபவிக்கும் விஷயங்கள் அமைகின்றன. நாம் நேர்மறையான உணர்வுகளை உருவாக்கும்போது, நம்முடைய வாழ்க்கை இனிமையாய் இருக்கும். நாம் எதிர்மறையான புலன்களை உருவாக்கும்போது, எதிர்மறையான வாழ்க்கையால் கஷ்டப்படுகிறோம்.

நாம் உருவாக்குகிறோமோ, பொருட்களும் நம்மை ஈர்க்கின்றன. நாமும் அதை அனுபவிக்கிறோம்.

நம்முடைய உணர்வுகளும், பக்தியும், உடல் - மன அமைப்பும் நம்மைச் சுற்றி ஒரு சக்தி ஒட்டக்களத்தை ஏற்படுத்துகிறது. அந்த சக்தி ஓட்டம், அதே மாதிரியான சக்தி ஒட்டக்களத்தையே ஈர்க்கும். நாம் எதிர்மறையான எண்ணம் கொண்டவராக இருந்தால், எதிர்மறையான மன அமைப்பு கொண்டவர்களையே ஈர்ப்போம். அப்படியே அந்த விஷச்சூழலில் சிக்கிக் கொள்வோம்.

அதனால் நம்முடைய எதிர்மறை மன அமைப்பை, நேர்மறை மன அமைப்பாகவும் நேர்மறை உணர்வுகளாகவும் மாற்றினால், அதே மன அமைப்புள்ள மகிழ்ச்சியான மனிதர்களை நம்மை நோக்கி ஈர்ப்போம்.

இது, ஒரு மனிதரின் ஆன்மிக வளர்ச்சியில் மிகவும் முக்கியமான பங்குவகிக்கிறது. குருவோடு இருக்கும்போது இந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் சுலபமாக நடக்கும். ஆனால் அதே பாதையில் பயணிக்காதவர்களோடு நாம் சேர்ந்திருக்கும்போது, நாம் நம்முடைய ஆன்மிகப் பாதையிலிருந்து எளிதாக விலகி விடுவோம். அந்த உற்சாகத்தைத் தவறவிட்டுவிடுவோம்.

ஒரே இலக்கை ஆழமாகத் தேடும் ஒத்த மன அமைப்பு உள்ளவர்களின் சேர்க்கை, நம்மைப் பந்தங்களிலிருந்து விடுவிக்கும். இதுதான் ஆன்மிகப் பயணத்தின் முதல் அடி, முக்கியமானதும்கூட.

சங்கம் சரணம் கச்சாமி என்கிறார், அதனால்தான் புத்தா சங்கத்தை ஏற்படுத்தினார். கிறிஸ்து ஒரு பிரிவு சீடர்களை, தம்முடைய ஞான விளக்கை எடுத்துச்செல்வதற்கெனவே உருவாக்கினார். குருவின் உபதேசங்களைப் போல, அவருடைய சங்கமும் மிக முக்கியமானது. சங்கங்கள்தான் ஞானத்தை நிலைத்திருக்கவும் ஒளிரவும் எரிபொருளாய் இருக்கின்றன.

அதனால்தான் நான், ஒத்த மனமுடைய மக்கள் சங்கத்தை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறேன். ஏனென்றால், இது போன்ற சூழலில் வாழும் மக்கள், ஆன்மிகத்தில் மிக விரைவாக முன்னேற முடியும்.

இந்த இடங்களில் ஒன்றாக வாழ்வதினால், ஏற்படக்கூடிய சக்திப் பெருக்கத்தை வெளி உலகத்தில் உருவாக்க முடியாது. இங்கே, இந்த சங்கத்தில் உருவாகும் சக்தியை, வெளி உலகில் ஏற்படுத்த முடியாது.

எங்கிருந்தாலும் என்னால் தியானம் செய்ய முடியும் என்று நாம் சாதுர்யமாக பேசலாம்.

குருவின் உபதேசங்களைப் போல, அவருடைய சங்கமும் மிக முக்கியமானது. சங்கங்கள்தான் ஞானம் நிலைத்திருக்கவும் ஒளிரவும் எரிபொருளாய் இருக்கின்றன.

ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஆன்மிகம் செழித்து வளர்வது என்பது தனிமையிலோ அல்லது அதே மன அமைப்புள்ளவர்களோடு சேர்ந்துவாழும்போதோ மட்டுமே நிகழ முடியும்.

ஒரே மாதிரியான சக்தி ஒன்றையொன்று ஈர்க்கும்; வளப்படுத்தும்.

ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள்

இந்த அத்தியாயத்தின் நடுவில் கிருஷ்ணர் நறுக்குத்தெரித்தாற்போன்ற ஒரு வாக்கியத்தைச் சொல்கிறார்: ''ஆன்மாவானது எப்படி ஒரு உடலைவிட்டு இன்னொரு உடலுக்குச் செல்கிறது என்பதையோ, குணங்களின் அடிப்படையில் அவன் எப்படிப்பட்ட உடலை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதையோ முட்டாள்களால் புரிந்துகொள்ள முடியாது. அறிவினால் பயிற்றுவிக்கப்பட்ட கண்களுக்கே, இந்த விஷயங்கள் புலப்படும் ! '

இங்கு, மூட - 'முட்டாள்' என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார், கிருஷ்ணர்.

காலையில் எழும்போது நமக்குள் தோன்றும் முதல் எண்ணத்தைப் பொறுத்தே, அந்த நாள் முழுவதற்குமான அனுபவம் அமையும்!

ஆனால் பொதுவாக நம்முடைய முதல் எண்ணம் எதுவாக இருக்கிறது? முதலில் நாம் எழுந்துவிட்டதை உணர்கிறோம், பிறகு நம் உடலை உணர்கிறோம், அடுத்து நமக்குள் எழுவது, 'நாம் ஆபீஸ் போகவேண்டுமே என்ற அச்சம் அல்லது நமக்குப் பிடித்தமான ஏதோ ஒரு வேலையை முடித்தாக வேண்டுமென்ற ஆசை'.

ஆசையாலோ அச்சத்தாலோ உந்தப்பட்டுத்தான் நாம் படுக்கையிலிருந்து துள்ளி எழுகிறோம். ஆசை அல்லது அச்சத்தின்மூலமே, நாம் நம் உடலுடன் தொடர்பை உணர்கிறோம்.

கிருஷ்ணர் சொல்கிறார், 'நம்முடைய உடலை ஆசையாலோ அச்சத்தாலோ பிடித்தோமானால், அந்த நாள் முழுவதும் ஆசை அல்லது அச்சம்சார்ந்த விஷயங்களையே ஈர்ப்போம்.

ஒவ்வொரு நாளும் நாம் தூங்கி எழுவது, இந்தப் பூமியில் நாம் இன்னொரு நாள் வாழ நமக்குக் கிடைத்த நீட்டிப்பே.

உடம்பிற்குள் வாயில்கள் இருக்கின்றன. ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள். ஆன்மிக ஒரு படுக்கையிலிருந்து எழுங்கள். உங்கள் குருவையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ நினைத்துக்கொண்டு எழுங்கள். இதைச் சில நாட்களுக்குத் தவறாமல் விழிப்புணர்வோடு செய்யுங்கள். பின்பு, இது உங்கள் இயல்பாக மாறிவிடும். உங்கள் உடலோடு ஆசை அல்லது அச்சத்தின் மூலமாக இணைய வேண்டாம். அது மேலும் மேலும் ஆசையையும் அச்சத்தையுமே ஈர்க்கும்.

உங்களுடைய முதல் எண்ணம் ஆன்மிகம் இருக்கட்டும். சம்பந்தப்பட்ட உங்கள் குருவையோ அல்லது தெய்விகமானவர்களையோ நினைவுபடுத்தி, அவருக்கு நன்றிசொல்லுங்கள். வாழ்க்கையை மேலும் ஒருநாள் நீட்டித்ததற்காக நன்றிசொல்லுங்கள்.

ஒவ்வொரு நாளும் நாம் தூங்கி எழுவது, இந்தப் பூமியில் நாம் இன்னொரு நாள் வாழ நமக்குக் கிடைத்த நீட்டிப்பே. இந்த நீட்டிப்பை அளித்த பிரபஞ்சத்தின் கருணைக்கு நன்றிசொல்லுங்கள்.

உங்கள் குருவையோ, கடவுளையோ அல்லது தெய்விகமானவர்களையோ நினைவுபடுத்தி, வாழ்க்கையை மேலுமொருநாள் நீட்டித்ததற்காக அவருக்கு நன்றிசொல்லுங்கள்.

நீங்கள் பத்திசாலியா அல்லது முட்டாளா ?

தூக்கத்திலிருந்து எழுவது பிறப்புரிமை கிடையாது. சொல்லப்போனால், பிறப்பே நமது உரிமை கிடையாது. அது பிரபஞ்ச இருப்பு நிலையின் தூய்மையான பரிசு. நம் வாழ்க்கை, இன்னொரு நாள் நீட்டிக்கப்பட்டதற்குப் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

ஆன்மிக எண்ணத்துடன் படுக்கையிலிருந்து எழும்போது, அந்த நாள் முழுவதுமே அந்த விழிப்புணர்வு நமக்குள் நீடிக்கும். லெளகீக எண்ணத்துடன் எழும்போது, அந்த நாளை எரிச்சலுடன் தொடங்குவோம். நாள் முழுவதுமே அந்த எரிச்சல் மனநிலை தொடரும்.

ஆழ்ந்த தூக்கத்தில், நாம் காரண ச்ரீர்த்துடன் தொடர்புகொள்கிறோம். தூங்கி எழும்போது, மற்ற மூன்று சீரீரங்கள் வழியாகப் பயணம்செய்துதான், ஸ்தூல உடலைச் சேருகிறோம். இந்த மூன்று சீர்ரங்களும் பலவிதமான ஸம்ஸ்காரங்கள் இருக்கும் ஒரு பெரிய கடைவீதி. நம்முடைய காரண ச் ரீர்த்திலிருக்கும் ஸம்ஸ்காரங்களைத் தேர்ந்தெடுத்தே, நாம் அன்றைய தினத்து ஸ்தூல உடலையும் புலன்களையும் தீர்மானிக்கிறோம்.

ஒரு இருபத்தியோரு நாட்களுக்கு மட்டும் ஆன்மிக எண்ணத்துடன் எழுங்கள். அதற்குப் பிறகு உங்கள் முகத்தைப் பாருங்கள். முகம் மாறியிருப்பதைப் பார்த்து, நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் கண்களில் ஒரு புதிய பொலிவு தெரியும்.

நான் இங்கே 'கோட்பாட்டை' (Theory) வைக்கவில்லை. நான் இதை உணர்ந்திருக்கிறேன்.

உலகெங்கும் லட்சக்கணக்கானவர்கள், இந்த வார்த்தைகளைப் பயிற்சிசெய்து, வெற்றி பெற்றிருக்கிறார்கள். உரிமையில்தான் நான் இதை 'மிகவும் சக்தி வாய்ந்த, உயிர்ப்புள்ள ஒரு நுட்பம்' என்று சொல்கிறேன்.

மன அழுத்தத்துடனோ அல்லது அமைதியற்ற தன்மையுடனோ, அதாவது அதிகாலையில் சில வினாடிகளுக்காவது ஆனந்தமான மனநிலையில் இருங்கள். உங்கள் உள்வெளி புத்துணர்ச்சியுடனும் புத்தாகவும் இருக்கும்.

தமஸ் அல்லது ரஜஸ் தன்மையுடனும் உடலுக்குள் நுழையாதீர்கள். ஆசை அல்லது அச்சத்துடன் எழும்போது, ஆசை அச்சத்தை வெளிப்படுத்தும் உடலையே வடிவமைப்பீர்கள். உங்களை ஆசை அச்சத்தில் போடக்கூடிய விஷயங்களையே ஈர்ப்பீர்கள்.

காரண ச்ரீரத்திலிருந்து, ஸ்தூல் ச்ரீர்த்திற்குத் திரும்பிவரும்போது, ஆனந்தம் மற்றும் அமைதிசார்ந்த லத்வ ஸம்ஸ்காரங்களையே எடுத்து வரவேண்டும். அதனால்தான், நமது ரிஷிகளும் ஞானிகளும் நம்மை அதிகாலையில் தியானம் செய்யச் சொல்கிறார்கள்.

சில வினாடிகளுக்காவது ஆனந்தமான மன நிலையில் இருங்கள். உங்கள் உள்வெளி புத்துணர்ச்சியுடனும் புதிதாகவும் இருக்கும்.

கிருஷ்ணர் மட்டுமே, இந்த அறிவியலின் ஸ்ரீயத்தைப் புரிந்துகொள்ள முடியும்!

அனைத்துமே உங்கள்முன் இருக்கிறது, ஆனால் முட்டாள்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. புத்திசாலித்தனமான கண்களை உடையவா்களால் மட்டுமே, இந்த ஸ்தீயங்களைப் பார்க்க முடியும் !

முட்டாளாக இருப்பதோ அல்லது புத்திசாலித்தனமான கண்களுடன் இருப்பதோ, நம் கையில்தான் இருக்கிறது. அது முழுக்க முழுக்க நம்முடைய விருப்பமே.

ஆன்மிகப் பயணக்கின் ஆரம்ப இடம் ஆசிரமம்

கேள்வி : ஸ்வாமிஜி, ஆன்மிக வளர்ச்சிபெற வேண்டுமானால், ஒருவர் ஆசீரம சூமலில் வாம் வேண்டியதன் முக்கியத்துவுக்கைப் பற்றிச் சொன்னீர்கள். ஆச்ரமங்களில் வாழ முடியாதவர்களின் நிலை என்ன ? அவர்கள் ஆன்மிகத்தில் முன்னேற முடியுமா ?

ஆச்ரமத்தில் இருக்கும் எல்லோரும் ஜீவன்முக்தா்கள் ஆவதில்லை. ஒருவர் ஜீவன்முக்தராக வேண்டுமெனில், அவர் ஆசீரமத்தில் வாழ்ந்தாக வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. ஜீவன்முக்தி என்பது நம் இயல்பான நிலை. நாம் அதைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.

அதனால், நாம் இந்த ஸ்தீயத்தை உணர்வதற்கு எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே மிகவும் முக்கியமானது.

நாம் ஜீவன்முக்கர்கள் என்றால், நாம் ஏன் அதை உணரவில்லை? நாம் கடவுள் என்பதை நாம் ஏன் உணரவில்லை? நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் என்பதை நாம் ஏன் உணரவில்லை ? இந்தப் பிரபஞ்சம், நம்முடைய எந்த முயற்சியுமே இல்லாமல், நம்மைப் பார்த்துக்கொள்ளும் என்பதை நாம் ஏன் உணரவில்லை ?

நமக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். நாம் நம்மை ஒரு தனி ஜீவனாக உணர்கிறோம். கடலில் எழும் அலையானது, தான் அந்தக்கடலில் ஒரு பகுதி அல்ல என்று நினைப்பதுபோன்றதே இது.

அந்த கடலோடு கலந்து, பின் மீண்டும் அலையாக எழுந்தாலும், அந்த அலை தன்னை, அந்தக் கடலினின்று வேறாகவே நினைக்கிறது. நாம் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து எழுந்து, மீண்டும் இந்தப் ஒடுங்கினாலும், நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை உணருவதேயில்லை; 'நாம் தனி' என்றே உணர்கிறோம்.

ஜீவன்முக்கி என்பது நம் இயல்பான நிலை. நாம் அதைப் புரிந்து கொண்டு, எற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.

நாம் வெளி உலகில் பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், 'நாம் தனியானவர்' என்றே உணர்வைத் திணித்துக்கொள்கிறோம்.

நாம் மனிதர்கள் மீதும் பொருட்கள் மீதும் நிகழ்வுகள் மீதும் பற்றினை வைத்திருக்கும்போது, நமக்கும் நம்முடைய இயல்பான தன்மைக்குமிடையேகூட, ஒரு பெரிய தடுப்புச்சுவரை எழுப்பி விடுகிறோம்.

பந்தங்களை அடிப்படையாகக்கொண்டு இந்தப் பொருள்சார்ந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை, அதை உடைத்துக்கொண்டு வருவது கடினம்.

நாம் இந்தப் பந்தங்களுக்கான காரணங்களை வேறு உருவாக்குகிறோம். ஒரு தாய் சொல்கிறார்: ''நான் என் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். ''

ஒரு முதலாளி சொல்கிறார்: "நான் என் தொழிலாளிகளைப் பாதுகாக்க வேண்டும். ' '

ஒரு தலைவர் சொல்கிறார்: ''நான் என் தொண்டர்களை வழிநடத்த வேண்டும். '

இவையெல்லாம் ஸ்ரீயத்தை உணருவதைத் தள்ளிப்போடுவதற்காக நாம் பொடும் நாடகம் அல்லது நாம் விளையாடும் விளையாட்டு.

நாம் வரையறுக்கும் குழுக்களிடமும், நம்மைச் சுற்றி விரிந்து இருக்கும் உலகத்திலும் இவையெல்லாம் - கவனித்துக்கொள்வதும், பார்த்துக்கொள்வதும், வழிநடத்துவதும் - தானாகவே நிகழும்.

ஒரு ஆசீரமம், நம்மை இந்தப் பந்தங்களிலிருந்து விடுபடுத்திக்கொள்ள உதவுகிறது. குருவின் ஸாந்தீத்யமும், ஒத்த எண்ணம் கொண்டவர்களின் சேர்க்கையும் நம்மைப் புலனின்பம்சார்ந்த வெளி உலகிலிருந்து விடுதலைபெறச் செய்கிறது.

புற உலகம்சார்ந்த பந்தத்திலிருந்து, குரூவிடமான பர்தத்திற்கு மாறுகிறோம். குருவின் வழிகாட்டுதலால், நாம் அந்தப் பந்தத்திலிருந்தும் விடுபடுவோம்.

ஆச்ரமம் என்பது நம்மை யதார்த்த நிலையிலிருந்து விலகியிருக்கச் செய்யாது. ஆச்ரமவாசிகள் வெளியுலகம்சார்ந்த பல பொறுப்புக்களை ஏற்றுள்ளார்கள். பணத்தைக் கையாள்வதில் சிறந்தவர்களாக இருக்கக் கற்றிருக்கிறார்கள்; மேலும் புகைப்படம் எடுப்பது, கம்ப்யூட்டார் இயக்குவது, எழுதுவது, சிற்பம் போன்ற கலைசார்ந்த விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இவை அனைத்துமே, பலனை எதிர்பாராமல் வாழ்வது மற்றும் பற்றற்று வாழ்வது என்ற விஷயங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.

'இறுதி லக்யத்தைத் தேடுபவர்கள் ஒன்றாகச் சேரும்போது, அது பந்தங்களிலிருந்து விடுபடுத்தும்; பந்தங்களிலிருந்து விடுபட்ட நிலை ஆசைகள் அற்ற நிலைக்கு எடுத்துச்செல்லும்; ஆசைகள் அற்ற நிலை ஒரு சலனமற்ற மனத்தை உருவாக்கும்; சலனமற்ற மனம் நம்மை ஜீவன்முக்தி அடையச் செய்யும்.' - இதைத்தான் சங்கரா் ஸ்த்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வும் என்கிறார்,

ஆச்ரமம், உள்ளுலகப்பயணத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு சிறந்த இடம்.

விழிப்புணர்வு, சாதனை அல்ல

  • 15.11 ஆத்மாவைப் பற்றிய புரிதலுடைய ஞானிகளால் மட்டுமே இவற்றையெல்லாம் தெளிவாகப் பார்க்க முடியும். ஆதீமாவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இவற்றைப் புரிந்துகொள்ள இயலாது.
  • 15.12 குரியனிலிருந்து வெளிப்படும் ஒளியும், சந்திரனிலிருந்து மற்றும் தீயிலிருந்து வெளிப்படும் பிரகாசமும் என்னிடமிருந்து பெறப்பட்டவையே.
  • 15.13 பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் என் சக்தியால் தாங்குகிறேன். குளிர்ச்சியான நிலவாக அதி, எல்லா செடிகொடிகளையும் நானே பேணிவளர்க்கிறேன்.
  • 15.14 ஒவ்வொரு உயிருக்குள்ளும் செரிமானத் தீயாகவும், உள்செல்லும் மூச்சாகவும், வெளிவரும் மூச்சாகவும் இருந்து நான்கு வகை உணவுகளையும் செரிமானிக்கிறேன்.

சிரத்தை - ஜீவன்மக்திக்கான சாதனம்

கிருஷ்ணர் உபயோகிக்கிறார். அவர் இந்த வார்த்தையின்மூலம் என்ன சொல்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

யோகா என்பது இன்றைய மனிதர்களால், ஒரு சொகுசு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். அதில், 'உடனடி ஜீவன்முக்திக்கு - குடப்பர் டீலக்ஸ் குண்டலினி யோகா 'என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.

வகுப்புகளில், சூப்பர் டீலக்ஸ் குண்டலினி யோகங்களைப்பற்றிய குறிப்புகளைக் கண்டேன். ஜீவன்முக்திக்கென்று எந்த ஒரு வாகமும், நமது வேத பாரம்பரியத்தில் குறிப்பிடவில்லை.

யோகா என்பது தனி உணர்வான ஆன்மாவிற்கும், பிரபஞ்ச விழிப்புணர்வான ப்ரூமத்திற்குமான இணைப்பு.

இந்த இணைப்பைப் பற்றிய விழிப்புணர்வு அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற விழிப்புணர்வு நம்மை விடுதலையடையச் செய்யும். இந்தப் புரிதல் உடனடியாக நடக்கும். ஆனாலும், இதை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் சாதனா முறைகள், வரையறுக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறைகளைக் கொண்டதாக இருக்கின்றன. அவற்றை சீர்த்தையுடன்செய்யும் மனிதனுக்கு மட்டுமே 'ஜீவன்முக்தி' சாத்தியமாகிறது.

யோகா என்பது குனி உணர்வான ஆன்மாவிற்கும் பிரபஞ்ச விழ்ப்புணர்வான ப்ரூற்மத்திற்குமான இணைப்பு. பழங்கால இந்தியாவின் மிகச் சிறந்த அறிவியலாளரும் ஞானியுமான பதஞ்சலி, தம்முடைய வயாக ஸூத்ரத்தில் வாகம் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

'நாம் கடவுள்' என்ற விழிப்புணர்வைப் பெறுவதற்கும், கடவுளுடனான நமது இணைப்பை அறிவதற்கும் பாதைகளை நமக்குக் காட்டுகிறார். இந்த எட்டுப் பாதைகள் தொடர்ந்துவரும் எட்டுப்படிகள் அல்ல. அவை வெவ்வேறு பகுதிகள்.

அதில் முதல் பாதை, யம -. ஆன்மிக நடத்தை விதிகளைப் பற்றியது. இதில் ஐந்து விதிகள் உள்ளன. 1. ஸ்தீய - எண்ணம், சொல் மற்றும் செயல்களில் உண்மை. 2. அஹிம்ஸா - எண்ணம், சொல் மற்றும் செயல்களில் கொல்லாமையைக் கடைபிடிப்பது. 3. ஆஸ்ரேய - திருடாமை. 4. அமரிக்ரூர் - எளிமையான வாழ்க்கையை வாழ்வது. 5. பரவர்மசாய - இயல்பு நிலையில் வாழ்வது.

ஜீவாக்மாவும் பரமாக்மாவும் ஒன்றே என்ற விழிப்பணர்வ நம்மை விடுதலையடையச் செய்யும்.

இந்து பாரம்பரியத்தில், ஆன்மிகத் தேடுதல் உடைய ஒருவர், ஸந்நியாஸ வாழ்க்கைக்குள் நுழைவற்கான தீட்சையைப் பெறும்போது, 'ஆன்மிகத்தின் இந்த ஐந்து விதிகளையும் நான் சிரத்தையுடன் கடைபிடிப்பேன்' என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும்; அதைத் தீவிரமாகக் கடைபிடிக்கவும் வேண்டும்.

நான் ஒவ்வொரு வருடமும் பக்தர்களுடன், இமயமலையில் இருக்கும் ஆன்மிக ஸ்தலங்களுக்கு, சார்தாம் யாத்திரை செல்வேன். முதல் புனித கங்கைக்கரையில், ஒவ்வொருவரும் இந்த ஐந்து விதிகளையும் உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். அந்த ஆன்மிகப் பயணம் முழுவதும் அவர்கள், இந்த விதிகளை சீர்த்தையுடன் கடைபிடிக்கும் ஆன்மிக சாதகர்களாக இருப்பார்கள்.

இரண்டாவது பாதை, ரியம் - உடலளவிலும் மனதளவிலும் ஆன்ம அளவிலும் ஒருவர், தூய்மையாகவும் மேன்மையாகவும் தம்மை உயர்த்திக்கொள்வதற்கான தினசரி பயிற்சிகளை உள்ளடக்கியது.

மூன்றாவது பாதை, ஆஸன. ஆஸனம் என்பது தியானத்திற்கு சௌகரியமான நம் உடலின் நிலை, அதாவது நாம் அமரும் முறை. இன்றையை காலக்கட்டத்தில் இந்த ஆஸனங்களும் யோகாவும் ஒன்றாகிவிட்டது.

நான்காவது பாதை, ப்ராணாயாமம் - சுவாசத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது. இது உடலையும் - மனத்தையும் உள்முகப்படுத்த உதவுகிறது.

ஐந்தாவது பாதை, பிரத்யம்ஹரா - புலன்களிடமிருந்தும் புலனின்பப் பொருள்களிடமிருந்தும் புலனின்பங்களிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்வது. இதுவும் நம்மை உள்முகப்படுத்த உதவும்.

ஆறாவது பாதை தாரணா. மனத்தைக் கட்டுப்படுத்த, தேர்ந்தெடுத்த ஒரு பொருளின் மீது நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவது.

ஆன்மிக முன்னேற்றத்திற்கும், 'நாம் இந்தப் பிரபஞ்ச இருப்பின் ஒரு பாகமே' என்பதை உணர்வதற்கும் தியானமே சிறந்த பாதை.

எப்போது ஒருவரால், ஒரு பொருளின் மீது தம் கவனத்தை ஒருமுகப்படுத்த முடிகிறதோ, அப்போது அவரது மனம் கூர்அறிவைப் பெறுகிறது. அந்த நிலையை அடையும்பொழுது, அதே கவனத்தை எந்தவொரு பொருளின் மீதும் அவரால் செலுத்த முடியும்.

ஏழாவது பாதை, தியானம் - தம்முடைய இருப்புத்தன்மையின் மீது தியானிப்பது.

எட்டாவது மற்றும் கடைசிப்பாதை ஸமாதி. நம்முள் முழு விழிப்புணர்வு நிகழ்ந்து, முழுமையான இணைப்பு நிலையினை இது குறிக்கிறது.

தொடர்ந்து சிரத்தையுடன் இந்த யோக முறைகளைக் கடைபிடிக்கும் ஒருவர், 'இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் தாம்' என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார்.

மிக ஆழமான ஈடுபாடுகொண்ட சில சாதகர்கள், இடைப்பட்ட பாதைகள் எதிலும் பயணிக்காமலேயே ஸமாதி அனுபவத்தைப் பெறுகிறார்கள். இது மிகவும் அரிதாக நடப்பது.

என்னைப் பொறுத்தவரை, இன்றைய நவீன உலகத்தில், ஆன்மிக முன்னேற்றத்திற்கும், 'நாம் இந்தப் பிரபஞ்ச இருப்பின் ஒரு பாகமே' என்பதை உணர்வதற்கும் தியானமே சிறந்த பாதை என்று கருதுகிறேன்.

இருளும் ஒரு சக்தீயே

விழிப்புணர்வு ஏற்படாதவரை, ஒருவர் என்னதான் முயற்சிசெய்தாலும் தம்மை அடைய முடியாது என்கிறார் கிருஷ்ணர். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் இப்போது பேசிக்கொண்டிருப்பது விழிப்பைப்பற்றி, அடைவதைப் பற்றி அல்ல.

ஸ்தீயம் என்னவென்றால், நம்முடைய தனி இருப்பானது, இந்தப் பிரபஞ்ச இருப்பின் ஒரு பாகமே. நாம் இந்தப் பிரபஞ்ச இருப்பைச் சென்றடைய வேண்டியதில்லை. நமக்குத் தேவை, அதைப் பற்றிய விழிப்பே!

இந்த ஸ்தீயத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதில்லை. 'அது இருக்கிறது' என்ற இந்த ஸ்தீயத்தை உணரவேண்டும் அவ்வளவுதான்.

தனிப்பட்ட நம்முடைய அஹங்காரத்தினால், கண்கள் கட்டப்பட்டிருப்பதால், 'நாம் இந்தக் கூட்டு விழிப்புணா்வின் ஒரு பாகமே' என்ற ஸ்தீயத்தை மறந்துவிட்டோம்.

தங்களை உணர்வதற்கு, மாயை என்னும் திரையை விலக்கி, மயக்கத்தை விட்டொழிக்கிறார்கள்.

இந்தத் திரையை விலக்குவதற்கான ஒரு நுட்பமே, ஒரு பாதையே தியானம். தியானம் ஒருவரை தமக்குள் மேலும் மேலும் ஆழமாகச் செல்லவைக்கிறது; விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஒளி என்பது விழிப்புணர்வு. ஒளி என்பது வாழ்வின் ஆதாரம். பைபிளில் 'அங்கு ஒளி இருந்தது. அந்த ஒளி இருக்கட்டும்!' என்ற வாசகம் இருக்கிறது.

ஒளி, கடவுளால் இந்தப் பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் படைப்புக்களில் ஒன்று. குரியனின் ஒளியும் வெப்பமும் இல்லாமல், இப்பிரபஞ்ச வாழ்வு சாத்தியமற்றது என்ற உண்மை நமக்குத் தெரியும். ஒவ்வொரு பொருளும் ஜீவனும், சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளியிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் சக்தியைப் பெற்றுத் தம்மை மையமாகக்கொண்டுதான் சுழல்கின்றன.

குரியன், இருளைப் போக்கும் சக்தி. கிருஷ்ணர், 'சூரியனையும் சந்திரனையும் நம் வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமான நெருப்பினையும் இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்தது தாமே' என்று மட்டும் சொல்லவில்லை, 'இருளைப் போக்குவதும் தாமே' என்றும் சொல்கிறார்.

கிருஷ்ணர், இருளை அழிக்கும் குரு. குரூ என்றுதான் பொருள். குரியன், சந்திரன் மற்றும் நெருப்பைப்போன்று ஒரு தலைசிறந்த குருவாக இருந்து, நம்மை விழிப்புணர்வை நோக்கி அழைத்துச்செல்கிறார்.

கிருஷ்ணர் நம்முடைய ஸம்ஸ்காரங்களை அழிப்பவர். ஸம்ஸ்காரங்கள் என்பது நம்முடைய விழிப்பற்ற தன்மையின் படைப்பு. இருளுக்கு 'நேர்மறையான இருப்பு' கிடையாது. அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முடியாது. ஆனால், இருளை ஒளியைக்கொண்டு அழிக்க முடியும்.

இருப்பு ஒளியில்லாதவரையில்தான் இருள் இருக்க முடியும். இருளை நாம் உருவாக்க முடியாது; ஏதோ ஒன்றின் இல்லாமையே இருள். எப்போது ஒளி வருகிறதோ அப்போது இருள் அழிந்தே தீரும். விழிப்புணர்வின் வருகையினால் இருள் அகல்கிறது.

கண்பார்வை இல்லாத ஒருவர், இருளால் பாதிக்கப்படுவதில்லை. இருளைப்பார்த்து அவர் பயப்படுவதில்லை. குருடருக்கு இருள்தான் அவருடைய இயல்பு நிலை. ஒரு குருடா், தாம் இருளில் ஒரு பேயையோ அல்லது ஆவியையோ பார்த்ததாகச் சொல்வதில்லை. இருளில்தான் அவர் எப்போதுமே இருக்கிறார்.

உண்மையிலேயே துணிவும் தைரியமும் உடைய ஒருவர்கூட, இருளினால் பாதிக்கப்படுவதில்லை. எதைப்பற்றியும் பயப்படாத ஒருவருக்கு தம்முடைய ஆணவம் அழியும்போதும், அடையாளம் அழியும்போதும், மரணத்தின்போதும்கூட பயம் இருக்காது. அவருக்கு இருள், பயத்தை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. அவரால் ஒளியையும் இருளையும், எந்தவொரு ஆசையும் அச்சமும் இல்லாமல் கையாள முடியும்.

இந்த இரண்டு வகையான மனிதர்களைத் தவிர, அனைவருக்குமே இருள் ஒரு பிரச்சினையாகவும் பயம்தரக்கூடியதாகவுமே இருக்கிறது. நம்முடைய ஆனந்த ஸ்புரண தியான முகாமிலும். நித்யானந்த ஸ்புரண தியான முகாமிலும் பங்கேற்பாளர்கள் இருளைத் தியானிப்பதற்கு வழிநடத்தப்படுவார்கள். இது மிகுந்த சக்தியளிக்கக்கூடிய தியானம். உங்களுக்கு இது ஆச்சரியமாகக்கூட இருக்கலாம், ஆனால் இருள் என்பது சக்தி.

ஒளியின் கடவுள் மட்டிமல்ல இருளின் கடவுளும் கிருஷ்ணரே!

இந்த தியானத்துள் மிகுந்த விழிப்புணர்வுடன் செல்பவர்களுக்கு, மிகவும் சக்தி வாய்ந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இதைச் செய்பவர், படிப்படியாகத் தம் புலனுணர்ச்சிகளை இழுப்பார். பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, நுகாவது, மற்றும் தொடு உணர்வு ஆகிய அத்துணை புலனுணர்ச்சிகளையும் இழப்பார். தம்முடைய உடலின் எல்லைகளைப் பற்றிய உணர்ச்சியையும் விட்டுவிடுவார். அவரது நினைவிலிருந்து உடலே மறைந்துவிடும். அதன் பின்பு, எண்ண ஓட்டம் நின்று, மனம் அமைதியாகிவிடும்.

இருள்மீது கவனத்தைக் குவித்து தியானம் செய்வது, நம்மை ஆன்மாவை உணரும் இடமாகிய விழிப்புறுநிலையை அடையச்செய்யும். உடல், மனம் மற்றும் புலன்களை இழக்க முடியும், ஆனாலுங்கூட, நம்முடைய ஆன்மா அழியாமல் இருக்கும் என்பதை உணருகின்றனர்.

சில மனிதர்களால், அதுவும் வருடத்தின் குறிப்பிட்ட காலங்களில் ஒளியைவிட இருளின் கால அளவு அதிகமாக இருக்கும் நாடுகளில் வாழும் மனிதர்களால், இந்த 'இருள் தியானத்திற்குள்' செல்லும்போது,

இருள்மீது கவனத்தைக் குவித்து தியானம் செய்வது, நம்மை ஆன்மாவை உணரும் இடமாகிய விழ்ப்புறுநிலையை அடையச்செய்யும்.

அவர்களால் முழுமையாக இருளை உணர முடியவில்லை.

ஆர்டிக் மற்றும் அன்டார்டிகா சமீபத்திய பகுதிகளில், குளிர் காலத்தில் சூரியனைப் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் வாழ்ந்தவர்களுக்கு இருளைப்பற்றிய பயமே இல்லை. அப்படிப்பட்டவர்களை, இருள் சம்பந்தமான பயத்தைப் போக்குவதற்கு, 'இருள்மீது ஆழ்ந்து தியானியுங்கள்' என்று சொல்லும்போது, அவர்கள் இருளை, பயப்படுவதற்குரிய ஒரு விஷயமாகக் கருதவில்லை.

இதிலிருந்து, கிருஷ்ணர் ஒளியின் கடவுள் மட்டுமல்ல, இருளுக்குமான கடவுள் என்பது தெரிகிறது.

கிருஷ்ணர், தம்முடைய ஊடுருவிப் பரவியிருக்கும் விஷயங்களை மேலும் வெப்பமாகவும் இருந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஜீவன்களையும் தாமே இருப்பதாகச் சொல்கிறார். நம்மைப் பொறுத்தவரை, அவர் நம் மன இருளான ஸ்ம்ஸ்காரங்களை அழிப்பவர்.

மேலும் அவர், நிலவிலிருந்து வெளிப்படும் சக்தியாகத் தாமே இருப்பதாகவும், இச்ச க்தியின் மூலம் தாவரங்களுக்குள் உயிர்ச்ச க்தியாகவும் சொல்கிறார்.

தைத்தீரேய உபநிடதம் சொல்கிறது: '' ப்ரூர்மடே, இப்பிரபஞ்ச விழிப்புணர்வே இறுதி காண்பார்கள். வாழ்க்கை அவர்களுக்கு எல்லா ஆசீர்வாதங்களையும் பொழிகிறது.

இந்த இறுதி ஸ்தூலத்திலிருந்து ஆகாச' சக்தி தோன்றியது. ஆகாச'த்திலிருந்து காற்று வந்தது. காற்றிலிருந்து நெருப்பு உண்டானது. நெருப்பிலிருந்து நீர் உருவானது. நீரிலிருந்து பூமி உருவானது. இந்தப் பூமியில் இருந்து மரங்களும் செடிகளும் உருவாக்கப்பட்டன. மரங்களும் செடிகளும் உணவைத் தந்தன. அந்த உணவிலிருந்து மனித உடலும் தலையும் கையும் காலும் இதயமும் உருவாகின.''

உண்ணம்போது உண்ணுங்கள். தூங்கும்போது தூங்குங்கள்

'தாமே ப்ரூற்மம் எனவும், தம்முடைய வெளிப்பாடுகளான நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் மூலமாக, இந்த உலகில் செடிகளையும் மரங்களையும் வாழவைப்பதாகவும், அதன் மூலம் உருவாகும் காய்களையும் பழங்களையும்கொண்டு மனிதர்களையும் வாழச்செய்வதாகவும்'கூறுவதன் மூலம், கிருஷ்ணர், இந்த உபநிடதக் கூற்றை உறுதிப்படுத்துகிறார்.

மரம் செடிகொடிகள் இல்லாமல் உணவு கிடையாது. உணவு இல்லாமல்,

உடலும் மனமும் இருக்க முடியாது. இதே உடலும் மனமும் இறந்தபிறகு அடுத்தவர்களுக்கு உணவு என்பது தெய்விகத்தன்மையின் வெளிப்பாடு. உணவில் இருக்கும் சக்தியே, ஸம்ஸ்காரங்களைப் படைக்கவும் அழிக்கவும் செய்கிறது.

நம்மில் ஒரு சிலர் உணவை நாவின் சுவைக்கான ஒரு பொருளாகவோதான் பார்க்கிறோம். ஒன்று, உணவை வெறுக்கிறோம் அல்லது அதற்கு அடிமையாய் இருக்கிறோம். நாம் என்ன உண்கிறோம் என்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

உணவு என்பது தெய்விகத்தன்மையின் வெளிப்பாடு. உணவிலிருக்கும் சக்கியே, ஸம்ஸ்காரங்களைப் படைக்கவும், அழிக்கவும் செய்கிறது.

ஒரு ஜென் குருவிடம் அவருடைய சீடர் கேட்கிறார், ''குருவே, நீங்கள் ஞானமடைந்தபின், உங்களிடம் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?'' என்றார். அதற்கு அந்த குரு, ''அப்பா, நான் ஞானமடைந்தபின், உண்ணும்போது உண்கிறேன், தூங்கும்போது தூங்குகிறேன், ' என்றார்.

இந்தப் பதில், கொஞ்சம் குழப்பத்தைத் தருவதாகக்கூட இருக்கும். நம்மில் எத்துணை பேர் உண்ணும்போது உண்கிறோம்; நம்மில் எத்துணை பேர், உண்ணும் உணவில் நினைவைக்குவித்து உண்கிறோம் ? உண்ணும்போது, உண்பதைத்தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் -பேசுவது, எதையாவது கனவு காண்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சண்டை விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறோம்.

நாம், உணவை ஒரு குப்பையாக நினைக்கிறோம். அப்படி நினைப்பதாலேயே அது குப்பையாகவே மாறிவிடுகிறது. உணவைச் சக்தியின் வடிவமாக, உயிர்ச் சக்தியாகப் பார்க்கத் தொடங்கும்போது, நமக்குள் ஒரு மிகப்பெரிய உணர்வுமாற்றம் ஏற்படும். கிறிஸ்துவ மதத்தில் ஒரு பழக்கம் உள்ளது, உண்ணுவதற்கு முன், அந்த உணவைத் தந்த கடவுளுக்கு நன்றியைச் செலுத்துவார்கள்.

உணவைச் சக்தியின் வடிவமாக, உயிர்ச்சக்தியாகப் பார்க்கத் தொடங்கும்போது, நமக்குள் ஒரு மிகப்பெரிய உணர்வுமாற்றம் ஏற்படும்.

உண்ணுவதற்கு முன், இந்த உணவை நமக்காக அருளிய இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவியுங்கள். அந்த உணவின்மீது சிறிது நேரம் தியானியுங்கள். பாரம்பரிய ஹிந்து கலாச்சாரத்தில் ஒரு பழக்கம் உள்ளது, இறைவனுக்கு நன்றிசெலுத்தி, மந்திர உச்சாடனம்செய்த பின்னரே உண்பார்கள். இந்தப் பழக்கத்தை விழிப்புணர்வுடன் பின்பற்றும்போது, மிகப்பெரிய மாற்றங்கள் உங்களுக்குள் நிகழும்.

உண்ணும்போது நாம் உணவில் கவனம் செலுத்துவதினால், நாம் நிகழ்காலத்தில் இருப்போம். நிகழ்காலத்தில் நிகழும் அனைத்து விஷயங்களுமே, முதன்முறையாக நிகழும் ஒரு நிகழ்வே, அது புத்தம் புதியதாய் இருக்கும்.

ஒரு குருவுக்கு, அவருடைய டாக்டா் பத்திய உணவு சாப்பிட அறிவுறுத்தியிருந்தார். அந்தப் பத்திய உணவை சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அந்தச் சமையல்காரர், ஒருநாள் அந்த குருவிடம், ''தாங்கள் எப்படித்தான் தினமும் ஒரே உணவை, குறைகூறாமல் உண்கிறீர்களோ! ஒரே உணவைச் சமைக்க எனக்கே சலிப்பாக இருக்கிறது,'' என்றார்.

அதற்கு அந்த குரு, ''நான் எங்கே, ஒரே உணவை உண்கிறேன்? நேற்று நான் உண்ட உணவும், இன்று நான் உண்ணும் உணவும் வேறு வேறுதானே; இன்று உண்ணும் உணவும் நாளை உண்ணப்போகும் உணவும் வேறு வேறுதானே?!' என்றார்.

நிகழ்காலத்தில் தளர்வாக, சௌகரியமாக வாழமுடிந்த மனிதர், மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பார். அவர் கிருஷ்ணரோடு வாழ்வார்.

உணவு

சூரியன், ஒளியையும் வெப்பத்தையும் சக்தியாக வெளிப்படுத்துவது நமக்குத் தெரியும். மேலும் சூரியன் இல்லாமல் எந்த உயிரும் வாழ முடியாது என்பதும் நமக்குத் தெரிந்ததே.

ஆனால், சூரியனின் பங்களிப்பை உணருகின்ற அளவிற்கு, சந்திரனின் பங்களிப்பை நாம் உணர்வதில்லை. சந்திரன், மரங்களும் செடிகொடிகளும் வாழ்வதற்கான உயிர்ச்சக்தியைக் கொடுக்கிறது. இதன் மூலம் மனிதர்களுக்கான உயிர்ச்சக்தியைக் கொடுக்கிறது. ஆனால், சூரியன் அளவிற்கு நம்மால் சந்திரன் போற்றப்படுவதில்லை.

நிலவு, நம்முடைய நடத்தையையும் மன அமைப்பையும் மனத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஸம்ஸ்க்ரு'தத்தில், ஸோம என்பது நிலவைக் குறிக்கும். அதாவது நிலவின் தேய்ந்து வளரும் நிலையற்ற தன்மையை, இது குறிக்கிறது.

அடுத்து கிருஷ்ணர், வைச் வாநர, ப்ராண மற்றும் அபான பற்றிப் பேசுகிறார்.

ப்ரு'ஹதாரண்யக உபநிடதம் சொல்கிறது: 'மனிதர்கள் உண்ணும் உண்வை உள்ளிருந்து செரிக்கச் செய்யும் நெருப்பே, வைச் வானர. அதன் சப்தத்தை, நம் காதுகளை மூடிக்கொண்டால், நம்மால் கேட்க முடியும். மரணம் நெருங்கி, ஆன்மா பிரியப்போகும் நேரத்தில், இந்த சப்தம் வெளிப்படாது. மேலும் அபானமோ அல்லது ப்ராணனோ ஒன்றைவிட்டு ஒன்று தனியாகச் செயல்பட முடியாது'.

சுவாசம் இல்லையென்றால், உணவு கெட்டுவிடும்; உணவு இல்லையென்றால், சுவாசம் உலர்ந்துவிடும். இவை இரண்டும் இணைந்த விழிப்புணர்வு நிகழும்பொழுது, நம்முள் ஆன்ம உணர்வு மலர்கிறது.

உணவு மொத்தம் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மென்று விழுங்கும் திட உணவு, காற்றின் மூலமாக உள்செல்லும் உணவு, உறிஞ்சிக் குடிக்கும் திரவ உணவு. மற்றும் நாக்கினால் நக்கி உண்ணும் உணவு.

அபானன், ப்ராணன் – இவை இரண்டும் இணைந்த விழிப்புணர்வு நிகழும்பொழுது, நம்முள் ஆன்ம உணர்வு மலர்கிறது.

உணவு - இப்படி நான்கு வகைகள் இருக்கின்றன. இந்த நான்கு வகை உணவுகளையும், ஆகாயம் தவிர, மற்ற நான்கு பூதங்களான காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலத்துடன் சம்பந்தப்படுத்தலாம்.

பண்டைய ஹிந்து கலாசாரத்தின் மருத்துவ முறையான ஆயுர்வேதம், வைச்'வானர விதியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. நம்முள் இருக்கும் நெருப்பின் தரமே, நம்முடைய பசி, பசியின்மை மற்றும் நம்முடைய உடல் நலத்தையும் நிர்ணயிக்கிறது.

கிருஷ்ணர், இங்கே உணவையும் தெய்விகத் தன்மையுடையது என்கிறார். உணவும் அவருடைய அடையாள முத்திரையைத் தாங்கியிருக்கிறது; சக்தியைத் தாங்கியிருக்கிறது என்கிறார்.

நாம் உணவை மதிப்பதே இல்லை. அதை அலட்சியப்படுத்துகிறோம்; அதை, சாதாரணமாக நினைக்கிறோம். உணவு பற்றாக்குறை ஏற்படும்போதுதான், அதன் அருமையை நாம் உணருகிறோம். அப்போது அதைக் கொண்டாடுகிறோம்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் பாருங்கள். நாம் உண்ணும் உணவை எத்தனை தடவை நாம் மதித்து சாப்பிட்டிருக்கிறோம் ?

ஒரு ஏழை, தாம் உண்ணும் சாதாரண உணவைக்கூட, எவ்வளவு களிப்புடனும் விழிப்புணர்வுடனும் உண்கிறார்.

நமக்கு வசதி வாய்ப்புகள் அதிகமாக அதிகமாக உணவு மீதான நமது விழிப்புணர்வு குறைகிறது. நம்முடைய நோய்களுக்கான அடிப்படைக்காரணமே உணவுக்கு நாம் செய்யும் அவமரியாதையே.

பாரதத்தில் கிராமப்புறங்களில் உள்ள பாரம்பரியமிக்க வீடுகளில், இன்றும்கூட, வீட்டில் உள்ள மனிதர்கள் உண்ணுவதற்கு முன்பாக காக்கைக்கோ அல்லது மற்ற விலங்குகளுக்கோ உணவுபடைப்பது வழக்கம். மேலும் பல நேரங்களில், யாராவது ஒரு துறவிக்கோ அல்லது பிட்சைகேட்பவருக்கோ உணவுகொடுக்காமல் வீட்டில் உள்ளவர்கள் உண்பது இல்லை.

மற்ற உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் உணவளிப்பது ஒரு மிகச்சிறந்த வழிபாடாக ஹிந்து கலாசாரத்தில் போற்றப்படுகிறது. உணவு என்பது இறைவன் குடிகொண்டிருக்கும் விஷயமாகவே கருதப்படுகிறது.

ஒரு சின்ன கதை

ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தம்முடைய மாணவனுக்கு, உண்ணும்போது எப்படி உட்கார வேண்டும், எப்படி உணவைக் கையில் எடுக்க வேண்டும், உண்ணும் உபகரணங்களை எப்படிக் கையாள வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுக்கார்.

அதைக் கேட்ட சிறுவன், தன் எதிரே இருந்த உணவைக் கையிலெடுத்துச் சட்டென சாப்பிடப் போனான். அதைப்பார்த்த அந்த ஆசிரியை, ''நாம் எதையோ மறந்துவிட்டோம் என நினைக்கிறேன்," என்றார்.

அதற்கு அந்தச் சிறுவன், ''மறந்தோம்,'' என்றான்.

''நாம் உண்ணுவதற்கு முன்னால் பிரார்த்தனை செய்வதில்லையா ?' என்றார்.

நம்முடைய நோய்களுக்கான அடிப்படைக்காரணமே உணவுக்கு நாம் செய்யும் அவமரியாதையே.

அதற்கு அந்தச் சிறுவன் சொன்னான்,

''இல்லை! ஏனென்றால் என் அம்மா நன்றாகச் சமைப்பார்கள்,'' என்றான்.

கேள்வி: இன்றைய காலகட்டத்தில், யோகா வைத்துக்கொள்வதற்காகச் செய்கிறார்கள். இது தவறா?

ஒருவர் தம் உடம்பில் இருக்கும் வியர்வையை வெளியேற்ற நினைத்தால், அதற்கு யோகா தேவையில்லை. யோகா அதற்காக உருவாக்கப்பட்டது கிடையாது. யோகா, வெப்பம் அதிகமான, புழுக்கம் அதிகமான ஒரு அறையில் இருந்துகொண்டு வியர்வையை வெளியேற்றுவதற்காகச் செய்யப்படுவது கிடையாது. இவையெல்லாம் முரண்பாடான முறைகளாகும்.

நித்ய யோகா. உங்கள் அசைவுகளுக்கு உயிர் அளிப்பது

உடலும் மனமும் இருப்புத்தன்மை அளவில் ஒன்றியிருப்பதற்காகச் செய்யப்படுவதே யோகா. அதற்காக உடலைப் பழக்கப்படுத்தும் நுட்பமே யோகா. இதுவே யோகாவின் ஒரே நோக்கமாகும். யோகா என்றால் 'இணைத்தல்' அல்லது இணைப்பதற்கான வழிமுறை என்றே பொருள். யோகா என்பது செயலையும் செயல்முறையையும் குறிக்கும் வினைச்சொல்; அது ஒரு இலக்கையோ அல்லது ஒரு இறுதி முடிவையோ குறிக்கும் பெயர்ச்சொல் அல்ல .

உடலளவில் யோகா என்பது நமது தனி விழிப்புணர்வை பிரபஞ்ச விழிப்புணர்வுடன் இணையச் செய்வதற்கான எட்டு பாதைகளில் ஒன்றே.

மிகச்சிறந்த யோக வல்லுநரான எனது குருவால், நான் முதற்கொண்டு, யோகா பயிற்றுவிக்கப்பட்டேன். ஞான சக்தியைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவிற்கு என் உடலைத் தயார்படுத்த, அவர் ஒரு கருவியாகச் செயல்பட்டார். ஆன்மிகத் தேடலின்போது, நான் செய்த கடுந்தவங்களுக்கு என் உடல் தயாராவதற்கு இது உதவியது.

சிலர் மிகச் சாதாரணமாக, ப்ராணாயாமம் - மூச்சுப் பயிற்சியைச் செய்கிறார்கள். ஏதோ ஒரு உடற்பயிற்சிபோன்று ப்ராணாயாமத்தையும் நினைத்துக்கொண்டு அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இது மிகவும் அபாயமானது. ப்ராணன் என்பது உயிர்ச்சக்தி. தவறாக உபயோகிக்கும்பொழுது, அது உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம்.

சரியாகப் பயன்படுத்தப்படும்பொழுது, இது ஆயுளை நீட்டிக்கும். உணவோ, தண்ணீரோ அல்லது காற்றோ இல்லாமல்கூட உயிர்வாழ ப்ராணாயாமம் உதவும். இதற்கெல்லாம் ஆழ்ந்த புரிதலும் சரியான வழிகாட்டுதலும் பயிற்சியும் தேவை.

நம்முடைய ஆசிரியர்கள், நித்ய யோகாவைக் கற்றுத்தருகிறார்கள். நித்ய யோகா என்பது, யோகாவின் தந்தையான பதஞ்சலி முனிவரின் உடல்மொழிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

நித்ய யோகா, தியானத்தை அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளது. தியானத்தோடு அஷ்டாங்க யோகாவின் மற்ற அம்சங்களும் இணைக்கப்பட்டு, ஒரு முழுமைத்துவமிக்க முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நித்ய யோகா என்பது, நம் உடலை எந்த அளவிற்கு வளைக்கிறோம் என்பதல்ல. நாம் எந்த இலக்கை நினைத்துக்கொண்டு, இந்த உடல் அசைவுகளைச் செய்கிறோம் என்பதே முக்கியம். நம்முடைய நோக்கமும், அதை ஆழ்ந்து மனதுக்குள் பாவனை செய்துபார்ப்பதுமே, அந்த இலக்கை அடைய வழிவகுக்கும். உங்கள் உடல் அந்த இலக்கை நினைத்தபடியே இயங்கும். நீங்கள் அதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்க வேண்டாம்.

நித்ய யோகா, உங்கள் வாழ்க்கையில் இன்னும் சில அசைவுகளை ஏற்படுத்துவது இல்லை. உங்கள் அசைவுகளுக்கு உயிர் அளிப்பது.

தங்கள் உடல் நிலைக்கு யோகா என்பது முடியாத காரியம் என்று நினைத்த அறுபது, எழுபது வயதானவர்கள்கூட, நித்ய யோகா செய்கிறார்கள். அவர்களே ஆச்சரியப்படும் வகையில், அவ்வளவு சுலபமாக எந்தவொரு சிரமுமின்றி அவர்கள் உடல் இயங்குகிறது!

இந்தக் கம்ப்யூட்டா் காலத்தில், 'மூளை மாசுபாடு' எனும் விஷயத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு தியானம் ஒன்றே தீர்வு . நித்ய யோகா, தியானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனக்குத் தெரிந்த வரையில், இதுதான் பாதுகாப்பானதும் நல்ல பலன்தரக்கூடியதுமான யோகா.

நமது மனம் எப்படி இயங்குகிறது

  • 15.15 நான் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறேன். நினைவும் அறிவும் அவற்றின் இழப்பும் என்னிலிருந்துதான் வெளிப்படுகின்றன. வேதங்களினால் அறியப்படும்பொருள் நானே. உண்மையில் வேதாந்தத்தை உருவாக்கியவனும் நானே, வேதங்களை அறிந்தவனும் நானே.
  • 15.16 இந்த உலகில் அழியக்கூடியவை, அழியாதவை என்று இரண்டு வகையான விஷயங்கள் இருக்கின்றன. வாழும் உயிர் அனைத்தும் அழியக்கூடியவை. கூடஸ்தன் (ஆத்மா) அழியாதவன்.

உங்கள் மனத்தின் இருப்பிடம் எது ?

கிருஷ்ணர், 'அவரே நினைவாகவும் அறிவாகவும்' இருப்பதாக அறிவிக்கிறார். இதன் பொருள் என்ன?

நமது மனம் எப்படி இயங்குகிறது? அது எப்படி நம்பிக்கைகளைக் கண்டுபிடித்துக்கொள்கிறது ? நமக்கு நம்முடைய மனம் எங்கே இருக்கிறது என்பதுகூட தெரியாது.

உங்கள் மனம் எங்கே இருக்கிறது என்று உங்களைக் கேட்டால், உங்கள் தலையைக் காண்பிப்பீர்கள், அது உங்கள் மனம் அல்ல.

நம் உடலில் இருக்கும் அத்தனை திசுக்களுக்குள்ளும், ஒரு இயல்பான புத்திசாலித்தனம் நிறைந்திருக்கிறது. இந்தத் திசுக்கள் அனைத்தும், தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் திறன்கொண்டவை. அதனால் நமது புத்திசாலித்தனம் எப்போதுமே புதிதாகவும், காலத்திற்கேற்ப தன்னை உயர்த்திக் கொள்வதாகவும் இருக்கிறது. அது பழைமையானது அல்ல.

திசுக்களே நமது உடல் - மன அமைப்பை உருவாக்குகின்றன. அவை நம் உடலெங்கும் நிறைந்து இருக்கின்றன. அதனால், நம் மனம் உடலின் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது என்று நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது, நிச்சயமாக அது நம் தலையில் இல்லை.

இந்த மனமானது எப்படி இயங்குகிறது? திசுக்களினால் ஆன நமது உடல் - மன அமைப்பின் கூட்டு புத்திசாலித்தனம் எந்தவிதத்தில் இயங்குகிறது ? இன்றளவும் அறிவியல், இதற்கான ஒரு ஒரு சிறுகுறிப்பைக்கூட தர முடியவில்லை.

புலன்கள், எவ்வாறு வெளி உலகை உள்வாங்கிப் என்பதை இன்றைய விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

விஞ்ஞானிகளும், நரம்பியல் வல்லுனர்களும், உளவியல் அறிஞர்களும் மற்றும் பல துறை அறிஞர்களும், 'நமது சிந்தனை நடக்கிறது' என்று தாங்கள் நினைக்கிற ஏதோ ஒரு தூல பாதையைக் காட்டலாம். ஆனால், அதற்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது.

நம்முடைய ரிஷிகளும் ஞானிகளும் இந்த அமைப்பு எப்படி இயங்குகிறது என்று அழகாக விளக்கியிருக்கிறார்கள். அவர்கள், எப்படி எண்ணங்கள் ஒரு பாகத்திலிருந்து மற்றொன்றிற்குப் பரிமாறப்படுகிறது என்பதை கருத்து ரீதியாக விளக்கியிருக்கிறார்கள்.

திசுக்களே நமது உடல் - மன அமைப்பை உருவாக்குகின்றன.

அவர்களுடைய இந்த விளக்கங்கள் நம் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நமக்கு அழகாகத் தெளிவுபடுத்துகின்றன.

இப்போது, நாம் எப்படி உள்வாங்குகிறோம் என்பதை இந்தப் படத்தின் துணையோடு பார்ப்போம்.

இது கண்கள் வழியாக நாம் உள்வாங்கும் விஷயங்களுக்கு மட்டுமல்லாது, மற்ற புலன்களான காது, மூக்கு, நாக்கு மற்றும் உடலின் வழியாக நாம் உள்வாங்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொதுவானது.

ஒரு எடுத்துக்காட்டுக்காக, நாம் கண்களால் பார்க்கும் செயல்பாட்டை எடுத்துக்கொள்வோம் ஏனென்றால் புலன்சார்ந்த செயல்களில் கிட்டத்தட்ட 80% செயல்கள் கண்கள் வழியாக உள்வாங்கும் செய்திகளாகவே இருக்கின்றன.

உங்கள் கண்கள் இப்போது என்னைப் பார்க்கின்றன. ஸம்ஸ்க்ரு'தத்தில் இந்தப் பார்க்கும் திறனை, சக்ஷு என்று சொல்கிறோம்.

சக்ஷு என்பது கண்களுக்குப் பின்புலத்திலிருந்து இயக்கும் சக்தியே தவிர, இது ஒரு உறுப்பு அல்ல. இது காட்சிகளைச் சிக்னல்களாக மாற்றும் திறன் கொண்டது. ஆங்கிலத்தில் இதை 'டிஜிடல் சிக்னல் ப்ராஸசர் (Digital Signal Processor) என்று சொல்கிறார்கள்.

நாம் பார்க்கும் காட்சிகள், பயோ - சிக்னல் கோப்புகளாக மாற்றப்பட்டு, மனப்பதிவுகள் இருக்கும் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. இந்த நினைவுப் பகுதி, இப்போது வந்திருக்கும் பதிவுகளை ஆராய ஆரம்பிக்கும். அது ஏற்கெனவே தனக்குள் வைத்திருக்கும் பதிவுகளையும், புதிதாய் வந்திருக்கும் பதிவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்.

சித்தம் ஒரு வடிகட்டியாகச் செயல்படுகிறது. அது ஏற்கெனவே இருக்கும் பதிவையும், புதிதாய் வந்திருக்கும் பதிவோடு 'இது அதுவல்ல, இது அதுவல்ல' என்று ஒவ்வொன்றாக நிராகரிக்கும்.

'இப்போது நாம் பார்ப்பது, ஒரு விலங்கு அல்ல, ஒரு பாறை அல்ல', என்று ஒவ்வொன்றாக நிராகரிக்கும். ஸம்ஸ்க்ரூத்தில் இதை, ந கதி, ந இதி என்று சொல்வார்கள்.

'இதுவல்ல, இதுவல்ல' என்பதன் மூலம், ஒரு பகுதி மட்டுமே செயல்முறைபடுத்தப்பட்ட, வடிகட்டப்பட்ட ஆவணமானது முழுதாகச் செயல்முறை ஆக்கப்பட்டதல்ல.

அடுத்ததாக அந்த ஆவணம், நம்முடைய மனத்துள் அதாவது மனஸில் நுழைகிறது. அதன் பின்பு மனம், 'உங்கள் முன் இப்போது பேசிக் கொண்டிருப்பது ஒரு மனிதர்தான்' என்பதைச் சொல்லும். மனம்தான் நாம் பார்க்கும் பொருளை அடையாளம் காண்கிறது. தனக்குள் இருக்கும் மிகப்பெரிய நினைவுப்பதிவுக் கோப்புகளிலிருந்தே மனஸ் இதைச் செய்கிறது.

இன்றளவும் ஒரு கம்ப்யூட்டரால் இந்த அடையாளம் காணும் செயலைச் செய்ய முடியவில்லை. இந்த ஒரு செயலைச் செய்வதற்குத் தேவைப்படும் உபகரணங்களையும் சக்தி அளவையும் கணக்கிட்டுப் பார்க்கையில், அது ஒரு கடினமான காரியமாக இருக்கிறது.

மேலும் நம் உடல் - மன அமைப்பு, இந்தச் செயலைச் செய்ய எடுத்துக்கொள்ளும் வேகம், கம்ப்யூட்டரால் ஈடுசெய்ய முடியாததாகவே இருக்கிறது.

அஹங்காரம் தூங்குவதே இல்லை

இப்படி அடங்கிய கோப்பு, ஒரே தாவலாக நமது அஹங்காரத்தை அடைகிறது.

அஹங்காரம் என்பது, சிக்மண்ட் முஃபிராய்டும் (Sigmund Freud) மற்றவர்களும் விளக்கியதுபோல, அது மனிதனின் அடையாளம். அங்கேதான், நாம் சோதித்துப்பார்த்த அத்தனை விஷயங்களின் பதிவுகளும் இருக்கிறது.

ஆனால், நான் இங்குச் சொல்கின்ற வரையறை, மேற்கத்திய உளவியல் தத்துவங்கள் சொல்லும் வரையறையைக் காட்டிலும் வேறானது.

நம்முடைய அஹங்காரம், இந்தக் கோப்பை தனக்குள் ஏற்கெனவே பதிந்திருக்கும் எண்ணப்பதிவுகளோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும். அந்தப் பதிவுகளைப் பொறுத்தே, இந்தச் குழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.

நாம் ஏற்கெனவே இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்குகொண்டு, அதில் நமக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்திருந்தால், தொடர்ந்து அமர்ந்திருந்து அவருடைய பேச்சைக் கேட்போம் என்று தீர்மானிப்போம்.

அப்படி இல்லாமல், அந்த நபருடனான, அதுபோன்ற வேறுயாருடனான நமது முந்தைய அனுபவம் மோசமானதாக இருந்திருந்தால், நாம் அந்த இடத்தைவிட்டு உடனடியாகச் சென்று விடுவோம்.

Part 5: Bhagavad Gita Explained _ Chapter 15

நம் அஹங்காரம்தான், நாம் இந்த நிகழ்ச்சியைக் கவனிக்க வேண்டுமா அல்லது இங்கிருந்து எழுந்து செல்ல வேண்டுமா என்பதை முடிவுசெய்கிறது. நாம் அந்த முடிவை வெளிப்படுத்துகிறோம், அந்த முடிவைப் பொறுத்துச் செயல்படுகிறோம்.

இந்த அஹங்காரத்தளமானது நம்முடைய விழிப்புணர்வு, தர்க்க அறிவு, பட்டறிவு மனத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது.

இந்த அஹங்காரமானது, தொடர்ந்து தன்னுள் முத்திரைகளையும், கடந்தகால நினைவுப் பதிவுகளையும், நிறைவேறாத ஆசைகளையும், மற்ற உணர்ச்சிமயமான எதிர்ச்செயல்களையும், ஒரு பதிவுகளாகத் தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருக்கிறது.

நாம் இந்த அனுபவங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது நமக்குள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அஹங்காரம் தூங்குவதே இல்லை.

இந்த விழிப்புணர்வற்ற பகுதியானது எதிர்மறை நினைவுகளாலும் அமைதியற்ற தன்மையாலும் நிரம்பி இருக்கிறது. நம்முடைய எல்லாக் கடந்தகால நினைவுப்பதிவுகளும், நமது எண்ண அமைப்புகளும், இந்த விழிப்புணர்வற்ற பகுதியில் கோப்புகளாக இருக்கின்றன.

உளவியலில், இவ்வாறு நினைவுப்பதிவுகளை engrams (பதிக்கப்பட்ட நினைவுகள்) என்று அழைக்கிறார்கள். இந்த விழிப்புணர்வற்ற பகுதியில்தான், அனைத்து விதமான கோப்புகளும் சேகரிக்கப்படுகின்றன. எந்த ஒரு தர்க்க ரீதியான

எண்ணப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான், நாம் எப்போதும் ஓய்வின்றி இருக்கிறோம்.

தொடர்புமின்றி, எல்லாச் சம்பவங்களும் அப்படியே வரிசைப்படி பதிவாகின்றன.

எண்ணப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான், நாம் எப்போதும் ஓய்வின்றி இருக்கிறோம்.

ஏற்கெனவே சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் இந்த விழிப்புணர்வற்ற தாவலாக இந்தக் கோப்பும் தாவும்போது என்ன நடக்கிறதென்றால், ஒரு தீர்மானத்தை எடுக்கவிருக்கும் அஹங்காரப் பகுதிக்குள் இந்தக் கோப்பு முழுமையாகச் சென்று சேருவதில்லை.

ஒரு கம்ப்யூட்டரில், தகவல்களைச் சேகரிக்கப் பயன்படும் ஹார்ட் டிஸ்கானது (Hard Disc) பதிவுகளால் நிறைந்திருந்தால், புதிதாகத் தகவல்கள் ஏதும் சேகரிக்கும் அளவிற்கு இல்லாமல்போனால், அப்போது கம்ப்யூட்டா் இயங்க முடியாமல் நின்றுவிடும்.

நம்முடைய விழிப்பணர்வற்ற பகுதியும் இதேபோல்தான் இருக்கிறது. பழைய எண்ண அமைப்புகளுடனும் அது நிரம்பியிருப்பதால், நம்முடைய அஹங்காரமானது, சரியாக ஆராய்ந்து சிறந்ததொரு முடிவை எடுக்காமல், அவசர கதியில், ஒரு திறமையற்ற முடிவை எடுத்துவிடுகிறது.

உதாரணத்திற்கு, புகைபிடிப்பதை எடுத்துக்கொள்வோம். நம்முடைய ஞாபகங்களைப் பொறுத்தவரை புகைபிடிக்கும் பழக்கம் கெடுதலானது என்பது நமக்குத் தெரிந்ததே. அது நம் உடலுக்குக் கேடானது என்பதும் தெரிந்ததே. நாம் நம்முடைய விழிப்புணர்வு நிலையில் இருக்கும்வரை, இந்த முடிவையே நாம் பிடித்துக்கொண்டிருப்போம்.

இருந்தாலும், விழிப்புணர்வற்ற பகுதிக்குள் ஒரு எண்ணம் நுழையும்போது, ஏற்கெனவே இருக்கும் மனப்பதிவுகள் அதற்கு இடும் கட்டளை, 'புகைபிடி' என்பதுதான். உடனே நாமும் புகைபிடிக்கத் தீர்மானிக்கிறோம்.

விழிப்புணா்வுப் பகுதி 'புகைபிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது, அதனால் நாம் புகைபிடிக்க வேண்டாம்' என்று சொல்லும். ஆனால் விழிப்புணர்வற்ற பகுதியோ, 'புகைபிடிக்க வேண்டும்' என்றுகூட சொல்வது கிடையாது, 'புகைபிடித்தாக வேண்டும்' என்ற தீர்மானத்தையே அது எடுத்துவிடும். நாம் அதைச் செயல்படுத்துவோம் ! முழுக்க முழுக்க இது ஒரு இயல்பூக்க நிலையிலான முடிவு.

இந்த விழிப்புணர்வற்ற பகுதியானது, மிகவும் சக்தி வாய்ந்தது. இதை மூன்று வகையாக உபயோகப்படுத்தலாம். இயல்பூக்க நிலை, தர்க்க நிலை மற்றும் உள்ளுணர்வு நிலை.

விழிப்புணர்வற்ற நினைவுப்பதிவுகளாலும் அமைதியற்ற தன்மையாலும் நம் முடிவுகள் இயல்பூக்க நிலையிலேயே இருக்கின்றன. இயல்பூக்க நிலையிலும் விழிப்பற்ற நிலையிலும், ஒரு விலங்கு போலவே அவசர நிலையில், பதட்டமான முடிவுகளை எடுக்கும்போது, தவறான முடிவுகளையே எடுக்கிறோம்.

நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதிக்குள் அமைதியையும் விழிப்புணர்வையும் நிரப்பும்போது, நாம் உள்ளுணர்வு நிலையிலே இருப்போம்.

அடுத்ததாக தர்க்க ரீதியாக முடிவெடுக்கும் நிலை. இந்த நிலையில், நாம் விழிப்புணர்வுடன் இருக்கிறோம். தர்க்க ரீதியான முடிவுகளை எடுத்தாலும் அதில் மிகப்பெரிய உற்சாகமோ, சக்தியோ இருப்பதில்லை. நாம் இந்த நிலையில், புதிதாகவும் படைப்புத்திறனுடன் சிந்திப்பதில்லை. நம்மால் மகத்தான முடிவுகளை எடுக்க முடியாது. நாம் மேலும் முன்னேறுவதில்லை. நாம் காரண காரியங்களை ஆராய்ந்து விழிப்புணர்வுடன் முடிவு எடுக்கிறோம். அவ்வளவுதான்.

தர்க்க ரீதியான முடிவெடுக்கும் நிலையில், நாம் சோர்வடைவதும் இல்லை, புத்துணர்வுடன் இருப்பதும் இல்லை. நாம் ஒரு சுமாரான மனநிலையில் இருக்கிறோம். இந்த நிலையில், நாம் நமது ஆற்றலை முழுவதுமாகப் பயன்படுத்துவதில்லை.

எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் நித்யானந்தம்

உள்ளுணர்வு நிலையில்தான் நம்முடைய முழு ஆற்றலையும் நாம் வெளிப்படுத்துகிறோம்.

நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதிக்குள் நாம் ஆழ்ந்த அமைதியுடனும் அங்கிருக்கும் எண்ணப்பதிவுகளை அகற்றி, ஆழ்ந்த அமைதியையும் விழிப்புணர்வையும் அங்கே நிரப்பும்போது, இந்த உள்ளுணர்வு நிலையிலே இருப்போம்.

ஒரு சின்ன கதை

ஒரு மரவெட்டி, காட்டின் வெளிப்புறத்தில் இருந்த மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஞானிக்கு, அவர் தம்முடைய உணவைப் பரிமாறினார். அந்த மனிதரின் நடத்தையால் மனமகிழ்ந்த ஞானி, அந்த மரவெட்டியிடம், ''ஆழ்ந்து உள் செல்,'' என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

தம்மைக் காட்டிற்குள் சென்று மரம்வெட்டச் சொல்வதாக நினைத்த அம்மரவெட்டி, அடுத்த நாள் அந்தக் காட்டிற்குள் இன்னும் ஆழ்ந்து உள் சென்றார். அங்கே ஒரு மிகப்பெரிய வெள்ளிச் சுரங்கம் இருப்பதைக் கண்டார். அதைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர், அந்த வெள்ளிப் படிமங்களை வெட்டி எடுத்து விற்று செல்வந்தரானார்.

சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஞானி அதே வழியாகப் பயணம்செய்தார். அந்த மரவெட்டி இந்த முறையும் அந்த ஞானியை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டார். அந்த பணக்காரர் ஞானியிடம் மிகுந்த நன்றியுணர்வுடன் நடந்துகொண்டார். புறப்படுவதற்கு முன் மீண்டும், "ஆழ்ந்து உள் செல்,'' என்று சொன்னார்.

'ஆழ்ந்து உள் செல்' - ஞானியின் இவ்வார்த்தைகள் நம் ஒவ்வொருவராலும் சிந்திக்கப்பட வேண்டிய வார்க்கைகள்!

அடுத்த நாள் அந்த மரவெட்டியும் ஞானியின் சொற்படி, இன்னும் ஆழ்ந்து காட்டிற்குள் சென்றார். அங்கே ஒரு தங்கச் சுரங்கத்தைக் கண்டார். அந்தத் தங்கப் படிமங்களை வெட்டி எடுத்து விற்று, அவர் மேலும் செல்வந்தா் ஆனார். அவா் அந்த ஞானியிடம் ஆழ்ந்த நன்றியுணர்வுடனும் பிரார்த்தனை உணர்வுடனும் இருந்தார். அந்த ஞானியைச் சந்தித்து, அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார்.

இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஞானி மீண்டும் அவ்வழியாகச் சென்றார். அந்த மரவெட்டி, நடந்தவற்றையெல்லாம் சொல்லி, தம்முடைய சொத்துக்களை ஞானியுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். அந்த ஞானி புன்னகையுடன் அவருடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டு, ''ஆழ்ந்து உள்செல்,'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

ஞானியின் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக்கொண்டு, அவர் காட்டிற்குள் இன்னும் ஆழ்ந்து உள்ளே சென்றார். இம்முறை அவர் வைரச் சுரங்கத்தைக் கண்டு வியந்தார். அதை வைத்து, அந்த நாட்டின் அரசரைவிட பெரிய செல்வந்தர் ஆனார்.

அவர் அந்த ஞானியின் வருகைக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார். அவர் வந்தவுடன் இந்த நல்ல செய்தியை அவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற பூரிப்பில் இருந்தார்.

அதேபோல் அந்த ஞானி அவ்வழியாகச் சென்றார். இம்முறையும், ''ஆழ்ந்து உள்செல்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

இம்முறை அந்த மரவெட்டி, காட்டிற்குள் ஆழ்ந்து செல்லவில்லை, மாறாக, 'அந்த ஞானி சொல்வதில் இன்னும் ஆழமான ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது. என் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு லட்சியும் அதனுள் உள்ளது' - என ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தார்.

சட்டென அவருக்குள் இந்தப் புரிதல் பளிச்சிட்டது: 'அந்த ஞானி, 'ஆழ்ந்து உள் செல்' என்று சொல்வது காட்டிற்குள் அல்ல, எனக்குள்!'

ஆழ்ந்த விழிப்புணர்வினாலும், அந்த ஞானியின் மீது வைத்திருந்த நம்பிக்கையினாலும், தம்முள் ஆழ்ந்து உள்சென்று, ஞானமடைந்து விட்டார்.

மிகச்சிறந்த செல்வம் வெளி உலகில் இல்லை, அது நமக்குள்தான் இருக்கிறது. மிகப்பெரிய மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கிறது, வெளியே அல்ல. வெளியுலக விஷயங்களைப்பொறுத்தமட்டில், சந்தோஷமான ஒவ்வொரு அனுபவமும் ஒரு சோகமான அனுபவத்தால் பின்தொடரப்படுகிறது.

சந்தோஷம், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த எதிர்ப்பார்ப்புகள்

நிறைவடையாதபோது சோகம் ஏற்படுகிறது. தேடுதல் நமக்குள்ளேயே நிகழும்போது, எதிர்பார்ப்புகள் உதிர்ந்துவிடும் பந்தங்கள் அறுந்து, ஒரு புது ஆனந்தத்தை அனுபவிப்போம். அந்த ஆனந்தமே எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் நித்யானந்தம்.

சரியான இடத்தில் தேடுங்கள்

நமக்கு இதைப்பற்றி விழிப்புணர்வு இல்லாமல், ஆனந்தத்தை வெளியுலகில் தேடுகிறோம், நமக்குத் தெரிந்த ஒரேவழி இதுதான் என்பதற்காக !

ஒரு சின்ன கதை

ஒரு மாணவர், சிறப்பு அழைப்பாளரின் விரிவுரைகளின்போது உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவருடைய நண்பர் அவரிடம், ''நீ ஏன் இதுபோன்ற சிறப்பு அழைப்பாளரின் விரிவுரைகளுக்கு வரவேண்டும் ? இங்கு வந்து உறங்கத்தான் செய்கிறாய், இங்கு உறங்குவதற்குப் பதிலாக, நீ உன் அறையிலேயே படுத்துறங்கலாமே!' என்றார்.

அதற்கு அந்த மாணவர் சொன்னார், ''நான் தூக்கமின்மை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளேன். இங்கு மட்டும்தான் என்னால் நிம்மதியாக உறங்க முடிகிறது, '' என்றார்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த மாணவரைப்போலவே நாமும், ஆனந்தத்தைத் தேடி, பல இடங்களுக்குச் செல்கிறோம்.

நாம் சரியான விஷயத்தை, தவறான இடங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட எண்ணமே நம்முள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்மை உள்முகப்படுத்துவதே.

சங்கரர் சொல்கிறார், 'நல்லது செய்பவர்களுக்கு, கிருஷ்ணரிடம் இருந்து நினைவுகளும் அறிவும் வருகிறது. கெட்டது செய்பவர்களுக்கு, நினைவுகள் அழிவதும், அறிவுக் குறைபாடும் கிருஷ்ணராலேயே ஏற்படுத்தப்படுகிறது', என்கிறார்.

இங்கே நினைவு மற்றும் அறிவு என்று சொல்லும்போது, நம்முடைய உண்மையான இயல்பினைப் பற்றிய புரிதலையும், கிருஷ்ணரே எல்லோருடைய இதயங்களிலும் வீற்றிருக்கிறார் என்ற புரிதலையும், நாம் தெய்விக சக்தியின் ஒரு பாகமே என்ற புரிதலையும் உணர்தலையுமே குறிப்பிடுகிறார்.

சங்கரர் சொல்கிறார், முழுவதுமாகச் சரணாகதி செய்யும் சீடன், தெய்விகத்தைத் தன் இதயத்தில் உணருவான் என்கிறார். இது ஒன்றே நமக்குத் தேவை, குருவிடம் சரணாகதி செய்யும்போது, நாம் கிருஷ்ணரைக் காணலாம்.

விஞ்ஞானத்தின் கடைசிப்படியே ஆன்மிகத்தின் முதல்படி!

கிருஷ்ணர் அர்ஜுனனை இன்னும் ஆழமான லட்சியத்திற்குள் அழைத்துச் செல்கிறார். கிருஷ்ணர், இந்தப் படைப்பின் ஆதார சக்தியான புருஷன் பற்றிப் பேசுகிறார்.

சாங்கியத் தத்துவம் புருஷன் பற்றியும், பிரக்ருதி பற்றியும் பேசுகிறது. புருஷ என்பது அங்கும் இங்கும் நகராத, செயல்படாத சக்தியையும், பிரக்ருதி என்பது இயங்கு பொருளின் அடிப்படைத் தன்மையையும் குறிக்கும். புருஷ என்பது ஆண் சக்தி, சிவன். பிரக்ருதி என்பது பெண் சக்தி, தேவி.

எல்லா உயிரினங்களும் அழியக்கூடியதே, ஆனால் அவை எல்லாம் அழியா சக்தியில் நிலை கொண்டிருக்கின்றன!

கிருஷ்ணர், இந்தத் தத்துவத்தையும் தாண்டி, இன்னும் ஆழமாகச் செல்கிறார். புருஷ என்பது இரண்டு அடுக்காக இருக்கிறது என்கிறார். ஒன்று, அழியக்கூடியது; மற்றொன்று, அழிவில்லாதது. அவர் சொல்கிறார், எல்லா உயிரினங்களும் அழியக்கூடியதே, ஆனால் அவை எல்லாம் அழியா சக்தியில் நிலை கொண்டிருக்கின்றன என்கிறார்.

முந்தைய அத்தியாயங்களில் கிருஷ்ணர், மனம், புலன்கள் மற்றும் முக்குணங்களின் மூலமாக இயங்கும் பிரக்ருதியின் அம்சங்களைப்பற்றி ஆழமாக விளக்கினார். இப்பிரபஞ்சம் உட்பட வெளிப்பட்ட அனைத்து சக்தியுமே பிரக்ருதி எனப்படுகிறது. இப்போது அவர் புருஷன் பற்றி விளக்கமளிக்கிறார். ஈசா வாஸ்யம் இதம் ஸாவம் - இருப்பது அனைத்துமே சக்தியே என்று ஈசா வாஸ்ய உபநிடதம் சொல்கிறது.

மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், தம்முடைய கண்டுபிடிப்பான 'தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி'யின் (ஒவ்வொரு பொருளும் சக்தியை வெளிப்படுத்தக்கூடியவையே என்னும் சார்பியல் கொள்கையின்) அடிப்படையில் அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டபொழுது, தம்முடைய கண்டுபிடிப்பை, தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார்களே என்று வேதனை அடைந்தார்.

தம்முடைய கண்டுபிடிப்பு தாம் விரும்பாமலேயே பயன்படுத்தப்படுவதை நினைத்து அதிர்ச்சி அடைந்தார். அதனால், வேதனையடைய அவர் ஆன்மிகத்தை நாடினார்.

அப்போது, ஐந்தாயிரம் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, உபநிடதங்களில், பிரக்ருதி, புருஷன் பற்றி விளக்கப்பட்டிருந்ததைப் படிக்க நேர்ந்த ஐன்ஸ்டீன் சொன்ன வாசகங்கள்: 'பொருள் என்பது சக்தியே என்கின்ற விஷயத்தை நான் கண்டுபிடித்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே, கிழக்கத்திய ஞானிகளும் ரிஷிகளும் சொல்லியிருக்கிற விஷயங்களையே, இப்போது விஞ்ஞானிகளும் சொல்லத் தொடங்கியுள்ளார்கள்.

ஆனால் இந்த ஞானிகள், பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே, இதைத் தெரிந்து வைத்திருந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இதற்கும் மேலான ஒரு லட்சியத்தையும் அவர்கள் சொல்லியிருக்கின்றனர், சக்தியிலிருந்தே பொருட்கள் தோன்றுகின்றன' என்கின்ற மிக சூட்சுமமான தத்துவத்தைப் புரிந்துவைத்திருந்தனர். விஞ்ஞானத்தின் கடைசிப்படியே ஆன்மிகத்தின் முதல்படி!

ஐன்ஸ்டீனின் இந்தக் கருத்து, பாரதத்தைப் பெற்றியும் உபநிடதங்களைப் பற்றியும் தவறான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கான ஒரு சவுக்கடி !

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கிழக்கத்திய ஞானிகளும் ரிஷிகளும் சொல்லியிருக்கிற விஷயங்களையே இப்போது விஞ்ஞானிகளும் சொல்லத் தொடங்கியுள்ளார்கள்.

சில நூறு வருடங்களுக்கு முன்புவரை மேற்கத்திய விஞ்ஞானிகள், தாங்கள்தான் இயற்கையின் விதிகளைக் கண்டுபிடித்து எழுதுவதாக நினைத்திருந்தனர். ஆனால், அந்த மனநிலை இப்போது இல்லை.

குவாண்டம் இயற்பியல், மூலக்கூறுகளின் உயிரியல் (Quantum physics. Molecular biology) போன்ற துறைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தினால், தங்களால் இயற்கையை ஓரளவிற்குத்தான் யூகிக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர்.

மூலக்கூறு ஒரு உள்ளாற்றல் சக்தியைப் போன்றது. இந்த சக்தி இல்லாமல் எதுவும் இருக்க முடியாது.

ஒரே ஆராய்ச்சியை, ஒரே மாதிரியான முறையில், இரண்டு விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் முடிவின் மீது ஆராய்ச்சியாளரின் எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ஒரேமாதிரியாக அல்லாமல் வேறுவேறாக இருக்கின்றன.

நமது சாஸ்திரங்கள் இதைப்பற்றி ஆயிரம் விஷயங்கள் குறிப்பிட்டுள்ளன. 'பார்ப்பவர், பார்க்கிற பொருளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார்' என்று சங்கரா் மீண்டும் மீண்டும் சொல்வதன் தாத்பர்யம் இதுவே.

இது, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்ட ஒரு சத்தியம்!

அடையாள அட்டை கேட்பார்கள்

மூல சீக்தியான புருஷ் என்பது ஒரு உள்ளாற்றல் சக்தியைப்போன்றது. அது ஒரு சீக்திதான். ஆனால் அது செயல்படாது. அதுதான் இந்த மொத்தப் பிரபஞ்சமும் இயங்குவதற்குப் பின்னணியில் இருக்கும் அடிப்படை விதி. இந்த சீக்தி இல்லாமல் எதுவும் இருக்க முடியாது.

கிருஷ்ணர் சொல்கிறார், இரண்டு வகையான முருஷ சீக்தி இருக்கிறது. ஒன்று, எங்கும் நிறைந்திருக்கும் அழியா சக்தி. மற்றொன்று, அழியக்கூடியது.

உடல் மனிதர்களுக்குள்ளும் இருக்கும் சக்தி தான், அழியக்கூடிய பருஷ ச க்க்கி இதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட, எல்லைக்குட்பட்ட வாழ்நாளே உள்ளது. இது நிலையானது அல்ல. இது சிதைவுற்று அழிவுறும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

புருஷவின் அழிவற்ற அம்சமான கூடஸ்த என்னும் சக்திய, ஒருபோதும் அழிக்க முடியாத, நம்முள் என்றென்றும் தொடர்ந்திருக்கும் ஆத்ம ச 'க்தி!

கிருஷ்ணர் ச் கீதியானது, அழியாதது என்று இரண்டு வகைகளில் வெளிப்படுகிறது. இந்த இரண்டுமே அடிப்படை ச'க்தியின் அம்சங்களே. ஒன்று, அழிக்கப்படுகிறது. மற்றொன்று தொடர்ந்து வாழ்கிறது. இரண்டிற்கும் உள்ள இந்த வித்தியாசத்தை அனுபவ உணர்பவர்களும், புருஷ் சக்தியின் அடிப்படை ஸ்தீயத்தைப் விடுகலையடைகிறார்கள்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்கிறார்,

ஒரு மேதாவியான பண்டிதா் ஒருவர், தாம் படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்களினால் மிகுந்த கா்வத்துடன் இருந்தார். அவர் அத்வைத (இரண்டல்ல) தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவர். அதனால், கடவுள் பல உருவங்களில் இருப்பார் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.

ஒருநாள் தேவி, தம்முடைய அனைத்து அலங்காரங்களுடனும் பராசக்தியாக அவருக்குக் காட்சி தந்தாள். அதைப் பார்த்த பண்டிதார், பிரமைபிடித்தது போலாகிவிட்டார். அவரால் அந்த நிலையிலிருந்து வெகு நேரத்திற்கு மீளமுடியவில்லை. பிரமை தெளிந்தபோது, அவரால் உச்சரிக்க முடிந்தது 'கா, கா, கா' என்பது மட்டும்தான். அவரால் தாம் கண்ட தெய்வத்தின் பெயரைக்கூட முழுதாகச் சொல்ல முடியவில்லை! வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாததுதான் தெய்வம்.

பண்டிதர்கள், புருஷவின் இயல்பு மற்றும் பல்வேறு ப்ரக்ரு 'திக்கும் வித்தியாசத்தைப் பற்றியும், முடிவில்லாமல் வாதம்செய்துகொண்டே இருப்பார்கள்.

வாகம் தொழிலாகவே அவர்களின் அஹங்காரத்தை மட்டுமே பலப்படுத்துகிறது. கெய்வமே அவர்கள்முன் காட்சியளித்தாலும், அவர்களால் அதை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

நாம் உள்ளுணர்வால் முடிவுகளை எடுக்கும்போது, அது தவறாக இருக்கவே முடியாது.

'தான் காளிதான்' என்பதை நிரூபிக்க, காளிதேவியேகூட, அடையாள அட்டையுடன் வரவேண்டி இருக்கிறது.

கேள்வி: சுவாமிஜி, மனம் எப்படி வேலை செய்கிறது என்பதை மிக அழகாக விளக்கினீர்கள். இதை, நம்முடைய தினசரி நடவடிக்கைகளில் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?

வெறும் சாட்சியாக இருந்தாலே போதும்

நம் மனம், முன்று விதமாக வேலை செய்கிறது. அது, இயல்பூக்க நிலையில், விழிப்புணர்வற்றும் இயங்க முடியும். அறிவு நிலையில், விழிப்புணர்வோடும் இயங்க முடியும். உள்ளுணர்வு நிலையில், உயர்விழிப்புணர்வோடும் இயங்க முடியும்.

நம் மனம் முழுக்க, எதிர்மறை உணர்ச்சிகளைச் சுமந்து கொண்டிருக்கும் ஸ்ம்ஸ்காரங்கள் நிலையிலேயே செயல்படுகிறது. சிறு வயது முதல் திரும்பத் திரும்ப நம்முள் ஏற்படுத்தப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் காரணமாக, இந்த ஸ்ம்ஸ்காரங்கள் நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதியில் மிக ஆழமாகப் புதைந்துள்ளன.

நாம் ஒரு கஷ்டத்தில், வலியில், வேதனையில் இருக்கும்போது, தெளிந்த மனத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணத்தில்,

விழிப்புணர்வற்ற பதிந்திருக்கும் இந்தப் பதிந்தப் பதிவுகள் சட்டென தீர்மானத்தை, நம்மையறியாமலேயே எடுக்கச் செய்கின்றன. நாம் என்ன செய்ய

ரும்முடைய ஸ்ம்ஸ்காரங்களை முடிவுசெய்கின்றன. நம்முடைய மனத்தின் பட்டறிவுப்பகுதி, விழிப்புணா்வுப் பகுதி அதைச் செய்வதில்லை.

பத்து சதவீத விஷயங்களில் மட்டுமே, நம் மனத்தின் விழிப்புணர்வுப் பகுதி முடிவுகளை எடுக்கிறது. அப்போதும்கூட, நம்முன் விரிந்து கிடக்கும் பல்வேறு வாய்ப்புகளிலிருந்து எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழப்பம் அடைகிறோம்.

நம்முடைய தர்க்க அறிவைப் பயன்படுத்தி, சரியானது என்று முடிவுசெய்து ஒரு தீர்மானத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். பின், அவ்வாறு தேர்ந்தெடுத்ததற்காக வருந்துகிறோம். எந்த ஒரு தேர்வுமே நூறு சதவிகிதம் சரியாக இருப்பதில்லை.

உண்மையிலே, நாம் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருக்கிறதா ? ஆம். இருக்கிறது! எடுக்கும்போது, அது தவறாக இருக்கவே முடியாது.

எப்படி நாம் இந்த உள்ளுணர்வு நிலைக்குள் நுழைவது ?

நம் மனது ஒருநிலைப்படும்போது உள்ளுணர்வு வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இதைத்தான் நாம் நிகழ்காலத்தருணம் என்கிறோம். நாம் எப்போதும் கடந்தகாலத்திலேயோ அல்லது எதிர்காலத்தைக் கணிப்பதிலேயோதான் புதைந்திருக்கிறோம். நாம் எப்போதாவதுதான் நிகழ்காலத்திற்கு வருகிறோம். நம் நிகழ்கால எண்ண ஓட்டங்கள், நமக்குக் கொடுக்கும் பரிசு உள்ளுணர்வுதான்!

நம் மனம் எப்போதாவதுதான், நம் உடல் தியானத்தின்பொழுது ஒருநிலைப்படுகிறது. ஒருவரின் விழிப்புணர்வு நிகழ்காலத்தில் நிலைக்கிறது ; விளைவு, எண்ணங்கள் நிற்கிறது; உள்ளுணர்வு செயல்படுகிறது.

இருக்கும் அந்த இடத்திலேயே இருக்கிறது. கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தொடர்ந்து தாவிக்கொண்டே இருக்கும் மனத்தின் அசைவே எண்ண ஒட்டங்கள். எண்ணங்கள் நிற்கும்போது மனம் நின்றுவிடும்.

தியானம், நமது எண்ணங்களை நிறுத்துகிறது. இது மிகவும் சுலபமானது. தியானத்தின்பொழுது, ஒருவரின் விழிப்புணர்வு நிகழ்காலத்தில் நிலைக்கிறது; விளைவு, எண்ணங்கள் நிற்கிறது; உள்ளுணர்வு செயல்படுகிறது. இந்தத் தருணத்தில் நாம் எடுக்கும் எந்தவொரு முடிவுமே சரியானதாகவே இருக்கும்.

எண்ணங்கள் நிற்கவேண்டும் என்றுகூட அவசியமில்லை. உங்கள் எண்ணங்களை நீங்கள் பின்தொடராமல் இருந்தாலே போதும். உங்களது எண்ணப்போக்கில் மாட்டிக்கொள்ளாமல், சாட்சியாக மட்டும் இருக்கும் இந்த நுட்பத்தை நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டால் போதும் நீங்கள் உங்கள் போரில் வெற்றியடைந்துவிட்டீர்கள்.

இந்த நுட்பத்தில் நீங்கள் கைதேர்ந்தவராக ஆகும்போது, நீங்கள் விரும்பும்போதெல்லாம், நிகழ்கால தருணத்தில் நிலைகொள்கிறீர்கள். நிகழ்கால தருணத்தில் நிலைத்து, நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது, 'இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து விட்டோமே' என்று எதிர்காலத்தில் அந்த முடிவுகளைக் குறித்து வருந்தும் நிலை, ஒருபோதும் ஏற்படாது.

இதை கடைபிடிக்கும்போது, எத்தனை கோடிக்கணக்கான பணத்தைச் சேமிக்க முடியும் என்பதை கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். பணத்தை சேமிப்பது மட்டுமே இதன் பலன் அல்ல.

இயல்பூக்க உணர்ச்சி நிலையிலிருந்து வெளிப்படும் ஆசை அல்லது அச்சத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளிலிருந்து நாம் விடுபடுகிறோம். உள்ளுணர்விலிருந்து நாம் இயங்கும்போது, ஒருபோதும் நாம் இயற்கைக்கு முரணாக இருக்க மாட்டோம். உள்ளுணர்வே இயற்கை !

கூட்டு விழிப்புணர்வு

  • 15.17 இந்த இரண்டைத் தவிர, பரமாத்மா என்றழைக்கப்படும் புருஷோத்தமர் இருக்கிறார். மூன்று உலகங்களிலும் ஊடுருவி, அவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பவர் அவரே!
  • 15.18 அழியக்கூடியவை அப்பாற்பட்டவனாகவும் மேலானவனாகவும் நான் இருப்பதால், இந்த உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று புகழ்பெற்றிருக்கிறேன்.
  • 15.19 ஒ, பரதவம்சத்தில் உதித்தவனே, எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் என்னை மேலானவனாக உணர்ந்த ஒருவன், எல்லாம் அறிந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் தன்னுடைய அத்துணை உணர்வையும் கொண்டு என்னை வழிபடுகிறான்.
    1. 20 என்னால் உபதேஸிக்கப்பட்ட மேலான போதனை இதுவே. ஓ! பாவங்களற்றவனே! இதை யாரெல்லாம் உணர்கிறார்களோ

அவர்கள் அறிஞர்களாகிறார்கள். அவர்களின் செயல்கள் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

அழிவதும் அழியாததும் நானே!

புருஷனின் இந்த இரண்டு அம்சங்களையும் - அழியக்கூடிய உடல் -மன அமைப்பு மற்றும் அழியாத ஆன்மா சக்தி - தாண்டி, ஒரு மேலான புருஷ சீக்தி என்ற நிலையும் இருக்கிறது என்கிறார், கிருஷ்ணர். மேலும் அவர், அந்த மேலான புரூஷ ச்க்தி - புருஷோத்தமன் தாமே என்கிறார்.

புருஷ் என்ற சீக்திய நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருக்கிறது. புருஷோத்தம் என்ற சக்கிய இந்தப் பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறது. புருஷூத்தம என்பது பிரபஞ்ச சக்தியான பராச் க்கியிலிருந்து வேறுபட்டதல்ல.

இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வைப்பற்றி விவரிக்கும்போது, புருஷ மற்றும் சீக்தி என்று, ஆணாகவும் பெண்ணாகவும் இரண்டாகப் பிரித்துச்சொல்வது வெறும் வார்த்தை விளையாட்டே.

புத்தா் உருவாக்கிக்கொள்கிறது. பிரபஞ்சம் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததில்லை. பிரபஞ்சம் இல்லாமல் இருக்கப்போகும் காலம் என்று ஒன்று இருக்கப்போவதும் இல்லை. இந்தப் பிரபஞ்சம் அழிவற்றது. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி அழிவற்றது."

கிருஷ்ணர் சொல்கிறார், ''இந்தப் பிரபஞ்சத்தைத் தொடர்ந்து என்றும் இயக்கிக்கொண்டிருக்கும் சக்கியான, புருஷோத்தமன் நானே!"

கந்தப் பிர்பஞ்சத்தைத் கொடர்ந்து என்றும் இயக்கிக்கொண்டிருக்கும் ச் க்தியான புரு 6ஷாத்தமன்

நானே! - கிருஷ்ணர்

ஒரு அழகான வாக்கியம் உபநிடதத்தில் இருக்கிறது. பொதுவாக சடங்குகளின்போது முதல் சொல்வார்கள்.

ஒம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுத்சியுத் | பூர்ணாஸ்ய பூர்ணமாதாய பூர்ணிமவா வசிஷ்யதே || அனைத்துமே பூரணமானது. பூரணத்திலிருந்து பூரணம் உருவாகிறது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தபிறகும்,

எஞ்சி நிற்பதும் பூரணமே!

இதே சொல்கிறார். இந்தப் பிரபஞ்சங்களும் அந்தப் பூரணத்திலிருந்து வெளிப்பட்டன. '

இன்றைய விண்வெளி இயற்பியலாளர்கள் (Astrophysicists), பிரபஞ்சம் ஒன்றல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருக்கின்றன; ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் லட்சக்கணக்கான பால்வெளி அண்டங்களும், ஒவ்வொரு பால்வெளி அண்டத்திற்குள்ளும் லட்ச

பிர்பஞ்சத்தை இயக்கும் அந்த இரைச்ச்தியை அளக்கவோ, பார்க்கவோ, வரையறுக்கவோ முடியாது.

க்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கின்றன என்கிறார்கள்.

நவீன உபகரணங்களின் உதவியுடன்கூட, பிரபஞ்சம் எங்குத் தொடங்குகிறது, எங்கு முடிகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது உபகரணங்களால் சாத்தியப்படக்கூடிய விஷயம் அல்ல. பிரபஞ்சத்தின் பின்னணியில் இருப்பது ஆன்மிக சக்தி. பிரபஞ்சத்தை இயக்கும் அந்த இறைசக்தியை அளக்கவோ, பார்க்கவோ, வரையறுக்கவோ முடியாது.

எப்படிப் பிரபஞ்சம் உருவானது என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. படைப்பைப் பற்றி பைபிளில் வரும் கதைகளும், பீரூரைமம் மற்றும் பிரளயம் பற்றிய உருவகக் கதைகளும் பிரபஞ்சத்திற்குக் காரணமான மேலான ச்க்தியைப் பற்றிப் பேசுகின்றன. இருந்தாலும், பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது.

பிரபஞ்ச பெருவெடிப்புக் கொள்கை (Big Bang), எப்படி இன்றளவும் பிரபஞ்ச பெருவெடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையோ, ஒவ்வொரு பிரபஞ்ச பெருவெடிப்பும் எப்படிப் புதிது புதிதாய் நட்சத்திரக் கோள்களையும் பால்வெளி அண்டங்களையும் தோற்றுவிக்கிறது என்பதையோ விளக்கவில்லை.

அதேபோல் எங்கேயோ நிகழும் கருந்துளை (Black hole), அந்த நட்சத்திரங்களையும் பால்வெளி அண்டங்களையும் தனக்குள் எப்படி உள்வாங்கிக்கொண்டே இருக்கிறது என்பதையும் விளக்கவில்லை.

பிறப்பிற்கும் இறப்பு ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும் அந்த முதல் பிறப்பு எப்படி நிகழ்ந்தது ? அது ஒருபோதும் நிகழவில்லை. அது எப்போதும் அங்கு இருக்கிறது, அவ்வளவுதான்.

கிருஷ்ணர் சொல்கிறார், ''அழியக்கூடிய மற்றும் அழிவற்றதையும் கடந்து, மேலான புருஷோத்தமனாய் நானே இருக்கிறேன்.''

இப்போது கிருஷ்ணர், வலை தேவர் மற்றும் கிருஷ்ணரைப் பற்றிப் பேசவில்லை. அவர் பரப்ரல்மகிருஷ்ணரான, ஈச் "வரணைப்பற்றிப் பேசுகிறார். அவரே ஸகுணமாகவும் ரிர்குணமாகவும் இருக்கிறார். அழிவற்ற ஆன்மாவும் அழியக்கூடிய உடல் – மன அமைப்பும் சங்கமிக்கும் பரவர்மம் அவரே.

இந்தப் பூமியில் வாழும் அறுநூறு கோடி மனிதர்களும் மற்றும் எண்ணிலடங்கா உயிரினங்களும், மற்ற கிரகங்களில் இருக்கும் கோடிக்கணக்கான உயிர்வகைகளும் பரூற்மமான அவருக்குள்ளேயே சங்கமிக்கின்றன. அவருடைய அனுமதியின்றி ஓர் அணுவும் அசையாது!

கடவுள் என்பது ஒரு கருத்து அல்ல; அவர் நிதர்சனம்

நாம் வளர்க்கப்பட்ட விதத்தைப் பொறுத்தும் நம்முடைய உள்வாங்கும் திறனைப் பொறுத்துமே, நாம் புருஷ்கத்துணைம் பல வகைகளில் பார்க்கிறோம்.

ஆறு முகங்களையும் பன்னிரண்டு கரங்களையும் உடைய கார்த்திகேயனாக சிலரும், நான்கு கரங்கள் கொண்ட பாலாஜியாக சிலரும், மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட சிரசும் இரண்டு கரங்களுடன் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணனாக சிலரும் பார்க்கிறோம். நமக்கு எந்த வகையில் பார்க்க சௌகரியமாக இருக்கிறதோ, அந்த உருவத்தில் பார்க்கிறோம், அப்படியானால்தான் நாம் அவரை அடைய முடியும்.

மிகச்சிறந்த பக்திமானுமாகிய ஒருவர், சிவனை இடைவிடாது பல பல வருடங்களாக வழிபட்டுக் கொண்டிருந்தார். பல வருடங்களாக வழிபட்டும், சிவன் தரிசனம் அளிக்கவில்லை. ஒருநாள் அவருக்கு, தாம் இன்னும் அதிக நாள் வாழப்போவதில்லை என்ற பயம் வந்தது. இறப்பதற்கு முன் எப்படியேனும் இறைதரிசனத்தைப் பெற விரும்பினார். சிவனைவிட விஷ்ணு கருணை மிக்கவர் என்று அவர்

கேள்விப்பட்டதால், சிவனை வழிபடுவதை நிறுத்திவிட்டு, விஷ்ணுவை வழிபட முடிவெடுத்தார்.

தாம் இதுநாள்வரை வழிபட்டு வந்த சிவனின் சிலையை வெளியே தூக்கியெறிய, அவருடைய இதயம் ஒப்பவில்லை, அவரது இதயத்தின் இதயத்திற்குள் இன்னமும் அவர் சிவனின் பக்தராகவே இருந்தார். ஆகையால் அதனையெடுத்து பரணில் வைத்துவிட்டு, ஒரு அழகான விஷ்ணு சிலையை வைத்து வழிபட ஆரம்பித்தார். விஷ்ணு சிலைக்கு முன்பாக ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்துவிட்டு, பூஜையைத் தொடங்கினார்.

அந்த ஊதுபத்திப் புகை விஷ்ணு சிலைக்குப் போகாமல், பரணில்

இருந்த சிவனின் சிலைக்கு சென்றதைப் பார்த்து மிகவும் கோபமானார். உடனே அவர் எழுந்து சென்று, பரணில் இருந்த சி வன் சிலையின் மூக்கை மூடியபடியே, ''இது உனக்கான புகை கிடையாது, இனிமேலும் நான் உன்னை வழிபடப்போவதில்லை, " என்றார்.

இவ்வாறு செய்த அந்த வினாடியே அவர் சிவனின் இருப்பை அங்கு உணர்ந்தார், அவருக்கு சிவ தரிசனம் கிடைத்தது. உடனே அவர் மனமுருகிக் கதறியழ ஆரம்பித்துவிட்டார்.

கடவுளை நமக்கு எந்த வகையில் பார்க்க சௌகரியமாக இருக்கிறதோ அந்த உருவத்தில் நாம் அவரைப் பார்க்கிறோம், அப்படியானால்கான் நாம் அவரை அடைய முடியும்.

பல வருடங்களாக உங்களை முறைப்படி வழிபட்டுவந்தேன். அப்போதெல்லாம் நீங்கள் எனக்குக் காட்சி கொடுக்கவில்லை. ஆனால், இப்போது நான் உங்களை வழிபடாமல் தூரவிலக்கி வைத்தது மட்டுமல்லாமல், உங்கள் மூக்கை மூடி அவமதித்தேன். இருந்தும் நீங்கள் காட்சி தந்தீர்கள். இது ஏன்?'' என்று இறைஞ்சி வினவினார்.

அதற்கு சிவன் சொல்கிறார், 'இதுநாள்வரை உனக்கு நான் ஒரு கருத்தாகவே தெரிந்தேன். இன்றுதான் நீ என்னை ஸக்யமாக உணர்ந்தாய், அதனால்தான் என் மூக்கை மூடினாய்!''

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, இறைவன் என்பது ஒரு கருத்து, ஒரு கோட்பாடு, அவ்வளவுதான். நம்முடைய பயத்தையும் கவலையையும் மறைப்பதற்கும், கருத்துகளையும் வடிவமைத்து, நாம் அறிவாளி என்பதை நிரூபிப்பதற்கும் கிடைத்த ஒரு கோட்பாடு.

அதிகாரத்துவமிக்க உரிமையோடு கிருஷ்ணர், 'நானே அந்த புருஷாத்தமன்' என்கிறார். அதனால் தான் கீதை நம்பகத்தன்மையான வேத நூலாக இருக்கிறது.

கிரூஷ்ணா, ப்ரூற்ம, புருஷாத்தம, பரப்ரூற்ம, ப்ரக்ரு 'தி என்று எந்தப் பெயரைக்கொண்டு நாம் அழைத்தாலும், அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது? நாம் எந்தப் பெயரைக்கொண்டு அழைத்தாலும் நம் அனைவரையும் இயக்கும் மேலான இறைச்க்தி அவரே.

அதிகாரத்துவம்மிக்க THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, 'நானே அந்த புருஷாத்தமன்' என்கிறார். அதனால்தான் கீதை, நம்பகத்தன்மையான வேத நூலாக இருக்கிறது.

வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்தீயங்களுக்காகவோ, அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் ஞானக் கருத்துக்களுக்காகவோ நாம் அதைக் கொண்டாடவில்லை.

கிருஷ்ணர் என்ற ஒரு தனிமனிதா், ''நானே எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறேன்,'' என்று துணிச்சலுடன் பிரகடனப்படுத்துவதுதான் கீதையைக் கொண்டாடக் காரணமாக இருக்கிறது. இதுவே ஒரு நிலையான அத்ய நூலாக வரையறுக்கிறது. அந்த புருஷோத்தமன், பரப்ரூற்ம கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் !

இப்போது கிருஷ்ணர், பிரபஞ்ச கூட்டுவிழிப்புணர்வாக விளங்கும் தம்முடைய உண்மையான பிரதிநிதித்துவத்தைப் பற்றிய உயா ஸத்யங்களை முன்வைக்கிறார்.

பிரபஞ்ச கூட்டுவிழிப்புணர்வு

இது உங்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம் அல்லது, இது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயமாகக்கூட இருக்கலாம்.

இந்த ஸ்தீயம் புதியதா, பழையதா என்று ஆராயாமல், இந்த ஸக்யத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உள்வாங்குங்கள், ஆராயுங்கள்.

உங்கள் தர்க்க அறிவு சோர்வடைந்து, தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரை, இதைப் பற்றி சிந்தனை செய்துகொண்டே இருங்கள்.

முதல் ஸக்யம் என்னவென்றால், நம்முடைய மனதில் எண்ணங்கள் தோன்றுவது நம்முடைய தனிப்பட்ட விஷயம் கிடையாது. நம் எல்லாருடைய மனமும், இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே. நம் மனங்கள் அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

நம் மனங்கள் அனைத்துமே ஒன்றோடு ஒன்று கொடர்புகொண்டவை. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை மட்டுமல்ல, அவை அவை ஒன்றையொன்று நேரடியாகப் பாதிக்கவும் செய்யக்கூடியவை. நம் மனம், நேரடியாகவே மற்றவரைப் பாதிக்கும். இதைத்தான் கூட்டு விழிப்புணர்வு என்கிறோம்.

ஜலதோஷத்தைப் போல நமது எண்ணங்களும் பரவக்கூடியதே!

ஜலதோஷம் பிடித்திருக்கும் ஒரு மனிதரிடம் இருந்து, நமக்கு ஜலதோஷம் பரவாமல்கூட, சுலபமாகத் தப்பித்து விடலாம். ஏனென்றால் ஜலதோஷம் அவ்வளவு தீவிரத்தன்மையுடன் பரவுவதில்லை. ஆனால், நமது எண்ணங்கள் ஜலதோஷத்தைவிட தீவிரமாகப் பரவக்கூடியவை.

நமக்கு வேறு யாரிடமிருந்தாவது ஜலதோஷம் தொற்றிக்கொண்டால், சில நாட்களுக்கு உடலளவில் மட்டுமே பாதிக்கப்படுவோம். அதுவுங்கூட விரைவில் சரியாகிவிடும். ஆனால், நாம் மற்றவரிடமிருந்து எதிர்மறை எண்ணங்களைப் பி டி த் து க் கொள் (ளு ம் பொ முது , நாம் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். அதுமட்டுமல்ல, அது நீண்ட நாள் தொடரும் ஒரு பாதிப்பாகவும் பிரச்சினையாகவும் இருக்கிறது.

ஜலகோஷத்தைப் போல நமது எண்ணங்களும் பரவக்கூடியதே!

நம்முடைய ஒரு சிறிய செயல் எதுவாக இருந்தாலும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாமல், இந்தப் பூமியில் வாழும் அனைவரையும் பாதிக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய பட்டறிவு இதை நம்ப மறுக்கும். இது எப்படி ஸத்யமாகும்? இதை நாம் கேள்வி - பதில் நேரத்தின்போது ஒவ்வொன்றாக அங்குலம் அங்குலமாகப் பார்ப்போம்.

முதல் வேறுவேறு உயிரினங்களும் கிடையாது, மனங்களும் கிடையாது, நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டவர்கள். நாம் ஒருவரோடு ஒருவர், எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் இணைக்கப்பட்டுள்ளோம். என்னுடைய எந்த ஒரு எண்ணமும் உங்களுக்குள் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல், உங்களுடைய எந்த ஒரு எண்ணமும் என்னைத் தொடும். நாம், தனித்தனியானவர்கள் அல்ல.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் அனைவரும் தனித்தனி தீவுகள் கிடையாது. நாம் அனைவரும் மற்றவர்களால் பாதிக்கப்படாத தனித்தனி மனிதர்கள் இல்லை. கூட்டு விழிப்புணா்வு என்ற ஒரு ஸத்யம் நம் அனைவரையும் இணைக்கிறது.

அடுத்த லட்சியம்.

மனதளவில் மட்டுமல்ல, ஆழமான விழிப்புணர்வு அளவிலும்கூட நாம் இன்னும் ஆழமாக இணைக்கப்படுகிறோம்.

இந்த வரைபடத்தைப் பாருங்கள், மொத்தம் ஏழு சூரீரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு உள்வட்டமும் ஒவ்வொரு சூரீரத்தைக் குறிக்கிறது.

நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியே

முதல் சிரிம் ஸ்தூல சூரீரம். அடுத்தாக ப்ராண சூரிரம். இப்படி ஒவ்வொன்றாக செல்கிறது.

ஸ்தூல் உடலைப்பொறுத்தவரை, நீங்கள் - நான் - கிருஷ்ணர் ஆகிய மூவரும், இந்த வட்டத்தில் இருக்கும் மூன்று வெவ்வேறு புள்ளிகள். இவை மூன்றும் மிகுந்த தொலைவில் இருக்கின்றன. மேலும் ஒவ்வொன்றும் 120 டிகிரி இடைவெளியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இடையே நிறைய இடைவெளி இருக்கிறது.

அடுத்ததாக, ப்ராண சூரீரத்திற்குச் செல்லும்போது, அந்தத் தூரம் கொஞ்சம் குறைகிறது. இன்னும் உள்ளே, மன சூரீரத்திற்குச் செல்லும்போது, உங்களுக்கும் எனக்குமான தூரமும், உங்களுக்கும் கடவுளுக்குமான தூரமும் இன்னும் குறைகிறது.

இவ்வாறு ஆழமாகப் பயணித்து, இறுதியாக நிர்வாண சூரீரத்தில் அங்கே மூன்றும் ஒன்றாகவே ஒடுங்குகிறது. ஆழமாக உள்ளே செல்லச் செல்ல, நீங்கள் - நான் - மற்றும் கடவுள் ஆகிய மூவருமே ஒன்றாகிறோம்.

ஆம், நமது பட்டறிவால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இதுதான் ஸத்யம். நான் ஏற்கெனவே சொன்னதுபோல், நாம் இந்த ஸத்யத்தைக் கேட்க விரும்புவதில்லை. ஏனென்றால் இந்த ஸகத்யம், நம் உணர்வு நிலையையே உயர்த்திவிடும், இந்த ஸத்யம், நம்மை உணர்வுமாற்றம் செய்துவிடும் என்பதால்தான்!

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள், நாம் இந்த உள் நிலையை அடைந்துவிட்டால், கடவுளும் நாமும் ஒன்றே. நாம்தான் கடவுள். கடவுள்கான் நாம்.

கூட்டுவிழ்ப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்கிற விழிப்புணர்வு நமக்கு இல்லாததே நமது துக்கங்களுக்குக் காரணம்.

ஸ்தூலமாக நாமெல்லோரும் தனித்தனியானவர்களாகத் தெரிகிறோம். ஒருவரை நாம் மிகவும் விரும்பும்பொழுது, அவருடைய அன்பும் துன்பமும் நம்மைப் பாதிக்கிறது. இது நம்முடைய இருப்பு நிலையிலிருந்து வருகிறது, செல்கிறது.

ஆழ்ந்த நிலையில் நமக்கென்று தனித்தனி அடையாளங்கள் இல்லை. நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியே.

துக்கங்களை நாம் விரும்புவதில்லை. ஆனாலும், அவற்றிலிருந்து நம்மால் தப்பிக்க முடிவதில்லை. அது உடல் வலியாக இருந்தாலும் சரி, மன வேதனையாக இருந்தாலும் சரி அல்லது ஆன்மிகப் பந்தமாக இருந்தாலும் சரி, நாம் மீண்டும் மீண்டும் அதற்குள்ளேயே சுழன்றுகொண்டே இருக்கிறோம்.

கூட்டுவிழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்கிற விழிப்புணர்வு நமக்கு இல்லாததே இதற்குக் காரணம்.

நமக்கென்று தனிப்பட்ட அடையாளம் என்று ஒன்று இல்லை, நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பாகம் என்பதை உணர்ந்து புரிந்துகொண்டவுடன், நமக்கென்று பிடித்துக்கொள்ளவோ, பாதுகாத்து வைத்துக்கொள்ளவோ, ஒரு தனிப்பட்ட அஹங்காரம் என்று ஒன்று கிடையாது என்பதை உணருகிறோம்.

நமக்கென்று சொந்தமான ஒரு பட்டறிவு ரீதியான அடையாளம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். பிரபஞ்ச இருப்புநிலையில், அப்படிப்பட்ட தனிப்பட்ட அடையாளம் என்று எதுவுமில்லை. இந்த லக்யத்தை நாம் உணரும்போது, வலி, துன்பம், கஷ்டம் வியாதி போன்றவற்றைக் கடந்துசெல்கிறோம்.

இயற்கையை எதிர்க்காதீர்கள்

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம், 'ஒரு தனிப்பட்ட விழிப்புணர்வு' என்ற விஷயத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும்வரை, நாம் தொடர்ந்து உடலளவிலும் மனதளவிலும் ஆன்ம அளவிலும் துன்பப்பட்டுக் கொண்டேகான் இருப்போம்.

நாம் ஏன் தொடர்ந்து இயற்கையை எதிர்த்துக்கொண்டே இருக்கிறோம் ? இயற்கை எதைக்கொடுத்தாலும் நாம் அதைக் கடுக்கிறோம், எதிர்க்கிறோம்.

சூழ்நிலை குளிராக இருந்தால், உடனே நாம் குளிரை எதிர்க்கிறோம். பிரபஞ்ச இருப்பு நிலையிலிருந்து நம்மை நினைக்கிறோம். இமயமலையில், நான் ஞானிகளையும் பார்த்திருக்கிறேன், அவர்களெல்லோரும் அந்தக் குளிரிலும், நிர்வாணமாகவே வாழ்கிறார்கள்.

நமக்கென்று கூனித்தனி அடையாளங்கள் இல்லை என்ற ஸத்யத்தை நாம் உணரும்போது, வலி, துன்பம், கஷ்டம் வியாகி போன்றவற்றைக் கடந்துசெல்கிறோம்.

நான், அதேமாதிரி பாதிக்கப்படாமல், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருந்திருக்கிறேன். வேறுபட்டவனாக, என்னை நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. இயற்கையிலிருந்து விலகியிருப்பதாக உணர்ந்ததும் கிடையாது. நாம், இந்தச் சூழலிலிருந்தும், நம்மைச் சுற்றியிருக்கும் காற்றிலிருந்தும் வேறுபட்டவர்களாக நம்மைக் கருதும்போதுதான், நாம் அவற்றைத் தடுக்க ஆரம்பிக்கிறோம்.

மிகவும் குளிராக நாம் உணரும்போதுகூட, நம்மால் இயல்பாத இருக்க முடியும். அதற்கு ஒரு எளிமையான நுட்பம். அதை நாம் இப்போதே முயற்சிசெய்து பார்ப்போம். குளிராகஇருப்பதாக உணர்ந்தீர்களென்றால், தளர்வாக இருந்து, உடலின் எந்தப் பகுதியில் குளிர்கின்றது என்பதை அடையாளம் காணுங்கள். அந்தப் பகுதியில், குளிர் உடலைத் தடுக்க நினைக்க வேண்டாம். இயற்கையைத் தடுக்கவேண்டாம். பிரபஞ்ச இருப்பைத் தடுக்க வேண்டாம்.

உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள், "இயற்கையை நான் தடுக்கப்போவதில்லை. இந்தக் குளிரை நான் தடுக்கப் போவதில்லை. பிரபஞ்சத்தை நான் தடுக்கப்போவதில்லை. ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்திருப்பேன்.'' விழிப்புணர்வுடன் இதை முடிவுசெய்யுங்கள்.

இதைச் செய்யும்போது, உங்கள் உடல் இறுத்தமில்லாமல் தளர்வாக இருப்பதை நீங்களே பார்ப்பீர்கள். குளிர் என்ற விஷயம், உங்கள் உடலின் அந்தப் பகுதியை விட்டுப்போயிருக்கும். மிகவும் லேசாக உணர்வீர்கள்.

இதை நம்மால், கடினமான சூழ்நிலைகளிலும் பயிற்சிசெய்ய முடியுமா, இதைப் பனிப்பிரதேசத்திலும் முயற்சிசெய்து குளிரைத் தடுக்க முடியுமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.

மனம் எப்போதுமே ஒரு அதீதமான சூழ்நிலையையே விரும்பும். அதுவே அதன் இயல்பு. நாம் முழுமுமைத்தன்மையோடு இதைச் செய்தால், நம்மால் பனிப்பிரதேசத்திலும், குளிரால் பாதிப்படையாமல் இருக்க முடியும். ஆனால் அந்த அளவிற்கு நம்மிடம், முழுமைத்தன்மையோ தெளிவோ இல்லாததுதான் பிரச்சினை.

நாம் இயற்கையோடு முழுமையாக இசைந்து செல்ல முடிந்தால், எந்தவொரு சூழ்நிலையின் உச்சத்திலும் சௌகரியமாக உணர்வோம்.

நாம் இயற்கையோடு இசைந்துசெல்ல முடிந்தால், எந்தவொரு சூழ்நிலையின் உச்சத்திலும் சௌகரியமாக உணர்வோம். எத்தனையோ போ பேர் இதைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாமும் இயற்கையோடு இசைந்து செல்லும்போது, நமக்கும் இது சாத்தியமே. இயற்கையிலிருந்து ஒருவகையில் வேறுபட்டவர்கள் என்று நினைக்கும்போதே, நாம் இயற்கையால் பாதிப்படைகிறோம்.

பிரபல மருத்துவக்குழு ஒன்று, திபெத்தில், இமயமலையிலுள்ள புத்த மடாலயங்களில் வாமும் புத்த பிட்சுக்களிடம் பல விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.

அதில் ஒரு சடங்குசம்பிரதாயங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் செய்யப்பட்டது. இதில், அப்புத்த பிட்சுக்கள் ஈரத் துணிகளை உடுக்திக்கொண்டு, இரத்தத்தையே உறையவைக்கும் கடுங்குளிரில் அமர்ந்து, தங்களுடைய உடல் சூட்டை அதிகப்படுத்துவதற்கு தியானம் செய்தார்கள்.

நாம் இயற்கையோரு இசைந்து இருக்கும்போது, நம் உடலிற்குள் நுழையும் க்ரூமியானது. தானாகவே வெளியேறிவிடும்.

இப்படிச் செய்ததனால், அவா்களது உடல் வெப்பம் அதிகரித்து, அது அவர்களது உடலை வெதுவெதுப்பாக வைத்திருந்தது மட்டுமல்லாமல், அந்த ஈர உடைகளையும் உலரச் செய்துவிட்டது. இது உண்மை, இந்தச் சம்பவம் புகைக்காட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்னொரு விஷயம் என்னவென்றால், நம்மைச் சுற்றியிருக்கும் காற்றில், பாக்டீரியா, வைரஸ் போன்ற எல்லா வகையான கிருமிகளும் கலந்தே இருக்கின்றன. எந்த ஒரு தருணத்திலும் ஏதாவதொரு நோய்க் கிருமி நமக்குள் நோய்களை உண்டாக்கும் சாத்தியமும் இருக்கிறது.

ஆனால் நாம் இயற்கையோடு இசைந்து இருக்கும்போது, நம் உடலிற்குள் நுழையும் கிருமியானது, தானாகவே வெளியேறிவிடும். நாம் அதனால் பாதிக்கப்படமாட்டோம். நாம் எப்போது, நாம் ஒரு தனிப்பட்ட உடல், பிரபஞ்சத்தில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நினைக்கிறோமோ, அப்போதே நமது மொத்த உடலும் நமக்கு எதிரியாகிறது.

பிரபஞ்சம் நமது நண்பனே

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் . நாம் இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. இந்த மொத்த பிரபஞ்சத்துடன், நாம் இசைந்து நடக்கும்போது, பிரபஞ்சம் நமக்கு நண்பனாகிறது. நாம் எப்போது பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைத்து, பிரபஞ்சத்திற்கு எதிராக நடக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது பிரபஞ்சம் நமக்கு எதிரிபோல் நடிக்க ஆரம்பிக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் . பிரபஞ்சம் இங்கு அழிப்பதற்காகவோ இல்லை.

இந்த என்றும் ஹோலோகிராமில் (Hologram) நாமெல்லோரும் ஒரு பகுதி.

ஒன்றிலிருந்து முழுமையான ஏதாவது ஒன்று பிரித்தெடுக்கப்பட்டாலும், அது அந்த பிரதிபலிக்கும்வகையில் இருக்கும். அதை ஆங்கிலத்தில் ஹோலாகிராம் என்கிறோம்.

பிரபஞ்சத்திற்கு எதிராக நாம் எப்போது நடக்க ஆாம்பிக்கிரோமோ. அப்போது பிரபஞ்சம் நமக்கு எதிரிபோல் நடிக்க ஆரம்பிக்கிறது.

ஹோலோகிராமிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒவ்வொரு பகுதியும், அந்த மொத்த ஹோலோகிராமையும் எப்படிப் பிரதிபலிக்கிறதோ, அதுபோலவே நாமும் முழுமைத்துவத்தை அதாவது பிரபஞ்சத்தைப் பிரகிபலிக்கிறோம்.

அடுத்ததாக, இன்னுமொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவர் நீரில் முழ்கி இறந்துவிட்டால், அங்கே என்ன நிகழ்கிறது ? இறந்த உடல் தண்ணீரில் மிதக்கிறது. இறந்த உடல் தண்ணீரைவிட கனமானது, இருந்தும் மிதக்கிறது. ஆனால், உயிரோடு இருக்கும் உடல், தண்ணீரைவிட லேசானது. இருந்தும் அது மிதப்பதில்லை, தண்ணீரில் முழ்கிவிடுகிறது !

இது ஏன் நடக்கிறது? நாம் உயிரோடு இருக்கும்போது, தண்ணீருடன் நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்வதில்லை. நம்முடைய அஹங்காரம், அதைத் தடுக்கிறது. நம்முடைய மனம் அதைத் தடுக்கிறது.

இறந்த உடலில் மனமும் கிடையாது, அஹங்காரமும் கிடையாது. நம்முடைய மனமும் அஹங்காரமும்தான் உடலின் கனத்திற்கு காரணங்களாகின்றன.

நயாகரா நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து, மீண்டு வந்த ஒருவரின் பேட்டியை, நான் சமீபத்தில் படித்தேன். நயாகரா வீழ்ச்சியிலிருந்து விழுந்த ஒருவர், உயிர்பிழைத்திருப்பதைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். நயாகரா நீர் வீழ்ச்சியை நீங்கள் பார்த்திருந்தால், அதன் வேகத்தையும் பிரம்மாண்டத்தையும் பார்த்திருந்தால், உங்களுக்கு இது புரிந்திருக்கும். எல்லாப் பத்திரிகையாளர்களும், அவரிடம் அந்த அசாதாரணமான குழ்நிலையைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் மிக அழகானதாகும்: ''நான் நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்தபோது, நான் அதன் ஒரு பாகமாகவே மாறிவிட்டேன். அதன் ஒரு பகுதியாகவே என்னை உணர்ந்தேன். அதனின்று வேறாக என்னை நினைக்கவில்லை!''

நாம், கூட்டு விழிப்புணர்வுடன் இசைந்து இருக்கும்போதும், கூட்டு விழிப்புணர்வின் ஒரு பாகமாக மாறும்போதும், இயற்கை நம்மோடு இருக்கும். இயற்கை நமக்கொரு நண்பனாக இருந்து நம்மைப் பாதுகாக்கும். இயற்கை நம்மைத் துன்பப்படுத்தாது.

நாம் நம்மை, இந்த இயற்கையிலிருந்து வேறுபட்டவர்களாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நம்மை ஒரு தனிப்பட்ட விழிப்புணர்வாக நினைத்துக்கொண்டு இருக்கும்வரை, இயற்கை நமக்கு எதிராகவே இருக்கும்.

சமூக மற்றும் பொருளாதார வெற்றிகளை அடையவேண்டும் என்று நாம் நினைத்தால், நாம் அந்தச் சூழ்நிலையோடும், அந்த முழுக் குழுவோடும் இசைந்து இருக்கும்போது மட்டுமே, அது சாத்தியமாகிறது. நாம், நம்முடைய இலக்கை அடைவது சாத்தியமாகிறது.

நாம், கூட்டு விழிப்புணர்வுடன் இசைந்து நடக்க வேண்டும்! நாம் தனிப்பட்டவர்கள் என்றும், நாம் வேறு ஒருவர் என்றும் அடையாளப்படுத்தும்வரை, நாம் எந்தச் குழ்நிலைக்கும் ஒரு தடையாகவே இருப்போம். அதுபோல் நாமும் தடைபடுத்தப்படுவோம்.

இது நாம் வேலைசெய்யும் இடத்திலோ, வீட்டிலோ, தொழிற்கூடத்திலோ அலுவலகத்திலோகூட நடக்கலாம்.

கூட்டு விழிப்புணர்விற்குள் கரையும்போது, நாம் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகிறோம். நம்மை அந்தக் கூட்டு விழிப்பணர்வே பார்க்குக்கொள்ளும். இதனால், நாம் சமூக மற்றும் பொருளாதார வெற்றிகளை அடைவது மட்டுமல்லாது, இந்த விழிப்புணர்வை அனுபூதியாக உணர்வோம். இது ஒரு பூரணத்துவமான உணர்வு. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், நாம் தடுக்க ஆரம்பிக்கும் அக்கணமே, நமக்கே நாம் ஒரு நரக அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

கூட்டு விழ்ப்புணர்விற்குள் கரைந்துவிடுங்கள், சுதந்திரமடையுங்கள்

ஒரு சின்ன கதை

இரண்டு எறும்புகள், சாகாவரம் அளிக்கக்கூடிய அமிர்தம் இருக்கும் ஒரு பாத்திரத்தின் விளிம்பில் அமாந்திருந்தன. பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒரு எறும்பு தன் அமிர்தத்துக்குள்ளே விழுந்துவிட்டது. தட்டுத் தடுமாறி எப்படியோ தம்மை நிலைப்படுத்திக்கொண்டு மீண்டு வந்தது.

இதைப்பார்த்த இன்னொரு எனும்பு, ''நீ ஏன் அமிர்தத்துக்குள் விழ விரும்பவில்லை ? அமிர்தத்துக்குள்ளே ഴில சாகாநிலையைத்தானே அடையப்போகிறாய்!'' என்று கேட்டது.

அதற்கு அந்த முதல் எறும்பு, "இருந்தாலும், எனக்கு அமுதத்தில் மூழ்குவதில் விருப்பம் இல்லை!'' என்றது.

கூட்டு விழிப்புணர்விற்குள் கரைவதே, நம்மை முழுமைத்துவத்தில் சுதந்திரமடையச் செய்யும் என்பதை நாம் உணருவதில்லை.

'நான்' என்ற அஹங்காரத்தைப் பிடித்துக்கொண்டு, இதை நாம் தடுக்கிறோம். கூட்டு விழிப்புணர்வுடன் கரையாதவரை, நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நாம் தொடர்ந்து நரகத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்போம்.

பண்டைய சீனத் தத்துவமான தாவோயிசமும் இதையே சொல்கிறது. தாவோ, இயற்கையுடன் மிதந்து செல்வதைப்பற்றியது.

இயற்கை ஒட்டத்திற்கு, தண்ணீர், ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அது நிலத்தோடு இயைந்து பாய்கிறது. அது, அழகாகவும் உத்சாகத் துள்ளலுடனும் சக்திப்பிரவாகமாகப் பாய்கிறது.

தாவோ, பற்றியும் வேகமாகப் பாயும்போது, நாணல் நீரின்போக்கிலேயே வளைந்து கொடுக்கிறது. தண்ணீரின் வேகம் குறைந்ததும், அது நேராக நிமிர்ந்து நிற்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையிலிருந்து நம்மை வேறுபடுத்திப் பார்க்காதபோதுதான், நமக்கு இது சாத்தியம்.

நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையிலிருந்து நம்மை வேறுபடுத்திப் பார்க்கும்போதுதான், உடலிலும்கூட நோய்களை வரவேற்கிறோம்.

இன்னொரு ஆழமான அத்யும். மன சூரீர் அளவில் நாம் தனிப்பட்டவர்கள் என்று நினைக்கும்போகே, வன்முறைக்கான விதை விதைக்கப்படுகிறது. நம்மைத் தனிப்பட்டவர்களாக உணரும்போதும், நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நினைக்கும்போதுதான், வன்முறைக்கான விதை உருவாகிறது.

மேலும் நாம், சுயநலம்மிக்கவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் எதையும் தீவிரவாதிகளாகவே மாறிவிடுகிறோம்.

கூட்டு விழிப்புணர்வு ஒன்றுபடுகிறோம், தனி விழிப்புணர்வால் பல்வேறு துண்டுகளாகப் பிளவுபடுகிறோம். பட்டறிவு, எதையும் துண்டு துண்டுகளாக்குகிறது. விழிப்புணர்வு ஒன்றிணைக்கிறது.

ஆன்ம அளவில் தனிப்பட்டவர்களாக இருந்தால், ஆன்மிக அடியைக்கூட எடுத்து வைக்க முடியாது.

முதலாவது விஷயம், ஸ்தூல உடலளவில்கூட, நாம் தனிப்பட்டவர்கள் கிடையாது.

நம்முடைய உடலும் சூரியனுடைய உடலும் இணைக்கப்பட்டுள்ளது.

சூரியனின் ஒரு சிறு மாற்றம், நம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நம் உடலில் ஏற்படும் ஒரு சிறு மாற்றம், சந்திரனின் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நம் தா்க்க அறிவால் இதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், லட்சியம் இதுதான்.

ஆன்ம அளவில் நம்மைத் தனிப்பட்டவர்களாக நினைக்கும்போது, ஆன்மிக வளர்ச்சிக்கான சாத்தியமே இல்லை.

தலைவனாக வாழ்வோம் அல்லது தொண்டனாக வாழ்வோம்

மன ச்ரீர் அளவில்கூட, நாம் தனிப்பட்டவர்கள் கிடையாது. யாரோ ஒருவருக்குள் ஏற்படும் ஒரு எண்ணமானது, நம்மை வந்தடைகிறது. அதுபோல, நம்முடைய மனத்தில் ஏற்படும் ஒரு எண்ணமானது, மற்றவரையும் சென்றடைகிறது.

யாரோ ஒருவரால் விதைக்கப்பட்ட ஒரு எண்ணம், நம்மையும் பாதிக்கிறது. இது, ஒரு குளத்தில் உருவாக்கப்படும் அலையைப் போன்றது.

நாம் ஒரு வலிமையான அலையை உருவாக்கும்போது, வலிமையான எண்ணத்தை உருவாக்கும்போது, நம்முடைய அந்த எண்ணத்தால் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். நமது எண்ணங்களால் மற்றவர்களை வழிநடத்தவும் உற்சாகப்படுத்தவும் செய்கிறோம். நம்முடைய எண்ணங்கள் போதுமான அளவிற்கு வலிமையாக இல்லாதபோது, மற்ற அலைகள் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாழ்ந்தால், ஒரு தலைவனாக வாழ்வோம். இல்லையென்றால், தலைவனைப் பின்தொடரும் ஒரு தொண்டனாக வாழ்வோம். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை என்று எதுவுமில்லை.

'நான் தலைவன் இல்லை, என்னால் அவ்வளவு வேலையெல்லாம் செய்யமுடியாது. அதேசமயம் நான் தொண்டனும் இல்லை, என்னுடைய சொந்தப் பாதையில் செல்வேன்,'' என்று நாம் சொல்லலாம்.

இது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். 'என்னுடைய தனிப்பட்ட நிலை' என்று எதுவுமில்லை. வழிநடத்துதல் அல்லது பின்தொடர்தல், இவை இரண்டுதான் இருக்கின்றன.

மனச் ரீர் அளவில், மீண்டும் மீண்டும் நம்மைத் தனிப்பட்டவர்களாக நினைக்கும்வரை, விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம்' என்பதை உணரும் அந்த ஏற்றுக்கொள்ளப்படுவோம்.

மூன்றாவது

இறுதிநிலையில், மொத்தக் குழுவோடு, மொத்தப் பிரபஞ்சத்தோடு ஆழமாக இணைக்கப்பட்டவர்கள்தான், வலுவாகவும் ஒன்றிணைக்கப்பட்டவர்கள்தான் என்பதை உணரும் அந்த வினாடியே, நாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஐ உணர்வது மட்டுமல்லாது, 'இருப்புத்தன்மையின்' பல பரிமாணங்களை நாம் வாழ ஆரம்பிப்போம். அப்போதுதான் நாம் உண்மையிலேயே வாழ்கிறோம்.

இப்போது இருக்கும் கடுகடுப்பாக இருக்கிறோம். தொடர்ந்து ஏதோ ஒன்று நம்மைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. அதனால் நாம் தொடர்ந்து அளவுக்கதிகமாகவே சிந்திக்க வேண்டியதிருக்கிறது.

நம்முடைய தனிப்பட்ட உடல் மற்றும் மனத்தைக்கொண்டு நாம் நிறைய சிந்திக்க வேண்டியதிருப்பதால், இருப்பதற்கு, நாம் கடினமாக முயல வேண்டியதிருக்கிறது.

கூட்டு கரையும்போது, நமக்குள் நாம் புதுப்புது பரிமாணங்களையும் சாத்தியங்களையும் உயிர்ப்பிப்போம்.

கூட்டு விழிப்புணர்விற்குள் நாம் கரையும்போது, நமக்குள் நாம் புதுப்புது பரிமாணங்களையும் சாத்தியங்களையும் உயிர்ப்பிப்போம்.

இந்த ஒரு உடலைக் கொண்டே, நம்மால் இவ்வளவு ஆனந்தத்தை உணர முடிகிறது. கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். இரண்டு உடல்கள் இருந்தால், இன்னும் எவ்வளவு ஆனந்தத்தை உணரலாம். பல உடல்கள் இருந்தால், எவ்வளவு சாதிக்கலாம் என்பதைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள்.

உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஆனந்தமும் மகிழ்ச்சியும் அதிகமாகும். கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதி நாம் என்று உணரும்போது, இது நமக்கு அனுபவமாகிறது.

பாரதத்தில் இது ஒருபோதும் நடக்காத காரியம்

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஸ்புரண தீயான முகாமில், 'நாம் விழிப்புணாவின் ஒரு பகுதியே' என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்பது மட்டுமல்ல, நாமேதான் கூட்டு விழிப்புணர்வும்கூட. நாம் நினைப்பதுபோல, நாம் தனித்தனி விழிப்புணர்வுகள் கிடையாது.

ஒவ்வொரு உடலாக, நாம் உள்ளே ஆழ்ந்து செல்லச்செல்ல, நாம் எல்லாவற்றோடும் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை உணருகிறோம். இதனால், நோய்கள் தானாகவே குணமாகின்றன. நம்முடைய மன ச்ரீரம், ப்ராண ச்ரீரம், ஸூக்ஷம சூரிரம், ஸ்தூல ச்ரீரம் மற்றும் மற்ற அனைத்து சரீரங்களிலும் இனிமையை உணருகிறோம்.

நாம் எல்லையில்லா என்பதை அனுபவமாக உணரும்போது, அது ஒரு நம்பவியலாத அருமையான அனுபவமாகவே இருக்கும். இதை கற்பனைசெய்து பார்ப்பது கடினம்.

தீயான முகாமின் இறுதியில், தங்களது பெயர், அடையாளம் சமூக அந்தஸ்து, கல்வித்தகுதி, பணம், மதம் மற்றும் எதையெல்லாம் தங்களுடைய அடையாளங்கள் என்றும் அத்தனையையும் மறந்து, அவ்வளவு ஆனந்தத்துடன் இருப்பார்கள்.

மாமனார், தம்முடைய மருமகளின் காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்திருக்கிறேன்! பாரதத்தில் இது ஒருபோதும் நடக்காத காரியம். ஆனால் நமது தீயான முகாமில் இறுதியில் இது நடந்தது. ஏனென்றால் அவர் அந்தப் பெண்ணிற்குள் இறைவனைப் பார்க்கிறார்.

மாமியார், தம்முடைய மருமகனுக்குள் இறைவனைப் பார்ப்பதால், அவருடைய கால்களில் விழுந்து வணங்குகிறார். தாத்தா பாட்டிகள், தங்களுடைய பேரன் பேத்திகளின் காலில் விழுகிறார்கள். முதலாளிகள், தங்களுடைய செய்பவர்களின் காலிலும் விழுகிறார்கள்.

ஒன்றிணையும் உணர்வை அரைபவிக்கும்பொழுது, கூட்டு விழிப்புணர்வை அனுபவிக்கும்பொழுது, கூட்டு விழிப்புணர்வின் ஆனந்தத்தை உணரும்பொழுது, நம்முடைய அடையாளம் என்று பிடித்துக்கொண்டு மற்றவரிடம் இருந்து நம்மை வேறுபடுத்திப் பார்க்கத் தூண்டும் நம்முடைய பெயர், புகழ், பணம், சமூக அந்தஸ்து, கௌரவம் என்ற அனைத்தையும் மறந்துவிடுவோம்.

நாம் எல்லையில்லா விழிப்புணர்வு என்பதை அனுபவமாக உணரும்போது, அது ஒரு நம்பவியலாத அருமையான அனுபவமாகவே இருக்கும்.

நாம் யார்' என்ற ஸத்யம் புலப்படும்.

தம்முடைய மோசமான எதிரியின் கால்களைத் தொடுவதாலும், தம்முடைய வயதைவிட வயக் குறைந்த வயதுடையவரின் கால்களைத் தொடுவதாலும், பொருளாதார நிலையில் தங்களைவிட குறைந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதாலும், மக்கள், தங்களது அடையாளங்களை மறந்துவிடுவதைப் பார்த்திருக்கின்றேன்.

அவர்கள் ஆன்மிகத்தில் முன்னேறுகிறார்கள்.

அவர்களின் அஹங்காரம் கரைந்ததனால், ஆழமான விழிப்புணர்வையும் ஆனந்தத்தையும் உணருகிறார்கள். அனைவரிடத்திலும் கடவுளைப் பார்க்கிறார்கள். அவர்கள், ஆனந்தத்திலும் உற்சாகத்திலும் கூட்டு விழிப்புணர்விலும் இருக்கிறார்கள்.

இதை அவர்கள் பார்ப்பதில்லை. ஏற்படும்போது, அங்கே இருக்கும் தாங்கள் அனைவருமே ஒருங்கிணைந்தவர்கள்தான் அல்ல, என்பதைப் புரிந்துகொள்கின்றனர். கூட்டு விழிப்புணர்வை நாம் உணரும்போதுதான், ஆனந்தம், THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM என்ற வார்க்கைகளின் உண்மையான அர்த்தம் தெரியும்.

கிருஷ்ணர் சொல்கிறார், ''எல்லோருடைய இதயங்களிலும் நான் வீற்றிருக்கிறேன்.''

அவர் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் வீற்றிருக்கிறார்.

பிரபஞ்ச இருப்பு மற்றும் தனிமனித இருப்புக்கும் இடையேயான வேறுபாடு, அழியக்கூடியது மற்றும் அழியாததற்கும் இடையேயான வேறுபாடு - என்பதெல்லாம் மாயையில் சிக்கியவர்களுக்கும், குழப்பத்தில் இருப்பவர்களுக்கும்தான் என்று கிருஷ்ணர் சொல்கிறார். கூட்டு விழிப்புணர்வை உணரும்போது, இந்த வித்தியாசங்கள் ஏதுமில்லை. நாம் அனைவருமே கூட்டு விழிப்புணர்விற்குள் கரைகிறோம்.

கடலில் ஏற்படும் அலை, தாம் தனியானது என்றே நினைக்கிறது. கடலிலிருந்துதான் நாம் உருவானோம், கடலிலேயே கலப்போம் என்பதை அது உணர்வதில்லை. மேலும், தான் சமுத்திரம்தான் என்பதை அலை நம்புவதில்லை. எப்படி அலையானது கடலின் ஒரு பகுதியோ, அதுபோலவே நாமும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாவோம்.

புருஷோத்தமனை அடைவது நமக்கு எப்படிச் சாத்தியமாகும், நாம் அவரின் ஒரு பகுதியாக இருக்கும்பட்சத்தில்! 'நாம் அவரின் ஒரு பகுதி' என்ற விழிப்புணர்வை வேண்டுமானால் அடையலாம்.

இதுதான் கிருஷ்ணரின் அறிவாழம்மிக்க உபதேசம். இந்தப் பகுதியில், கிருஷ்ணர் ஒரு மேலான குரூவாகவே மாறிவிடுகிறார். அர்ஜுனன், ஆழ்ந்த அமைதியில் நிலைத்திருக்கிறார். இதுவே, குருவை உள்வாங்குவதற்கான சிறந்த வழி!

தேக்கநிலையிலிருந்து மீட்பவர் குரு ஒருவரோ

குரு, நம் இருப்பில் நிகழும் உச்சபட்ச நோயான அஹங்காரம் என்னும் பற்றுநோய்க்கட்டியை அகற்றுகிறார்.

குரு, அந்தக் ஞானமடைவதற்குக் குறைவான எந்த ஒரு நிலையிலும் நாம் சௌகரியமாக உணரவோ, அதிலேயே தடைபட்டிருக்கவோ குருவானவர் விடுவகில்லை.

ஆன்மிக ரீதியாக நாம் முன்னேறினாலும், சில அம்சங்களில் நாம் சிக்கியிருப்போம். இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், நாம் அவ்வாறு ஏற்படவில்லை சூழ்நிலையில்தான், குருவானவர் நம்மை முன்னேற்றப்பாதையில் மீண்டும் மீண்டும் ஊக்குவித்துக்கொண்டே இருப்பார். அவர், நம் மொத்த வாழ்க்கையையே மாற்றியமைத்துவிடுவார்.

அறுவைசிகிச்சை பார்க்கும்போது, அவர் நம்மைக் காயப்படுத்திவிடுவாரோ என்று பயப்படுவோம். ஆனால் மருத்துவர் கத்தியை வைத்திருப்பது, நம்மைக் கொல்வதற்காக அல்ல, நம்மைக் குணப்படுத்துவதற்காக!

பாரதத்தில் கடவுளர்கள், வாளுடனும் இன்னும் பல ஆயுதங்களுடனும் இருப்பார்கள். அவர்கள் நம் அஹங்காரம் என்னும் கட்டியை அறுக்கும் மருத்துவர்கள் என்பதால் அவ்வாறு காட்சிதருகிறார்கள்.

காளிதேவி, தம்முடைய ஒரு கையில் பெரிய வாளுடனும் மற்றொரு கையில் வெட்டப்பட்ட தலையுடனும் காட்சி தருவாள். தலை, அஹங்காரத்தைக் வாள், அஹங்காரத்தை அழித்த அறிவை, ஞானத்தைக் குறிக்கிறது.

ஞானமடைவதற்குக் குறைவான எந்த ஒரு நிலையிலும் நாம் சௌகர்யமாக உணரவோ, அதிலேயே கடைபட்டிருக்கவோ குருவானவர் விடுவதில்லை.

குருவானவர் ஒருவர் எப்படி ஒரு சீடர்மீது அக்கறையுடன் இருக்கிறார், அந்தச் சீடர் எந்த ஒரு நிலையிலும் தேங்கி நிற்காமல், தொடர்ந்து முன்னேறச் செய்கிறார் என்பதை விவரிக்கிறேன்.

சீடர், தம்முடைய தற்போதைய நிலையைச் சௌகரியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் உணர்ந்தாலும்கூட, குருவானவர் அந்தச் சீடரை உலுக்கி, அவர் பாதுகாப்பு என்று நினைக்கும் அந்த நிலை உண்மையில் பாதுகாப்பானது கிடையாது, அது வெறும் தேக்கநிலையே என்பதையும், அந்தத் தேக்கநிலையிலிருந்து மீண்டு முன்னோக்கிச்செல்ல வேண்டும் என்பதையும் உணரச்செய்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் குருவான இராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. இராமகிருஷ்ணர், காளியின் உருவத்தை தியானம் செய்வதிலும் அதை உணர்ந்து அனுபவிப்பதிலுமே ஆனந்தமாக இருந்தார்.

ஒருநாள், இராமகிருஷ்ணரின் குரு தோதாபுரி, இராமகிருஷ்ணரிடம், காளியின் உருவத்தை தியானம் செய்யாமல், அதைக் கடந்து தியானம் செய்யுமாறு சொன்னார்.

தோதாபுரி, ஒன்று என்ற - அத்வைத தத்துவமுறையைப் பின்பற்றும் குரு.

குரு சொன்னதைக் கேட்ட இராமகிருஷ்ணர் ஆச்சரியமடைந்து, ''காளிதேவியின் வடிவம் மிகவும் அழகாக இருக்கிறது, நான் என்னை முழுவதுமாக அவளுடன் இணைத்துக்கொண்டேன். பின் ஏன் நான் அவளது உருவத்தை தியானிக்கக்கூடாது ?' என்றார்.

குருகுலங்களில் வழக்கமான கல்விகளைக்கூட, ஆசிரியர்கள் கற்றுத்தரவில்லை, ஆன்மிக குருமார்களே கற்றுத்தந்தார்கள்.

அதற்குத் தோதாபுரி, இறுதியானது அல்ல. உருவங்களைக் கடந்து ஆழ்ந்து செல்லும்போதுதான், இந்தப் பிரபஞ்ச ஆணந்தத்தை உணரமுடியும், '' என்றார்.

ஒரு உருவத்தைத் தியானம் செய்யும்போது, நம்முடைய அஹங்காரத்தை அந்த உருவத்தின்மீது கொள்கிறோம். அது நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது.

நமக்கு ஒரு கனிவான, அன்பான ஒரு அம்மா தேவைப்பட்டாலோ அல்லது தந்தையிடம் அன்பு மற்றும் கவனிப்பு என்ற அம்சங்கள், பண்புகள் இல்லையென்று உணர்ந்தாலோ, அந்த ஏக்கம் என்னும் அஹங்காரத்தை, கடவுளின்மீது செலுத்தி, கடவுளை, கனிவும் அன்பும் நிறைந்த அம்மாவாகவோ, நினைத்து வழிபடுவோம்.

எந்தளவிற்கு இழைமாக இதை அகக்காட்சியாகக் காண்கிறோமோ, அந்தளவிற்கு நிதர்சனமாகும்; உண்மையாகும்.

ஆசிரியருக்கு அறிவு பூர்வமாக மட்டுமே தெரியும். குருவிற்கோ அனுபவ பூர்வமாகவும் தெரியும்.

இராமகிருஷ்ணர், ஆழமாக தம் மனத்தில் கண்ட காட்சி நிஜமானதுதான் என்று நினைத்தார். அது இறுதி ஸத்யம் அல்ல என்றாலும்கூட, இராமகிருஷ்ணர் உருவ வழிபாட்டில் சந்தோஷத்தை அடைந்தார்.

ஆனால் தோதாபுரி, அவரை இந்த நிலையில்லா ஆனந்தத்திலும் இடைப்பட்ட நிலையிலேயே தேங்கி இருக்க விடவில்லை. அவர் இராமகிருஷ்ணரை, உருவத்திலிருந்து, நித்ய ஆனந்தமான உருவங்களற்ற நிலைக்குச் செல்லுமாறு வலியுறுத்தினார். உருவமற்ற அனுபவத்தை அடைய, காளியின் உருவத்தை மனதுக்குள்ளிருந்து அழிக்குமாறு சொன்னார். புரீராமகிருஷ்ணரும் அப்படியே செய்து, முடிவிலா நித்யானந்தத்தை அடைந்தார்.

நாம் எங்கேயும் தேங்கிவிடாமல், இறுதிநிலையை அடைவதை குரு உறுதிசெய்கிறார். அதனால்தான் கிழக்கத்திய கலாச்சாரத்தில், குருவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்திற்கு, ஆசிரியர்களை மட்டுமே தெரியும். அங்கு, ஆன்மிக குரு என்ற ஒரு விஷயமே கிடையாது.

கிழக்கத்திய கலாச்சாரத்தில், ஆன்மிகக் கல்வியைக் கொடுக்கும் பாரம்பரிய பள்ளிகளான குருகுலங்களில், வழக்கமான கல்விகளைக்கூட, ஆசிரியர்கள் கற்றுத்தரவில்லை, ஆன்மிக குருமார்கள் கற்றுத்தந்தார்கள்.

குருவிற்கும் ஆசிரியருக்கும் என்ன வித்தியாசம் ? ஆசிரியருக்கு, தாம் கற்றுக்கொடுப்பது குறித்து அறிவு பூர்வமாக மட்டுமே தெரியும். குருவிற்கோ அனுபவ பூர்வமாகவும் தெரியும். குருவானவர், தாம் சொல்லும் ஸத்யத்தை அனுபூதியாக உணர்ந்தவர்.

ஹிந்து மன்னர்கள், போர்க்கலை கற்றுக்கொள்ள, குருவிடமே சென்றார்கள். ஞானமடைந்த ஒருவருக்கு விவசாயத்தைப் பற்றியும், போர்க்கலைகள் பற்றியும், வர்த்தகம் பற்றியும் என்ன தெரிந்திருக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அன்றைய குருமார்கள், ஆயகலைகள் அறுபத்து நான்கையும் (64) கற்றுத்தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

ஒவ்வொரு கலை மற்றும் அறிவியலுக்கென்று ஒரு நுட்பம் இருக்கிறது. குருகுலத்தில், குழந்தைகள் ஏழு வயது முதல் பதினான்கு வயது வரை, தியானம் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள்.

இந்தக் காலக்கட்டத்தில், அவர்களுக்கு முதல் ஆன்மிக அனுபவம் ஏற்பட்டால், அவர்கள் ஆழமான ஆன்மிக விஷயங்களை விளக்கும் ப்ரூற்ம ஸூத்ரூத்தைக் கற்று, வாழ்வை ஏற்பார்கள். இல்லையெனில், வாழ்க்கையின் புதிர்களைக் கற்றுக்கொள்ள, காமஸூத்ரத்தைப் படித்து, இல்லற வாழ்வில் நுழைவார்கள்.

ஜ்ஞாநகுருமார்கள், ஒவ்வொருவருக்கும் ஏற்ற சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழும்படி வழிகாட்டியதால், அனைவருமே மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள்.

ஆசிரியர், வார்த்தைமொழியால் கற்றுத்தருகிறார். குரு, தம் உடல்மொழியால் கற்றுத்தருகிறார்.

தொண்ணூறு சதவீதம், நாம் உடல்மொழி வழியாகவே விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம் என்று இன்றைய விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றன. குருவின் நேரடி தொடுதலும், அவரது மௌனமும் ஒரு மனிதர் விழிப்படைவதற்கு ஏற்ற தளத்தை உருவாக்குகின்றன.

நாம் புதிதாக ஏதோவொன்றாக மாறவேண்டியதில்லை ...

குருவை நாம் முதன்முறை சந்திக்கும்போதே, நாம் நம்மை என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதுவல்ல நாம் என்பதை உணர்த்துகிறார்.

அவர் சொல்கிறார், 'நாம் ஆன்மிக அனுபவத்தைப் பெறவந்த மனித உயிர்கள் அல்ல, மனித அனுபவத்தைத் தாங்கிநிற்கிற ஆன்மிக உயிர்கள்'. நாம் இதை நம்ப மறுப்பது மட்டுமல்லாமல், சிறிது அசௌகரியமாகவும் உணருகிறோம். அவர், தம்முடைய கருத்துக்களைச் சொல்லி, நம்மை மாற்றப் பார்க்கிறார் என்று நினைக்கிறோம். நாம் பயந்துபோய், தப்பித்து ஓடப் பார்க்கிறோம்.

நாம், நம்முடைய செம்மறி ஆட்டு மந்தை வாழ்க்கையையே விரும்புகிறோம் அதிலேயே சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம். வழக்கமான விஷயங்களான வீடு, மனைவி, குழந்தைகள் வேலை மற்றும் சந்தோஷம் போன்றவற்றில் நின்றுவிடுகிறோம்.

குருவின் நேரடி தொடுதலும் அவரது மௌனமும் ஒரு மனிதர் விழிப்படைவதற்கு ஏற்ற தளத்தை உருவாக்குகிறது.

சிறிது காலத்திற்குப் பிறகு, குரு, அதே கருத்துக்களை மீண்டும் சொல்லும்பொழுது, நாம் அந்தக் கருத்துக்களைப் புறக்கணிப்பதில்லை. அதேசமயம், நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுமில்லை.

இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு, குருவின் சக்தியானது நம்மை ஈர்க்கிறது. அவர் சொன்ன கருத்துகளை நினைக்கத் தொடங்குவோம். குரு நம் இருப்பின் ஒரு பாகமாவார். ஆனாலும் அவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் குருவிடம் கண்ணாமூச்சி விளையாடுகிறோம்.

ஒரு தருணத்தில், நாம் அவரை உணர்வு பூர்வமாக நம்பும்பொழுது, நாமும் அவரைப் போன்றவர்தான் என்பதை உணர்த்துகிறார். நாமும் இறுதி இருக்கவும் காட்டுகிறார். ஆனாலும், மறுபடியும் நாம் பயந்து ஒளிந்துகொள்கிறோம்.

அப்போது உணருவதற்காக, குருவும் ஆட்டைப்போல நடிக்கிறார். நம்மைப் போன்றவரே' என்ற உணர்வு வரும்படியாகச் செய்கிறார்.

நமக்குள் எந்த ஒரு ஆன்மிக அனுபவமும் மேலும் ஏற்படாத நிலையே, உண்மையான ஆன்மிக அனுபவம்.

நாம் அவரை முழுமையாக நம்பியவுடன், அவருடன் சௌகரியமான உணர்வுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும்போது, 'நாம் ஆடு கிடையாது. சிங்கம்' என்ற உணர்வைப்பெற நம்மை வலியுறுத்துகிறார். இதைத்தான் தீக்ஷ அல்லது முதல் அனுபவம் என்கிறோம்.

நாம் மீண்டும் மறுக்கிறோம்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, குருவானவர், நம்முடைய இயல்பான நிலையை உணரச்செய்து, இறுதி சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அதற்குப்பிறகே, 'நாம் எப்போதுமே சிங்கம்தான்' என்பதை நாம் உணருகிறோம்.

நாம் புதிதாக ஏதோவொன்றாக மாறவேண்டியதில்லை, நாம் விழித்தெழுந்து, ஏற்கெனவே அதுவாகத்தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தால்போதும். குருவானவர், முழு மலர்ச்சிக்கு முந்தைய எந்த ஒரு நிலையிலும், நம்மைத் தேங்கவிடுவதில்லை.

நாம் முழுமையாக மலரும்வரை, அவர் நம்மை எங்கும் சோர்வடைந்து நிற்கவிடுவதில்லை.

நாம்தான் இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வு, நாம்தான் இறுதி ஸத்யம், நாம்தான் பிரபஞ்ச சக்தி என்பதை நாம் உணரும்வரை, குரு, மீண்டும் மீண்டும் நம்மை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

ஆழ்ந்த சரணாகதி - முக்தி்கான நட்பம்

ஒரு அழகான ஜென் கதை.

ஒரு சீடர், சிறு வயது முதலே குருவிடம் வளர்ந்துவந்தார். அவர், தனது குருவைப் போலவே பாவனை செய்வார். குரு, தாம் சொற்பொழிவாற்றும்போது, கட்டைவிரலை மட்டும் உயர்த்திக்காட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இதைச் சீடரும் அப்படியே செய்வார்.

ஒருநாள், குரு சொற்பொழிவின்போது கட்டைவிரலை உயர்த்தினார். வழக்கம்போல் சீடரும் அதேமாதிரி செய்தார். சட்டென ஒரு வாளையெடுத்து அந்தச் சீடரின் கைவிரல்களை வெட்டிவிட்டார் குரு!

சீடர், எந்த ஒரு சலனமோ, சந்தேகமோ இல்லாமல், குரு எதுசெய்தாலும் தம் நன்மைக்குத்தான் செய்வார் என்ற ஆழ்ந்த சரணாகதி உணர்வுடன் இருந்தார். அந்த ஆழ்ந்த நம்பிக்கையே அந்தச் சீடரை உயர்ந்த விழிப்பணர்வு நிலைக்கு எடுத்துச் சென்றது. அந்தச் சீடரும் ஞானமடைந்தார்.

மற்ற சீடர்கள் குருவிடம், ''ஞானமடைவதற்கு, எதற்காக அந்தச் சீடர் விரல்களை இழக்கவேண்டும்,'' என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த குரு, ''மக்கள் ஞானமடைவதற்காகப் பல ஜென்மங்களை இழக்கிறார்கள். இது விஷயமில்லை," என்றார்.

மற்றொரு ஜென் கதை.

ஒருநாள் சீடர் பின்தொடர, குருவானவர் கட்டிடத்தின் மாடியிலிருந்து நடந்துகொண்டிருந்தார். சீடர் வழிகாட்டும்படி கேட்டார்.

உடனே சட்டென திரும்பிய அந்த குரு, சீடரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். அந்த சீடர் குருவிடம் ஆழ்ந்த சரணாகதி உணர்வுடன் இருந்ததால், குரு என்னசெய்தாலும், அது தம் நன்மைக்காகவே இருக்கும் என்று உணர்ந்தார். அவர் விழும்போது, மிதப்பதைப்போன்று உணர்ந்தார். அவர் தரையைத் தொடும்போது, சொர்க்கத்தைத் தொட்டார். அவர் ஞானமடைந்தார்.

ஆனால், இந்த நுட்பங்களை, தங்களோடு ஆழ்ந்த சரணாகதி உணர்வு இருக்கும் சீடர்களிடம் மட்டுமே குருமார்கள் பயன்படுத்துவார்கள்.

தம்மோடு இசைந்து இருக்கும் சீடர்களிடம் மட்டுமே இதைச் செய்வார்கள். ஜென் தடி (Zen Stick) என்கிற உயர்ந்த நுட்பத்தை கனிவுடனும் அன்புடனும் உபயோகிப்பார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மிகவும் மனத்தைப் புண்படுத்தக்கூடியதாகத் தெரியும். ஆனால் அந்த சீடருக்கு மட்டுமே, குரு தம்மிடம் அந்த நுட்பத்தை உபயோகப்படுத்துவதன் பின்னணியில் இருக்கும் அன்பும் கனிவும் புரியும். இப்படிப்பட்ட அறுவைசிகிச்சையைப் பெறுவதே பாக்கியம்.

குருவானவர், எவரையும் சாதாரண அனுபவங்களில் தேங்க அனுமதிப்பதில்லை. நாம் இதையெல்லாம் ஆன்மிக அனுபவம் என்று சொன்னாலும்கூட, நமக்குள் எந்த ஒரு ஆன்மிக அனுபவமும் மேலும் ஏற்படாத நிலையே, உண்மையான ஆன்மிக அனுபவம்.

இந்த அனுபவத்தில்தான், அனுபவிப்பவர், அனுபவிக்கப்படுவது, அனுபவம் ஆகிய இந்த மூன்றுமே ஒன்றாகிறது. இந்த மூன்றும் ஒன்றாகி, 'அனுபவம்' மட்டுமே எஞ்சி நிற்கிறது. 'நாம்' மட்டுமே இருக்கும். 'நாம்' என்ற வார்த்தையைக்கூட உபயோகிக்க முடியாது, ஏனென்றால், அங்கே வேறெதுவும் கிடையாது. எல்லா எல்லைகளும் அழிந்துவிட்டன.

தத்துவமஸி - 'அதுவாகவே நீ இருக்கிறாய்' என்ற அனுபவம் நமக்குள் ஏற்படும்வரை, குரு ஓய்வெடுப்பதில்லை.

குருவானவர், ஆன்மிக நிலையில் இருக்கும் அகங்காரத்தை, அறுவைசிகிச்சை செய்து நீக்கும் சிறந்ததொரு மருத்துவர்.

'மற்றவரைவிட நாம் புனிதமானவர்' என்ற மனப்பான்மை ஆன்மிக ரீதியான அகங்காரத்தை ஏற்படுத்தும். நம்மை இந்த நிலையில் குருவானவர் தேங்கவிடுவதில்லை. அவர் நம்மை முன்னோக்கிச் செல்ல, பின்னால் இருந்து தள்ளிக்கொண்டே இருப்பார். இறுதி இலட்சியத்தை உணரும்வரை, இவ்வாறு முன்னோக்கித் தள்ளிக்கொண்டே இருப்பார்.

எந்த அளவுக்கு அறுவைசிகிச்சை செய்ய அனுமதிக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்மால் ஒருசில செய்துகொண்டிருக்கும்போதே பாதியில் எழுந்து ஓடிவிடுவார்கள், இது மிகவும் ஆபத்தானது.

அத்தனையையும் தனக்குள் உணரும் எல்லை வகுக்க முடியாத இம்முழுமை நிலையைத்தான், சங்கரர், பூர்ணம் என்று சொல்கிறார். இதே இலட்சியத்தைத்தான் புத்தர், சூன்யம் என்று குறிப்பிடுகிறார்.

சரணாகதி செய்வதற்கு முன்பே, என்னென்ன சரிபார்த்துக்கொள்ள வேண்டுமோ சரிபார்த்துவிடுங்கள். சரணாகதி செய்துவிட்டால், குரு தம் வேலையைச் செய்ய அனுமதியுங்கள்.

இலட்சியத்தை பாதையாகவே ஆக்கிவிடும்

கேள்வி : ஸ்வாமிஜி, நாம் அனைவரும் மனநிலையில் மட்டுமல்ல, அதைவிட உயர்ந்த நிலைகளிலும் ஒன்றாகவே இருக்கிறோம், ஒருவரோடு ஒருவர் ஒருங்கிணைக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோமென்றால், ஏன் நம்மால் அதை உணர முடியவில்லை? எப்படி அதனோடு இணைப்புப்பெற்றிருப்பது ?

உங்களுடைய கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு முதலில் பதில் சொல்கிறேன்.

நீங்கள் இணைப்பை ஏற்படுத்தத் தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வது ஒன்றுதான்.

உங்களுடைய இருப்புத் தன்மையின் ஆழத்தில், நிர்வாண சரீரத்தில், நீங்கள் இந்த உலகத்துடனும் கடவுளுடனும் ஒருங்கிணைந்து விடுகிறீர்கள்.

இதுவே ஜீவன் (ஜீவாத்மா), ஜகத் (உலகம்), ஈஸ்வரன் (கடவுள்) மூன்றும் ஒன்றே என்று குறிப்பிடப்படுகிறது.

அப்போது உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் உங்களிலிருந்து வேறொன்றாகப் பார்க்க மாட்டீர்கள், சக மனிதர்கள்மீது பொருட்களின் மீதும் அன்பு செலுத்துவீர்கள். (மரணத்தின் வாசல்வரை சென்று வந்தவர்கள் நிறைய பேருக்கு இதே உணர்வு இருக்கிறது. )

உங்களுக்குள் இருக்கும் சக்தியானது, இந்த இயற்கையின் சக்தியே, இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியே, இறைவனின் சக்தியே என்பதை உணர்வீர்கள், நீங்கள் எப்போதும் நித்யானந்தத்திலயே இருப்பீர்கள்.

நீங்கள் ஏதோ சிலவற்றுடன் மட்டும் இணைக்கப்படவில்லை. எல்லாவற்றுடனுமே இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனால் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளுடனோ, கருத்துடனோ அல்லது உறவுகளுடனோ மட்டும் உங்களுக்கென்று தனியான பந்தம் இல்லை.

நீங்கள் எல்லையற்றவராய் விரிவடைந்து, எல்லாப் பொருட்களையும் மனிதர்களையும் உங்களுக்குள் உணரும்போது, எப்படி உங்கள் அன்பையும் கனிவையும் ஒரு விஷயத்தில் மட்டும் செலுத்த முடியும் ?

அத்தனையையும் தனக்குள் உணரும் எல்லை வகுக்க முடியா இம்முழுமை நிலையைத்தான், சங்கரர், பூர்ணம் என்று சொல்கிறார்.

உங்களுக்குள் இருக்கும் சக்தியானது, இயற்கையின் சக்தியே, இறைவனின் சக்தியே என்பதை உணர்வீர்கள்.

இதே இலட்சியத்தைத்தான் புத்தர், சூன்யம் என்று குறிப்பிடுகிறார், அதாவது தனி அடையாளம் மறைந்து, ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும் நிலையைக் குறிப்பிடுகிறார்.

நாம் எப்படி இதை அடைவது ? இது, பதில் சொல்வதற்கு சுலபமான கேள்வி, அதே சமயம் பதில் சொல்ல முடியாத கேள்வியும்கூட.

ஒவ்வொருவருமே, புனிதரோ அல்லது பாவியோ, நாம் இந்த விழிப்புணர்விலிருந்து விலகித்தான் இருக்கிறோம். அதுவும் சம அளவு தூரத்தில் !

நாம் செய்யவேண்டியது... ஒரே தாவலில் அந்தத் தூரத்தைக் கடக்க வேண்டியதுதான்.

இது, உடனடியாகவும் தாமாகவும் சரியான நேரத்திலும் நிகழும் ஒரு விழிப்புணர்வு. பகுதி பகுதியாக முடித்த பிறகு, அதற்கான சான்றிதழ்கள் வாங்கி, இறுதியாக, 'விழிப்புணர்வுத் தேர்வில்' தேர்ச்சி பெறுவது போன்றது கிடையாது இது.

நம்முடைய அனைத்து ஞான வகுப்புகளும், உங்களின் ஒரு பகுதியைத் திறக்கச் செய்து, இந்த இலட்சியத்தின் ஒரு துளியையாவது அனுபவிக்கச் செய்கின்றன.

முதல்நிலை தியான வகுப்பான, ஆனந்த ஸ்புரண தியான வகுப்பில், உங்களுடைய சக்தி விழிக்கச்செய்து, தூய்மைப்படுத்துவதற்கான நுட்பங்கள் தூய்மைப்படுத்தப்பட்ட நிலையில் நீங்கள், அந்த லட்சியத்தை ஒரு துளியாவது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பீர்கள். மேலும் முன்னேறிச் செல்லவும் தயாராக இருப்பீர்கள்.

உங்களுடைய கேள்விகள் வேட்கையாக மாறும்போது, அவசியங்கள், அவசரங்களாக மாறும்போது, நீங்கள் விழிப்படைகிறீர்கள்.

இரண்டாவது நிலை தியான வகுப்பான, நித்யானந்த ஸ்புரண தியான நிகழ்ச்சியில், ஏழு சரீரங்களின் வழியாக உங்களை அழைத்துச் செல்வோம். இதில் நீங்கள், சில அனுபவங்களைப் பெறுவீர்கள். நீங்கள் லட்சியத்தின் சில துளிகளையாவது ருசிப்பீர்கள். அடுத்ததாக, நித்ய தியான சிகிச்சையாளர் தீக்ஷை வகுப்பு. இதில், இந்த அனுபவத்திலேயே, நீங்கள் விரும்புகிறவரை நிலைத்திருப்பதற்கான தீக்ஷை தரப்படுகிறது.

இதற்குமேல் உங்களது முயற்சி தேவைப்படுகிறது. உங்களுடைய கேள்விகள் வேட்கையாக மாறும்போது, அவசியங்கள், அவசரங்களாக மாறும்போது, நீங்கள் விழிப்படைகிறீர்கள்.

இனி வேறு வழியே இல்லை, எல்லாவற்றையும் துறந்துவிட்டு, இந்த அனுபவத்திடம் சரணடைவது ஒன்றுதான் வழி என்று நீங்கள் தீர்மானிக்கும்போது, லட்சியத்துடன் இணைகிறீர்கள். இது, தர்க்க ரீதியான செயல்முறை அல்ல, ஒரு வரையறுக்கப்பட்ட பாதையும் அல்ல. நீங்கள் சிரத்தையோடு இருக்கும்போது, பாதையே இலக்காக மாறிவிடும்.

எங்கும் நிறைந்த விழிப்புணர்வை நாம் உணர்ந்து, ஞானக்ஷு என்ற ஞானக்கண் கொண்ட உயிர்களாகி, நித்யானந்தத்தில் நாம் நிறைந்திருக்கச் செய்யுமாறு, மேலான பிரபஞ்ச விழிப்புணர்வான, பிரபஞ்ச அறிவான கிருஷ்ணனிடம் பிரார்த்திப்போமாக! நன்றி!

ஓம் தத்ஸத் இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரும்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜூன ஸம்வாதே புருஷோத்தமயோகா நாம பஞ்சதசோத்யாய:

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான, மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும், யோக விஞ்ஞானமுமாகிய 'புருஷோத்தம யோகம்' எனப்பெயர் படைத்த பதினைந்தாவது அத்தியாயம்.

ஸ்லோகங்கள்

அத பஞ்சதசோ' பதினைந்தாவது அத்தியாயம்

புருஷோத்தம யோக: புருஷோத்தம யோகம்

ஸ்ரீபகவாந் உவாச

ஊர்த்வமூலமக: சா'கமச்'வத்தம் ப்ராஹுரவ்யயமம் / சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித் //15.1

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; ஊர்த்வமூலம் - மேலே வேரும்; அத: சா'கம் - கீழே கிளைகளும்; அச்'வத்தம் - ஆலமரத்தை; ப்ராஹு: - கூறுகிறார்கள்; அவ்யயம் - அழியாதது; சந்தாம்ஸி -வேதங்களே; யஸ்ய - அந்த; பர்ணாநி - இலைகள்; ய: - எவர்; தம் - என்ற அந்த அரச மரத்தை; வேத - அறிவாரோ; ஸ: - அவரே; வேதவித் - வேதத்தின் உட்கருத்தை அறிந்தவர் ஆவார்

ஸ்ரீபகவான் சொன்னது

  • 15.1 மேலே வேரும், கீழே கிளைகளும் பரப்பி வளரும் ஆலமரமானது அழியா வாழ்வெனும் மரத்திற்கு உருவகமாக இருக்கிறது. வேதங்களின் சொல்லப்படுகிறது. இந்த அழியா மரத்தை அறிந்துகொள்ளும் ஒருவர் வேதங்களையும் அறிந்தவராகிறார். அதச்'சோர்த்வம் ப்ரஸ்ரு'தாஸ்தஸ்ய சா'கா குணப்ரவ்ரு'த்தா விஷயப்ரவாலா / அதச்'ச மூலாந்யநுஸந்ததாநி கா்மாநுபந்திநி மநுஷ்யலோகே // 15.2

அத ச ஊர்த்வம் - கீழும் மேலும்; ப்ரஸ்ரு'தா: - எங்கும் பரவியுள்ள ; தஸ்ய - அந்த; சா'கா - கிளைகள்; குணப்ரவ்ரு'த்தர - முக்குணங்களால் வளர்ந்து; விஷயப்ரவாலா: - புலன்நுகர் பொருட்களின் போகங்கள் என்ற தளிர்களுடன்கூடிய; அதச் ச - கீழும் மேலுமாக; மூலாநி -வேர்களும்; அநுஸந்ததாநி - எல்லா உலகங்களிலும் பரவியுள்ளன; கர்மாநு பந்தி மநுஷ்யலோகே - மனிதப்பிறவியில்

15.2 பூமிக்குக் கீழேயும் மேலேயும் பரவியுள்ள இந்த மரத்தின் கிளைகள் மனிதனின் மூன்று குணங்களால் வலுவூட்டப்படுகின்றன. புலனின்பப் பொருட்களே அதன் மொட்டுகள். கீழே செல்லும் வேர்கள், மனித நிலையிலிருந்து செய்யும் செயல்களின் விளைவுகளால் கட்டுண்டு உள்ளன.

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே நாந்தோ ந சாதிர் ந ச ஸ்ம்ப்ரதிஷ்டா / அச்'வத்தமேநம் ஸுவிரூடமூலமலங்கச'ஸ்த்ரேண த்ரு' டேந சித்த்வா // 15.3

ந - கிடையாது; ரூபம் - ஸ்வரூபம்; அஸ்ய - இந்த; இஹ - இங்கு; ததா- அவ்வாறு; ந உபலம்யதே - புலப்படுவதில்லை; ந அந்த: -முடிவு கிடையாது; ந ஆதி: - ஆதி கிடையாது; ந ச ஸ்ம்ப்ரதிஷ்டா - நிலையான இருப்பும் கிடையாது; அச்வத்தம் - அரச மரத்தை; ஏநம் - இந்த; ஸுவிரூடமூலம் - உறுதியான வேர்கள் கொண்ட; அஸங்கச'ஸ்த்ரேண - வைராக்கியம் என்ற கோடாரியினால்; த்ரு' டேந - உறுதியான; சித்த்வா - வெட்டி எறிந்து விட்டு

  • 15.3 இந்த மரத்தின் உண்மையான உருவத்தை உணர முடியாது. அது எங்கே முடிகிறது, எங்கே தொடங்குகிறது, எங்கே இருக்கிறது என்பதையும் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை, பற்றற்றதன்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு ஒருவர் திடமான உறுதியோடு சாய்க்க வேண்டும். தத: பதம் தத் பரிமார்கிதவ்யம் யஸ்மிந்ததா ந நிவர்தந்தி பூய: / தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே யத: ப்ரவ்ரு'த்தி: ப்ரஸ்ரு'தா புராணீ // 15.4

தத: - அதற்குப்பிறகு; பதம் - இலக்ஷியம்; தத் - அந்த; பரிமார்கிதவ்யம் -நன்கு தேடப்படவேண்டும்; யஸ்மிந் - எங்கு; கதா: - சென்ற மனிதர்கள்; ந நிவர்தந்தி- ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லையோ; பூய: -மீண்டும்; தம் ஏவ ஆத்யம் புருஷம் ச - அந்த ஆதிபுருஷனையே; ப்ரபத்யே - சரணடைகின்றேன்; யத: - எந்த; ப்ரவ்ரு'த்தி: - ஸம்ஸார மரத்தின் தொடர்ச்சி; ப்ரஸ்ரு'தா - விரிவு அடைந்துள்ளதோ; புராண -பழமையான

15.4 ஆதியில் யாரிடம் இருந்து எல்லாச் செயல்களும் தொடங்கியதோ, ஒருமுறை சென்ற ஒருவர், பிறகு அங்கிருந்து திரும்பிவர (மடியாத இடம் எதுவோ, அந்த இடத்தைத் தேடிச் சென்று, அந்த மகோன்னத இருப்புநிலையிடம் சரணயடைய வேண்டும்.

நிர்மாநமோஹா ஜிதஸங்கதேஷா அத்யாத்மநித்யா விநிவ்ரு'த்தகாமா: / த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:க ஸ்ம்ஜ்னைர் கச்சந்த்யமூடா: பதமவ்யயயம் தத் // 15.5

நிர்மாநமோஹா: - தற்பெருமையும், மோஹமும் அகன்றவர்கள்; ஜிதஸங்கதேரஷா: - - பற்று என்ற குறைபாட்டை வென்றவர்கள்; அத்யாத்மநித்யா: - பரமாத்ம ஸ்வரூபத்தில் என்றும் நிலைபெற்றவர்கள் ; விநிவ்ரு'த்தகாமா: கொண்டவர்கள்; த்வந்த்வை: - இரட்டைகளிலிருந்து; விமுக்தா: -விடுபட்டவர்கள்; ஸுகது:க ஸம்ஜ்னை: - இன்பம், துன்பம் என்ற பெயர் கொண்ட; கச்சந்தி - அடைகிறார்கள்; அமூடா; - ஞானிகள்; பதம் - இலக்ஷியத்தை; அவ்யயம் - அழிவற்ற ; தத் - அந்த

15.5 அஹங்காரத்திலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபட்டவர்கள், தனக்குள் வசிப்பவர்கள், காமத்தைக் கடந்தவர்கள், சுகதுக்கம் என்ற இருமையிலிருந்து விடுபட்டவர்கள், குழப்பம் இல்லாதவர்கள் மற்றும் அந்த மேலான புருஷரிடம் எவ்வாறு சரணடைய வேண்டும் என்று அறிந்தவர்கள் - இவர்கள் அழியா ஞானத்தை அடைகின்றனர்.

ந தத்பாஸயதே ஸூர்யோ ந ச'சா'ங்கோ ந பாவக: /

யத்தத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம // 15.6

ந - இல்லை; தத் - அந்த; பாஸயதே - ஒளி; ஸூர்ய: -குரியன்; ந -இல்லை; ச'சா'ங்க: - சந்திரன்; ந - இல்லை; பாவக: - அக்னிதேவனும் ; யத் - எதை; கத்வா - அடைந்த பிறகு; ந நிவர்தந்தே - ஸம்ஸாரத்திற்குத் திரும்புவதில்லையோ; தத் - அது; தாம - ஸ்தானம்; பரமம் - மேலான; மம - என்னுடைய

  • 15.6 என்னுடைய அந்த நித்யமான விழிப்புணர்வு நிலை சூரியனாலும் சந்திரனாலும் அல்லது அக்னியாலும் பிரகாசிப்பதல்ல. யார் அந்த வெளியை அடைகிறார்களோ, அவர்கள் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை. மமைவாம்சோ' ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந: / மந: ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ரு'திஸ்தாநி கா்ஷதி // 15.7

மம ஏவ - என்னுடைய; அம்ச': - அம்ஸமே; ஜீவலோகே - இவ்வுடலில் ; ஜீவ இந்த்ரியாணி - மனம் மற்றும் ஐந்து புலன்களையும்; ப்ரக்ரு'திஸ்தாநி-ப்ரகிருதியில் உள்ள; கா்ஷதி - ஈர்க்கின்றது

  • 15.7 கட்டுறு மனப்பாங்குடைய இந்த லெளகீக உலகில் வாழும் உயிரினங்கள், நித்தியமான என் இருப்பின் ஒரு பகுதியே. ப்ரக்ருதியில் (செயல்பாட்டுச் சக்தியில்) வசிக்கும் மனம் உட்பட ஆறு புலன்களாலும் அவை ஈர்க்கப்படுகின்றன. ச'ரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீச்'வர: / க்ரு'ஹீத்வைதாநி ஸம்யாதி வாயுர்கந்தனநிவாச'யாத் // 15.8

ச'ரீரம் - உடலை; யத் - எந்த; அவாப்நோதி - அடைகிறானோ; யத் -எந்த உடலை; ச அபி - மேலும்; உத்க்ராமதி - விட்டுக்கிளம்புகிறானோ; ஈச்'வர: - உடலை ஆள்பவனான ஜீவாத்மாவும்; க்ரு'ஹீத்வா - எடுத்துக் கொண்டு; ஏதாநி - மனதோடுகூடிய புலன்களை; ஸம்யாதி - வந்து சேர்கிறான்; வாயு: - காற்று; கந்தாந் இவ - பலவித மணங்களை போல ; ஆச'யாத் - மணமுள்ள இடத்திலிருந்து

15.8 மலரிலுள்ள நறுமணத்தைக் காற்று எடுத்துச்செல்வதுபோல், இந்த உடல்-மன அமைப்புக்குள் குடிகொண்டிருக்கும் ஜீவாத்மா, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் செல்லும்போது, இவற்றை (அறு புலன்களை) எடுத்துச்செல்கிறது.

ச்'ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ச'நம் ச ரஸநம் க்ராணமேவ ச / அதிஷ்டாய மநச்'சாயம் விஷயாநுபலேவதே // 15.9

ச்'ரோத்ரம் - காதையும்: சக்ஷு: ச - கண்ணையும்; ஸ்பர்ச் நம் ச -சருமத்தையும்; ரஸ்நம் - நாக்கையும்; க்ராணம் ஏவ ச - மூக்கையும்; அதிஷ்டாய - சார்ந்துகொண்டுதான்; மந: ச - மனத்தையும்; அயம் -இந்த ஜீவாத்மா; விஷயாந் - புலன் நுகர் பொருட்களை; உபளேவதே - அனுபவிக்கிறான்

  • 15.9 ஜீவாத்மாவானது, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் சென்று, காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் புதிய கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன்கூடிய புதிய உடலை எடுத்து, தன் புது மன அமைப்பை அனுபவிக்கிறது. உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம் / விமூடா நாநுபச்'யந்தி பச்'யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ்: // 15.10

உத்க்ராமந்தம் வா - உடலைவிட்டுக் கிளம்பும்பொழுதும்; ஸ்திதம் வா அபி - உடலில் இருக்கும்பொழுதும்; அனுபவிக்கும்பொழுது; கூடியிருக்கும்பொழுதும்; விமூடா; - அறிவிலிகள்; ந அநுபச் யந்தி - அறிகிறதில்லை; பச்'யந்தி - அறிகிறார்கள்; ஜ்ஞாநசக்ஷுஷ: -ஞானக்கண் பெற்றவர்கள்தான்

  • 15.10 குணங்களுடன்கூடிய ஜீவாத்மாவானது எப்படி ஒரு உடலில் நுழைகிறது, அனுபவிக்கிறது, அவ்வுடலைத் துறந்து செல்கிறது என்பதை அறியாமையில் முழ்கியிருக்கும் முடர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஞானக் கண் பெற்றிருப்பவரே இதை அணைத்தையும் காண்கிறார். யதந்தோ யோகிநச்'சைநம் பச்'யந்த்யாத்மந்யவஸ்திதம் / யதந்தோட்ப்யக்ரு'தாத்மாநோ நைநம் பச்'யந்த்யசேதஸை: // 15.11

யதந்த: - முயற்சிசெய்கிற; யோகிந: - யோகிகளும்; ச - மேலும்; ஏநம் - இந்த ஆத்மாவை; பச்'யந்தி - காண்கிறார்கள்; ஆத்மநி- தம் இதயத்தில்; அவஸ்திதம் - உறைகின்ற; யதந்த: அபி - முயன்றாலும்கூட ; அக்ரு'தாத்மாந: - ஆத்மாவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள்; ந -இல்லை; அசேதஸ: - அந்த அஞ்ஞானிகள்; ஏநம் - இந்த ஆத்மாவை; பச்'யந்தி - காண்கிறார்கள்

  • 15.11 ஆத்மாவைப் பற்றிய புரிதலுடைய யோகிகளால் மட்டுமே இவற்றையெல்லாம் தெளிவாகப் பார்க்க முடியும். ஆத்மாவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இவற்றைப் புரிந்துகொள்ள இயலாது. யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதேடகிலம் / யச்சந்த்ரமஸி யச்சாக்றெள் தத்தேஜோ வித்தி மாமகம் //15.12

யத் - எந்த; ஆதித்யகதம் -குரியனில் உள்ள; தேஜ: - ஒளி; ஜகத் -உலகையும்; பாஸயதே - பிரகாசிக்கச்செய்கின்றதோ; அகிலம் -அனைத்து; யத் - எந்த ஒளி; சந்தர்மஸி - சந்திரனிடத்திலும்; யத் -எது; ச - மேலும்; அக்நௌ - நெருப்பினிடத்திலும்; தத் - அது; தேஜ: - ஒளியே என்று; வித்தி - தெரிந்து கொள்; மாமகம் - என்னுடைய

15.12 சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளியும், சந்திரனிலிருந்து மற்றும் தீயிலிருந்து வெளிப்படும் பிரகாசமும் என்னிடமிருந்து பெறப்பட்டவையே.

காமாவிச்'ய ச பூதாநி தராயம்யஹமோஜஸா / புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: // 15.13

காம் - பூமியிலும்; ஆவிச்'ய - உட்புகுந்து; ச - மேலும்; பூதாநி -உயிரினங்கள் அனைத்தையும்; தாரயாமி - தாங்குகின்றேன்; அஹம் - நான்; ஒஜஸா - என் சக்தியினால்; புஷ்ணாமி - போஷிக்கின்றேன்; ச - மேலும்; ஓஷ்தீ: - பயிர்பச்சைகளையும், மரங்களையும்; ஸோம: - நிலவும்; ஸர்வா: - அனைத்து; பூத்வா - ஆகி; ரஸாத்மக: - நீர் நிறைந்த

15.13 பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் என் சக்தியால் தாங்குகிறேன். குளிர்ச்சியான நிலவாக ஆகி எல்லா செடிகொடிகளையும் நானே பேணிவளர்க்கிறேன்.

அஹம் வைச் 'வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாச் 'ரித: / ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம் // 15.14

அஹம் - நானே; வைச் 'வாநர: - வைச்வாநரன் என்ற அக்னியாக; பூத்வா - ஆகி; ப்ராணிநாம் - எல்லா உயிரினங்களுடைய; தேஹம் - உடலில்; ஆச்'ரித: - உறைபவனாகி; ப்ராண அபாநஸமாயுக்த: - உள்செல்லும் மூச்சாகவும், வெளிவரும் மூச்சாகவும்; பசாமி - ஜீரணிக்கின்றேன்; அந்நம் - உணவை; சதுர்விதம் - நான்கு வகையான

15.14 ஒவ்வொரு உயிருக்குள்ளும் செரிமானத் தீயாகவும், உள்செல்லும் மூச்சாகவும், வெளிவரும் மூச்சாகவும் இருந்து நான்கு வகை உணவுகளையும் செரிமானிக்கிறேன்.

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ரு'தி ஸர்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ரு'திர்ஜ்ஞாநமபோஹநம் ச / வேதைச்'ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ரு'த்வேதவிதேவ சாஹம் // 15.15

ஸர்வஸ்ய - எல்லாப் பிராணிகளுடைய; ச - மேலும்; அஹம் -நான்; ஹரு'தி - இதயத்திலும்; ஸந்நிவிஷ்ட: - அந்தாயாமியாக இருந்து கொண்டிருக்கின்றேன்; மத்த: - என்னிடமிருந்துதான்; ஸ்ம்ரு'தி : - நினைவும்; ஜ்ஞாநம் ச - அறிவும்; அபோஹநம் ச -ஐயம் திரிபுகளிலிருந்து தெளிவும்; வேதை: ச- வேதங்களாலும்; ஸாவை: - எல்லா; அஹம் ஏவ - நானே; வேத்ய: - அறியத்தக்கவன்; வேதரந்தக்ரு'த் - வேதாந்தத்தைச் செய்தவனும்; வேதவித் ச -வேதங்களின் உட்பொருளை அறிந்தவனும்; அஹம் ஏவ - நானே

15.15 நான் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறேன். நினைவும் அறிவும் அவற்றின் இழப்பும் என்னிலிருந்துதான் வெளிப்படுகின்றன. வேதங்களினால் அறியப்படும்பொருள் நானே. உண்மையில் வேதாந்தத்தை உருவாக்கியவனும் நானே, வேதங்களை அறிந்தவனும் நானே.

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரச்'சாஷர ஏவ ச / க்ஷர: ஸர்வாணி பூதாநிகூடஸ்தோக்கூர உச்யதே // 15.16

த்வெள - இரண்டு வகையான; இமெள - இந்த; புருஷெள - புருஷர்கள்; லோகே - இவ்வுலகில்; க்ஷர: ச - அழிப்பவன் என்றும்: அஷர: ஏவ ச - அழியாதவன் என்றும்; க்ஷர: - அழியக்கூடியது; ஸர்வாணி - எல்லா; பூதாநி - உயிரினங்களின் உடலனைத்தும்; ச - மேலும்; கூடஸ்த: -இவ்வுடலில் இருக்கும் ஜீவாத்மா; அக்ஷர: - அழியாதவன்; உச்யதே -கூறப்படுகின்றது

15.16 இந்த உலகில் அழியக்கூடியவை, அழியாதவை என்று இரண்டு வகையான விஷயங்கள் இருக்கின்றன. வாழும் உயிர் அனைத்தும் அழியக்கூடியவை. கூடஸ்தன் (ஆத்மா) அழியாதவன்.

உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதர்ற்கு / யோ லோகத்ரயமாவிச்'ய பிபர்த்யவ்யய ஈச்'வர: // 15.17

உத்தம: புருஷ்: து - புருஷோத்தமன்; அந்ய: - வேறுபட்டவர்; பரமாத்மா இதி - பரமாத்மா என்றும்; உதரஹ்ரு'த - அழைக்கப்படுகிறாரோ; ய: -எவர்; லோகத்ரயம் - உலகம் மூன்றிலும்; ஆவிச்'ய - உட்புகுந்து; பிபர்தி - எல்லோரையும் தாங்கி போஷிக்கிறாரோ; அவ்யய: - அழிவற்றவர்; ஈச்'வர: - பரமேசுவரன்

15.17 இந்த இரண்டைத் தவிர, பரமாத்மா என்றழைக்கப்படும் புருஷோத்தமர் இருக்கிறார். மூன்று உலகங்களிலும் ஊடுருவி, அவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பவர் அவரே!

யஸ்மாத்க்ஷரமதீதோSஹமக்ஷராதபி சோத்தம: / அதோடல்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம:// 15.18

யஸ்மாத் - எக்காரணத்தினால்; க்ஷரம் - அழியக்கூடிய ஜடவர்க்கத்திற்கு ; அதீத: - அப்பாற்பட்டவனாக; அஹம் - நான்; அக்ஷராத் அபி - அழியாத ஜீவாத்மாவைக் காட்டிலும்; ச - மேலும்; உத்தம: -சிறந்தவனாக உள்ளேனோ; அத: - அக்காரணத்தினால்; அஸ்மி -இருக்கிறேன்; லோகே - உலகிலும்; வேதே ச - வேதத்திலும்; ப்ரதித: -புகழ்; புருஷோத்தமன் என

15.18 அழியக்கூடியவை அப்பாற்பட்டவனாகவும் மேலானவனாகவும் நான் இருப்பதால், இந்த உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று புகழ்பெற்றிருக்கிறேன்.

யோ மாமேவமஸ்ம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம் / ஸ் ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபரவேந பாரத // 15.19

ய: - எந்த; மாம் - என்னையே; ஏவம் - இவ்விதம்; அஸம்மூட; -ஞானி; ஜாநாதி - அறிகிறானோ; புருஷோத்தமம் - புருஷோத்தமன்; ஸ: - அவன்; ஸர்வவித் - எல்லாமறிந்த; பஜதி - வழிபடுகிறான்; மாம் - என்னை; ஸர்வபரவேந - எல்லாவிதமாகவும்; பாரத - பரதக் குலத்தோன்றலே

15.19 ஓ, பரதவம்சத்தில் உதித்தவனே, எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் என்னை மேலானவனாக உணர்ந்த ஒருவன், எல்லாமறிந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் தன்னுடைய அத்துணை உணர்வையும் கொண்டு என்னை வழிபடுகிறான்.

இதி குஹ்யதமம் சா'ஸ்த்ரமிதமுக்தம் மயாநக / ஏதக்புத்தவா புத்திமாந் ஸ்யாத் க்ரு'தக்ரு'த்யச்'ச பாரத // 15.20

இதி - இவ்வாறு; குஹ்யதமம் - ஆழ்ந்த; சா'ஸ்த்ரம்- சாஸ்திரம்; இதம் - இந்த; உக்தம் - சொல்லப்பட்டது; மயா - என்னால்; அநக -பாவமற்றவனே; ஏதத் - இதை; புத்த்வா - அறிந்து கொண்ட; புத்திமாந் - ஞானியாகவும்; ஸ்யாத் - ஆகிறான்; க்ரு'தக்ரு'த்ய: ச - செய்ய வேண்டியதை செய்தவனாகவும்; பாரத - அர்ஜுனா

  1. 20 என்னால் உபதேஸிக்கப்பட்ட மேலான போதனை இதுவே. ஒ! பாவங்களற்றவனே! இதை யாரெல்லாம் உணர்கிறார்களோ அவர்கள் அறிஞர்களாகிறார்கள். அவர்களின் செயல்கள் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

ஒம் தத்ஸதிதி பூரீமத்பகவத்திதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே புரீக்குஷ்ணார்ஜுநஸம்வாதே புருஷோத்தமயோகோ நாம பஞ்சதசோ' ் த்யாய: //

ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'புருஷோத்தம யோகம்' எனப்பெயர் படைத்த பதினைந்தாவது அத்தியாயம்.

பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
த்ருபதன்திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன் : அரசா் துருபதனின் மகன்
சி' கண்டிசிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர்
யுயுதானன்கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்சிறந்த போர்வீரர்
குந்தி பேஜன்முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்குந்தி போஜனின் சகோதரர்
சை' ப்யாசிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேதுசேதி நாட்டின் அரசா்
உத்தமௌஜன்சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், லஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரா்தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பிமன்கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்
ஸஹதேவன்

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன்அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்
பிஷ்மர்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்
த்ரோணர்கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.
விகா்ணன்கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர்
கர்ணன்பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்
அச்'வத்தாமன்துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்
க் 'ருபா்கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார்
ச'ல்லியன்அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். )
ஸௌமாதத்திபகிகர்களின் அரசா்
துச்'சா'தனன்கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்
துரியோதனன்கௌரவ சகோதரா்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூதனன்பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர்
பகவான்ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்மேலான புருஷன்
மதுஸூதனன்மது என்ற அரக்கனை அழித்தவர்
மாதவன்லக்ஷ்மிக்குத் தலைவர்
யாதவன்'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்
யோகேச்'வரன்யோகத்திற்குத் தலைவர்
வாஸு தேவன்வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
விஷ்ணு
ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்
ஜநார்தன்ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர்
அனகன்பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டிகிரீடம் தரித்தவர்
குடாகேசான்தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்குந்தியின் மகன்
தனஞ்சூயன்செலவழிக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்பாண்டுவுக்கு மகன்
பார்கன்பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்இடது கையால் அம்பு எய்பவர்

அருஞ்சொற் பொருள்

அத்வைதஇருமையற்றது, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை.
அநாஹதஉருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்திமையம்
அபரிக்ரஹமற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசைகொள்ளாமை
அப்யாஸதொடர்ந்த பயிற்சி
அம்ரு'தஅருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கும் தெய்விக அமிர்தம்
அவ்தார்உருவமற்ற ப்ரஹ்மம் உருத்தாங்கி பூமிக்கு வருதல்
அவ்யக்தம்வெளிப்படாத, வெளிப்படுத்தப்படாத
அச்'வத்தம்ஆலமரம்
அஹிம்ஸாதுன்புறுத்தாமை
அஷ்டவக்ரஅஷ்டவக்ர சம்ஹிதையை இயற்றிய ஞானகுரு
அஷ்டாங்கயோக - பதஞ்சலி யோகஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள்.
ஆகாச'வெற்றிடம், நுட்பமான ப்ரபஞ்ச சக்தி.
ஆசார்யஆசிரியர், 'உடன் வருபவர்'
ஆத்ம, ஆத்மந்தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி
ஆத்ம ச'க்திவாழ்வு சக்தி. (வளப்படுத்துதல் என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த வாக்கு சக்தி,சிந்தனை சக்தி மற்றும் உணர்வு சக்திகளை வாழவும் வெளிப்படுத்தவும்கூடிய வல்லமை
ஆத்ம ஜ்ஞாநம்தன்னை உணர்தல்
ஆத்ம ஷட்கம்ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள்
ஆதிச்'ங்கரகேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானகுரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர்.
ஆபஸ்நீர்
ஆரதிதீபங்களுடன் கடவுளை வணங்குதல்
ஆச், ரயஉண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர்.
ஆச், ரய தேர்ஷஉண்மை நிலையில் உள்ள குறைபாடு
ஆஹாரஉணவு, மற்றம் நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு.
ஆஜ்ஞாஒழுநங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம்.
இடாபிங்கள, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை
ஈச்' வரன்பிரபஞ்சத்தின் தலைவன்.
ஈச்'வரத்வம்'பொறுப்பெடுத்தல்' என்னும் தத்துவத்தால் விழிப்படைந்த தமைப்பண்புணர்வு.
உத்தராயணசூரியனின் வடக்கு நோக்கிய பயணம்
உபநிஷத்ஞானகுருவுடன் அமர்ந்திருத்தல்
கபிலமுனிஸ்ரீமத் பாகவதத்தில், விஷ்ணுவின் அவதாரமாகக்கொண்டாடப்படும் கபிலமுனி ஸாங்க்ய யோகத் தத்துவத்தின் தந்தை. இந்தப் பூமிப்பந்தின் முதல் சிந்தனையாளர், பூரணத்வத்தை அனுபூதியாக உணர்ந்தவர், ஸநாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹா நிர்வாணி பீடத்தை நிறுவியவர்.
கா்மாமூலமனப்பாங்குகளால் ஆட்டுவிக்கப்படும் ஆன்மீக விதியின் காரண காரிய விளைவு
கா்மிதாழ்நிலை சாத்தியக்கூறுகளால் ஆட்டுவிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்புரிபவர்
கர்மேந்த்ரியங்கள் - செயல்பாட்டுக்குரிய புலன்கள்
கல்பஸ்த்யயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் சேர்ந்தது 1 கல்பம் .
காண்டீவ- அக்னி தேவனால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில்
குண்டலிநி- மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி
குண- சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள்.
கும்ப்மேளா- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் நிகழும், மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டம் . கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக்.
2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில்.
3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில்
4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில்
குரு- கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச்செல்பவர், ஆசான்
குருகுல்- குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக்கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார்.
(தஷ- வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின்மேல் மான் தாலையும் ஆடையையும் விரித்து, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது.
கைவல்ய- விடுதலை, மோக்ஷம், நிர்வாணம்
கோச'- நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன. 1. அன்னமய அல்லது உடல் அடுக்கு 2. பிராணமய அல்லது பிராண அடுக்கு 3. மனோமய அல்லது எண்ண அடுக்கு 4. விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
5. ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு
க்ரியா- குறிப்பிட்ட பலனையடைய யோகவிதிகளின்படி செய்யப்படும் செயல்
க்ரு'ஹஸ்த- குடுத்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது
கடாகாச,ம்- குடத்தால் வளைபட்ட வெளி.
ஜ்ஞாநேந்த்ரியங்கள் - அறியும் புலன்கள்
சக்ரம்- மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்
சக்ஷு- கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்
சிதாகாச'ம்- உடலால் வளைபட்ட வெளி.
சித்த- மனம், மேலும் மனஸ், புத்தி
ஜ்யோதிஷ- ஜோதிடம்
ஜநகராஜா- மிதிலையை ஆண்ட ஈகை குணம் உள்ள அரசர். இராமரின் பத்தினி சீதாவின் தந்தை.
ஜப- தொடர்ந்து இறைநாமத்தை அமைதியாகவோ, சப்தமாகவோ உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜாக்ரத்- விழிப்பு நிலை
ஜீவன்முக்தி- உடலில் வாழும்பொழுதே ஞானமடைந்து, சுதந்திரமான வாழ்வை வாழ்தல்.
ஜீவன்முக்த விஜ்ஞாநம்- ஜீவன்முக்திக்கான நுட்பம்
ஜீவஸ்மாதி- ஞானகுருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
தந்த்ரா- நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்
தபஸ்- தீவிர ஆன்மீக முயற்சி.
தமஸ்- மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம்
தீர்த- தீர்த்தம், புண்ணிய ஆறு, யாத்திரை மையம்
துரீய, ஸ்மாதி- சமாதி நிலை, மனமற்ற நிலை
தைத்ரேய உபநிஷத் - யஜுர் வேதத்தின் முக்கிய வேதாந்த பகுதி
த்ரி காலம்,- முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.
த்ரிகால ஜ்ஞாநி- இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம்
இவற்றைக் கடந்தவர்
த்ரிகுண ரஹித- ஸத்வ, இரஜஸ், தமஸ் - இம்மூன்று குணங்களையும் கடந்தவர்
த்ரிபுடி- அறிபவர், அறியப்படும்பொருள், அறிவு - இம்மூன்றும் இணைந்தது
தர்ச, ந்- காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும்
தக்ஷிணாயன- ஜுன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணம்
தீகைஷ்- தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திர உச்சாடனம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும்
தேர்ஷ- குறைபாடு
த்ரு' ஷ்டி- பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது
த்வைத- தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித்தனியானவை என்னும் கொள்கை.
தர்ம- பிரபஞ்ச விதி
தாரணா- மனத்தை ஒருமுகப்படுத்துதல் ( பிராணாயாமத்துடன் )
- விவேகம்
நசிகேத- கட உபநிஷத்தின் கதாநாயகன். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன்.
நாக ஸாது- உடைகள் அணியாத ஒருவகை துறவியா்கள்
நாடி- நரம்பு ஸ்தூலமாக இல்லாத ஒரு சக்தி பாதை
நிதித்யாஸநா- ஸத்யத்தை ஆழமாக வாழ்ந்து, வெளிப்படுத்துவதைக் குறிக்கும் சொல்
நிமித்த- காரணம்
நிமித்த தேர்ஷ- காரணத்தை அடிப்படையாகக்கொண்ட குறைபாடு
நியம- பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள்.
நிர்குணஉருவமற்ற சக்தி
நிர்குண ப்ரஹ்மந்- உருவ வரையறைகுட்படுத்த முடியாத சக்தி
நிர்வாண, ஸமாதி- விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது
பதஞ்ஜலி- யோகத்தின் தந்தை, யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய புகழ்பெற்ற பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர்
பகுத்தாராய்தல்- ஸத்யங்களை மறுப்பதற்கல்லாமல், உள்வாங்கி நம்முடைய பாகமாக்கும்பொருட்டு அவற்றைப் பகுத்தாராய்தல். இது THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAMரால் கொடையாக வழங்கப்பட்ட வார்த்தை.
பரமஹம்ஸ- மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்தவரைக் குறிக்கும்
பரிக்ரமஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு
பரிவ்ராஜகம்- ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை)
பல - பல ச்ருதி- பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள்
பிங்கள- இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை
பிண்டாண்ட- தனி ஜீவ வியக்தி
புண்ய- சிறப்பு, நன்மை செய்தல்
புருஷ- மேலான சக்தியின் வெளிப்பாடு
பூர்ண- முழுமையான நிலை, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.
பூர்ணத்வ- முழுமையிலிருந்து முழுமை வெளிப்பட்டது என்ற ஸத்யத்தைப் புரிந்துணர்ந்த 'நிறைவுணர்வு' நிலை
பூர்ணாவதார்- முழுமையான கடவுள் அவதாரம்
ப்ரத்யாஹார- பொதுவாக 'உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்' என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களிலிருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள்.
ப்ரவ்ரு'த்தி- வெளி உலகை நோக்கிய வாழ்க்கைமுறை. இது குறைவுணர்வுகளிலிருந்து மேலும் மேலும் அதிக குறைவுணர்வுகளுக்கு இட்டுச்செல்லும் பாதை.
ப்ராண- உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும்
ப்ராணயாம- மூச்சை நெறிப்படுத்துவதன் மூலம் வாழ்வுசக்தியை நீட்டித்துக்கொள்ள உதவுவது. அஷ்டாங்க யோகத்தின் நான்காவது பாதை
ப்ராரப்த- இவ்வுடலை எடுக்கக் காரணமான கா்மம்
ப்ரு'த்வீ- பூமி சக்தி
ப்ரேம ச'க்தி- உணர்வு சக்தி
பகவாந்- கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம்- வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவந- கற்பனை
- விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.
புத்தி- அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா - என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ப்ரஹ்மந்- தெய்விகத்தின் முடிவான லத்யும், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ரஹ்ம- ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன்
ப்ரஹ்மசா்ய- கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ரஹ்மசாரீ- இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்
ப்ரஹ்ம வித்யா- பிரபஞ்சப் பேராற்றலைப் பற்றிய அறிவு
ப்ரஹ்மாண்டம்- பிரபஞ்ச பேரண்டம்
ப்ராஹ்மணா- உயர் ஆன்மிக அறிவையடைந்தவர், அறிவைப்
பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் ஈடுபடுபவர்
மங்கல- நன்னிமித்தமான
மந்த்ர- ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஒதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்தர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மநந- சிந்தித்தல், பகுத்தாராய்தல்
மநஸ்- மனம், புத்தி, சித்தம்
மநோ ச'க்தி- சிந்தனை சக்தி
மஹரிஷி- மிகப்பெரிய ஞானி
மஹாநிர்வாணி பீட - கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர் ஆவணப்பதிவுகளைக் கொண்டிருக்கும் ஸ்நாதன தர்மத்தின் மூத்த அமைப்பான மஹாநிர்வாணி பீடம் கபிலமுனியால் நிறுவப்பட்டு ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது.
மஹாவாக்ய- மிகப்பெரிய வேத வாக்கியம்
மஹாகாச'- அண்டவெளி
மாணிக்கவாசகர்- நாயன்மார்களில் முக்கியமானவர், 'திருவாசகம்' இயற்றிய தமிழ்சைவக் கவிஞர்.
மாயா- அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.
மீமாம்ஸா- பழங்கால Hindu தத்துவத்தின் ஒழுங்கு முறை
முனி- தன்னையுணர்ந்த, அக விழிப்படைந்த ஜீவன்.
மூலவாஸ்நா- மூலமனப்பாங்கு
மூலவிசாரதாரா- மூலமனப்பாங்கு
மூலாதார்- ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ- நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம-நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம- ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர- கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும் ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின் சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம் தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட பூரீ சக்ரம்
யோகஇணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.
யோகப்ரஷ்ட- யோகப் பாதையிலிருந்து வழுவியவர்
யோகீ- யோகப் பாதையைப் பயிற்சிசெய்பவர்.
யுக- Hindu சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன. 1. ஸலத்ய யுகம் (நித்ய யுகம்) 2. த்ரேதா யுகம் 3. த்வாபர யுகம் 4. கலியுகம்
ரக்த- இரத்தம்
ரஜ்ஸ்- மனிதனின் மூன்று வகையான குணங்களில் இரண்டாவது வகை குணமாகிய தீவிர உணர்ச்சியின் செயல்பாடு.
ரமண மஹரிஷி- திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானகுரு. அருணாச்சல மலையை புகழ்ந்து பாடும் 'அக்ஷரமணமாலை'யை நமக்குத் தந்தவர்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸ - பாரதத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஞானகுரு.
ராமாயணபாரதத்தின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.
ராவணஇலங்கையின் வல்லமை மிக்க பேரரசன், ராமாயணத்தில் இளவரசி சீதாவை கவா்ந்து சென்ற பாதகன்.
ராக- பற்று
ரிஷி- வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
லீலா- தெய்வத்தின் செயல்கள்
லீலா த்யானம்- தெய்வத்தின் அல்லது குருவின் செயல்களின்மீது தியானம்செய்தல்.
வா்ண- வண்ணம் மற்றும் Hindu பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது.
வாக் ச'க்தி- வார்த்தைகளின் சக்தி,வாக்கு சித்தி
வாநப்ரஸ்த- ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல்.
வாஸ்ந- நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது.
வித்யா- அறிவு, கல்வி
வால்மீகி- புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர்
வி தீ- சட்டம், இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை
வி பூதி- Hindus தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு
விவேகாநந்த- பாரதத்தில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானத்துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர்.
விராட்ரூப, விச் வரூப- எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம்
விசி'ஷ்டாத்வைதம் - தனிமனித இருப்பு தனக்கே உரிய
தனித்தன்மையுடன் பிரபஞ்ச இருப்பின் பகுதியாக விளங்குகிறது.
விஷ்ணு- மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் குழுப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாத- மனச் சோர்வு, தடுமாற்றம்
வைராக்ய- விருப்பு வெறுப்புக்களைக் கடந்தநிலை
வைச்'ய- வணிகர்களின் சாதி அல்லது வாண்ம்
வேத- ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால Hindu சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச் ருதி என்பார்கள்.
வேத வ்யாஸ- வேதங்களைத் தொகுத்தவர். புராணங்கள், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், ப்ரஹ்ம ஸூத்ரம் போன்ற நூல்களை இயற்றியவர். பாண்டவர்களின் பாட்டனார். ஞானிகளுக்கெல்லாம் தலைவர்.
வேதாந்த- வேதங்களின் இறுதிப்பகுதி. வேதங்களின் சாரமான இப்பகுதி 'தன்னை உணர்த'லுக்கான தத்துவங்களின் தொகுதி.
வ்யக்தம்- வெளிப்பட்ட, பார்க்கமுடிந்த
ஸ்க பாவம்- இறைவனை அல்லது குருவை நண்பனாகப் பாவிப்பது
ஸ் குண- உருவத்துடன்கூடிய
ஸ்குண ப்ரஹ்ம- உருவமற்ற ஒன்று உருவத்துடன் தோன்றுவது
ஸங்கல்ப- (முடிவு
ஸஞ்சித கா்மம்- நம்முடைய மொத்த கா்ம வங்கி
ஸ்தோரி- உயர் ஆன்மிக விழிப்புணர்வுநிலை
ஸத்ய- ஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வ- ஆன்மீக அமைதி
ஸத்ஸங்- ஸ்த்யங்களைத் தெளிவுபடுத்தும் ஆன்மிகக் கூட்டடம்
ஸநாதன தர்மம்- என்றென்றும் நிலைத்திருக்கும் தா்மப் பாதை, ஜீவன் உச்சநிலை வளர்ச்சியடைவதற்கான ஸத்யங்களை உள்ளடக்கியது. நாளடைவில் அதற்கு அந்நியர்களால் 'இந்துமதம்' என பெயா் வழங்கப்பெற்றது.
ஸந்ந்யாஸலீ- துறவி
ஸம்ச,ய– சந்தேகம்
ஸம்யம- முழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்கார- கா்மச் சக்கரத்தில் சிக்கவைக்கும் எண்ணப்பதிவு
ஸம்ஸார ஸாகர- ஜனன-மரணக் கடல்
ஸமாதி- மனம் கடந்த நிலை, ஞான நிலை
ஸஹஸ்ரார- ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம்
ஸஹஸ்ர நாமா- கடவுளின் 1000 நாமங்கள்
ஸாங்க்ய- ஆறு Hindu தத்துவ முறைகளில் ஒன்று
ஸாதநா- பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி
ஸாது- நல்ல மனிதா், கடுந்துறவி, ஸ்ந்யாஸி.
ஸித்தி- ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல்.
ஸிம்ஹ– சிங்கம்
ஸிம்ஹ ஸ்வப்நா- பயங்கரக் கனவு
ஸுஷும்நா- 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம்.
ஸூத்ர- ஆன்மிக நுட்பங்களை மிக நேர்த்தியாக விளக்கும் சிறு ஸ்லோகங்கள். இதற்கு 'நூல் கயிறு' என்ற பொருளும் உண்டு.
ஸ்தோத்ர- பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி- 'எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது' என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ரு'தி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
-----------------
ஸ்மரண
ஸ்ரு'ஷ்டி
ஸ்வதந்தர
ஸ்வபூர்ணத்வ
ஸ்வாதிஷ்டாந
ச்'ரவண-
ச்'ருதி
ச,க்தி
சாஸ்த்ர
சி'ஷ்ய
கு' த்ர
சூ, ந்ய
ஹடயோக
ஹிரண்ய கா்ப
ஹோம
க்ஷத்ரிய
க்ஷண